இந்த பகுதியில தமிழ் இலக்கியங்களிலிருந்து எனது கண்ணிலும் மனதிலும் விழுந்த சில பாடல்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன்.. எழுதுவது இதுதான் முதல் முறை எனவே தவறு இருந்தால் குறிப்பிடுங்கள் திருத்திக் கொள்ளுகிறேன்...
நாம எல்லாரும் திருக்குறள் பள்ளிகூடத்துல படிச்சுருப்போம். அறம் பொருள் தவிர வேற ஏதும் படிக்க விடமாட்டாங்க. அதனால நாம படிக்காம விட்ட இன்பத்துப்பால்லருந்து எனக்கு புடிச்ச சில பாடல்கள பாக்கலாம்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. 1318
இந்த ரெண்டு பாட்டுமே ரொம்ப ஜாலியானது காதலனும் காதலியும் தனியாருக்காங்க அப்போ நம்மாளுக்கு தும்மல் வந்துருச்சு பாவம் அவன் என்ன பண்ணுவான் தும்மிட்டான் அவ்ளோதான் அந்தம்மாவுக்கு கோபம் வந்துருச்சு உன்ன நெனக்க வேண்டிய நானே இங்கருக்கும் போது வேறயாரு உன்ன நெனக்கிறதுன்னு சண்டக்கி வந்துட்டாங்களாம்
இதுதான் முதல் பாட்டு.
ரேண்டாவது பாட்டு என்னண்ணா
அட அநியாயமே என்ன கொடுமைடா சாமி தும்ம கூட உரிமை இல்லியாண்ணு நெனச்சு அடுத்தாப்புல வந்த தும்மல அடக்கிருக்கான் நம்மாளு விடுவாங்களா. ஏன்யா நீ தும்முனா உன்ன நெனக்க வேற ஆளுருக்காங்கங்குறது எனக்கு தெரிஞ்சுரும்னு தானே வர்ற தும்மல அடக்குறன்னு சண்டக்கி வந்துட்டாங்களாம்.
என்னங்க பாட்டு புடிச்சுருக்கா நல்லாருக்குல்ல இப்படி இன்னும் நெறய இருக்கு ஒண்ணொண்ணா பாக்கலாம் சரியா.
ஆனா ஆண்களே ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க அண்ணிக்கும் சரி இண்ணிக்கும் சரி பொண்ணுங்க மாறவே இல்ல அப்படியே தான் இருக்காங்க.
(ஏதோ என்னால முடிஞ்ச கலகம் உண்டாக்கியாச்சு )
Bookmarks