Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    உணவுக்குப் பின் கூடாதுகள் ஏழு!!!

    சாப்பிட்டவுடன் உடனடியாக செய்யக்கூடாத ஏழு செயல்கள்.(செஞ்சா கண்டிப்பா ஏழரை)

    புகைக்கக்கூடாது
    சிகெரெட் புகைக்கக் கூடாது.உணவுக்குப் பின் புகைக்கும் ஒரு சிகெரெட்,பத்து சிகெரெட்டு புகைத்ததற்கு சமம் என்பது ஆராய்ச்சியாளர்களின் தொடர் ஆராய்ச்சின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.(பாஸஞ்சர்ல வர்ற கேன்சர் சூப்பர் ஃபாஸ்ட்ல வரும்)

    பழங்களை சாப்பிடக்கூடாது
    உணவுக்குப் பின் உடனே பழங்கள் சாப்பிட்டால் வயிற்றில் உப்புசம் ஏற்படும்.எனவே உணவுக்குப் பிறகு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதே நல்லது.

    தேநீர் அருந்தக்கூடாது
    தேநீர் அருந்துவதால்,வயிற்றில் அமிலத்தை சேர்க்கிறது.இதனால் புரதச் சத்து கடிணமாகி,ஜீரனிக்க சிரமம் ஏற்படும்.

    இடுப்பு பெல்ட்டை தளர்த்தக்கூடாது
    அப்படி தளர்த்துவதால் சுலபமாக குடல் சுருண்டு கொள்ளவோ,அடைத்துக்கொள்ளவோ வாய்ப்பு இருக்கிறது(அடுத்த ரவுண்டுக்கு ரெடி பண்ணிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் யோசிக்கனும்)

    குளிக்கக்கூடாது(எப்பவுமே இல்லைங்க...சாப்ட்ட உடனேதான்)
    குளிப்பதால் கை ,கால்,மற்ற உடல் பகுதிகளில் இரத்த ஓட்டம் அதிகமாவதால்...வயிறைச் சுற்றி இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது.அதனால் ஜீரனமாவது தாமதமாகும்.

    நடக்கக்கூடாது.
    உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.

    உறங்கக்கூடாது
    உடன் உறக்கத்தால்,சரியான செரிமானமில்லாமல்,வாயுத்தொல்லையும்,குடல் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இந்த ஏழுகூடாதுகளும் என்னுடன் கூடாது..

    உணவை ரசித்துத் தின்பவன் நான்.... மிக மெதுவாக.... (அன்னிக்கு உங்க கூட சாப்பிட்டதே கொஞ்சம் ஃபாஸ்டுதான்.)

    தின்றதும் சிறிது நேரம் அமரும் பழக்கம் - (வீட்டில் இருக்கும் போது) டிவி ஓடிக்கொண்டிருக்குமே!! அதான்..

    இப்பொழுதெல்லாம் தின்றது நடக்கும் பழக்கம்.....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ரொம்ப கஷ்டமா இருக்கும் போலருக்கே..

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதவா...ஆரோக்கியத்துக்கு நல்லது கூடாதா.....முயற்சி செய்ங்க.உடம்பத் தேத்தனனுமில்ல....
    என்ன மதி இது...இது கூட கஷ்டமா....?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நடக்கக்கூடாது.
    உணவுக்குப் பின் நூறடி நடந்தால் 99 வயது வாழமுடியுமென்று சொல்வார்கள்.ஆனால் அது உண்மையல்ல.உடனே நடப்பதால் உணவின் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக உடலுக்கு கிடைக்காது.செரிக்க கொஞ்சம் நேரம் கொடுத்துவிட்டு பிறகு நடக்கவேண்டும்.
    அப்படியா சங்கதி...! நானும் தவறாகத்தான் நினைத்துக்கொண்டிந்திருக்கிறேன். புரிய வைத்ததற்கு நன்றி.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அண்ணா...அப்படியே என்னென்ன செய்யலாம்னு சொல்லிருங்க...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆதவா...ஆரோக்கியத்துக்கு நல்லது கூடாதா.....முயற்சி செய்ங்க.உடம்பத் தேத்தனனுமில்ல....
    என்ன மதி இது...இது கூட கஷ்டமா....?
    அண்ணே! அந்த ஏழும் என்னுடன் கூடாது (கூட்டம் போடாது) என்றேன்...

    மதியை நீங்க பார்த்தா அப்பறம் சொல்லுவீங்க... ஆதவன் எவ்வளவோ தேவலைன்னு....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதவா View Post
    அண்ணே! அந்த ஏழும் என்னுடன் கூடாது (கூட்டம் போடாது) என்றேன்...

    மதியை நீங்க பார்த்தா அப்பறம் சொல்லுவீங்க... ஆதவன் எவ்வளவோ தேவலைன்னு....
    என்ன காமெடி இது..? என்னோட போட்டியா?
    பெங்களூர் மக்கள்கிட்ட கேளுங்க..

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    என்ன காமெடி இது..? என்னோட போட்டியா?
    பெங்களூர் மக்கள்கிட்ட கேளுங்க..
    ஹி ஹி..... இப்படி வாய்சவடால் உட்டு பயப்படுத்தறவங்களை நான் அதிகம் பார்த்திருக்கேன்....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    பயனுள்ள தகவல் சிவா.

    நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    அட பாவமே இந்த குளிக்கரது, நடக்கரது, தூங்கரத தவிர மீதி நான்கை நான் கட்டாயம் செய்கிறேனே. சிவா ஜி இப்படி பயமுறுத்தீட்டீங்களே, நான் எப்பதான் திருந்த போறேனோ
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    நான் எப்பதான் திருந்த போறேனோ
    இப்பவே வாத்தியாரே....(அப்பதானே இன்னும் ஆரோக்கியமா புறமுதுகிட்டு ஓடி வரலாம்...ஹி..ஹி..ஹி..)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •