திருவள்ளுவமாலை:

தானே முழுது உணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு
ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழிஉலகு என் ஆற்றும் மற்று!

- நக்கீரர் -


வள்ளுவர் தான் அறிந்து உணர்ந்து - அறம் பொருள் இன்பம் என்ற மனிதனின் வளங்களுக்கு வழி கூறி வீடுபேறு பெற அழியாத வழியினை மக்கள் அனைவருக்கும் இயற்கை முறைப்படி குளிர்ச்சியிலான தமிழில் தருதலின் மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் மழையைத் தரும் மேகத்துக்கு ஒப்பானவர். மேகமும் குறளும் இவ்வுலகமும் வாழி.