Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11
Results 121 to 122 of 122

Thread: நானும் தமிழும்! - நிறைவு

                  
   
   
  1. #121
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    தாமரை அண்ணா..! அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா மின்னிதழ் வேலையை.. ரொம்ப நல்லாயிருக்கு அந்த மின்னிதழும்.. இன்னும் முழுசா படிக்கலை..! ஆனாலும் இதழாசிரியர் தாமரை அண்ணாங்கிறத பாத்தா பிரமிக்காம இருக்க முடியல..!

    உங்க தமிழும் நானும் கட்டுரையை பிரதி எடுத்துக்கிட்டு போய் அறையில படிச்சேன்.. அலுவலகத்தில அந்த அளவுக்கு சுதந்திரம் இல்ல அதனால..! படிச்சு முடிச்சதுல இருந்து ஒன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சுது.. இன்னும் நானெல்லாம் நிறைய கத்துக்க வேண்டி இருக்குது வாழ்க்கையிலன்னு..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #122
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    "அதிகம் பொய் சொல்வது ஆண்களா? பெண்களா?"



    நல்ல தலைப்புதான்.. ஆண்களே அதிகம் பொய் சொல்வது என முன்று பெண்களும், பெண்களே அதிகம் பொய் சொல்வது என மூன்று ஆண்களும் வாதாடும் பட்டிமன்றம். நடுவராக மைனர் ஸ்ரீதர் என்ற நண்பர் அமர

    விவாதம் ஆரம்பித்தது..

    ஆண்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் எனச் சொல்லும் பொய்கள்

    நீ அழகாக இருக்கே என்பதிலிருந்து, தரகர்கள் மாப்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் பொய்கள், என ஆரம்பித்து, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற கவிஞரின் வரிகள், அந்த 7 நாட்கள் மாதிரி மனைவி இல்லாத பொழுது அடிக்கும் லூட்டிகள் அதை மறைக்கும் பொய்கள் என்று அழகாக வாதிட்டனர் பெண்கள்..

    பெண்களே அதிகம் பொய் சொல்கின்றனர் என வாதிட்டவர்களும் சரிக்குச் சரி மல்லுகட்ட..

    கடைசியாய் என் முறை வந்தது..

    "கல்யாணம் ஆன பின்னாடி நாங்க பேசறதே இல்லை, இதில எங்க போய் பொய் பேசறது என்று ஆரம்பித்தேன்"

    பொய்யிலே - பிறந்து - என்பதற்குப் புது அர்த்தம் கொடுத்தேன். பிறப்பது பெண்ணிலிருந்து.. பெண்ணென்றாலே பொய்தான் எனக் கவிஞன் நாசூக்காகக் சொல்லி இருக்கிறான் எனத் திருப்பி விட்டேன்..

    அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றிலே, யார் மிக அழகாக பொய் சொல்கிறாரோ அவர்தான் உலக அழகி என மகுடம் சூட்டப் படுகிறார்.. எனவே அழகான பெண் என்பதற்கு மிக அழகாகப் பொய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டியதும் ஒரு மிக முக்கியத் தகுதி எனச் சொன்னேன்,,


    ஒரு புடவை, கணவன் தன் தங்கைக்கு எடுத்து வருகிறான்.. இதற்கு மனைவியின் பல பிரதிபலிப்புகளைப் பாருங்கள் என எடுத்துக் காட்டினேன்..

    கணவனின் தங்கையிடம் : அண்ணா சூப்பர் சேலை எடுத்துகிட்டு வந்திருக்கார். முக்கியமான ஃபங்க்ஷன்னா கட்டிகிட்டுப் போ.. உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கும்.


    கணவனிடம்: உங்களுக்கு புடவை எடுக்கவே தெரியலியே இனிமே புடவை எடுக்கப் போகும் பொழுது என்னையும் கூட்டிட்டுப் போங்க.. எக்கச்சக்க விலை சொல்லி உங்க தலையில கட்டிடறாங்க

    மாமியாரிடம் :ரொம்ப நல்ல புடவை.. அப்படியே பத்திரமா வச்சுக்கட்டும்.. சீர் செய்ய உதவும்

    தன் அம்மாவிடம் : நான் பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்கேன்னு இவருக்கு எப்ப ஞாபகம் வந்திருக்கு.. தங்கச்சிக்கு மட்டும் புடவை வாங்கிட்டு வர்ரார்..

    தோழியிடம் : இவருக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம் புள்ளை குட்டி.. எதுக்கெடுத்தாலும் அம்மா, தங்கச்சின்னு எப்பதான் கட்டியவள்தான் குடும்பம்னு மாறப்போறாரோ!!

    இப்படி ஒரு சின்ன விஷயத்திற்கு ஆளுக்கு ஒரு விஷயமாய் திரித்து நூற்றுக்கணக்கான பொய்களைச் சொல்பவர்கள் பெண்கள் என்றேன்..

    கடைசி ஆக ஆக பேச்சுப் போட்டி எனக்கும் ரசிகை-களுக்குமான விவாதமாக மாறிப்போனது..

    கடைசியில் நடுவர் என்னிடமே கேட்டார்

    நீங்கள் சொல்லுங்கள் அதிகம் பொய் சொல்வது ஆண்களா என்று?

    அதிக பொய் என்று எண்ணிக்கை அளவில் சொல்லும் பொழுது பெண்கள் மிக மிக அதிகமாகப் பொய் சொல்கிறார்கள்.. ஆனால் ஆண்களின் ஒரு பொய் சில சமயங்களில் இப்படிப்பட்ட ஆயிரம் பொய்களுக்கு மேலாக தீமை தருவதாக இருக்கும் எனச் சொன்னேன்.

    தீர்ப்பும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது.

    இது முடிந்து மூன்று மாதங்களில் இந்தியா திரும்ப நேரிட்டது..

    அதன் பின் வேலைப்பளுவிற்கு மத்தியில் எனக்கும் தமிழுக்கும் இருந்த உறவு அனிருத்திற்குப் பஞ்ச தந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும், இராமாயண மகாபாரதக் கதைகளும் சொல்வதில் மட்டுமே இருந்தது.. வலையில் தமிழ்ச் செய்தித்தாள்கள், குமுதம் விகடன் குங்குமம் எனக் குறுகிப் போனது.

    அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் பரம்ஸின் சிறுவர் பூங்கா தளத்தை தினமலரில் காட்டி இருந்தார்கள். அனிருத்திற்குச் சொல்ல புதிதாக கதை தேடிய நான் அதில் இருந்த தமிழ் மன்றம் என்றச் சுட்டியைத் தட்டி மன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்..

    அதன் பிந்தைய வரலாறுதான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே!!!

    தமிழ் இன்னும் என்னோடு - இல்லை நான் இன்னும் தமிழோடு

    இரண்டுமே தவறு

    நானும் தமிழும் - சரி..


    முற்றும்.

    பின் குறிப்பு!

    முடிந்தால் அந்த "பட்டிமன்றத்தை" எங்காவது ஒரு நல்ல தளத்தின் மூலம் பகிர்கிறேன். கேட்டு-பார்த்து ரசியுங்கள்..

    அந்தப் பட்டி மன்றச் குறுந்தட்டு பிரதீப், ராகவன், பென்ஸ், பரம்ஸ் ஆகிய நல்ல நண்பர்களிடமும் இருக்கிறது.. இதுவரை ஒரு விமர்சனம் எழுதச் சொன்னால் யாருமே செய்யவில்லை..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 11 of 11 FirstFirst ... 7 8 9 10 11

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •