Results 1 to 7 of 7

Thread: நடிப்பும் நாடித்துடிப்பும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    நடிப்பும் நாடித்துடிப்பும்

    கண்டதும் களிப்பு!
    காணாமல் தவிப்பு!
    எதற்கிந்த நடிப்பு-உன்
    நெஞ்சில் என் துடிப்பு!

    *********************************

    கடந்த வாரம் கழுத்துமணியும்
    மூன்றுநாள் முன்பு மூக்குத்தியும்
    நேற்றைக்கு நெற்றிப் பொட்டும்
    காலையில் காதோர கம்மலும்
    கச்சிதமாய் சொல்லி விட்டன!
    நீ என்னை நேசிப்பதாய்...!
    இன்னும் ஏன் நடிக்கிறாய்
    உண்மையை உரைக்காமல்
    உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு?!

    *************************************

    என்னை எங்கேயென்று தேடுகிறாய்!
    எனை கண்டவுடன் தடுமாறுகிறாய்!
    நான் என்னவென்று கேட்கிறேன்!
    எதுவும் சொல்ல மறுக்கிறாய்!
    நீ சொல்லா விட்டாலென்ன?
    உன் கால் கட்டைவிரல்
    சொல்கிறதே நீ
    சொல்லவந்த வார்த்தைகளை!
    Last edited by சுகந்தப்ரீதன்; 05-12-2007 at 09:04 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    அழகிய கவி சுகந்தப்ரீதன்.. வாழ்த்துக்கள்.

    -ஆதி
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதி View Post
    யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    அழகிய கவி சுகந்தப்ரீதன்.. வாழ்த்துக்கள்.

    -ஆதி
    மிக்க நன்றி நண்பரே..! பட்டென்று குரல் உங்களுக்கு நினைவுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு.. வாழ்த்துக்கள் நண்பரே..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அப்பூ சுபி..
    இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. அப்புறம் இதெல்லாம் தலைகீழாக மாறும். அவள் அணிகலன்கள் எல்லாம் வாங்கிகொடுக்கவேண்டி இருக்கும். வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் முட்டும். கண்களில் நீர்மட்டம் உயரும்.. பார்த்துப்பா அப்படியே வைத்திருக்க மெயின்டெயின் பண்ணு. வாழ்த்துக்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    அப்பூ சுபி..
    பார்த்துப்பா அப்படியே வைத்திருக்க மெயின்டெயின் பண்ணு. வாழ்த்துக்கள்.
    என்ன அமரண்ணா..இப்படி சொல்லிட்டீங்க..? அப்படியே வச்சிருந்தா துருபிடிச்சிடுதா..? எல்லாம் அனுபவ வார்த்தைகளாக இருப்பதால் முயற்சிக்கிறேன்.. நீங்கள் சொன்னதையும் முடிந்தால்.!. மிக்க நன்றி அண்ணா வாழ்த்தியமைக்கு..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    என்ன அமரண்ணா..இப்படி சொல்லிட்டீங்க..? அப்படியே வச்சிருந்தா துருபிடிச்சிடுதா..? எல்லாம் அனுபவ வார்த்தைகளாக இருப்பதால் முயற்சிக்கிறேன்.. நீங்கள் சொன்னதையும் முடிந்தால்.!. மிக்க நன்றி அண்ணா வாழ்த்தியமைக்கு..!
    நான் தங்மென்றல்லவா நினைச்சேன்.. தகரமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கலப்பா..

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    நான் தங்மென்றல்லவா நினைச்சேன்.. தகரமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கலப்பா..
    எப்படி நினைப்பு வரும்...?

    காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
    சின்ன தகரம்கூட தங்கமாகுமேன்னு....!

    நம்பள மாதிரி சாரி..உங்கள மாதிரி ஆளப் பாத்துட்டுதான் எழுதியிருப்பாங்க போலிருக்கு...?
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •