Originally Posted by
ஆதவா
வறுமைக்கோட்டு
அச்சில்தான் இன்றும் பல
ஆட்சி சக்கரங்கள் சுழல்கின்றன..
காரணங்கள் விளைவதில்லை,. ஆக்கப்படுகின்றன. வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம் எப்போதோ, ஆட்சி சக்கரங்களுக்கு அடியில் சிக்கித் தவிப்பதுதான் இந்த வறுமை.
வறுமைக் கோட்டிற்கும்
வறுமை
மிக ஒல்லியாக..
கட்புலனாகாத பூச்சிகள்
கொரித்து விடுதல் போல்
மகசூல்களை
மாமூல்கள் அரித்து விடுகின்றன.
இங்கே இருக்கிறதே வறுமையின் முடிச்சு. அரிக்காமல் இருங்கள் அல்லது அழிந்து போங்கள்.
ஆதி, மொத்தமாக சொன்னால் வரலாறு நம்மால் படைக்கப் பட்டிருக்கிறது. அது நம் அசைவுக்கு ஏற்றபடி.
கவிதை எந்த அளவுக்கு வீரியம் சொல்கிறதோ அதே அளவு வார்த்தைகளும் வீரியம். நல்ல கவிதை ஆதி.
தொடருங்கள்..
Bookmarks