இவ்வளவு நாளாக மன்றம் வராமல் போனதில் நான் படிக்காமல் போன முத்துக்கள் எத்தனையோ. புலம்பெயர்ந்த வாழ்வென்பதில் கொஞ்சமேனும் சோகம் இருக்கிறதென்பதுதான் நிஜம். என் பெற்றோரையும் உற்ற என் நண்பர்களையும் விட்டு விட்டு பணம் செய்வதற்காக நான் இங்கே இருக்கிரேன் என்றால் நான் அதற்கு கொடுக்கும் விலை அது. ஆனால் விருப்பமேயில்லாமல் ஆனிவேர் விட்டிருக்கும் ஒரு மரத்தைப் பெயர்த்து நடுவதில் உள்ள சோகம் அனுபவித்தவர்கட்குத்தான் புரியும். அதிலும் வேற்று நாட்டில் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி வாழந்து வருவது என்பது இன்னமும் சோகமானது. மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு அண்ணா.
முதன்முதலில் கனடாவிற்கு சென்னையில் இருந்து கொழும்பு வழியாகப் பயணிக்கிறேன். லண்டன் விமான நிலையத்தில் இறங்கி 5 மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் எனது பயணம். அப்பொழுது ஈழத்திலிருந்தே கனடா வரும் ஒரு குடும்பமும். பார்க்கிறேன். சினேகமுடன் வார்த்தைப் பறிமாற்றங்கள். கனடா இறங்கிய பின்னர் அடுத்த நாள் காலையில்தான் பல்கலைக்கழகம் செல்லும் விமானம். என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்திலேயே இருந்துவிடலாமா என எண்ணுகிறேன். புரியாத அந்த ஊரில் நான் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் அந்த சகோதரரும் சகோதரியும் டொரண்ட்டோவில் அவரகள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். அடுத்தநாள் அதிகாலையில் விமானம் என்பதால் அன்போடு மறுத்து விட்டேன். தொலைபேசி எண் கொடுத்து உதவி வேண்டுமானால் தொடரவும் என்று கூறிச்சென்றார். இன்னமும் அந்தக்குடும்பத்துடனான என் உறவு தொடர்கிறது.
தமிழால் உள்ளங்களை இணைக்க முடியும். நம் சகோதரர்களை வன்முறை உணர்வோடு தாக்குவது எனக்கு எந்த விதத்திலும் சரியெனத் தெரியவில்லை. அப்படியாயின் ராஜ்தாக்கரே நம்மை மும்பை நகரில் தாக்குவது நியாயமா? ஆதரவு என்று நம்மைத்தேடி வரும் நம் ஈழத்துச் சொந்தங்களுக்கு நாம்தான் வசதி செய்து தரவேண்டும்.
கண்முன்னே அந்த வலியைக் காட்டிய உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் கண்டேன். அகதியாய் வாழ்ந்து பாருங்கள் அந்த வலி புரியுமென. அப்படி ஒரு வலியினை வாழாமலே புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா.
Bookmarks