Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: இன்று கடைசி நாள்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0

    இன்று கடைசி நாள்

    "டே தருண்...எழுந்திருடா...நேரமாச்சி பாரு...பஸ் போயுடும்டா..." ஏழு வயது தருணை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் காவ்யா.

    "அம்மா...கொஞ்ச நேரம்மா...குளிருதும்மா..பிளீஸ்மா...இன்னைக்குத்தான் நாம இண்டியா போறமில்ல...நான் ஸ்கூலுக்கு போகலைம்மா பிளீஸ்.." அழுகையுடன் கெஞ்சுகிறான் தருண்.

    "டேய் இன்னைக்குத்தான் ஸ்கூல் கடைசி நாள்...மாங்கு மாங்குன்னு படிச்சு எக்ஸாம் எழுதினேல்ல... கரக்சன் முடிஞ்சு பேப்பர் தருவாங்கடா..அதை போய் வாங்கிட்டு வந்திடுமாம் எம் பட்டு குட்டி...அப்புறம் மூணு மாசம் நோ ஸ்கூல்...நோ ஹோம் வொர்க்...ஊருக்குப் போறோம்...ஜாலி தானே..." சமாதான முயற்சியில் காவ்யா.

    "சரிமா இந்ததடவையும் நான் ஃபர்ட் ரேங்க் வாங்கினா...என்ன வாங்கித்தருவே?"

    இந்தத் தடவ நான் எதும் வாங்கித்தர மாட்டேம்பா...உன் செல்லப் பாட்டி உனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க.அவங்க கிட்டயே நீ என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ?

    அம்மா எத்தனை மணிக்கு ஏர்ப்போர்ட் போகணும்? என் ட்ரெஸ்,ஸ்டோரி புக்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டயா?அந்த ஸ்பைடர் மேன் ட்ரெஸ் மட்டும் மறந்திராதம்மா. பி.எஸ்.2 எடுத்து வைம்மா பிளீஸ்.

    சரிங்க சார், எல்லாம் எடுத்து வைக்கிறேன் முதல்ல வா குளிக்கலாம்.

    அம்மா...பாட்டி நமக்காக சென்னை ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவாங்கல்லமா?

    கண்டிப்பா வருவாங்க...எல்லாருமே வருவாங்கடா...நீ யூனிஃபார்ம் போடு சீக்கிரம். இந்தா சாக்ஸ்...சீக்கிரம் ...பஸ் போயிடும். பாலைக் குடி..

    அம்மா இன்னைக்கு ஸ்கூல் ஹாஃப் டே தாம்மா...கிளாஸ் நடக்காது...பேப்பர் மட்டும் தான் தருவாங்க...எதுக்குமா டெய்லி கொண்டு போற ட்ராலி பேக் எடுத்து வெச்சிருக்க...சின்ன பேக் குடுமா...

    அய்யோ தருண் சின்ன பேக் அப்பா எங்க வெச்சாங்கன்னு தெரியலடா...எப்பவும் கொண்டு போற பேகை இன்னைக்கும் கொண்டு போனா என்ன?

    போம்மா நீ ரொம்ப போர்.

    என்னடா கண்ணா...இன்னைக்குத் தானடா கடைசி நாள்...அனத்தாமப் போயிட்டு வாயேன்.

    அம்மா டுவல்வோ கிளாக் சார்ப்பா பால்கனில நில்லு...நான் தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க்குன்னு
    நான் கத்திட்டே வருவேன் சரியா...

    சரிடா செல்லம்...பஸ் வந்திருச்சு பாரு...சீக்கிரம் ஓடிப்போய் ஏறிக்கோ...

    மதியம் வரை வேலை பெண்டு எடுத்து விட்டது காவ்யாவை. பேக் செய்பவற்றை எல்லாம் செய்து முடித்து வீட்டை சுத்தமாக வாக்குவம் செய்து என....ஆனால் வேலைகளூடே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் நினைவு மெல்லிய சந்தோச சரிகையாய்
    ஓடிக்கொண்டிருந்தது.

    தருணுக்குத் தான் எத்தனை சந்தோசம்...சிறைபட்ட பறவைகளாய் மனிதர்கள் வெளி நாடுகளில்...ஆண்டுக்கொருமுறை சிறை திறக்கப் படுகிறது...விரும்பியே மறு முறையும் சிறை புகுகிறோம்...அடுத்த ஆண்டு விரைவில் வரப் ப்ரார்த்தித்தபடி....

    சென்ற ஆண்டு, இந்தியாவிற்குப் போய் வந்ததிலிருந்து தருண் நச்சரிக்கத் துவங்கி இருந்தான். "மறுபடி எப்பம்மா இந்தியா போவோம்?" என்பது அவனது தினசரிக் கேள்விகளில் ஒன்றாகப் பழகிப்போய் விட்டது காவ்யாவிற்கு. ஒருவருடமாய் தருண் எதிர் நோக்கியிருந்த தினம் இன்று. இன்று பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப அவளுக்கும் விருப்பமில்லை தான். என்ன செய்ய பரீட்சை பேப்பர் தரும் தினமாயிற்றே. முடிவுகளைப் பார்த்து விட்டுச் சென்றால் திருப்தியாயிருக்கும். நினைவுகளோடேயே மணித்துளிகளும் பேய் வேகத்தில் பயணித்தன.

    அடடா...தருண் வரும் சமயமாயிற்றே....பால்கனியிலிருந்து பார்த்தால், ஸ்கூல் பஸ் வருவது தெரியும். பால்கனி கதவைத் திறந்தாள், காவ்யா. உலர்ந்து விட்டிருந்த துணிகளை கைகள் சேகரிக்க, கண்கள் தெருவையே
    நோக்கிக் கொண்டிருந்தன. அப்பாடா...பஸ் வந்தாகி விட்டது.

    முழுவதுமாக ஏஸி செய்யப்பட்ட பஸ்ஸின் ஜன்னல் வழியே தருண் தென்பட்டான்.வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டியபடி இறங்க ஆயத்தமானான். தோழர்களிடம் கதை பேசி முடியவில்லை போலும்.ஊருக்குப் போகும் கதை பெரிய கதை அல்லவா?

    பஸ்ஸை விட்டு குதிக்காத குறையாக இறங்கினான். பஸ்சின் தானியங்கிக் கதவு தன்னாலே மூடிக் கொண்டது. முத்தாய்ப்பாய் தோழர்களைப் பார்த்து கடைசியாக கையசைத்தான். பஸ்சும் புறப்பட்டது.பஸ்சின் தானியங்கிக் கதவிலே சிக்கிக் கொண்ட ட்ராலி பேகின் கைப்பிடி பஸ்ஸுடனேயே பயணப் பட்டது, தருணையும் இழுத்துக் கொண்டு.

    நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா, விபரீதம் உணர்ந்து, "பஸ்ஸை நிறுத்துங்க...அய்யோ எம் புள்ளை..."என்று கதறிக் கொண்டு இறங்குவதற்குள் காரியம் கை மீறி இருந்தது.

    கருப்புத் தார் ரோட்டில் சிவப்புக் கோடாக தருண் சில மீட்டர் தூரங்கள் இழுபட்டிருந்தான்.தலையில் பலத்த அடி.

    அம்மாவின் மடியில்,உயிர் பிரியும் தருவாயில்.... தருண் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்...

    "அம்மா, பாட்டி நமக்காக ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணுவாங்க இல்லைமா?".
    Last edited by அமரன்; 17-03-2008 at 01:26 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    என்னங்க.. ரொம்ப மோசம்... உயிர் பிரிகிறதா?....

    ரொம்ப கனமான கதை... கதையாகவே இருக்கவேண்டும்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    என்னங்க.. ரொம்ப மோசம்... உயிர் பிரிகிறதா?....

    ரொம்ப கனமான கதை... கதையாகவே இருக்கவேண்டும்...
    இது உண்மையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பின்னப் பட்ட கதைதான். ஒரு வட இந்தியத் தம்பதியினரின் குழந்தை...பஸ்சில் ட்ராலி பேக் மாட்டி இழுபட்டு இறந்து போனான், வெகேசன் புறப்படும் தினத்தன்று...இது நடந்தது சவூதியில் தமாம் இன்டெர்னேசல் இண்டியன் பள்ளி பஸ்ஸால். அதன் பின் எங்கள் பிள்ளைகளுக்கு ட்ராலி பேக் தடை செய்யப்பட்டது.
    இதில் ஒரு சோகம் என்னவென்றால் அந்தத் தம்பதியினரின் மூத்த பிள்ளை சற்றே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை. இரண்டாவதைப் பார்த்துத் தான் சற்றேனும் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தனர். என்ன செய்வது....அதுவும் பரிபோயிற்று.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by யவனிகா View Post
    இதில் ஒரு சோகம் என்னவென்றால் அந்தத் தம்பதியினரின் மூத்த பிள்ளை சற்றே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை. இரண்டாவதைப் பார்த்துத் தான் சற்றேனும் ஆறுதல் அடைந்து கொண்டிருந்தனர். என்ன செய்வது....அதுவும் பரிபோயிற்று.
    அவர்கள் வாழ்நாள் முழுவதும் வரப்போகும் சோகம் அது. நிவர்த்திசெய்யமுடியாதது... உண்மையில் இந்தக்கதைக்கு பாராட்டும் மனம் என்னிடம் இல்லை. உண்மையில் வாசித்த நேரம் தொடக்கம் நெஞ்சில் ஒரு விதமான உணர்வு குடிகொண்டிருக்கிறது.... :(
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மனத்தில் சோகத்தை ஏற்படுத்திய கதை..!
    மனம் கனத்து கீழே பார்த்தால், கதையல்ல நிஜமென்று அடுத்த பின்னூட்டப் பதிவு. ரொம்பவே கஸ்டமா இருக்கு அக்கா. சில சமயம், வாழ்க்கை கற்பனைகளையும் தாண்டி விளையாடிடுது. வருத்தமா இருக்கு..!

    நல்லா தானக்கா இருந்தீங்க...!! ஏன் இப்படியெல்லாம் அழ வச்சி பார்க்க ஆசைப்படுறீங்க...??
    போங்க.. யவனி அக்கா.....
    இனி உங்க கூட கா..!
    இப்படி பூவை அழ வச்சிட்டீங்களே....?!!

    Last edited by பூமகள்; 30-11-2007 at 06:41 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அய்யோ..... ......................... :(

  7. #7
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    சட்டென மனம் கனத்துப் போனது....
    ஏன் யவனிகா ஏன்?
    பல கேள்விகள் கேட்டு ஆசையாயிருந்த இளம்பிஞ்சின் முடிவு உருக்கிவிட்டது...

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    கதையா படிக்கும் போதே மனசுக்கு கஷ்டமா இருந்தது.ஆனால் அதுவும் உண்மை சம்பவம் அதிலும் முதல் மகன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்று யவனிக்கா பின்னூட்டத்தில் தெரிய வந்த போது,கடவுள் ஏன் இப்படி எல்லாம் மனிதர்களை சோதிக்கிறான் என்று கவலை தான் ஏற்படுகிறது

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    நான் எப்பவும் கடைசி பத்திய படிச்சிட்டுதான் கதையை படிக்க ஆரம்பிப்பேன். இன்றும் அதே!!!!

    'ஜிஞ்சரி'ன் முடிவில் நான் வரைம் போல் சிறு கல்லைதான் மக்களின் மனதில் பதித்தேன், நீங்களோ இந்த கதையில் பாறையளவில் கல்லை நெஞ்சில் வைத்து விட்டீர்கள். சோகம் சொட்டுகிறது.

    அருமையான சிறுகதை, வசனங்களை வைத்தே நீங்கள் சிறந்த கதையாசிரியாக வருவதற்க்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கின்றது என்று சொல்லலாம். மனதார பாராட்டுகிறேன்.

    நன்றி.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மனதை உலுக்கிவிட்டது.அய்யோ என்ன கொடுமை இது என்று மனதுக்குள் ஒரு அலறல் கேட்கிறது.இருப்பதிலே பெரிய கொடுமை தான் பெற்ற பிள்ளை தன் முன்னே மரணத்தை தொடுவதைப் பார்ப்பதுதான்.ஒரு கதாசிரியராக நீங்கள் முதல் வகுப்பில் தேறிவிட்டீர்கள்.உங்கள் எதார்த்தமான எழுத்து நெஞ்சைப் பிசைந்துவிட்டது.இனி இந்த வேதனை எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது ஆண்டவனே.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    சோகமான முடிவு கொன்ட கதை, பின்னூட்டம் இட முடியவில்லை
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கதை சொல்லும் திறமைக்குச் சிறப்பு பாராட்டுகள் யவனிகா அவர்களே..

    பின்னூட்டம் இட இயலா அளவுக்கு படிப்பவர் மனதை உலுக்கியதில்
    முழுவெற்றி கதாசிரியருக்கு..

    படித்து, விலகி, ஆற்றி, தேற்றி - பின்வந்து நானிடும் பின்னூட்டம் இது..

    ஜென் கதைகளில் ஒன்று -

    அவன் : ஆசி கூறுங்கள் குருவே!

    குரு : ஆசிர்வதிக்கிறேன் - உன் அப்பா சாவார், பின் நீ சாவாய்.. பி உன் மகன் சாவான் - என!

    அவன் : ஆசி சாவவா?

    குரு : முட்டாள்... சாவு நிச்சயம்.. அதன் வரிசை முக்கியம்.. மாற்றி யோசித்துப் பார்... ஆசியின் மகிமை புரியும்!


    காதலி பிரிந்தால் கவிதை, தாடி... உச்சம் - பித்து நிலை மஜ்னு போல்!
    வாரிசு பிரிந்தால் - மரணம் - தசரதன் போல்!

    எண்பது வயதில் ம.பொ.சி தம் அறுபது வயது மகனைப் பறிகொடுத்தார்.

    என்னை இந்த வயதில் இதைக்காண வைத்தாயே என அந்த வெண்மீசை தளர்ந்த குழந்தை அழுத காட்சி - கொடுமை!

    எந்த வயதிலும் பிள்ளையை இழக்கும் பெற்றவர் மனம் படும் வேதனை -
    இவ்வுலகின் தலையாய வேதனை!

    மரபுச் சங்கிலி விதியின் உச்சகட்ட மாற்றம்/தண்டனை அது!

    புத்திர சோகம் - உலகின் உச்ச சோகம்..

    நடப்பதைத் தடுக்க இயலாது..
    நடைபெற்றவர்களுக்காக கண்ணீர் மட்டுமே !
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •