end of the platonic love,
touch with two pair of lips.
தொலைவில் நன்றாகத் தெரிந்த,வசீகர முகம் போல்படவே உற்று பார்த்தேன்.
கல்யாணி..............
ஏறக்குறைய ஓடியவள் போல் நடந்தாள்,நான் நின்ற பஸ்
ஸ்டாப்பிதற்கு எதிர் பிளாட்பார்மில். வேகமாக ரோட்டைக் கடந்து அவளெதிரில் போய் நின்று கல்யாணி என்று அழைத்தேன்.
திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,"சீமாச்சு"என்று கத்தினாள்.
"வாடா பேசிண்டே நடக்கலாம்.புக்காத்து மனுஷாள்ளாம் ஜவுளிக் கடையில் காத்துண்டுருக்கா"என்று என்னையும் இழுத்துக் கொண்டு
ஓடினாள்.
நோக்கு தெரியுமோனோ,என் சின்ன நாத்தனாருக்கு கல்யாணம்.நம்ம
கோண்டு மாமாவாத்து பையன் கிச்சாவுக்குத் தான் பேசியிருக்கா.
என்றாள்.
"கல்யாணி காப்பி சாப்பிடலாமா"என்று வினவினேன்.
ஒரு வினாடி யோசித்து சரி என்றாள்.
ஒரு ரெஸ்டரண்டில் நுழைந்து காப்பி குடித்தப்டியே கேட்டாள்
"டேய்,சீமாச்சு எத்தனை வருஷாச்சு பார்த்து,ஆமா உ ஆத்துக்காரி
மாயவரம்ன்னு அக்கா சொன்னா எப்பிடிடா இருக்கா?"
என்றாள்.
நன்னாயிருக்கா என்றேன்.
"சரிடா சீமாச்சு,நாழியாறது உ போன் நம்பர் கொடுடா"
கொடுத்தேன்.
"கோவிச்சுக்காதேடா நாழியாறது வரேன்டா"என்று கூறியபடியே வேகமாக சென்றாள்.
புயலடித்து ஒய்ந்த உணர்வு எனக்குள்.உடனே கல்புவை பார்க்கத் தோணித்து.
"ஆட்டோ"என்றேன்.
-தொடரும்-
Bookmarks