Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 51

Thread: சாமக் கோடங்கி!!!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    செல்வன் அண்ணா அந்த பெண்ணின் இறப்பில் உண்மையாக என்ன நடந்தது...??

    பாதி எரிந்த பெண்ணை, கிட்டத்தட்ட கருணைக் கொலை போல் முழுவதுமாக எரித்தார்களா..??
    கேட்கவே பயங்கரமாக இருந்தது, அரச சட்டங்கள் இந்த நடைமுறையை அனுமதித்தனவா...??

    அந்தப் பெண் இறந்த பின்னரே எரித்தார்கள். வெந்த உடல் சாம்பலாவதற்கே இரண்டாவது எரிப்பு!.. கரியாய் போன தோல் உரிந்து செந்நிறம் காட்டி, பார்க்கவே பயங்கரமாய் இருந்ததாம்.

    கோடங்கி (இது வேறு கோடங்கி) இன்னும அந்த ஊரில் உண்டு, என் அண்ணிக்கு பேயோட்ட வந்ததும் அந்த் ஊர் கோடங்கி தான். ஆனால் சுடுகாட்டுப் பூஜை இன்னும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. நான் இருந்த பல கிராமங்களில் கோடங்கி என்றால் யாரென்றே தெரியாது..

    கோடங்கிகள் கெட்டவர்கள், மந்திரவாதிகள், பயங்கரமானவர்கள் என்ற எண்ணம், அம்புலிமாமா, பொம்மைவீடு, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களைப் படித்து ஒரு கற்பனை வைத்திருந்த எனக்கு இந்தக் கோடங்கி எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அது மூட நம்பிக்கையாய் இருந்தாலும் சரி, அதில் இழையோடிக் கிடந்த பொது நலம் சிந்திக்க வேண்டியது.

    பயந்து போன தங்கைகள் எல்லாம் வாங்க கோடங்கி கிட்ட போய் மயிலிறகு பாடம் போட்டுகிட்டு வந்திரலாம்.
    Last edited by தாமரை; 02-12-2007 at 03:58 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    பயந்து போன தங்கைகள் எல்லாம் வாங்க கோடங்கி கிட்ட போய் மயிலிறகு பாடம் போட்டுகிட்டு வந்திரலாம்.
    அஸ்கு பிஸ்கு...
    நான் வர மாட்டேன்ப்பா....
    என்ன ஒரு வில்லத்தனம்...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    நக்கீரர் இப்போ விட்டலாச்சாரியர் வேடம் போட்டிருக்கீரோ? நல்லாத்தான்யா பயம் காட்டினீங்க. நல்லாக் கெளப்புறாரய்யா பீதியை! நாங்கள்லாம் நாயர் கடைல சிங்கிள் டீல ரெண்டு கட்டிங் போட்டு பேயும் நானுமா டீ குடிச்சவய்ங்க. ஹ! எங்ககிட்டேவா?

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    சேலம் டவுனே பயந்ததைப் பார்த்திருக்கேன்.
    இதையெல்லாம் சேலத்துப் பெருசுங்க கிட்ட கேட்டுப் பாருங்க.. சொல்லுவாங்க..
    கோவை பகுதியில் இந்த பயம் குரைவுதான். ஆனால் ஒரு வேடிக்கை என்னன்னா, எங்க கிராமத்துல மக்கள் இப்படி பயம் இல்லாம இருக்காங்க, அதே கோவை டவுனுக்கு ரொம்ப பக்க*த்துல நான் முதல்ல குடியிருந்த தெருவுக்கு கொஞ்ச தள்ளி ஒரு சேரி இருந்தது, அங்க ஒரு நாள் எல்லா வீட்டலயும் வேப்பதலை கட்டி இருந்தாங்க, ஏதோ ரத்த காட்டேரி வருது சொல்லி கட்டினாங்க. கிராமத்துல இல்லாத இந்த மூட நம்பிக்கை நகரத்துல இருக்கு. என்ன சொல்ல.

    ஐயை சூப்பரா கொண்டு போறீங்க. முக்கிய கட்டத்துல தொடரும் போட்டுரீங்க. சீக்கிர சொல்லுங்க. இல்லீனா நம்ம அமரனே குட்டிசாத்தானா வந்துருவாராம்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  5. #41
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    கோவை பகுதியில் இந்த பயம் குரைவுதான். ஆனால் ஒரு வேடிக்கை என்னன்னா, எங்க கிராமத்துல மக்கள் இப்படி பயம் இல்லாம இருக்காங்க, அதே கோவை டவுனுக்கு ரொம்ப பக்க*த்துல நான் முதல்ல குடியிருந்த தெருவுக்கு கொஞ்ச தள்ளி ஒரு சேரி இருந்தது, அங்க ஒரு நாள் எல்லா வீட்டலயும் வேப்பதலை கட்டி இருந்தாங்க, ஏதோ ரத்த காட்டேரி வருது சொல்லி கட்டினாங்க. கிராமத்துல இல்லாத இந்த மூட நம்பிக்கை நகரத்துல இருக்கு. என்ன சொல்ல.

    ஐயை சூப்பரா கொண்டு போறீங்க. முக்கிய கட்டத்துல தொடரும் போட்டுரீங்க. சீக்கிர சொல்லுங்க. இல்லீனா நம்ம அமரனே குட்டிசாத்தானா வந்துருவாராம்
    வாத்யாரே கதையில ரொம்ப முழுகிட்டீங்களா? அண்ணன் அப்பவே முற்றும் போட்டாச்சு

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    தாமரை உங்களோட அடுத்தப் பேய்கதைக்கு கதாநாயகி ரெடி.அதை சினிமாவா எடுத்தாலும் இவங்களையே போட்டுடலாம்.மேக்கப் செலவு மிச்சம்..ஹி...ஹி...

    கதாநாயகியும் ரெடிதான்.. பேயும் ரெடிதான்,, (அதான் நீங்க இருக்கீங்களே!)(மலர் 100 ஐ-கேஸ் இந்தப்பக்கம் தள்ளுங்க)

    ஆண்கள் மட்டும் தான் பேயாய் ஆவார்கள். பெண்கள் பிசாசுகள்தான். அழகிய பிபாசு - ஸாரி - பிசாசு, மோகினிப் பிசாசு, கொள்ளிவாய்ப் பிசாசு (தம் அடிக்கிற பொண்ணோ - பென்ஸ்), காதல் பிசாசு இப்படி பலவகைப் பிசாசுகள் உண்டு..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இந்த கதைய படிச்சிட்டு நான் பயப்படவே இல்லீங்கன்னு சொன்னா நீங்க நம்பணும். ஆனா, நீங்க நிச்சயம் நம்பமாட்டீங்க..!! வீரம்கிறதே பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது தான்..! அந்த வகையில் நான் பெரிய வீரன்..! சாமக்கோடாங்கின்னு தலைப்பை படிக்கும் போதே அடிவயித்துல ஜிலீர்-னு ஒரு சிலிர்ப்பு ஊடுருவிப்போனதை என்னால் தவிர்க்க முடியல. அதனாலேயே இதை படிச்சுத்தான் ஆகணுமான்னு இந்த திரிய முறைச்சி, முறைச்சி பார்த்திட்டு போவேன். எல்லோரும் போனதை பார்த்துட்டு புலிய பாத்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி இன்னைக்கி நானும் படிச்சேன்.! பயத்தில் விறைச்சேன்.!! எழுதிய சம்பவங்கள் திகில்னா அதை எழுத பயன்படுத்துன வார்த்தைகள் திகிலோ திகில்.!! தாமரை திட்டம் போட்டு தான் இதை எழுதியிருக்கார். பயம்கிறது தவிர்க்க முடியாத ஒரு வினோத உணர்வு தான். இரவில் வெளிச்சமான, ஆள் நடமாட்டமுள்ள ஒரு இடத்துக்கும், அதே இடம் ஆள் யாரும் இல்லாம, இருட்டு சூழ்நிலையில நாம இருக்கிறப்போ நமக்கு உண்டாகிற உணர்வுல நிறைய வித்தியாசம் இருக்கு..! அந்த மாதிரியான இடங்கள்ல நாம் இருக்கும் போதோ, கடக்கும் போதோ இதய துடிப்பு அதிகமாகிறதும், அதன் தொடர்ச்சியா வேர்வை சுரப்பில் ஓவர்டைம் எடுத்து வேலை பார்க்கிறதும் இயல்பா நடக்கிற விஷயம். அந்த நேரம் இருட்டில் ஏதாவது மாய தோற்றமோ, வினோத சத்தமா வந்தா அடுத்த நாள் வீட்டு வாசல்ல நிறைய கூட்டம் இருக்கும்.

    நானும் சின்ன வயசை கிராமத்துல கழிச்சவன் தான். புளிய மரம், மரணம், சுடுகாடு பார்த்த எனக்கு சாமக்கோடாங்கி நட்பு மட்டும் கிடைக்கவேயில்லை. இந்த சமூகம் சொல்லிக்கொடுத்தபடி ஒரு குறிப்பிட்ட வயசு வரை எனக்கும் சுடுகாட்டை கடக்கும் போது திக், திக்-னு தான் இருக்கும். இத்தனைக்கும் எந்த ஒரு பயமும் தராத சத்தமில்லாத இடம் தான் அது. ஆனா, அந்த சத்தமில்லாத ஏகாந்தம் தான் பெரும் கிலியை அப்ப ஏற்படுத்தும். சுடுகாட்டு மரத்துல ஆணி அடிக்கிற கதையை ரொம்ப ரசிச்சி படிச்சிருக்கேன். ஒவ்வொரு மனுஷனும் தனக்குள்ள இருக்கிற பய உணர்ச்சியை வெளிக்காட்ட வெட்கப்படுறதை ரொம்ப எதார்த்தமா உலகத்துக்கு சொல்ற கதை அது..! உலகத்துல பேய், பிசாசு, மோகினி இதெல்லாம் இல்லைங்கிறது என் கருத்து. ஆனா, அது சம்பந்தமான பயம் மட்டும் எல்லார்க்கிட்டயும் இருக்கு..!

    தாமரையோட எழுத்து எனக்கு ரொம்ப புடிக்கும். காரணம், அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் புதைந்துகிடக்கும் ஆழமான கருத்துக்கள். நாவலாசியர் ராஜேஷ்குமார் இது மாதிரி திகில் கதையை ரொம்ப நல்லா எழுதுவார். அதை இராத்திரியில படிக்க பயந்துக்கிட்டு பகலில் படிச்ச கதையெல்லாம் இருக்கு..! அந்த வகையில் ஒரு பயங்கரமான திகில் அனுபவத்தை, திகிலான வார்த்தைகளை வச்சி எழுதி, என்னை திகில் படுத்திட்டார். இனி தூங்கிக்கிட்டிருக்கும் போது உச்சா வந்தா இந்த கதை ஞாபகம் வராம இருக்கணும். அப்படி வந்ததுன்னா நான் ஃபிலிப்பினோக்களின் முறையை பின்பற்ற வேண்டியிருக்கும்.!! ஆனா, நான் ஊர்ல இருந்தா எனக்கு அந்த பயமே இருக்காது. காரணம், 4வது படிக்கிற என் தங்கச்சிப்பையனை துணைக்கு கூட்டிபோய்க்குவேன்..! அப்படி பார்க்காதீங்க.. உங்களைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு..!!
    அன்புடன்,
    இதயம்

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    நான் ஊர்ல இருந்தா எனக்கு அந்த பயமே இருக்காது. காரணம், 4வது படிக்கிற என் தங்கச்சிப்பையனை துணைக்கு கூட்டிபோய்க்குவேன்..! அப்படி பார்க்காதீங்க.. உங்களைப் பார்த்தாலே பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு..!!
    இதயம் அண்ணா....
    எங்கேயோ போயிட்டீங்க....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சாமக்கோடாங்கி ஊருல என்ன செய்திருக்காருன்னு புரிஞ்சுதுங்கோவ். அவர் பெரிய புலனாய்வாளர்போலும். அந்தப்பொண்ணும் பையனும் காதலிச்சதை தெரிந்து வெச்சிருக்கார். அதை வெச்சு நாககம் ஒன்றை அரங்கேற்றி இருக்கார் போலும்..

    ஒருவேளை இப்படி இருக்குமோ? தான் சொன்னதை நிசமாக்க அந்தபையனை அவரே கொன்று, தற்கொலை என்று ஊரை நம்பவைத்திருப்பாரோ.. நீங்கள் சொன்ன நிகழ்வு முற்றுப்பெற்ற இடத்திலிருந்து கதை ஒன்று தொடங்கலாம் போல இருக்கே..

    திரைப்படங்களிலும், சாமியின் நாவல்களிகும் மட்டும் பழகிய பாத்திரம் கோடாங்கி. அதை விட வேறு ஒன்றும் தெரியவில்லை

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    கற்பனையாய் எழுதுவதென்றால் இன்னும் நிறைய திகிலாய் இருக்கும். நடந்ததை மட்டும் எழுதுவதால் இங்கே குறைச்சல் திகில்தான்..
    அடுத்து, திகில் சம்பவம் எழுதலாமா? வேணாமா?
    எழுதுங்க எழுதுங்க... இதைவிட திகிலான சம்பவமாகச் சொல்லுங்கள்..

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அடடா...கடைசில காதல்ல கதை முடிஞ்சு போச்சே...நானும் கோடங்க்கிக்காரனை நெறையப் பாத்திருக்கிறதால பயப்படவேயில்லையே...

    வாத்தியாரண்ணா...கையில ஐந்து முக விளக்கும்,சாட்டையும் வெச்சிட்டு இப்பவும் எங்க வீதிக்கு ஒரு கோடங்கிக்காரர் வருவார்.என்னப் பாத்தா "எப்ப பாப்பா ஊரிலிருந்து வந்தேன்னு கேட்பார்...போனமுறை பாத்தப்ப பாப்பா எனக்கொரு செல்போன் வாங்கிட்டு வந்திருக்கக் கூடாதான்னு கேட்டுட்டு திரிமையால பொட்டு வெச்சு விட்டார். அந்த கோடங்கி உங்க வீட்டுக்கு வந்தா நான் விசாரிச்சதா சொல்லுங்க அண்ணா...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    நான் இருந்த பல கிராமங்களில் கோடங்கி என்றால் யாரென்றே தெரியாது..

    சாமகோடங்கிகள் கிராமங்களில் மட்டுமல்ல இன்னும் நகரங்களில் சுற்றுகிறார்கள் (கோவையில்). குடுகுடுபைகாரன் குரைந்து விட்டார்கள். ஆனால் எங்க கிராமத்துல சுடுகாட்டு சமாசாரம் எல்லாம் கிடையாது.

    Quote Originally Posted by யவனிகா View Post
    கையில ஐந்து முக விளக்கும்,சாட்டையும் வெச்சிட்டு இப்பவும் எங்க வீதிக்கு ஒரு கோடங்கிக்காரர் வருவார்.
    திரிமையால பொட்டு வெச்சு விட்டார்.

    இவர தான் சொன்னேன். ஆனா யவனிகா இவரு சாதர்ன கோடாங்கி சாம கோடாங்கி இல்ல, சாமகோடாங்கி டவுனுகுள்ள சுத்தரதில்லை. கிராமங்களில் கூட வளுவில தான் சுத்துவாங்க.

    Quote Originally Posted by இதயம் View Post
    இந்த சமூகம் சொல்லிக்கொடுத்தபடி ஒரு குறிப்பிட்ட வயசு வரை எனக்கும் சுடுகாட்டை கடக்கும் போது திக், திக்-னு தான் இருக்கும்.
    ஆமாம் கிராமங்களில் சுடுகாட்டு பக்கம் சிறியவர்களை விட மாட்டாங்க. பயமுறுத்துவாங்க, காரனம் அங்க தான் கஞ்சா கள்ள சாராயம் விக்கர இடம். பினம் எரிந்து முடிகிற காட்சியை அருகில் இருந்து பார்த்தா சிலருக்கு அலர்ஜியா இருக்கும், அதிலும் பாதியில வருமே அந்த சதைகள் கருகர வாசம் கொஞ்ச குமட்டும்.
    Last edited by lolluvathiyar; 05-12-2007 at 06:18 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •