Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: உயிர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0

    உயிர்

    பறணேறியப் பழையக் கவிதைகளில் இருந்து..


    ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
    ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
    ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
    ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
    ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
    உயிரையே வாடகைக் கேட்கிறாய்
    ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
    உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

    எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
    என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
    இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
    இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
    பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
    புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
    மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
    மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்

    திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
    திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
    மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
    மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
    அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
    அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
    இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
    இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்

    இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
    இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
    பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
    பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
    கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
    கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
    மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
    மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்

    விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
    வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
    முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
    மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்
    அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
    ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
    பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
    பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.

    - ஆதி
    Last edited by ஆதி; 05-12-2007 at 11:51 AM.
    அன்புடன் ஆதி



  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    கவிதை.... கவிதை.,... !

    சொல்லழகு.... பொருளழகு... !
    பிழையில்லா தமிழழகு... .!

    வாழ்த்துக்கள் கவிஞரே... !
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by சாம்பவி View Post
    கவிதை.... கவிதை.,... !

    சொல்லழகு.... பொருளழகு... !
    பிழையில்லா தமிழழகு... .!

    வாழ்த்துக்கள் கவிஞரே... !
    பின்னூட்டத்திற்கு நன்றி சாம்பவி அவர்களே..

    -ஆதி
    அன்புடன் ஆதி



  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வைரமுத்துவின் கல்லூரி காலக்கவிதைகளில்
    கண்டிருக்கிறேன் இப்படி ஒரு சொல்/பொருள் வீச்சை!

    உங்கள் ஆழம், அகலம், ஆளுமை அசரவைக்கிறது ஆதி!
    மிக வளமான எதிர்காலம் கவியுலகில் காத்திருக்கிறது உங்களுக்கு!


    சாம்பவியின் பாராட்டு சாமான்யமல்ல.. அவர் பாராட்டை பெரும் வெகுமதியாய் நான் கருதுகிறேன்..

    வாழைப்பூத்திரி எடுத்து
    வெண்ணியிலே நெய்யெடுத்தது - வாலி!
    காதல் நாடகத்தில் திரை இழுத்து
    கண்ணீரில் நெய்யெடுத்தது - ஆதி!

    தொடரட்டும் கவிரதப் பயணங்கள்.... கம்பீர சொல்லாட்சியுடன்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    வைரமுத்துவின் கல்லூரி காலக்கவிதைகளில்
    கண்டிருக்கிறேன் இப்படி ஒரு சொல்/பொருள் வீச்சை!

    உங்கள் ஆழம், அகலம், ஆளுமை அசரவைக்கிறது ஆதி!
    மிக வளமான எதிர்காலம் கவியுலகில் காத்திருக்கிறது உங்களுக்கு!


    சாம்பவியின் பாராட்டு சாமான்யமல்ல.. அவர் பாராட்டை பெரும் வெகுமதியாய் நான் கருதுகிறேன்..

    வாழைப்பூத்திரி எடுத்து
    வெண்ணியிலே நெய்யெடுத்தது - வாலி!
    காதல் நாடகத்தில் திரை இழுத்து
    கண்ணீரில் நெய்யெடுத்தது - ஆதி!

    தொடரட்டும் கவிரதப் பயணங்கள்.... கம்பீர சொல்லாட்சியுடன்!

    ஐந்தாண்டுக்கு முன்னெழுதியக் கவிதை..

    பிறந்தப்பயனையடைந்து விட்டதென்றே பேருவகைக்கொள்கிறது மனம்..

    சாம்பவியிடமிருந்து வந்த வாழ்த்தும் முதல் வாழ்த்து இத்திரிக்கு மட்டுமல்ல
    எனக்கும்..

    நன்றிகள் இளசு அவர்கட்கு.. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் ஊட்டத்திற்கும் எஞ்ஞான்றும் நன்றியுடன் ஆதி
    Last edited by ஆதி; 04-12-2007 at 05:06 AM.
    அன்புடன் ஆதி



  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமை அருமை.
    ஆதியின் எண்ணமும் கைவண்ணமும் மணக்குது.
    ரசிக்கின்றேன்; ருசிக்கின்றேன்; சொக்கி நிற்கின்றேன்..
    எல்லாவளமும் நிறைந்து இருக்கின்றது..
    வைரமுத்து பானியில் சொல்லிப்பார்த்தேன்.
    எனது பானியிலும் சொல்லிப்பார்த்தேன்..
    அளவற்ற இனிமையை சுவைத்தேன்..

    மனமார்ந்த பாராட்டுகள் ஆதி.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அருமை அருமை.
    ஆதியின் எண்ணமும் கைவண்ணமும் மணக்குது.
    ரசிக்கின்றேன்; ருசிக்கின்றேன்; சொக்கி நிற்கின்றேன்..
    எல்லாவளமும் நிறைந்து இருக்கின்றது..
    வைரமுத்து பானியில் சொல்லிப்பார்த்தேன்.
    எனது பானியிலும் சொல்லிப்பார்த்தேன்..
    அளவற்ற இனிமையை சுவைத்தேன்..

    மனமார்ந்த பாராட்டுகள் ஆதி.
    சந்தப்பானியில் தந்தப் பின்னூட்டத்திற்கும்..

    மானமார்ந்தப் பாராட்டுக்கும் நன்றி அமரன்..


    -ஆதி
    அன்புடன் ஆதி



  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    01 Dec 2007
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    6
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    பறணேறியப் பழையக் கவிதைகளில் இருந்து..


    ஒருமுறை சொர்க்கத்தில் சேர்க்கிறாய் - பின்
    ஒருமுறை நரகத்தில் வார்க்கிறாய்
    ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
    ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
    ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
    உயிரையே வாடகைக் கேட்கிறாய்

    ஒருநொடி நாந்தான் மகிழ்ந்ததால் - என்
    உணர்ச்சிக்கு தடைப்பல விதிக்கிறாய்

    எதுவரையில் என்பயணம் அறியவில்லை - அதை
    என்றைக்கும் அறிந்துவிட முயன்றதில்லை
    இதுவரையில் என்வேர்கள் அசைந்ததில்லை - அடி
    இளவெட்டு தூறல்களில் நனைந்ததில்லை
    பொதுவாக கனவுகளில் மிதந்ததில்லை - உயிர்
    புன்னகையோ இமைகளில் வழிந்ததில்லை
    மெதுவாக என்னைநீ மாற்றிவிட்டாய் - என்
    மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்


    திறக்காத விழிகளை திறந்துவிட்டாய் - ஒரு
    திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்

    மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய் - உன்
    மடிமீது எந்தலையை மலரவிட்டாய்
    அடங்காத ஆசைகளில் அடுப்பெரித்தாய் - நான்
    அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்

    இடக்காக வார்த்தைகளை இதழ்நிறைத்தாய் - என்
    இதயத்தைக் குறிவைத்து எதிலடித்தாய்


    இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
    இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்

    பழகாது பெண்களிடம் தள்ளி இருந்தேன் - உன்னை
    பார்த்ததுமே பழகிவிட ஆர்வம் அணிந்தேன்
    கிழடான காதல்கதைக் கேட்டுச் சிரித்தேன் - விழி
    கிளர்ச்சியிலே உயிரோடு கிழிந்து உதிர்ந்தேன்
    மலடான மேகமென மயங்கி நகர்ந்தேன் - ஒரு
    மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்


    விடியாத இரவுவந்தால் பகல்கள் உண்டா ? - உன்
    வீண்பிடி வாதத்தில் எந்தப் பயனுமுண்டா ?
    முடியாது எனச்சொல்லி முகத்தை மறைத்தாய் - என்
    மூச்சுக்கு கட்டாயத் தூக்கு கொடுத்தாய்

    அடிக்காதல் வேறுசெயதால் இனிமேல் மீண்டும் - உயிர்
    ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
    பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
    பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.

    - ஆதி

    ஐந்தாண்டுக்கு முன் எழுதியக் கவிதை என்றுக் குறிப்பிட்டிருந்தீர்கள், இன்னும் ஈரம் இருக்கிறது ஆதி.

    புதிய சொல்லாடல் வேறுப்பட்டப் பார்வை அர்த்தம், அடடா கலக்குறீங்க ஆதி.

    நான் படித்த தங்களுடைய இரண்டாம் கவிதை இது, என்னை உங்கள் ரசிகையாக்கிடுச்சுங்க. உங்க கவிதைகளத் தேடிப் பிடிச்சு படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

    அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள், பாராட்டுக்கள் ஆதி.

    இதேப் போன்ற இனிய கவிதைகளைத் தங்களிடமிருந்து எதிர்நோக்கி
    செந்தமிழரசி

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by senthamilarasi View Post
    ஐந்தாண்டுக்கு முன் எழுதியக் கவிதை என்றுக் குறிப்பிட்டிருந்தீர்கள், இன்னும் ஈரம் இருக்கிறது ஆதி.

    புதிய சொல்லாடல் வேறுப்பட்டப் பார்வை அர்த்தம், அடடா கலக்குறீங்க ஆதி.

    நான் படித்த தங்களுடைய இரண்டாம் கவிதை இது, என்னை உங்கள் ரசிகையாக்கிடுச்சுங்க. உங்க கவிதைகளத் தேடிப் பிடிச்சு படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

    அலங்கரிக்கப்பட்ட வார்த்தைகள், பாராட்டுக்கள் ஆதி.

    இதேப் போன்ற இனிய கவிதைகளைத் தங்களிடமிருந்து எதிர்நோக்கி
    செந்தமிழரசி

    எழுதிய ஈரம் காயாமல் இருக்கிறது எனச்சொன்ன அரசிக்கு நன்றி..

    என் ரசிகையாகிவிட்டீர் எனச்சொல்லி என்னை நெகிழவைத்துவிட்டீர் சகோதரி..

    நன்றிகள் சகோதரிப் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும்..

    -ஆதி
    அன்புடன் ஆதி



  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    தாமதமாகத் தான் பார்த்தேன் ஆதி கவிதையை...
    சந்த நயத்துடன்...கவிச் சிந்து பாடுகிறீர்கள்...
    கவிதையின் எல்லாத் தளங்களிலும் நீங்கள் மிளிர்வதைக் காணுகிறேன்.
    மன்றத்துக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் நீங்கள் ஒருவர் என்றால் மிகையாகாது தோழரே...
    தொடரட்டும் உங்களின் கவிப் பயணம்...வாழ்த்துக்கள்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    ஒருமுறை முளைக்கட்ட விதைக்கிறாய் - அடி
    ஒருமுறை முளையறுத்து மிதிக்கிறாய்
    ஒருமுறை உன்னைத்தான் பார்ப்பதற்கு - நீ
    உயிரையே வாடகைக் கேட்கிறாய்
    என்
    மேகத்தில் மழையீரம் பூசிவிட்டாய்
    ஒரு
    திருவோடாய் இதயத்தை ஏந்தவிட்டாய்
    மரக்காதில் வார்த்தைகளை எதிரொலித்தாய்
    நான்
    அழுகின்ற நீர்மங்களில் நெய்யெடுத்தாய்
    இளகாதப் பாறையென எண்ணி நிமிர்ந்தேன் - உன்
    இமைக்காற்றில் பொடிப்பொடியாய் இடிந்து தகர்ந்தேன்
    ஒரு
    மலர்நினைவில் மழைப்பெய்ய கண்கள் இருண்டேன்
    உயிர்
    ஆன்மா இன்னொன்று புதிதாய் வேண்டும் - என்னைப்
    பிடிக்காத ஒருத்திக்காய் சாக ஒன்று - என்மேல்
    பிரியமான ஒருத்திக்காய் வாழ மட்டொன்று.
    எதை எடுக்க எதை விட?
    எனவே அத்தனையும் கோர்த்து விட்டேன்....
    அதெல்லாம் சரி ஆதி,உங்களைப் பிடிக்காத ஒருத்திக்காக ஏன் சாக வேண்டும்?முரண் தொடையாய் முரண்டு பிடிக்கின்றீர்கள்....

    காதலியின் இமைக் காற்றில் புயலடிக்கின்றது உங்கள் கற்பனை வான்மேகம்.

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by யவனிகா View Post
    தாமதமாகத் தான் பார்த்தேன் ஆதி கவிதையை...
    சந்த நயத்துடன்...கவிச் சிந்து பாடுகிறீர்கள்...
    கவிதையின் எல்லாத் தளங்களிலும் நீங்கள் மிளிர்வதைக் காணுகிறேன்.
    மன்றத்துக்குக் கிடைத்த பொக்கிஷங்களில் நீங்கள் ஒருவர் என்றால் மிகையாகாது தோழரே...
    தொடரட்டும் உங்களின் கவிப் பயணம்...வாழ்த்துக்கள்...
    பொக்கிஷங்களில் ஒருவரென என்னைக் குறிப்பிட்டத்திற்கு நன்றி சகோதரி..

    இந்த இழையில் வந்தப் பின்னூட்டங்கள் என் கல்லூரி நாட்களை ஞாபகப்படுத்துகின்றன..

    படித்தது வேதியலானாலும் பிடித்தது தமிழென்பதால், அதிகமாய் தமிழ்துறைப் படிக்கட்டுகளில்தான் உலவுவேன்..

    புல்வெளி, நூலகம், தமிழ்துறை இவைதான் எனக்கு பிடித்தமான இடங்கள்..

    தமிழ்துறையும் என்னை வாழ்த்தி வளர்த்தது..

    பிழையோடுதான் எழுதுவேன் என்றாலும் பிரியமாய்தான் சொல்லி திறுத்துவர்..

    அதற்கு காரணம் ஒரு தமிழ் தேர்வு..

    தமிழ்தேர்வு எனில் எனக்கு தேன்மிட்டாய் தின்பது மாதிரி..

    கற்பனைக்குதிரையை அவிழ்த்துவிடுவேன்.. விடைகளை சொல்லோவியங்களாய்தான் வரைவேன்..

    அப்படி ஒரு பரிட்சையில்.. ஒரு 15 மதிப்பெண் கேள்வி எழுத நேரமில்லாததால் கவிதை எழுதிவைத்தேன்.. அதுவும் அது சிலப்பதிகாரக் கேள்வி..

    சென்றவன் உரைத்தான்
    தென்னவன் அழைத்தான்
    வந்தவள் நின்றாள்
    வடிவழகே நீயார் என்றான்



    என ஒருகவிதை வடித்தேன், தமிழ்த்துறை முழுதும் பரவிவிட்டது அக்கவிதை.. தமிழ்துறை என்னைத் தத்தெடுத்துக்கொண்டது..

    உனக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் சொல்வார்கள், சிலக் காரணங்களால் நான் கவிதை எழுதுவதை நிறுத்தினேன்..

    எல்லாம் என் கண்முன் வந்து நிற்கிறது சகோதரி..

    மீண்டும் என் நன்றிகள்..

    -ஆதி
    Last edited by ஆதி; 06-12-2007 at 11:36 AM.
    அன்புடன் ஆதி



Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •