Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 22

Thread: பாரதியார் கவிதைகள்.

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0

    பாரதியார் கவிதைகள்.

    நல்லதோர் வீணை


    நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
    சொல்லடி சிவசக்தி!-எனைச்
    சுடர்முகு மறிவுடன் படைத்து விட்டாய்.
    வல்லமை தாராயோ-இந்த
    மானிலம் பயனுறவாழ்வதற்கே?
    சொல்லடி சிவசக்தி! - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

    விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.
    நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
    தசையினைத் தீசுடினும்- சிவ
    சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன்.
    அசைவறு மதிகேட்டேன். - இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

    .
    Last edited by இராசகுமாரன்; 18-03-2008 at 08:16 AM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அட!! நல்ல படைப்புகள் அவை சகோதரி.

    கடவுளை ஒரு நண்பராக பாவித்து " வரம் கொடுப்பதில் தடை இருக்கிறதா? " என்று கேட்டிருப்பார்..

    ஒவ்வொரு வரிகளும் ஆழமான எளிமையான வரிகள்>..

    மேலும் தொடருங்கள்.....

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    அட!! நல்ல படைப்புகள் அவை சகோதரி.

    கடவுளை ஒரு நண்பராக பாவித்து " வரம் கொடுப்பதில் தடை இருக்கிறதா? " என்று கேட்டிருப்பார்..

    ஒவ்வொரு வரிகளும் ஆழமான எளிமையான வரிகள்>..

    மேலும் தொடருங்கள்.....
    தருகிறேன் ஆதவா.

    பாரதியின் கவிதைகள் விரும்பாதோர் இருக்க முடியுமா??
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மீரா பின்னூட்டமிடாதற்கு மன்னிக்கவும்.முன்குறிப்போ,பின்குறிப்போ இல்லாததால்,நீங்கள் இந்த பாரதிக் கவிதைக்கு உங்கள் படைப்பாக எதுவோ தரப்போகிறீர்களென்று காத்திருந்தேன்.வரிசையாக தரப் போகிறீர்களா....அப்படியென்றால் மிகவும் நல்லது.சுவைக்க காத்திருக்கிறோம்.நீங்கள் சொன்னதைப் போல பாரதிக் கவிதையை விரும்பாதவர் யாருண்டு.அதுவும் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நன்றி மீரா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    காணி நிலம்


    காணி நிலம் வேண்டும் - பாரசக்தி
    காணி நிலம் வேண்டும் - அங்குத்
    தூணி லழகியதாய் - நன் மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்குக்
    கேணி யருகிலே - தென்னைமரம்
    கீற்றுமிள நீரும்.


    பத்து பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச்சுடர் போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும் - அங்கே
    கத்துங் குயிலோசை - சற்றேவந்து
    காதிற் படவேணும் - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்.

    பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டு தரவேணும்; அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா, நின்றன்
    காவ லுறவேணும்; என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
    பாலித் திடவேணும்.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மீரா பின்னூட்டமிடாதற்கு மன்னிக்கவும்.முன்குறிப்போ,பின்குறிப்போ இல்லாததால்,நீங்கள் இந்த பாரதிக் கவிதைக்கு உங்கள் படைப்பாக எதுவோ தரப்போகிறீர்களென்று காத்திருந்தேன்.வரிசையாக தரப் போகிறீர்களா....அப்படியென்றால் மிகவும் நல்லது.சுவைக்க காத்திருக்கிறோம்.நீங்கள் சொன்னதைப் போல பாரதிக் கவிதையை விரும்பாதவர் யாருண்டு.அதுவும் இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.நன்றி மீரா.
    நன்றி சிவா.ஜி.

    பாரதியின் கவியை வைத்து கவி எழுதும் அளவுக்கு எனக்கு திறமை இல்லை சகோதரா.

    இது மன்ற நண்பர்களுக்காக கொடுக்க நினைத்து ஆரம்பித்தது.

    நீங்களும் உங்களுக்கு பிடித்த பாரதியின் கவியை இங்கே பதிந்தால் எனக்கு மகிழ்ச்சி.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி

    வந்தே மாதரம் என்போம் - எங்கள்
    மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

    ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
    ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
    வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
    வேறு குலத்தின ராயினும் ஒன்றே

    ஈனப் பறையர்க ளேனும் அவர்
    எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
    சீனத்த ராய்விடு வாரோ? - பிற
    தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?

    ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
    அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
    தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
    சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?


    ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
    ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

    நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
    ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

    எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
    யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
    முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
    முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக் கினிமனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    நல்லதோர் வீணை



    விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்.

    விசையுறு பந்தினைப் போல் - கவிதைகளில் அறிவியலைப் புகுதியவன் பாரதி.

    பகிர்தலுக்கு நன்றி மீரா..
    Last edited by ஆதி; 04-12-2007 at 03:19 AM.
    அன்புடன் ஆதி



  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    காணி நிலம்


    காணி நிலம் வேண்டும் - பாரசக்தி
    காணி நிலம் வேண்டும் - அங்குத்
    தூணி லழகியதாய் - நன் மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்திடையே - ஓர் மாளிகை
    கட்டித் தரவேண்டும்
    - அங்குக்
    கேணி யருகிலே - தென்னைமரம்
    கீற்றுமிள நீரும்.
    இந்த வரிகளில் தாஜ்மகால் ஒன்று கேட்கிறான் பாரதி சக்தியிடம்..

    பகிர்தலுக்கு நன்றி மீரா..

    -ஆதி
    Last edited by ஆதி; 04-12-2007 at 03:18 AM.
    அன்புடன் ஆதி



  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post

    புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
    போயின நாட்களுக் கினிமனம் நாணித்
    தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
    தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி

    இதே போல் தொடர்ந்து தாருங்கள் சகோதரா நண்பர்களின் பார்வைக்கு.
    Last edited by meera; 26-03-2008 at 10:23 PM.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post
    இந்த வரிகளில் தாஜ்மகால் ஒன்று கேட்கிறான் பாரதி சக்தியிடம்..

    பகிர்தலுக்கு நன்றி மீரா..

    -ஆதி
    விமர்சனத்திற்கு நன்றி ஆதி
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by meera View Post
    இதே போல் தொடர்ந்து தாருங்கள் சகோதரா நண்பர்களின் பார்வைக்கு.
    தருகிறேன் அதற்க்காக இப்படி முழு பாடலையுமா கோட் பன்னுவாங்க. ஒரிரு வரி மட்டும் வச்சுட்டு குறைத்து விடுங்கள்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •