கண்டதும் களிப்பு!
காணாமல் தவிப்பு!
எதற்கிந்த நடிப்பு-உன்
நெஞ்சில் என் துடிப்பு!
*********************************
கடந்த வாரம் கழுத்துமணியும்
மூன்றுநாள் முன்பு மூக்குத்தியும்
நேற்றைக்கு நெற்றிப் பொட்டும்
காலையில் காதோர கம்மலும்
கச்சிதமாய் சொல்லி விட்டன!
நீ என்னை நேசிப்பதாய்...!
இன்னும் ஏன் நடிக்கிறாய்
உண்மையை உரைக்காமல்
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு?!
*************************************
என்னை எங்கேயென்று தேடுகிறாய்!
எனை கண்டவுடன் தடுமாறுகிறாய்!
நான் என்னவென்று கேட்கிறேன்!
எதுவும் சொல்ல மறுக்கிறாய்!
நீ சொல்லா விட்டாலென்ன?
உன் கால் கட்டைவிரல்
சொல்கிறதே நீ
சொல்லவந்த வார்த்தைகளை!
Bookmarks