கதை நகர்த்தல் படு சுவாரசியமாக இருக்கிறது.ஐயராத்து உரையாடல்கள் எனக்குப் பழகியதென்பதால் கதையோடும்,கதை மாந்தரோடும் ஒன்றிப்போக முடிந்தது.பாலய நட்பு எப்போது காதலாக மாறுகிறதென்பது யாருக்குமே இனங்காண முடிவதில்லை.அதனாலேயே அதை வெளிப்படுத்தவும் தவறி விடுகிறார்கள்.ஆனால் அந்த உணர்வு மட்டும் உயிருடன் ஒட்டிக் கொள்கிறது.
மனதுக்கு நெருக்கமாக மனைவியோ,கணவனோ வந்துவிட்டபிறகும் கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டுதானிருக்கும்.
இந்தக் கதையைப் பொருத்தவரை,கல்யாணியைப் பார்ப்பதை சீமாச்சு தவிர்த்து வந்ததால் ஒரு குற்ற உணர்வு அவனுக்குள் இருந்து வந்தது.ஆனால் கல்யானி கல்புவுக்குக் கொடுத்த அந்த ஒரு முத்தம் அவனுக்குள் ஒரு விடுதலையை உணர வைத்து விட்டது.விரும்பிப் படித்தேன், மிகவும் ரசித்தேன்.வாழ்த்துகள் மேடம்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமையான கதை...ஒன்றிப் படிக்க வேண்டிய கதையாக தென்பட்டதால் படிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்...நல்ல நடை...அருமையான கரு...அழகாகக் கொடுத்துள்ளீர்.பாராட்டுகள்.
கல்யாணிகளும், சீமாச்சுகளும் நம் ஒவ்வொருவருள்ளும் ஒளிந்திருக்கிறார்கள் வேறு வேறு வட்டார* வழக்கு பேசிக்கொண்டு...அவரவர் பால்ய சினேகிதர்களை நினைவுக் கொண்டுவருகிறது...அதுவே கதைக்குக் கிடைத்த வெற்றி...
Last edited by யவனிகா; 10-12-2007 at 05:12 PM.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
நன்றி சிவா.ஜி,யவனிகா..........
இப்போ தான் முழுகதையையும் ஓரே மூச்சா படிச்சேன்...
அஹ்ரகாரத்துல இருந்த மாதிரி இருந்திச்சி...
அழகான எழுத்து நடை...
பின்னிட்டீங்க,,,,
வாழ்த்துக்கள்.... நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்....
நீங்க பாஸாயிட்டீங்கம்மா...இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.
மலருக்கே புரிஞ்சிடுதுன்னா... லோகத்துல எல்லாருக்கும் புரிஞ்சமாதிரிதான்....![]()
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
நன்றி மலர்............பாஸ் மார்க் கொடுத்தற்கு.............
அன்புள்ள லதா,
இருவரின் இதழ்கள் உரசும்போது
உளநிலையில் மட்டும் உலவிய காதல் தகரும்...
இந்த ஆங்கிலச் சொலவடையை எடுத்து
எந்த இருவர் இதழ்களின் உரசல் என்பதில்
ஒரு இனிய திருப்பம் தந்தது அருமை..
கடையநல்லூர்ப் பயணத்துக்கு முந்திதான் கல்யாணியை அவன் தொட்டது
கடைசி முறையாக இருக்கும் - சரிதானே?
விகல்பம், உள்மன ஏக்கம், தேடல் இல்லாக்காலங்களில் அவளைத் தொட, விளையாட அவன் தயங்கியதில்லை... யோசித்ததில்லை..
ஆனால் - அந்த மனமாற்றப்பருவத்துக்குப் பின்போ...
பார்வையால் விழுங்குவதையும் பிறர் பார்ப்போரோ என மிடறல்..
எதை அதிகம் செய்ய விழைகிறோமோ
அதைக் கொஞ்சமும் செய்துவிடா விநோத மனநிலை..
செய்யாததன் காரணம் - விழைவை பிறமனம் புரிந்துகொண்டுவிடுமோ என்ற பேதைமை..
மனநிலையின் சுகமான பிணக்குநிலைகளில் இது தலையானது..
நம்மூர் பருவ வயதினரின் இந்த மறுகும் மனநிலை
உளம் மட்டும் சார்ந்த காதலாலா.. உள்ளூரப் புதைக்கவென்றே முளைத்த காதலாலா???
ஆதவா போல் பலருக்கும் நிகழும் முடிச்சு இது..
கல்பனா வாய்த்த சீமாச்சு அதிர்ஷ்டக்காரன்..
எல்லா மனைவியரும் கல்பு அல்ல என்பது துரதிர்ஷ்டம்..
எல்லா ஆடவரும் சிவராமன் இல்லை என்பது நிதர்சனம்..
ஊமைப்பாட்டிகள் அமைவதே விசேஷம்..
ஒன்றிப் படிக்க வைத்த கதை.. நன்றி லதா அவர்களே..
(கடந்த சில மாதங்களில் இன்றிரவே இதுபோல் வாசித்து பதிலளிக்க அமைந்தது... தாமதத்துக்கு மன்னியுங்கள்..)
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இனிய நடை...!
எங்கள் வீட்டிலும் ஒரு மாமி பல வருடங்கள் வாடகைக்கு குடி இருந்தார்கள். எப்போதும் என் கடைசி தமக்கையை பொடிஷி என்றுதான் அழைப்பார்கள். அவர்கள் நினைவு இந்த மொழி நடையை கண்டதும் வந்தது.
தமிழில் பேசினால் எந்த வழக்காய் இருந்தாலென்ன..? எத்தனை இனிமையாய் அழகாய் இருக்கிறது!
கணினியில் இப்போது வைக்கும் பெயர்களைப்போல அப்போதே பெயர்களை சுருக்கி விளிக்கும் வழக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது.
கதைக்கரு - பலரது வாழ்விலும் எப்போதாவது வந்து போயிருக்கக்கூடிய நிகழ்வை - பனிமூட்ட உணர்வைத் தருகிறது. என்னவாக இருக்கும், சொல்லலாமா - வேண்டாமா, சொன்னால் இப்போதிருக்கும் உறவும் பாழாகி விடுமோ என்று பலவிதத்திலும் குழம்பி இருக்கும் மனதில் ஏற்பட்ட அரும்பு உணர்வை தெளிவாக உணர்த்தி இருக்கிறது.
எனக்கு பிடித்த கி.ரா. எழுத்துக்களைப்போல மன மணம் கமழும், மண் மணம் கமழும் எழுத்து நடையில் வாசிக்க சுகமாயிருந்தது. இன்னும் எழுதுங்கள். நன்றி.
தொடர் முழுமையும் வந்த பிறகு வாசிக்க வேண்டும் என்று தள்ளிப்போட்டதால் இந்த தாமதமான பின்னூட்டம் - மன்னிக்கவும்.
//எதை அதிகம் செய்ய விழைகிறோமோ
அதைக் கொஞ்சமும் செய்துவிடா விநோத மனநிலை..
செய்யாததன் காரணம் - விழைவை பிறமனம் புரிந்துகொண்டுவிடுமோ என்ற பேதைமை..
மனநிலையின் சுகமான பிணக்குநிலைகளில் இது தலையானது..//
இள மனதின் நிலையை இதை விட தெளிவாக கூறமுடியாது இளசு.நன்றி.
நன்றி பாரதி..
இந்த ஒரு வார்த்தையே போதும் உங்களின் எழுத்துத்திறமைக்கு சான்று கூற.
" இப்பொழுது கல்பு விடுங்கோ யாரன பாத்துட போற என்று கூறவில்லை. "
மிக இயல்பான கதையோட்டத்துடல் ஒரு நல்ல பதிவைத்தந்ததற்கு நன்றி.
மும்பை நாதன்
மிக மிக தாமதமான பின்னூட்டம்
தோழமையா ? காதலா? எது நல்ல பதம். " நீ அழகாக இருக்கிறாய் " என்று சொல்லிவிடுவது தோழமை. 'இவள் என்ன அழகு' என்று கள்ளத்தனமாய் ரசிப்பது சொல்லாக்காதல். அப்படியானால் நீங்கள் சொல்லவந்த எதோ ஓன்று என்னவாய் இருக்கும்.!!
மொழி வழக்கும் அருமை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks