Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 41

Thread: வேன(ணி)காலம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0

    வேன(ணி)காலம்

    "அத்தை பசிக்குது..."
    என்ற பூரணியின் குரல் கேட்டு தூணில் சாய்ந்திருந்த வேணி, ,கன்னத்தில்
    வழிந்த கண்ணிருடன்,கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
    அம்மா,அண்ணன்,மதினி எல்லோரும் அவரவர் இருந்த இடத்திலேயே
    படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
    வாரிச் சுருட்டி எழுந்தவள்,இதோ ஒரு நிமிடம் என்றவள் வேகமாக அடுப்பாங்கடைக்குள் நுழைந்தாள்.பூசனம் பூத்த குழம்பும்,கெட்டுப் போன சோறும்,பொரியலும் வாடை உள்ளே நுழையும் போதே குமட்டியது.நாலைந்து
    நாளாக துடைக்காம கொள்ளாம இல்லாமல்,அடுப்பு காய்ந்து போய் வறவற என்றிருந்தது.அலமாரியில் டப்பா ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.ஒரு டப்பாவில் ரவை இருந்தது.

    ஒரு அடுப்பில் தண்ணிரைக் கொதிக்க வைத்தாள்.மற்றொரு அடுப்பில்
    இரும்புச் சட்டியில் ரவையைக் கொட்டி வறுத்தாள்.அதே அடுப்பில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு தாளித்தாள்.கொதித்த தண்ணீரை தாளித்தவற்றில் ஊற்றி ரவையை போட்டு
    கிண்டி, இறக்கி, வட்டிலில் உப்புமாவைப் போட்டு ஃபேனடியில் ஆறவைத்தாள்.
    "பூரணி அத்தை வாயில தரவா"
    "இல்லை அத்தை நானே சாப்பிட்டுக்கிறேன்"

    சரி சாப்பிடு என்று கூறிய வேணி, அடுப்பாங்கடைக்குள் சென்று கெட்டுப் போன சோறுக் குழம்பு எல்லாவற்றையும்,கொல்லையில் உரக்குழியில் கொண்டு போய் கொட்டி,சாமானைக் கழுவப் போட்டாள்.
    மாட்டுக்காடியில் மாடு தாகத்தால் கத்தும் குரல் கேட்டு,மாட்டிற்கு தண்ணீர் காட்டினாள்.நாலைந்து நாளாக கழுவாத மாட்டுக்காடி அவளது கவனத்தை ஈர்த்தது.குழாயில் ட்யூப்பை மாட்டி அந்த இடத்தை நன்றாக கழுவினாள்.பாவம் மதினி வயித்துப் பிள்ளைக்காரி,ஒத்தையில கஷ்டப்படுவாள் என்று நினைத்தபடி வேகமாக வேலைகளை முடித்தாள்.
    ஹாலில் வந்து பார்த்தவள்,மேடிட்ட வயிறுடன்,முகம் சோகையால்
    வெளிறி,கண்ணைச் சுற்றி,கருவளைத்துடன்,கண்கள் குழிவிழ படுத்து உறங்கிய மதினி தேவியை பார்த்தவுடன் பாரிதாபம் தோன்றிற்று.
    உப்புமா,ஜீனி,தண்ணீர்,வட்டில் என எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலில்
    வைத்து "மதினி எந்த்திரிச்சி சாப்பிடுங்க"என்று எழுப்பினாள்.
    அப்படியே அண்ணனையும்,அம்மாவையும் எழுப்பினாள்.
    எழுந்து பார்த்த தேவி"உன்ன யார் இதெல்லாம் பண்ண சொன்னது"
    என்று கத்தினாள்.

    பூரணி பசிக்குதுன்னு சொன்னா,என்று வேணி முடிக்கும் முன்பே
    "யாராவது பார்த்து அண்ணே பெண்டாட்டி கொடுமைக்காரி இப்பவே
    வேலைவாங்கற பாரு சொல்லறதுக்கா?என்னை எழுப்பிவிட வேண்டியது தானே?
    சரிசரி விடு என்றான் மகேந்திரன்.

    அதற்குள் கொல்லைப் பக்கம் போன மகமாயி,"மாட்டுக்காடியை நீ தான் கழுவுனியா"என்று கேட்டபடி உள்ளே வந்தாள்.
    மதினி ஒத்தையில கஷ்டப்படுவாங்களேனுதான் என்று இழுத்தவளை
    மகேந்திரனின் சரிமா சாப்பிட வா என்ற வார்த்தை நிறுத்தியது.
    இல்லண்ணே எனக்கு பசிக்கல நா அப்புறம் சாப்பிட்றேன் என்றவளை
    தேவி," இப்ப சாப்பிட உட்காரப் போறியா இல்லையா?,அத்தை
    நீங்களும் உட்காருங்க,ஏங்க நீங்களும் உட்காருங்க "என அதட்டினாள்.
    மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

    உடலெங்கும் புழுதி அப்பியபடி பூரணி உள்ளே வந்தாள்.அவளைப்
    பார்த்து "நாளைகாவது ஸ்கூலுக்குப் போகனும்,நோட்டு,புத்தகமெல்லாம்
    எடுத்து வைச்சையா?வீட்டுப் பாடமெல்லாம் முடிச்சியா?ட்ரஸ்யெல்லாம் ஒரே
    புழுதி யார் துவைக்கிறது?என அதட்டியபடியே "வா தலை சீவுறேன்"என்றாள் தேவி.
    கிட்டப் போனால் அடி நிச்சயம் என்று நினைத்தவள்,"போங்க மா நா
    அத்தையிடம் சீவிக்கிறேன்" என்றாள் பூரணி.
    அத்தை அடிக்காமல் படிப்புச் சொல்லிக் கொடுப்பாள்,தலைபின்னி விடுவாள்
    என்பதால் சந்தோஷத்துடன் கேட்டாள்.

    "அத்தை,மாமா சாமிக்கிட்ட போயிட்டாதால இனிமே நீங்க இங்கதானே
    இருப்பீங்க?
    -தொடரும்-

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வேணி காலம் - அர்த்தம் என்னங்க அம்மா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    வேன காலம் என்றால் வெய்யில் காலம்...
    வேனில் என்பதன் வழக்குச் சொல்.
    வேணி இக்கதையின் கதாநாயகி.
    ஒரு விதவைப் பெண்ணின் இறுக்கமான காலம் தான் கதையின் கரு.
    அவ்வளவு தான் தலைப்பிற்கு விளக்கம் ஆதவா.....

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    வெப்ப காலம் என்று நினக்கிறேன்...நம்ம ஊருப் பக்கம் வேனற்குறு வந்திருக்கு அப்படின்னு சொல்லிச் சொல்லி வேனக்காலம்னு மரூவியிருக்குமோ?கதாசிரியர் தான் விளக்கனும்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    ஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.
    வேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    இது..
    வேணியின் வெய்யில் காலமோ..

    தொடரும். .. ஹீ தொடருங்கள்.
    ஆவலோடு
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சபாஸ் குரைந்த இடைவெளியில் அடுத்த கதை ஆரம்பித்து விட்டீர்கள். இறுதி வாக்கியத்தில் கனவனை இழந்து பெற்றோர் வீட்டில் இருக்கிறாள் நாயகி என்று முடித்து இருகிறீர்கள். அதுவும் அன்னியும் இருக்கும் போது நிரைய சங்கடங்கள் வரும், கதையை தொடர்ந்து படிப்போம்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி மலர்,வாத்தியார்...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வேணி...!!
    சமுதாய சம்பிரதாயங்கள், நடைமுறைகளினால் சாயம் போன அல்லது போக்கப் பட்ட ஒரு அபலையாக மனதை உறுத்த தொடங்கிவிட்டாள்....

    சீரான நடை, எழுத்துக்கோர்பினால் செவ்வனே செல்கிறது கதை...
    மனதாரப் பாராட்டுகிறேன், தொடர்ந்து எழுதுங்கள்........!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அப்பப்பா.. முதல் பாகத்திலேயே எத்தனை கதாப்பாத்திரங்கள்..! அந்த வீட்டினை நாமும் எட்டிப் பார்க்க வைத்த எழுத்து வன்மை அசர வைக்கிறது.
    எதார்த்தமான கதை நகர்ந்த பாங்கு நன்றாக இருக்கிறது. எல்லா விவரிப்புகளையும் கற்பனை செய்து கதையினூடே வர முடிகிறது.
    பாராட்டுகள் அக்கா.
    அடுத்த பாகத்தை நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by jpl View Post
    ஆம் யவனிகா..வெய்யில் காலம் என்றால் கோடை காலம்.
    வேனல் என்ற வழக்குச் சொல் தென் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படும்.
    ஆமாம், நம்மூர்(ஈழத்தின் வட பகுதி) வழக்கப்படி கோடைகாலம் என்பதை, "வெக்கைக் காலம்", "வெயில்காலம்" என்றே பேச்சு வழக்கில் பாவிப்போம்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி ஓவியன்.பூமகள்..
    இதோ பூ மகளின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது...

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •