கைச் சிறையில் என்னைக்
கைதியாக்க
புன்னகை விலங்கோடு
என்னிடம் வந்த
ஏந்திழை......
என்னிடமே
சிறைபட்டு போனதேன்...?
விலங்கிட வந்து
விலங்கேற்றதேன்.....?
அவளைச் சுமக்கும் வேளையில்
பூமி புவியீர்ப்பு விசையை
இழந்ததேன்......?
விதிகளை மாற்றும்
காமனின் சதியா....?
காதலில் இதுதான்
கடைபிடிக்கும் விதியா...?
Bookmarks