Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 46

Thread: இப்படியும் ஒரு வாழ்க்கை

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    சிவா இதை கதையாக எழுதியிருந்தாலும் அவர் நேரில் உணர்ந்தவற்றின் பிரதிபலிப்பாக தான் இந்த கதையின் பெரும்பான்மையான சம்பவங்கள் தெரிகின்றன. தமிழகத்திற்கு அகதிகளாக வரும் இலங்கையர்களின் எல்லோரின் நிலையும் இப்படி இருப்பதில்லை என்பதை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
    மிகச்சரிதான் இதயம் பெரும்பான்மை இப்படி இருந்துவிட்டால் அது கதையாகாது.தனிப்பட்ட சம்பவம்தான் கதையாகிறது.அந்த வகையில் என்னை பாதித்த சம்பவத்தைதான் கதையாக்கியிருக்கிறேன்.அதே சமயம் எங்கள் பகுதிக்கு வந்தவர்களில் யாருமே இஸ்லாமியர் இல்லை எல்லோரும் இந்துக்களே.இப்போது அவர்கள் நிலை மாறிவிட்டது.அனைவரோடும் கலந்து வாழத்தொடங்கிவிட்டார்கள்.முகாமும் இல்லை.ஆனாலும் அரசாங்கத்தின் அதிகாரிகள்தான் எந்த துரும்பையும் கிள்ளிப் போட மறுக்கிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    ..என்னபாவம் செய்தார்கள்..இப்படிபட்ட கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருக்கு இவர்களுக்கு...?வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம்..தன் தமயனை பற்றி மட்டும் இன்னும் சிந்திக்காமால் இருப்பது ஏனோ..? கூடியவிரைவில் எல்லாவற்றிர்க்கும் நல்லமுடிவு கிடைத்தால் நலம்..!
    உங்கள் கேள்விக்கான பதில்தான் இந்தக்கதையில் வரும் பிரச்சனை சுகந்த்.வாத்தியார் சொன்னதைப் போல அன்றாடக் கூலிக்காரன் அவன் வயிற்றுக்கு பிரச்சனை வரும்போது சொந்த சகோதரனையே காப்பாற்ற முடியாது.அதே சமயம் தனக்கு இவர்களால் பாதிப்பில்லை என்று தெரிந்து கொண்டால் நிச்சயம் நன்றாக பழகுவார்கள்.இது நான் கண்டது.இருப்பினும் நம் சகோதரர்களின் கண்ணீர் துடைக்கப்படவேண்டுமென காத்திருக்காமல் நிறுத்தப்படவேண்டுமென முயல வேண்டும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இந்த விடையத்தில் எக்காரணத்திலும் இந்திய அரசை பிழைகூறிவிடமுடியாது...
    .[/COLOR]
    இது இந்திய அரசின் பிழையில்லை அன்பு.இங்கிருக்கும்சில அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் எதிலும் ஆதாயம் தேடும் அவர்களின் குணம்.இதனால் அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சிவா!

    நல்ல நடை எழுத்துக் கேர்வை சம்பவங்களை மனக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது மனதாரப் பாராட்டுகிறேன் சிவா..!!. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தக் கதையின் கரு வலிமையானதாகத் தோன்றவில்லை. மற்றவர்கள் கிண்டலடிப்பது நிஜமாயிருந்தாலும் படிக்க என்று துடிப்புள்ள எந்த சிறுவர்களும் அவர் பெற்றோர்களும் அதனை ஒரு பெரிய விடயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், அப்படி எடுத்துக் கொள்ளவும் கூடாது. மாறாக அதனை ஒரு சவாலகவே எடுப்பார்கள், எடுக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வளப்படும், வசப்படும்.

    "அகதி" என்ற வலி நன்கு உணர்ந்தவன் நான், வேற்று நாட்டினுள் அகதியாக செல்லாவிட்டாலும் சொந்த நாட்டிலேயே அகதி என்ற பெயரில் அல்லற்பட்டவன், அப்படி அல்லற்பட்டவர்களை பார்த்துள்ளேன், பராமரித்துள்ளேன். சொந்த இடத்தை, சொந்தங்களை, சொத்துக்களை தொலைத்து உயிரை மட்டும் கையிலே பிடித்துக் கொண்டு உயிருக்காக இடம் பெயர்வது கொடுமையிலும் கொடுமை. அந்த துன்பத்தை உணர்ந்து வரிகளில் கொணர்ந்து மனம் வருந்திய சிவா.ஜிக்கு நன்றிகள் கோடி......
    Last edited by ஓவியன்; 26-11-2007 at 09:02 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிவா... உங்கள் தமிழில் காட்சிகளை கண்முன் கொண்டுவருவதை விஞ்சி நிகழ்விடங்களுக்கு எம்மை அழைத்துச்செல்லும் வகையில் அமைந்த சரளமான நடை. உங்கள் எழுத்து திறமை பற்றி அதிகம் பேசத்தேவை இல்லை. நன்கறிந்த ஒன்றுக்கு எதற்கு விளக்கமும் விளம்பரமும். அதனால் கருவை மட்டும் கொஞ்சம் அலசுகின்றேன்..

    ஈழத்தமிழ் தெனாலி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஈழத்தின் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்களில் பயன்படுத்தப்பட்டதே தெனாலித்தமிழ். பேச்சுவழக்கில் அந்ததமிழை நான் பயன்படுத்துவதில்லை.. யார் பயன்படுத்தியும் நான் கேட்டதுமில்லை. ரேடியோ சிலோன் கேட்ட அன்பர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.. ஏன் அப்படத்திற்கு உதவி செய்த அப்துல்ஹமீட் பேசும்போது அப்படியா பேசுகின்றார். திரைப்படம் என்னும்போது நாடகத்தில் சாயல் நுழைக்கப்பட்டுவிட்டது. சுருக்கமாகச் சொன்னால்...கறுப்புவெள்ளைப் படங்களுக்கும் தற்போதைய படங்களும் உரையாடலில் எத்துணை வேறுபாடு. தெனாலியில் ஈழத்தமிழ் கறுப்புவெள்ளை காலத்துக்குரியது..

    இந்திய முகாம்களில் ஈழத்தமிழ் ஏதிலிகள் நிலை, இரண்டும் கெட்டான் நிலை. அங்கே இரு வகையானவர்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மை முகாம்வாசிகளில் உறவினர்கள் வெளிநாடுகளில் இருப்பதில்லை. வெளிநாட்டு உறவினர்களை கொண்டவர்களே முகாமை விட்டு வெளியேறி வீடுகளில் வசிக்கின்றனர். அதிலிம் பலர் காவல்துறையினருக்கு அஞ்சியே காலத்தை ஓட்டுகின்றனர். விசாப்பிரச்சினை அதற்கான முக்கியகாரணி. குடியகழ்வு, குடிவரவு சட்டங்களுக்கமைய ஒருவர் தஞ்சமடைந்த முகாமைவிட்டு வெளியேற வேண்டுமாயின் நீங்கள் சொன்னதுபோல உள்ளூர்வாசி (கொஞ்சம் பிரபல்யமானவர்) பொறுப்புக்கையெழுத்து கொடுக்கவேண்டும்..

    முகாமில் இருப்போருக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள். ஆண்களுக்கு வேலைப்பிரச்சினை. அங்குள்ள ஆண்களுக்கு காவல்துறையினரால் பிரச்சினை. அங்குள்ள ஆண்களால் அங்குள்ள பெண்களுக்கு சில சிக்கல்கள். அவர்களுக்கு சற்றும் சளைக்காது காவல்துறையினரும் பெண்களுடன் சில்மிஷங்கள் புரிவதுண்டு. எல்லாரும் என்று நான் சொல்லவில்லை. குழந்தைகளின் மருத்துவ வசதிகள், இதர தேவைகளுக்காக இவைகளை மனமொப்பாதே அனுசரித்துப்போகும் குடும்பத்தலைவர்கள், குடும்பத்தலைவிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அனுசரித்து என்பதை விட உள்ளக்கிடைக்கைகளை வெளிக்காட்டாது உள்ளுக்குள் மருகுகின்றனர். அவர்களின் ஒரே நம்பிக்கை தேசத்தின் விடியல்.

    "இங்கிருந்து படுவதை விட ஊரிலில் போய் சவதுமேலென சிலர் தாயகம் போகிறார்களே.. நீங்கள் ஏன் அப்படி நினைக்கவில்லை என்று கேட்ட எனக்கு கிடைத்த பதில் என்னை பெருமிதப்படவைத்தது.. " எங்கட மண்ணில எங்களால நிம்மதியாய் இருக்க ஏலாமல் போட்டுது. எங்கட பிள்ளையள் இருக்கவேண்மெண்டு நாங்கள் ஆசைப்படுறம். அவைக்காகத்தான் இஞ்சை இருக்கிறம்" என்ன ஒரு நம்பிக்கை. தேசத்தின் வைகறையின் அக்கறைமுகிதியால் வானொலியே கதியென இருப்போர் எத்தனைபேர்..

    பாராட்டுக்கள் சிவா.. எல்லாத்துக்கும்

  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஓவியன்.சிறுகுழந்தைகளின் மனதில் ஒரு விடயம் பதிந்து விட்டால் அதை மாற்றுவது மிக்கக் கடினம்.நான் அனுபவத்தில் கண்டது.என்னுடைய உறவில் ஒருவருடைய மகள் முதலில் சேர்ந்த பள்ளியின் ஆசிரியையின் கண்டிப்போ அல்லது அவரையோ அவளுக்கு பிடிக்காதக் காரணத்தால் அந்தப் பள்ளிக்கு போகவே முடியாது என மறுத்துவிட்டாள்.கட்டாயப்படுத்தி அனுப்பியபோது காய்ச்சல் வந்துவிட்டது.பிறகு வேறு வழியில்லாமல் வேறு பள்ளியில் சேர்த்தார்கள். இந்தக் கதையில் அவர்களுக்கு வேறு பள்ளியில் சேர இயலாத காரணத்தால் பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டது.ஆனால் நீங்கள் சொல்வதைப்போல படிக்கவேண்டுமென்ற தாகம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதைத் தொடரவே செய்வார்கள்.அதேபோல இந்த நிஷாந்தியும் தொடர்ந்திருக்கலாம்.இந்த நிகழ்வு அந்த சமயத்துக்கானது.மீண்டும் நன்றி ஓவியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிகத் தெளிவான அலசலலுடன் உங்கள் ஆதங்கமும் சேர்ந்த பின்னூட்டத்திற்கு மனம் நிறைந்த நன்றி அமரன்.அந்த சமயத்தில் இலங்கைத் தமிழென்பது தெனாலியில் மட்டுமே காட்டப்பட்டிருந்தது.அதனால்தான் அதைக் குறிப்பிட்டிருந்தேன்.சில சொற்பதங்கள் புன்னகைமன்னன் திரைப்படத்திலும் பயன் படுத்தப்பட்டிருந்தது.ஆனால் ஓரளவுக்கு சரியான உரையாடல்கள் மணிரத்னம் தன்னுடைய கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் உபயோகப்படுத்தபட்டிருந்தது.ஆனால் தெனாலியின் தமிழ் நாடகத்தமிழ் என்பது நீங்கள் எனக்குத்தந்த புதிய செய்தி.நன்றி அமரன்.
    முகாமில் வசிப்போரில் பலருக்கு வெளிநாட்டு உறவுகள் இல்லையென்றாலும் அடிக்கடி நிறைய பேருக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல்கள் வரும்.பார்த்திருக்கிறேன்.அதேபோல பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நான் தொடவில்லை.அதைச் சொல்லி சங்கடப்படுத்த விரும்பவில்லை.ஆனால் அதை உணர்ந்தவன்,கண்ணால் பார்த்தவன் என்ற வகையில் வேதனை படுகிறேன்.மனதுக்கு ஆறுதல் தரும் செய்தியென்றால்...தற்சமயம் இலங்கை சகோதரர்கள் தங்கள் அகதியென்ற அவலத்தை விடுத்து எங்களோடு ஒருவராக வாழ்ந்து வருகிறார்களென்பதுதான்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    ஈழத்தமிழ் தெனாலி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஈழத்தின் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்களில் பயன்படுத்தப்பட்டதே தெனாலித்தமிழ். பேச்சுவழக்கில் அந்ததமிழை நான் பயன்படுத்துவதில்லை.. யார் பயன்படுத்தியும் நான் கேட்டதுமில்லை. ரேடியோ சிலோன் கேட்ட அன்பர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.. ஏன் அப்படத்திற்கு உதவி செய்த அப்துல்ஹமீட் பேசும்போது அப்படியா பேசுகின்றார். திரைப்படம் என்னும்போது நாடகத்தில் சாயல் நுழைக்கப்பட்டுவிட்டது. சுருக்கமாகச் சொன்னால்...கறுப்புவெள்ளைப் படங்களுக்கும் தற்போதைய படங்களும் உரையாடலில் எத்துணை வேறுபாடு. தெனாலியில் ஈழத்தமிழ் கறுப்புவெள்ளை காலத்துக்குரியது..
    நீங்கள் சொல்வது உண்மை என்றே உணர்கிறேன் அமரன். இந்த கருத்தை என்னுடைய பெரும்பாலான இலங்கை நண்பர்களும் என்னிடம் பிரதிபலித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நான் கண்டவரை அவர்களிடமும் தெனாலி கமலின் பேச்சு சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அப்துல் ஹமீது இலங்கைத்தமிழின் சாயலை கொஞ்சமும் வெளிப்படுத்தாத ஒரு அறிவிப்பாளர். அவரின் ஆலோசனையின் பெயரில் தான் அப்படத்தின் வசனம் எழுதப்பட்டு கமல் நடித்தார். இதில் இலங்கை (பேச்சுத்)தமிழை கமல் வெளிப்படுத்துகிறார் என்ற கோணத்தில் பார்க்காமல், கமலுக்கு இலங்கை (பேச்சுத்)தமிழ் என்ற பெயரில் நாடகத்தமிழை இப்படியெல்லாம் வித்தியாசமாக பேசத்தெரியும் என்று அவர் திறமையை நிரூபிக்கும் முயற்சி என்றே அதை பார்க்கிறேன். அதில் கமல் சிறப்பாக வெற்றியும் பெற்றிருந்தார் (இல்லாததை உண்மை போல் காட்டுவது தான் உண்மையான சினிமா). அவ்வை சண்முகியில் அவர் நினைத்திருந்தால் ஒரு சாதாரண பெண்ணைப்போல் வேடம் பூண்டிருக்கலாம். ஆனால், அதில் ஒரு வயதான அய்யராத்து பட்டு (நன்றி: யவனிகா) மாமியைப்போன்ற தோற்றம் காட்ட காரணம் அவரின் அபார நடிப்புத்திறனுக்கு தீனி போட குரல் மாற்றம், தோற்ற மாற்றம், மொழி நடை மாற்றம், உடல் மொழி மாற்றம் ஆகியவை தேவைப்பட்டது. அதனால், அதை அவர் விரும்பி ஏற்றார். அப்படித்தான் தெனாலி கமலும். இன்றைய காலகட்டத்தில் இங்கிருக்கும் இலங்கை நண்பர்களை அவர் மொழி கொண்டு அடையாளம் காணுவது மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்களின் கனிவான பேச்சும், தமிழகத்தைச்சேர்ந்தவர்களைப்போன்ற தோற்றமும் தான் நமக்கு ஆவலை ஏற்படுத்தி, கேட்டு உறுதிபடுத்தச்சொல்கிறது.
    அன்புடன்,
    இதயம்

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    எங்கள் ஊரில் நிறைய குடும்பங்கள் இலங்கையிலிருந்து அகதியாக வந்தவர்கள் .
    எங்கள் ஊரில் இருக்கும் குடும்பங்களில் ஒரு குடும்பம் கூட முஸ்லிம் இல்லை.பலவேறு தளங்களில் அவர்கள தங்களை வளர்த்து கொண்டாலும் உறவு முறையில் பிண்தங்கியுள்ளனர்.அதுதான் நிதர்சன உண்மை

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    சிவா.ஜி, ஒரு கணமான கதையை லேசாக சொல்லி இருக்குறீர் பாரம் குறையாமல்.. என் மனதுக்குள் ஒரு சின்ன நெருடல் உண்டு.. சங்க வளர்த்த மதுரையிலேயோ.. என் மக்கள் அல்லலுறும் ஈழத்திலேயோ பிறக்காது போய்விட்டேனே என.. இப்பொழுது நான் ஈழத்தில் பிறந்திருக்க வேண்டியவனல்லவா ? என்கிற பெருங்கேள்விதான் எனக்குள் எதிரொலிக்கிறது.. நானும் என் மக்களுக்காக எதாவது செய்திருப்பேன்.. ஈழப்போரில் இறந்தவர் பட்டியலிலாவது என் பெயர்வந்திருக்கும்..

    கதையில் /என் மனைவி/ என்று சொன்னவன்.. என்ற இடத்தில் கலங்கிவிட்டேன்..

    என் நண்பர்கள் சொல்லுவார்கள் நான் கோபக்காரனென

    என் அம்மா சொல்லுவார் நான் முரடனென.

    என் உடன்பிறவா தங்கையர் சொல்லுவர் அண்ணன் "Sentimental type" என..

    என் மனதுக்குள் இருப்பவன் சொல்லுவான் நீ கோழையென..

    காரணம் தனிமையில் யாரும் அறியாமல் அழுவது எனக்கும் அவனுக்கும்தானே தெரியும்..

    இந்த கதை மீண்டும் என் மனதுக்குள் இருப்பவனால் என்னை கோழை என வர்ணிக்க வைத்துவிட்டது.. அப்படி அழுதேன்..

    இந்த மாதிரியான இலக்கியங்கள்தான் காலகாலங்களையும் கடந்து வாழும் இலக்கியங்கள்.. இந்த கதையும் அதில் ஒன்று என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை..

    வாழ்த்துக்கள்...

    -ஆதி
    அன்புடன் ஆதி



  11. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எத்தனை மென்மை உங்கள் உள்ளத்தில் ஆதி?பெருமையாக இருக்கிறது.எல்லோரும் அல்லலுறும் நம் சகோதர்களுக்கு இங்கிருக்கும் நாம் ஏதாவது செய்யவேண்டுமென்றுதான் நினைப்பார்கள்.ஆனால் நீங்களோ....பிரமிப்பாய் இருக்கிறது உங்களின் மேன்மையான எண்ணம் கண்டு.அவர்களோடொருவராய் பிறக்காமல் போனோமே என்ற உங்கள் வருத்தம் கண்டு கண்கள் கலங்குகின்றன.கவலை வேண்டாம் ஆதி நிச்சயம் நம் சகோதரர்களுக்கு ஒரு விடியல் வரும்.சந்தோஷம் மீளும்.நம்பிக்கையோடு காத்திருப்போம்.நன்றி ஆதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    முஸ்லீம்கள் மட்டும் பிரிந்து வந்து, நாங்கள் வாழும் பகுதிகளிலேயே கிடைத்த இடங்களில் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு வாழத்தொடங்கினார்கள்
    உள்ளூர் முஸ்லீம்களுடன் திருமண தொடர்பும் வைத்துக்கொண்டனர்.

    இதில் பெரும் வேதனை என்னவென்றால் இவர்களோடு ஒன்றாக வந்த மற்ற மதத்தவர் உள்ளூர் இந்துக்களுடன் ஒன்றமுடியாமல் அல்லது புறக்கணிக்கப்பட்டு ஒரு தனித்தீவாக வாழ்ந்து வருகிறார்கள்.
    நன்பரே நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம். மதத்தை தாக்குவதாக நினைக்கவேண்டாம். இலங்கையிலிருன்து வந்த அகதிகளுடன் திருமன உறவுகள் வைத்து கொள்ளும் அளவுக்கு பரன்த மனபான்மை உன்மையில் பாராட்ட கூடியதுதான். ஆனால் அது ஏன் ஹிந்து மதத்தினருக்கு இல்லை என்று சொல்ல வேண்டாம்.

    ஹிந்துகள் அவ்வாறு திருமன செய்து கொள்ளவில்லை என்பதால் அவர்கள் பெருந்தன்மை இல்லாதவர்கள் என்று கருத முடியாது.

    ஒவ்வொரு இனங்களுக்கு ஒரு வகை குணம் உண்டு இது தான் சிறந்த குணம் என்று சொல்லமுடியாது. இங்கு சாதி என்று ஒன்று இருகிறது. மேலும் இலங்கை தமிழர்கள் தமிழர்கள் என்ற பாசம் அனுதாபம் நம் மக்களிடையே இருக்கும், அதற்க்கு உதவி செய்யலாம், திருமனம் என்று வரும்போது ஒரே மொழியானாலும் நாடு வேறு அல்லவா? ஒரே நாட்டில் மதம் சாதி மொழி என்று பிரிந்து இருக்கும் போது மொழி ஒற்றுமைக்கா வேறு நாட்டு பிரஜைகளை எப்படி திருமனம் செய்ய முடியும்?

    இஸ்லாமியர்கள் கொள்கை வேறு, முஸ்லீம் அடையாளம் முதல் பிறகுதான் நாட்டு அடையாளம். அதில் தவறு இல்லை, ஆனால் ஹிந்துகள் செய்வது தவறு இல்லை. இது விருப்பம் பொருத்து அமைவது. இ ந்த செயலை குற்றும் சொல்வது சரியல்ல

    Quote Originally Posted by இதயம் View Post
    அதே போல் இந்துக்களையும் மற்றவர்களை போல் ஏற்று அரவணைக்கும் நிலை முஸ்லீம்களிடம் இல்லாததும் கசக்கும் உண்மை.

    இதுவும் தவறல்ல, ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அதை வைத்து அவரை திருமனம் உறவுக்கு அழைக்கலாமா? அவர்கள் மறுக்க முடியாத சங்கடத்தை ஏற்படுத்த கூடாது.

    Quote Originally Posted by இதயம் View Post
    தமிழ் என்றும் தமிழன் என்று வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது.
    இலங்கை மட்டுமல்ல வங்கதேசம் நேப்பாளில் நாடுகளிருந்து வருடா வருடாம் ஏழ்மை பட்டினி பொருக்காமல் நிரைய பேர் அகதிகளாக இந்தியாவுக்கு வருகிறார்கள். நாளை பாக்கிஸ்தானிலிருந்து ஏதோ காரனத்தினால் முஸ்லீம் மக்கள் அகதிகளாக கூட நாம் உதவிகள் செய்ய வேண்டும்.
    அதற்காக திருமன உறவு செய்தால் தான் மனிதாபிமானம் உனர்ச்சி என்று கூறுவது ஏற்கதக்கது அல்ல. அது அவரவர் விருப்பு வெருப்பு

    உதவி வேறு வாழ்கை முழுவது சேர்ந்து வாழ்வது வேறு இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது. புரிந்திருக்கும் என்று நினைகிறேன்.
    Last edited by lolluvathiyar; 26-11-2007 at 08:26 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •