திருவள்ளுவமாலை
நமக்கு திருவள்ளுவர் பற்றியும் குறள் பற்றியும் பல விவரம் தரும் திருவள்ளுவமாலை பாடல்களை அறிந்து கொள்வோம்.
அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப(து) இன்பத்
திறபிர்பத் தைந்தால் தெளிய- முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற்(து) உலகு. மதுரை பெரு மருதனார்.
அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்- 70 அதிகாரங்கள்
இன்பத்துப்பால்- 25 அதிகாரங்கள் என 133 அதிகாரங்களால் வள்ளூவர் வேதங்களின் நற்கருத்துக்களை தன் குறளினால் தர அதனால் உலகம் குற்றங்களினில் இருந்து தப்பியது.
ஐயாறு நூறும் அதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விள்ங்கப்- பொய்யாது
தந்தான் உலகிறு தான்வள்ளூவனாகி
அந்தா மரைமேல் அயன்.
-காவிரிப்பூம்பட்டிணத்துக் காரிக்கண்ணனார்.
5x 6 = 30 + 100 + 3 = 133
படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவே வள்ளுவனாய் வந்து 133 அதிகாரங்களினால் வேதங்களின் நற்கருத்துக்களை தந்தார்.
Bookmarks