Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 57 of 57

Thread: இலக்கியச்சோலை.....!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    செல்வா நலமா தான் இருக்காரா..
    இல்லை அண்ணி கொடுத்த அடியில்.......................
    அடுத்த பதிவை இன்னும் காணொமே.??
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  2. #50
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    செல்வா நலமாத்தான் இருக்கார்... அவரோட அலுவலகத்திலருக்குற சர்வர்க்கு தான் உடம்பு சரி இல்ல... அதனால... அவருக்கும் நேரம் சரியில்லாம ஆயிடுச்சு. கவலைப் படாதீங்க கூடிய சீக்கிரம் அடுத்த அடி வாங்கிடுவாருண்ணு நம்புவோம்...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    அன்று ஓய்வுநாள் அடுத்த வாரம் கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவுக்காக ஊருக்குப் போகணும்ணு முடிவு பண்ணினதால கடைத்தெருவ வீட்டுக்கு கொண்டு வரணும்ணு பாகீரதன விடப் பிரயத்தனம் பண்ணிய என்னருமை துணைவியை துணைக்கு பக்கத்து வீட்டு பத்மாக்காவை போகச் சொல்லிவிட்டு
    (அப்புறம் என்னங்க.. குண்டூசி வாங்கணும்னாவே மூணுகடை ஏறி இறங்குற ஆளு நம்மாளு. இதுல அன்னிக்கு வாங்குனது இதவிட பெருசா இருந்துச்சே , இது என்ன குண்டூசி ஒல்லியா இருக்கு குண்டா இல்ல இருக்கும் இப்படி எல்லாம் கடைக்காரன் கிட்ட கேட்டா பரவால்லியே வாங்குறதயும் வாங்கிகிட்டு என் காதுக்குள்ள ஓய்ங் சத்தம் வீடு வற்ரது வர தீராதே. ஹம் பள்ளிக் கூடம் போறதுக்கு அடம் புடிக்குற சுட்டிப்பையன் தோத்தான் போங்க. சும்மாருந்த வயித்துக்கு வலிய கொண்டுவந்து அதை நிருபிக்க வெட்டியா ரெண்டுதடவை கழிப்பறை போய்)
    கடினப்பட்டு வாங்குன சுதந்திரத்த நிம்மதியாத் தூங்கலாம் என நினைத்து படுக்கையில் சாய்ந்து சற்று கண்ணயரும் நேரம்

    டமார் . டமார்..

    டிங் டாங் ணு ஒலிச்ச வீட்டு அழைப்பு மணி என் மண்டைக்குள்ள அப்படி ஒரு தாக்குதல ஏற்படுத்தியிருந்திச்சு.

    யார்ரா அவன் இந்த நேரத்துல. மனுசன தூங்கவும் விடமாட்டானுகளா நிம்மதியா நானே கொஞசநேரத்துக்கு நிம்மதிய கடன் வாங்கி வச்சுருக்கன் அதயும் அனுபவிக்க விடமாட்டானுக போலரக்கேண்ணு முனகிட்டே..

    பாதி திறந்தும் பாதி மூடிய விழிகளுமாய் . லுங்கியைச் சரியாக்கிக் கொண்டே சன்னல் வழியாப் பார்த்தன்.

    பார்த்தா வெளிய என் வயசுள்ள ஒரு அழகான பொண்ணு நின்னு கைய ஆட்டி ஹாய்.. அப்டின்னா

    ஒட்டிட்டுருந்த பாதி தூக்கமூம் கலஞ்சிருச்சு
    யார்ரா இவணு மனசுக்குள்ள நெனச்சுட்டே . கதவ திறந்து அந்த புன்னகையில் வாயெல்லாம் பல்லாக நின்னிருந்த அந்த முகத்த பார்த்தேன்..

    நீங்க.. நீ. சோபியா தானெ

    அப்பாடா கண்டுபிடிச்சிட்டியே. என்ன . உள்ள வரலாமா? இப்டி வாசலயே அடச்சிட்டு நிக்கிற. தள்ளு (வேகவேகமாக விலகினேன்)

    அப்பாடா உன் வீட தேடிக்கண்டு புடிச்சி வந்து சேர்றதுக்குள்ள போதும் போதும் ணு ஆச்சி

    க்ளக்..க்ளக்.க்ளக்.ஸ்.ஸ் அப்பாடா.

    ரொம்ப தாகம் ஏண்டா வீட்டுக்கு வந்தவங்கள உக்காரச் சொல்லமாட்டியா.(முழிக்கிறேன்) ஆமா உன் ஆசைமனைவி எங்க. காணோம்..... வீடு சூப்பரா வச்சுருக்காங்க உன் கல்யாணத்தப் போ பாத்தது உன் மனைவிய
    அவ... (என் வாயிலருந்து அ முடியிறதுக்குள்ள.)
    இரு வந்திர்ரன் அப்படிண்ணு சொல்லிட்டு பின் கட்ட நோக்கிப் போனா


    தொடரும்......

    என்ன பாக்குறீங்க ஏன் தொடரும் போட்டுருக்குறேன்னா....?
    யவனியக்கா நீங்க கேளுங்களேன்.... சிவாண்ணா நீங்க கேளுங்களென் ... ஓய் ஓவியரே நீராவது(தண்ணீர் இல்லப்பா... பச்சை சட்டையாச்சே கொஞ்சம் மரியாதை குடுக்கலாம்ணுதான் (இதயம் ஏன் நமுட்டுச் சிரிப்பு?)) கேளும் ஓய்.......... சரி நானே சொல்லிடுறன்


    பொய்க்காரணம் :
    மணி விடிகாலை 2 ஆச்சுங்க தூக்கம் கண்ண கட்டுது....

    உண்மைக்காரணம் :
    எல்லாரும் பென்ஸ் ஓட்டுறாங்க நாம மாருதியாவது ஓட்டலாணுதான்

    (சத்தியமா சஸ்பென்ஸ தாங்க சொல்றன். பாருங்க ஓவியன் தப்பு தப்பா புரிஞ்சுக்கிறாரு..... )

    எஸ்கேப்.....................
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  4. #52
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஏற்கனவே காளியாத்தா....இப்ப பத்ரகாளியாத்தாளா மாறுனா உங்க டப்பா டான்ஸ் ஆடிடும்.சட்டு புட்டுன்னு உங்க மனைவி வர்றதுக்குள்ள சோபியாவை முன்னறையில வந்து உக்காரச் சொல்லுங்க.
    ஆனாலும் மன்றத்துல இந்த வியாதி இவ்ளோ அதிகமா பரவியிருக்கறது நல்லால்ல...ஆமா (மாருதி ஓட்டறேன்னு சொல்லிட்டு பென்ஸ் ஓட்றீங்களா)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by செல்வா View Post
    (அப்புறம் என்னங்க.. குண்டூசி வாங்கணும்னாவே மூணுகடை ஏறி இறங்குற ஆளு நம்மாளு.
    மூனு கடைதானே பரவாயில்ல, நாங்கெல்லாம் 30 கடை ஏறி இறங்குவோம். (ஏனா அதுக்கு மேல கோயமுத்தூர்ல குன்டூசி கடை இல்ல)
    இதுவரை உருட்டியது போதாதென்று இனி தோழி வேற வந்தாச்சா, நேர சமயல் ரூம் போயாச்சா. இனி நீங்க சட்னிதான்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  6. #54
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    செல்வா முதலில் என்னை மன்னிக்கவும், இந்தப் பகுதிக்கு பெரும்பாலும் வராமல் போனதற்கு, திருக்குறள்தானே தன் பானியில் சொல்கிறார் செல்வா என இந்தப் பகுதியில் உண்மையில் ஒரு அலட்சியம் கொண்டு விட்டேன்..

    கம்பராமயணத்தையும் எடுத்து கையாண்ட விதம் உண்மையில் என்னை மிக கவர்ந்தது, திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னை மிகவும் கவர்ந்த நூல் எத்தனைமுறைப் படித்தாலும் சலிப்பு தட்டாத நூல்.. நானும் அதன் சந்தங்களில் சிக்குண்டு என்னையே பறிக்கொடுத்த நூல்..

    கவியரசர் கூட துலாபாரம் படத்தில் ஒரு பாடல் திருக்குற்றாலக் குறவஞ்சி சாயலில் எழுதி இருப்பார்..

    செவ்வரி ஓடிய கண்ணகள் இரண்டினில் சேலொடு வேலாட
    கொவ்வை இதழ்களும் கொத்துமலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட
    தெய்வ ரதத்தினில் சேலை மறத்தைதிட சிற்றிடைத் தள்ளாட..

    - கண்ணதாசன்..

    வைரமுத்துவும் அதன் தாக்கத்தில்..

    தூக்கு நிறுத்திய கொண்டையாள் - விழி
    தாக்கி தகர்த்திடும் கெண்டயாள்..

    என்றும்..


    இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ
    மோகினியோ - மன
    முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய
    தோவெனவே


    இந்த வரிகளை காதலன் படத்தில் என்னவளே என்னவளேப் பாட்டில் பயன் படுத்தி இருப்பார்..

    அறுமை செல்வா இன்னும் இலக்கியச் சோலையில் பலப் பூக்கும் முத்தொல்லாயிரத்தையும் அள்ளி தெளித்து கோலமிட அன்புடன் வேண்டுகிறேன்..


    இத்தனைத் திறனையும் மறைத்து வைத்துக் கொண்டு, கவிதை எழுத தெரியாது எனச்சொல்ல பொய்வாய் புலவர்தானே நீங்கள்..

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பொய்வாய் புலவா உனக்கு..

    அன்புடன் ஆதி
    Last edited by ஆதி; 11-01-2008 at 09:11 AM.
    அன்புடன் ஆதி



  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    இதுவரை உருட்டியது போதாதென்று இனி தோழி வேற வந்தாச்சா, நேர சமயல் ரூம் போயாச்சா. இனி நீங்க சட்னிதான்.
    எனக்கும் அப்பிடி தான் தோணுது.. ஆனா வாத்தியாரு அண்ணா சட்னின்னு சொல்லிட்டீங்க வெங்காய சட்னியா இல்லை தக்காளி சட்னியான்னு சொல்லலை ஹீ..ஹீ..,,,,??

    செல்வா இவ்ளோ நாள் வாங்கின அடி பத்தாது... இன்னைக்கு அண்ணி வந்து ஒரு அர்ச்சனையை கும்பாபிஷேகத்துல ஆரம்பிச்சி அப்படியே திருவிழா நடத்துனா பாக்க எவ்ளோ ஜாலியா இருக்கும்..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    செல்வா உண்மையிலேயே அசந்துவிட்டேன் நான் உங்களின் இலக்கிய அறிவைக் கண்டபொழுது..!! பொதுவாக நான் தமிழ்வழி கல்வியில் படித்திருந்தபோதும் எனக்கு வந்த தமிழாசிரியர்கள் அத்தனை ஆர்வமாய் இலக்கியத்தை பற்றியோ இலக்கணத்தை பற்றியோ எங்களுக்கு விவரித்தது கிடையாது..!!

    சொந்த முயற்சியில்தான் நான் உரைநடையைக்கூட ஓரளவு கற்றுக்கொண்டேன்.. ஆனால் இலக்கியத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தும் அதற்கான வாய்ப்பு கிட்டாமலும் வழிதெரியாமலும் இருந்திருக்கிறேன்..!! எப்போதாவது இலக்கியம் பற்றிய கட்டுரையை படித்தாலும் அதைபற்றி தெளிவான அறிவில்லாததால் கொஞ்சநேரத்திலேயே அதை மூடிவைத்துவிடுவேன்.. அப்படித்தான் ஆரம்பத்தில் இத்திரியின் ஆரம்பபதிவை கண்டுவிட்டு இது ஏதோ நமக்கு சம்மந்தமில்லாத பகுதியென்று இதுவரை இங்கே வராமலே இருந்திருக்கிறேன் நான்..!!

    எதேச்சையாக என்னையறிமால் இத்திரியில் இன்று உள் நுழைந்தபோதுதான் உங்களிடம் இலக்கிய அறிவு கொட்டிக்கிடப்பதை கண்டுக்கொண்டேன்..!! இலக்கியத்தை இப்படி சுவராசியமாக விவரிப்பவர்கள் மிககுறைவு..அதுவும் நகைச்சுவையுடன் என்பது நடக்கவியலாத காரியம் போன்றது..!! ஆனால் நீங்கள் அதை அத்தனை எளிதாக செய்திருக்கிறீர்கள்... பின் ஏன் அதை நிறுத்திவிட்டீர்கள்... தயவுசெய்து மேலும் தொடருங்கள் இலக்கியசோலையில் வந்து அமர்ந்துசெல்ல ஆவலுடன் நானிருக்கிறேன்..!!

    இத்தனைநாள் இங்கே வராமல் இருந்ததற்க்கு எனது வருத்தத்தை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்....!! இதுபோல எத்தனையோ நல்லதிரிகள் நம்மால் புறக்கணிக்க படுகிறதோ என்ற குற்ற உணர்வுக்கூட எனக்குள் இருக்கு செல்வா..!! கற்றுக்கொள்ள எவ்வளவோ மன்றத்தில் இருக்க இத்தனைநாள் மேம்புல்லை மட்டுமே மேய்ந்திருக்கிறேன் என்று தெளிவாக தெரிகிறது எனக்கு..!! அதற்கு உதவிய உங்கள் திரிக்கும் உங்களுக்கும் எனது நன்றிகள் செல்வா...!!

    கடைசியா ஒரே ஒரு கேள்வி: உண்மையிலேயே உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா அண்ணா..??????!!!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #57
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    சுகந்தவாசன் கேள்வி கேட்டதாலோ என்னவோ அணைந்துபோயிருக்கும் இத்திரியை மேலெழுப்புவதில் பெருமை கொள்கிறேன்.

    இலக்கியங்களின் கனிச்சுவையைச் சாறெடுத்துக் கொடுத்து கவிரசம் பருகச் செய்த செல்வாவுக்கு கோடி நன்றிகள்.

    அன்றைய கற்பனையே அமுதாய் இனித்ததே... இன்று இன்னமும் இனிக்குமே... மன்றம் வந்து இத்திரியை மேலும் மெருகேற்றினால் என்ன? செல்வாவை அன்போடு அழைக்கிறேன். எங்கிருந்தாலும் வாங்க செல்வா.

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •