அமெரிக்கா சென்ற கவிப்பேராசு அங்கு நியூயார்க் சுற்றி பார்த்துவிட்டு எழுதிய கவிதை இது....
அறிவு
உறவை
டாலர்களாக பார்க்கும்
உணவை
வைட்டமின்களாய்ப் பார்க்கும்
நாற்பது வரைக்கும்
அவர்கள் சாப்பிட உணவு
நாற்பதுக்குப் பிறகு
அவர்களைச் சாப்பிடும் உணவு
வாரத்திற்கு ஐந்துநாள்
வாழ்க்கை விற்கப்படும்
வாரத்திற்கு இரண்டு நாள்
வாழ்க்கை வாங்கப்படும்
பாசம்
பாலிதின் பை
காதல்
கைதுடைக்கும் காகிதம்
அங்கங்கே
ரகசியக் குரலில்
கோஷம் கேட்கும்
வீட்டு கூரையில்
நிலா வேண்டுமா?
மாத்திரை போடு!
சூரியனில் நடக்க வேண்டுமா?
மாத்திரை போடு!
கிளியோபாட்ரவை
எழுப்பி தருகிறோம்
மாத்திரை போடு!
இப்படி
வீதி முனைகளில்
சுலபப் தவணைகளில்
தற்கொலை விற்கும்
பாப்கொர்ன் கொரித்துக்கொண்டே
பள்ளி மாணவி சொல்வாள்
"இன்றைக்கே
கலைத்து விடுங்கள் டாக்டர்
நாளை
பத்தாம் வகுப்பு பரிட்சை!"
Bookmarks