Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 46 of 46

Thread: இப்படியும் ஒரு வாழ்க்கை

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    இவ்வளவு நாளாக மன்றம் வராமல் போனதில் நான் படிக்காமல் போன முத்துக்கள் எத்தனையோ. புலம்பெயர்ந்த வாழ்வென்பதில் கொஞ்சமேனும் சோகம் இருக்கிறதென்பதுதான் நிஜம். என் பெற்றோரையும் உற்ற என் நண்பர்களையும் விட்டு விட்டு பணம் செய்வதற்காக நான் இங்கே இருக்கிரேன் என்றால் நான் அதற்கு கொடுக்கும் விலை அது. ஆனால் விருப்பமேயில்லாமல் ஆனிவேர் விட்டிருக்கும் ஒரு மரத்தைப் பெயர்த்து நடுவதில் உள்ள சோகம் அனுபவித்தவர்கட்குத்தான் புரியும். அதிலும் வேற்று நாட்டில் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி வாழந்து வருவது என்பது இன்னமும் சோகமானது. மனதில் வலியை ஏற்படுத்திய பதிவு அண்ணா.

    முதன்முதலில் கனடாவிற்கு சென்னையில் இருந்து கொழும்பு வழியாகப் பயணிக்கிறேன். லண்டன் விமான நிலையத்தில் இறங்கி 5 மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் எனது பயணம். அப்பொழுது ஈழத்திலிருந்தே கனடா வரும் ஒரு குடும்பமும். பார்க்கிறேன். சினேகமுடன் வார்த்தைப் பறிமாற்றங்கள். கனடா இறங்கிய பின்னர் அடுத்த நாள் காலையில்தான் பல்கலைக்கழகம் செல்லும் விமானம். என்ன செய்வது என்று தெரியாமல் விமான நிலையத்திலேயே இருந்துவிடலாமா என எண்ணுகிறேன். புரியாத அந்த ஊரில் நான் தமிழன் என்ற ஒரே காரணத்தினால் அந்த சகோதரரும் சகோதரியும் டொரண்ட்டோவில் அவரகள் வீட்டிற்கு அழைக்கிறார்கள். அடுத்தநாள் அதிகாலையில் விமானம் என்பதால் அன்போடு மறுத்து விட்டேன். தொலைபேசி எண் கொடுத்து உதவி வேண்டுமானால் தொடரவும் என்று கூறிச்சென்றார். இன்னமும் அந்தக்குடும்பத்துடனான என் உறவு தொடர்கிறது.

    தமிழால் உள்ளங்களை இணைக்க முடியும். நம் சகோதரர்களை வன்முறை உணர்வோடு தாக்குவது எனக்கு எந்த விதத்திலும் சரியெனத் தெரியவில்லை. அப்படியாயின் ராஜ்தாக்கரே நம்மை மும்பை நகரில் தாக்குவது நியாயமா? ஆதரவு என்று நம்மைத்தேடி வரும் நம் ஈழத்துச் சொந்தங்களுக்கு நாம்தான் வசதி செய்து தரவேண்டும்.

    கண்முன்னே அந்த வலியைக் காட்டிய உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் கண்டேன். அகதியாய் வாழ்ந்து பாருங்கள் அந்த வலி புரியுமென. அப்படி ஒரு வலியினை வாழாமலே புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா.
    Last edited by mukilan; 02-07-2008 at 06:58 PM.

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

    இது மனதில் ஒட்டவில்லை.

  3. #39
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

    இது மனதில் ஒட்டவில்லை.
    உங்கள் மனதில் ஒட்டவேண்டுமென்பதற்காக முடிவை மாற்ற அது கற்பனைக் கதையில்லையே. நிஜமே அதுதானே...!

  4. #40
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by கிஷோர் View Post
    அருமையான கதை.
    அனைவரது கருத்து பகிர்விற்கும் நன்றிகள் கோடான கோடி,
    சென்ற வருடம் முழுமையாக மூன்று மாதங்களை தமிழத்தில் கழித்தவன் என்கிற முறையில் சொல்லுகிறேன்,தமிழகம் எனக்கு தந்தது வலிகளை அல்ல,வடுக்களை.
    வேண்டாம் விட்டுவிடுவோம், சில விடயங்கள் கதைத்தால் விரிசல்தான் வரும்.
    வசதியோடும்,விசாவோடும் வந்த எனக்கே இவ்வளவென்றால், நினைத்துப் பார்க்கவே முடியாமலிருக்கிறது முகாம் வாழ்க்கையை.
    உண்மையாக,சத்தியமாகச் சொல்கிறேன் ஈழத்திலிருந்து செத்தாலும் சாவேனே தவிர, அகதியாய் தமிழகம் வரேன்.

    இது என் கருத்துக்கள் அல்ல, காயங்கள்,

    அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்...!

    கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
    கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!


    நல்ல வரிகள் சிவா.
    அப்படி என்னதான் வடு? உதாரணத்திற்கு சிலதை சொல்லுங்களேன். சொல்லாமல் ஊகத்திற்கு விடுவது உங்கள் நம்பகத்தன்மைக்கு நல்லதல்ல.

  5. #41
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    கண்முன்னே அந்த வலியைக் காட்டிய உங்கள் படைப்பிற்கு மிக்க நன்றி அண்ணா. சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் கண்டேன். அகதியாய் வாழ்ந்து பாருங்கள் அந்த வலி புரியுமென. அப்படி ஒரு வலியினை வாழாமலே புரிய வைத்து விட்டீர்கள் அண்ணா.
    மிக உணர்ச்சிகரமான பின்னூட்டம் முகிலன். நிலத்தால் பிரிந்திருந்தாலும் உளத்தால் ஒன்று பட்ட சகோதரர்கள் அல்லவா. நீங்கள் சொன்னதைப்போல முடிந்தவரை ஒவ்வொருவரும் உதவ முயற்சிக்க வேண்டும்.
    நன்றி முகிலன்..
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #42
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    நல்ல ஆழமான கதை. ஆனால் முடிவு என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. படிப்பு என்பது மிகவும் முக்கியம். பள்ளியில் சக மாணவிகள் கேலி செய்கிறார்கள் என்று பள்ளிக்கு அனுப்பாமல் .......

    இது மனதில் ஒட்டவில்லை.
    இல்லை ஆரென்...குழந்தைகளின் உலகம் வேறு. அந்த பெண்குழந்தையின் அப்போதைய சூழல் குழப்பமானதாக இருந்தது. அன்னையும் இல்லை...தந்தையும் தானும் அகதிகளாய்....உடனே மொழியை மாற்றிக்கொள்ளும் பக்குவம் இல்லை...அதனால்தான் சற்றே மிரண்டுவிட்டாள். அத்தனை ஆசையாய் படிக்கப்போன குழந்தை நின்று விடுகிறேன் என்று சொல்கிறாளென்றால்...அத்தனைக்கு அவள் மனம் குழம்பிப்போயிருக்கும்.

    பின்னூட்டத்திற்கு நன்றி ஆரென்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #43
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by கிஷோர் View Post
    சென்ற வருடம் முழுமையாக மூன்று மாதங்களை தமிழத்தில் கழித்தவன் என்கிற முறையில் சொல்லுகிறேன்,தமிழகம் எனக்கு தந்தது வலிகளை அல்ல,வடுக்களை.

    உண்மையாக,சத்தியமாகச் சொல்கிறேன் ஈழத்திலிருந்து செத்தாலும் சாவேனே தவிர, அகதியாய் தமிழகம் வரேன்.
    வடுக்களைத் தந்தது உண்மையாக இருக்கலாம் கிஷோர். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால்...எங்குதான் இந்த வடுக்கள் நமக்குப் பரிசாகக் கிடைப்பதில்லை சொல்லுங்கள்? இந்தியர், இலங்கையர், நேபாளி, பங்களாதேஷி...இந்த நாட்டினர் அனைவருக்கும் மிக அதிக நாடுகளில் அளிக்கப்படும் வலிகள் எத்தனை தெரியுமா? வெளிச்சொல்லாமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவர்கள்தான் அதிகம்.

    நீங்கள் சொல்லலாம் அதெல்லாம் வேற்று மொழி வேறு இனமுள்ள நாடுகள் என்று. தமிழருக்கு தமிழகத்திலேயே இத்தனை வேதனையா என்று கேட்பீர்கள். அரசாங்கத்திலேயே ஸ்திரமில்லாத கொள்கை வைத்திருக்கிறார்கள் இலங்கை உரிமைப் போரைப்பற்றி. தினசரி செய்திகளில் உண்மை குறைவாகவும் பொய்களை அதிகமாகவும் பரப்பி நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறார்கள்.

    நான் இங்கே காட்டியிருக்கும் நிகழ்வு நடந்து 15 வருடங்கள் ஆகிறது. தற்சமயம் அங்கு முகாமுமில்லை யாரும் அகதிகளாகவும் இல்லை. எங்களோடு ஒருவராய் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார்கள். அங்கிருக்கும் குடும்பங்களிலேயே சம்பந்தம் வைத்துக்கொண்டு சந்தோஷமாய் இருக்கிறார்கள். வாத்தியார் சொன்னதைப்போல அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஆதரவே தினமும் கிடைக்கும் கூலிதான்...அதைப் பறிக்க வந்தவர்கள் என்று தவறாக நினைத்ததன் விளைவுதான் அந்த ஆத்திர சண்டைக்குக் காரணம்.

    இலங்கை சகோதரர்களுக்கு...ஏதோ கிடைப்பது கிடைக்கட்டும்...அதிகப்படியான சிரமம் என்றாலும் அதைப் பார்க்காமல் வேலை செய்வோம் என்ற எண்ணம். அவர்கள் வரை அப்படி நினைத்தது நியாயம். ஆனால் அவர்களால் வேலையை இழந்தவர்கள் ஆத்திரப்படுவதும் நியாயம்தானே?

    எது எப்படியோ...நிச்சயம் இன்றைய நிலைமை வெகுவாக மாறி இருக்கிறது. நீங்கள் அங்கு அகதியாய் இருந்தீர்களா...இல்லை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தீர்களா தெரியாது. அப்படிச் சுற்றிப் பார்க்கச் சென்றவர் என்றால் அத்தனைக் கொடுமைக்கு ஆளாகி இருக்க மாட்டீர்கள். ஏனென்றால் நம் மன்ற சகோதரர்களும் அங்கு சென்று இருந்து வந்திருக்கிறார்கள்.

    அகதியாய் இருந்து அந்த வலிகளைப் பெற்றீர்கள் என்றால்...அப்படிச் செய்த அவர்களுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
    Last edited by சிவா.ஜி; 01-07-2008 at 12:24 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு சிவா

    இந்தக்கதை இரு நாட்களுக்குமுன் ஒரே மூச்சில் வாசித்தேன் -
    அமரன், அன்பு, ஓவியன்,ஆதி உள்ளிட்டோரின் ஆழமான பின்னூட்டங்களுடன்..

    உடனே தூங்கிவிட்டேன் .

    (துக்கம், சோகம், இயலாமையில் வரும் மனபாரம் - அழுத்தினால்
    உடனே தூங்கிவிடுவது என் தற்காப்பு வரம்..)


    நேற்று பொங்கிப் பொங்கி பலவரி பின்னூட்டம் தட்டச்சினேன்.
    லாக்-அவுட் ஆகி அழிபட்டது..

    இதோ மீண்டும் என் பதிவு முயற்சி -

    சொந்தத் தம்பி -தங்கைகளுடன் சொத்துக்கு மல்லு கட்டுவதும்
    பங்காளியை வரப்புக்கு வெட்டும் வன்ம மனமும்
    இயலாதவனை கொத்தடிமையாய் அடக்கும் மிருக குணமும்
    பெண்ணை சமமாய் மதிக்கத் தயங்கும் கீழ் எண்ணமும்

    என்ன பெருமைப் பட இருக்கிறது எனக்குள்ளே???

    வாழவந்த சகோதர-சகோதரிகளை இப்படி நாம் நடத்துவதில் என்ன ஆச்சரியம்?

    சமத்தேநீர் விருந்து வைக்கும் அவலம் இன்றும் நம்மிடம்..

    என்ன சொல்ல?

    கருவில் குற்றம் - நம் சமூகத்தில்..

    மனிதர் அனைவரும் மிருகம் - நிஜத்தில்..

    நிஜம் பீரீடும்போதெல்லாம் சாயம் கலைந்து துடிக்கிறேன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #45
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் வரிகளில் தெரியும் வலியை உணர்கிறேன் இளசு. யார்பக்கம் நியாயம் என்று பார்க்காமல், அனைத்தையும் இழந்து வந்தவர்களை அன்போடு பார்த்தாலே போதும். மற்ற இடங்களில் எப்படி என எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் பகுதியில் தற்சமயம் அகதியாய் வந்தவர்களெல்லாம் எங்களில் ஒருவராய் இணைந்துவிட்டார்கள்.

    நன்றி இளசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #46
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    சில நேரங்களில் நமக்கே சரியான பாதுகாப்பு இல்லாத போது அகதிகளுக்கு பாதுகாப்பா என்ற எண்ணம் தோன்றும் ஆனால் அவர்களின் நிலைமையை படிக்கும்போது (பார்த்தது இல்லை) மனம் கனக்கிறது சிறு பிஞ்சு படிக்கு கூட முடியாத நிலையை படிக்கும் போது மனம் பதறுகிறது
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •