அந்தப் பெண் இறந்த பின்னரே எரித்தார்கள். வெந்த உடல் சாம்பலாவதற்கே இரண்டாவது எரிப்பு!.. கரியாய் போன தோல் உரிந்து செந்நிறம் காட்டி, பார்க்கவே பயங்கரமாய் இருந்ததாம்.
கோடங்கி (இது வேறு கோடங்கி) இன்னும அந்த ஊரில் உண்டு, என் அண்ணிக்கு பேயோட்ட வந்ததும் அந்த் ஊர் கோடங்கி தான். ஆனால் சுடுகாட்டுப் பூஜை இன்னும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. நான் இருந்த பல கிராமங்களில் கோடங்கி என்றால் யாரென்றே தெரியாது..
கோடங்கிகள் கெட்டவர்கள், மந்திரவாதிகள், பயங்கரமானவர்கள் என்ற எண்ணம், அம்புலிமாமா, பொம்மைவீடு, பாலமித்ரா போன்ற சிறுவர் இதழ்களைப் படித்து ஒரு கற்பனை வைத்திருந்த எனக்கு இந்தக் கோடங்கி எதையும் எதிர்பார்க்காமல் வாழ்வது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அது மூட நம்பிக்கையாய் இருந்தாலும் சரி, அதில் இழையோடிக் கிடந்த பொது நலம் சிந்திக்க வேண்டியது.
பயந்து போன தங்கைகள் எல்லாம் வாங்க கோடங்கி கிட்ட போய் மயிலிறகு பாடம் போட்டுகிட்டு வந்திரலாம்.
Bookmarks