Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 55

Thread: பூட்டிய கதவு!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    Question பூட்டிய கதவு!

    1990, ஆகஸ்டு மாதம். மும்பை.
    நான் நெல்கோ கம்பெனியில் சேர்ந்த புதுசு. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் தானே ஈஸ்டில் ஒரு அபார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தோம். நான் தான் முன்னால நின்னு வாடகை பேசி முடிச்சேன்..

    இராமகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ். அப்பதான் கட்டி முடிக்கப்பட்ட புது கட்டிடம். மாசம் 1000 ரூபா வாடகை, 3000 ரூபா அட்வான்ஸ்.

    7 வது மாடியில் எங்க அபார்ட்மெண்ட். அது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட வீடு (உங்க கற்பனைக் குதிரையைக் கடிவாளத்தை இறுக்கிப் பிடிச்சு நிறுத்துங்க. அது இல்லைப் பிரச்சனை).

    கதவைத் திறந்தால் ஹால். முதல் மூணடி தாண்டினால், கீழ் வீடு தெரியும். கண்ணாடி மாதிரி தளம் இல்லிங்க. தளமே கிடையாது. 6 வது மாடி அபார்ட்மெண்டும் 7 வது மாடி அபார்ட்மெண்டுக்கும் அப்படி ஒரு கனெக்ஷன், 4 மாடிக்கு அப்ரூவல் வாங்கிட்டு ஏழு மாடி கட்டி இருக்காங்க. முனிசிபாலிட்டியை ஏமாத்தி அப்ரூவல் வாங்கறதுக்காக அப்படி ஹாலுக்கு கான்கிரீட் போடாம 7 மாடியை நான்கு மாடியா காட்டி இருந்தாங்க. அந்த மூணடி ஹாலிலே உள்ள போனா ஒரு ரூம், கிச்சன் அப்புறம் பாத்ரூம் இவ்வளவுதான் வீடே!..

    முதலில் நான் தான் குடியேறினேன். ஒரு வாரம் தனிக்காட்டு ராஜா. எங்களுக்கு வெள்ளிக்கிழமைதான் விடுமுறை. அந்த வியாழக் கிழமை மாலை கார்த்தி எங்கிட்ட வெள்ளிக்கிழமை நைட் லக்கேஜ் எடுத்துகிட்டு நானும் வந்திடறேன் என்று சொன்னான். அதுவரை அவன் தங்கி இருந்தது மும்பை வீ.டி. அருகில் மஸ்ஜித் பந்தரில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக் கட்டிடத்தில் இருந்த இண்டஸ்டிரியல் டைமண்ட்ஸ் இண்டியா லிமிட்டெடுடைய கெஸ்ட் ஹவுஸில், அதன் கேட்டை இரவூ 10 மணிக்கு மூடி விடுவார்கள். அப்புறம் அடுத்த நாள் காலையில் தான் திறப்பார்கள்.

    வெள்ளிக்கிழமை எனக்கு கார்த்தி வருவது சுத்தமா மறந்து போயிடுச்சி. நான் ஒன்பது மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டு தூங்கி விட்டேன்..

    அந்த வீட்டுக் கதவுக்கு உள்பூட்டு, அதாவது கதவிலேயே பொருத்தப் பட்ட பூட்டு உண்டு. ஆனால் அதற்கு சாவிதான் இல்லை, அதனால் வீட்டுக்குள் இருக்கும் போது உள்பூட்டையும் வீட்டிற்கு வெளியே செல்வதானால் தனிப்பூட்டையும் உபயோகித்தோம்.

    சனிக்கிழமை காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு ஆஃபீஸ் பஸ் பிடிக்க போனேன். என்ன ஆச்சர்யம் கார்த்தி பஸ் ஸ்டாண்டில் பெட்டி படுக்கையுடன். அடடே கார்த்தி நீ தாதர் பஸ்ல தானே வருவ, தாணா எப்படி வந்தே என ஆச்சர்யமாய் கேட்டேன்.

    கார்த்தி என்னை எரித்து விடுவது போலப் பார்த்தான். .ஏண்டா ராத்திரி 10:30 ல இருந்து 11:30 வரைக்கும் கதவைத் தட்டோ தட்டுன்னு தட்டறேன் திறக்காம இப்ப கேள்வி கேட்கறயா? நான் தான் வர்ரேன்னு சொல்லி இருந்தன்ல.. ஏன் பூட்டு போட்டே? கடைசியில இந்தப் பாடாவதி லாட்ஜில இடங் கெடச்சது பிழைச்சேன். இல்லாட்டி ரெயில்வே பிளாட்ஃபார்ம்தான் என்று தாளிச்சுட்டான்..

    ஸாரி எனக்கு மறந்துருச்சி.. சத்தியமா வேணும்னு செய்யலை.. எனக்குத் தூக்கம் வந்தா ஒண்ணும் தெரியாது அப்படி இப்படின்னு கால்ல விழாத குறையா மன்னிப்பு கேட்டுகிட்டேன்..

    இதோட கதை முடிஞ்சது அப்படின்னு நினைச்சிங்களா? இல்லை. இன்னும் இருக்கு.

    தொடரும்.
    Last edited by தாமரை; 29-11-2007 at 07:00 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஆறு மாசம் கழிந்தது.. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதுமாதிரி ஒத்த மனசிருக்கறவங்க கெடைக்கிறது ரொம்ப கஷ்டம். தினம் காலை ஆஃபீஸ் போவோம். மாலை ஆஃபீஸ் முடிஞ்சதும் தாதர் போவோம். அங்கிருந்து வி.டி, யோ, மஸ்ஜித் பந்தரில் இருக்கும் மெடல் பவுடர் கம்பெனி (மெப்கோ, அட ஆமாங்க பாம்பே ப்ராஞ்ச் ஆஃபீஸ் எங்களுக்கு சொந்த வீடு மாதிரி, அத்தனை ஸ்டாஃபும் எங்க ஃப்ரண்டஸ்), இண்டஸ்டிரியல் டைமண்ட் கம்பெனி எல்லாம் போவோம். எக்கச்சக்கமா சினிமா பார்ப்போம். நைட் மாதுங்காவில் சாப்டுட்டு தானே வர ராத்திரி பத்துப் பதினோரு மணி ஆயிடும். அப்புறம் தூக்கம், மறுநாள் ஆஃபீஸ்.. வெள்ளிக்கிழமையான பாம்பேயில் எங்கேயாச்சும் போவோம். சுத்துவோம்...

    சரி கதைக்கு வருவோம்.. அன்னிக்கும் அப்படித்தான், மாதுங்காவில் சாப்டுட்டு தானே வந்து உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தோம். கார்த்தி ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டான். நானும் சந்துருவோம் ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தோம் அப்புறம் கதவைப் பூட்டிகிட்டு தூங்கிட்டோம்.

    அடுத்த நாள் காலையில நான் குளிச்சுட்டு வெளிய வந்தா கதவு தட்டற சத்தம் வந்தது. அட யாருடா அது இந்த நேரத்தில அப்படின்னு கதவைத் திறந்து பார்த்தா கார்த்தி நின்னுகிட்டு இருந்தான். கண்ணு செக்கச் செவேர்னு இருந்தது. பெர்முடாஸ் டவுசரும் டீசர்ட்டுமாய் முகமெல்லாம் ஜிவுஜிவுன்னு எக்கச்சக்கமாய் கோபம்.

    என்னடா காலன்காத்தால எங்க போயிட்டு வர்ர என்று கேட்டதும் தான் தாமதம் என்னடா, இதோ ஃபோன் பண்ணிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுதானே போனேன்.. அரை மணி நேரத்துக்குள்ள அப்படி என்ன தூக்கம், கதவை உடைச்சா கூட எந்திரிக்க மாட்டீங்களா? நீ தான் கும்பகர்ணன்னா சந்துரு அதுக்கு மேல இருக்கானே,

    போனதடவையாவது கைல காசு இருந்துச்சி. லாட்ஜில போய் தூங்கினேன்.. ஃபோன் பண்ணி எம்ப்டி பாக்கெட்டோட இருந்தண்டா, மொட்டை மாடியில போய் தூங்கி எந்திரிச்சி வர்ரேன்னு சொன்னான். அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆயிரக்கணக்கான ஸாரி சொன்னாலும் பாவமில்லையா அவன்..

    கதை முடிஞ்சிருச்சின்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. மிகப் பெரிய ஆண்டி கிளைமேக்ஸ் இருக்கு.. கொஞ்சம் பொறுங்க சொல்றேன்.

    தொடரும்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பூட்டிய கதவு..
    நாலு மாடிக்கட்டிடத்துக்குள் ஏழு மாடி அபார்மெண்டுகள்....
    ஹாலிலே இருந்து பார்த்தால் கீழுள்ள அபார்மெண் தெரியும்...
    சாவியில்லாத பூட்டு....
    நண்பனை மறந்து தூக்கம் போடும் ரூம் மேட்....

    ஞாபகப் பகிர்வின் சுவராசியத்திற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்..
    தொடருங்க அண்ணலே..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    ஹீ,ஹீ!!

    பாவம் கார்த்தி...!!
    இப்படிப் பாடாய்ப் படுத்தி இருக்கீங்களே....

    அண்ணியை நினைத்தால் கவலையாக இருக்கிறது, இதே போன்று எத்தனை தரம் எங்கேயாவது இடை நடுவில் விட்டுட்டு நீங்க பாட்டுக்கு வந்திருப்பீங்களோ...???!!
    Last edited by ஓவியன்; 29-11-2007 at 05:31 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அண்ணே... படுத்ததும் தூங்கிடுவீங்களா நீங்க... தூக்க டானிக் ஏதாச்சும் பயன்படுத்துவதில்லையே.

    கள்ளம் கபடமில்லா உள்ளம்கொண்டோருக்கு படுத்ததும் உறக்கம் கண்ணைக் கட்டுமாம்.. அதான் உங்கள் இருவருக்கும் கார்த்தி கதவு தட்டினது கேட்கல.

    அப்புறம் உங்க நண்பர் கார்த்தியை எனக்குப் பிடிக்கலை. உங்களை அவர் புரிஞ்சுக்கவே இல்லை.. நீங்க எப்படிப்புரிஞ்சு வெச்சிருக்கீங்க பாருங்க..

    ஆறு மாசம் கழிந்தது.. நான், கார்த்தி, சந்துரு மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதுமாதிரி ஒத்த மனசிருக்கறவங்க கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்
    அதுசரி கார்த்திக்கு மட்டும் ஏனிப்படி நடந்துச்சு.. அடுத்தது உங்களுக்கா...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    கார்த்திக்கு பிளான் பண்ணிச் செய்த மாதிரி இருக்கு...
    கார்த்தி இதுக்காக, ஒருவேளை உங்களையெல்லாம் வெளியே விட்டு பூட்டிட்டாரோ?
    Last edited by அக்னி; 29-11-2007 at 05:41 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    ஒருசமயம் இளங்கோ வீட்டிற்கு வந்திருந்தான். இளங்கோ கார்த்திக்கு நண்பனின் நண்பன், பூனாவில் வேலை செஞ்சிகிட்டு இருந்தான். வெள்ளிக்கிழமை எல்லாம் ஊர் சுத்தி பொழுதைக் கழிச்சுட்டோம். . சனிக்கிழமை மதியம அவனுக்கு ட்ரெய்ன். மிக விளக்கமாக அவனிடம் பூட்டைக் கொடுத்து வீட்டைப் பூட்டி சாவியை கதவுக்கடியில் போட்டுவிட்டு போய்விடச் சொன்னோம். (இல்லை இல்லை அவன் சாவியைக் கொண்டு போகலை. கொண்டு போனாலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆளுக்கொரு சாவி வச்சிருக்கோம். அது நண்பர்களுக்குன்னு வச்சிருந்த எக்ஸ்ட்ரா சாவி)

    சாயங்காலம் திரும்ப வந்தோம். இன்னிக்கு என்னன்னா மூணு பேரும் தனித்தனிய பிரிஞ்சுட்டோம். எதோ வேலை இருக்குன்னு கார்த்தி டைரக்டா தாணே போயாச்சு (ஆஹா மாட்டினீங்களான்னு நீங்க ஆர்வத்தோட கேட்கறது புரியுது) சந்திரு அவங்க அத்தை வீட்டுக்குப் போயிட்டான், நான் தாதர் போய் அங்கிருந்து மெடல் பவுடர் கம்பெனிக்குப் போயிட்டேன்.

    இராத்திரி 8 மணி, மாதுங்காவில சாப்பிட்டு விட்டு தாணே வந்தேன், மனசில ஏதோ தப்பு நடந்திட்ட மாதிரி ஒரு ஃபீலிங். வீட்டுக்கு போனேன். கதவு நீங்க நினைக்கிற மாதிரியே தான் உள் பூட்டு பூட்டி இருந்தது. தட்டினேன்த் தட்டினேன் கதவு உடையற மாதிரி தட்டினேன். யாருமே திறக்கல. என்ன செய்யறதுன்னு தெரியலை. மொட்டை மாடிதான் கதின்னு உறுதி ஆயாச்சு.. சரின்னு போய் ஒரு டீ சாப்டுட்டு வரலாம்னு வெளிய வந்தேன்.. கேட் பக்கத்தில வரும் போது சந்துரு எதிரில் வந்தான். அவனுக்கு கதை முழுசும் சொன்னேன். அவனும் நானும் மறுபடியும் போய் ஒரு அரைமணி நேரம் தட்டு தட்டுன்னு தட்டினோம். கதவு திறக்கலை. சரி 10:00 மணிக்குள்ள மஸ்ஜித் போயிடுவோம்னு சொல்லி நானும் சந்துருவும் கிளம்பி தாணே ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து கார்த்தி வெளியே வந்து கொண்டிருந்தான்,,,

    தொடரும்.
    Last edited by தாமரை; 29-11-2007 at 06:15 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அப்ப நீ இல்லையா உள்ள? மூணு பேரும் ஒரே குரலில் அதிர்ச்சியா கேட்டுகிட்டோம். ஒரு வேளை உடம்பு சரியாயில்லாத இளங்கோ உள்ளயே மயங்கிட்டானோ. அவனுக்கு எதாச்சும் ஆகிட்டா என்ன செய்ய? இன்னொரு முறை போய் முயற்சி செய்வோமேன்னு திரும்பி வந்தோம். இளங்கோ உள்ள மயங்கிக் கிடப்பான்ங்கிற நினைப்பே எங்களுக்கு பயமா இருந்திச்சி. போய் இன்னும் ஒரு மணி நேரம் முயற்சி செய்யலாம்.. எதாவது செய்தே ஆகணும் என்கிற நிலைமைக்குப் போயாச்சு. இன்னிக்கு கதவை உடைச்சாவது உள்ளே போய்த்தான் ஆகணும் என்கிற முடிவெடுத்தாச்சு. சூடா டீ குடிச்சிட்டு மூணு பேரும் விறுவிறுன்னு வேகமா அபார்ட்மெண்ட் வந்தோம்.

    கீழ் வீட்டில யாராவது இருந்தாலாவது அவங்க ஹால்ல இருந்து எங்க ஹாலுக்கு அப்படி இப்படி ஏறித்தாவிப் போகலாம். ஆனால் எங்களுக்கு கீழ ரெண்டு ஃப்ளோரும் காலி. யாருமே இல்லை. போய் படபடன்னு கதவைத் தட்டினோம். டொம் டொம்னு முட்டி மோதினோம் பில்டிங்க்ல இருந்த எல்லாரும் முழிச்சிருப்பாங்க.. நிறைய பேர் மேல வந்துட்டாங்க. எங்களைச் சுத்தி ஒரே கூட்டம். க்யா ஹூவா? வாட் ஹேப்பண்டு என்று ஒரே இரைச்சல்.. நாங்களோ பயங்கர டென்ஷனில் இருந்தோம். ஒரு பக்கம் அவமானமாய் இருந்தது. மறுபக்கம் பயமாய் இருந்தது.
    அப்போது....

    தொடரும்.

    (சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க பார்ப்போம்.. நாளை இதே நேரம் கதை முடியும் நேரம்)
    Last edited by தாமரை; 29-11-2007 at 06:37 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    அடுத்த நாள் காலையில நான் குளிச்சுட்டு வெளிய வந்தா கதவு தட்டற சத்தம் வந்தது. அவனைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. ஆயிரக்கணக்கான ஸாரி சொன்னாலும் பாவமில்லையா அவன்..
    அய்யோ கார்த்தி பாவம்...

    இருந்தாலும் இப்படியா தூங்குறது...

    அதுசரி காலையில எழுந்தபிறகும் கூடவா கார்த்தி நினைவு வரலை,,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by மலர் View Post
    அய்யோ கார்த்தி பாவம்...

    இருந்தாலும் இப்படியா தூங்குறது...

    அதுசரி காலையில எழுந்தபிறகும் கூடவா கார்த்தி நினைவு வரலை,,
    சுத்தமா நினைவே இல்லை.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    சம்பவத்தின் முடிவுப்பகுதியை கற்பனை பண்ணி பதியுங்க
    நான் நினைக்கிறேன்... உள்ள இளங்கோ நல்லா தூங்கினாரோ என்னவோ...????

    அப்படி மட்டும் தூங்கியிருந்தாருன்னா இளங்கோ உங்க எல்லாருக்கும் அண்ணன்..

    கும்பகர்ணனுக்கு மட்டும் தம்பி....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  12. #12
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஹ்ம்ம்...
    முதல் ரெண்டு சம்பவங்களும் ஏற்கனவே சொல்லிருக்கீங்க... உங்க்க தூக்கத்தால் உங்க நண்பர்கள் பட்ட பாட்ட பத்தி.. கடைசியா இதென்ன... யார் தான் உள்ள இருந்தது...
    தெரியலியே...? ஏதாவது ஆவி வேலையா இருக்குமோ..? இல்லை அவர் உங்களை விட கும்பகர்ணனா?

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •