Results 1 to 7 of 7

Thread: இம்சையானவளே...!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0

    Post இம்சையானவளே...!

    உனக்காக காத்திருக்கையில்
    என்னைக் கடப்பவர்கள் மட்டும்
    ராசியானவர்கள் உன் முகத்தை
    அவர்களில் தேடுகிறேனே

    *

    அந்த சூரியனுக்கு
    யார் என்னைக்
    காட்டிக்கொடுத்தது

    பாருங்கள்
    நிலாவுக்காக
    காத்திருக்கிறேன்
    என்ற கோவத்தில்
    என்னை கறுப்பாக்கி
    கொண்டிருக்கிறது

    *
    உனக்காய் காத்திருந்த
    இடத்தில் கொஞ்ச நேரம்
    நி
    ன்
    று
    பார்

    உன்னைப் பெற
    என்னை நான்
    இழந்த வலி புரியும்

    *

    தாமதமாய் வருவதையே
    பழக்கமாய் கொண்டவள் நீ
    தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
    பழக்கப்பட்டவன் நான்

    *

    " நிலா" என்று யார்
    உனக்கு பெயர் வைத்தது
    உனக்காய் என்னை தேய
    வைத்துக் கொண்டிருக்கிறாய்


    -யாழ்_அகத்தியன்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இம்சையானவளே என்னும் தலைப்பை பார்த்ததும் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" திரைப்படம் நினைவில் வந்தது. சித்திரத்தை ரசித்து முடித்ததும் பாரம் குறைந்த உணர்வு ஏற்படுமல்லவா? அதேபோலத்தான் இவையும்.. ஆனந்த அவஸ்தைகள்.

    உனக்காக காத்திருக்கும்
    கோபத்தில் கத்திரி வெயில்
    ஆண்டியானது மலைவானில்...

    உனைத்தேடி
    வெட்கப்பட்ட முகிலாடைகள்...

    உன்நிழல்கண்டதும்
    ஆதவன்
    ஆடைகளால் மூடப்பட
    குளிர்ச்சி பரவியது..
    என்னுள்ளும் புறமும்....

    " நிலா" என்று யார்
    உனக்கு பெயர் வைத்தது
    உனக்காய் என்னை தேய
    வைத்துக் கொண்டிருக்கிறாய்
    ஏங்க அகத்தியரே..! காதலிக்கவில்லை என்றீர்கள்.. அப்புறம் எப்படி இக்கவிதை?
    Last edited by அமரன்; 23-11-2007 at 03:08 PM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    உனக்காக காத்திருக்கையில்
    என்னைக் கடப்பவர்கள் மட்டும்
    ராசியானவர்கள் உன் முகத்தை
    அவர்களில் தேடுகிறேனே
    ஆனால்,
    அவர்களுக்கு என் முகம்..???
    அதனால்தானோ,
    உன்னைப்போலவே,
    முகம் திருப்பிக் கொள்(ல்)கின்றார்கள்..?

    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    அந்த சூரியனுக்கு
    யார் என்னைக்
    காட்டிக்கொடுத்தது

    பாருங்கள்
    நிலாவுக்காக
    காத்திருக்கிறேன்
    என்ற கோவத்தில்
    என்னை கறுப்பாக்கி
    கொண்டிருக்கிறது
    ஆனாலும்,
    நிலா உன் குளிர்மைக்காக,
    உன் வருடலுக்காக,
    கருகும்வரை எரியத்தயார்...

    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    உனக்காய் காத்திருந்த
    இடத்தில் கொஞ்ச நேரம்
    நி
    ன்
    று
    பார்

    உன்னைப் பெற
    என்னை நான்
    இழந்த வலி புரியும்
    ஆனாலும்,
    உனக்குப் புரியும் நிகழ்தகவு,
    மிகக் குறைவே...
    ஏனென்றால்,
    உன்னைக் காக்க வைக்க
    நான் தயாரில்லை...

    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    தாமதமாய் வருவதையே
    பழக்கமாய் கொண்டவள் நீ
    தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
    பழக்கப்பட்டவன் நான்
    எனது மரண நாளிலாவது,
    உன் வருகை தாமதிக்காது இருக்கட்டும்...
    துர்மணம் உன்னை அண்டுவதைக்கூட,
    என்னால் எண்ண முடியவில்லை...

    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    " நிலா" என்று யார்
    உனக்கு பெயர் வைத்தது
    உனக்காய் என்னை தேய
    வைத்துக் கொண்டிருக்கிறாய்
    உன் உலா வரும் போது,
    என் தேய்வுகள்,
    வினாடியில் நிரவுகின்றதே...

    பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    உனக்காக காத்திருக்கையில்
    என்னைக் கடப்பவர்கள் மட்டும்
    ராசியானவர்கள் உன் முகத்தை
    அவர்களில் தேடுகிறேனே

    தெரியாத தெருக்களிலும் மனிதரிலும்
    உன்னைத் தேடுகிறேன்..

    நீ வரப் போவதில்லையென
    அறிந்தும்
    அலையும்
    என் நப்பாசைகளை
    என்ன சொல்லி வைய்ய

    *
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    அந்த சூரியனுக்கு
    யார் என்னைக்
    காட்டிக்கொடுத்தது

    பாருங்கள்
    நிலாவுக்காக
    காத்திருக்கிறேன்
    என்ற கோவத்தில்
    என்னை கறுப்பாக்கி
    கொண்டிருக்கிறது

    ஞாயிறுக்கு
    என்னிடம் சினம்
    உன்னிடம் வெட்கம்
    என்னைக் கண்டால் எரிக்கிறான்
    உன்னைக் கண்டால்
    மெல்கி வழிகிறான் மழையாய்


    *
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    உனக்காய் காத்திருந்த
    இடத்தில் கொஞ்ச நேரம்
    நி
    ன்
    று
    பார்

    உன்னைப் பெற
    என்னை நான்
    இழந்த வலி புரியும்

    ஆவல்களை அடைக்காக்கிற
    ஆற்றாமைகளின் பார்வையில்
    உன்னைக் காணாத தாகங்கள்


    *
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    தாமதமாய் வருவதையே
    பழக்கமாய் கொண்டவள் நீ
    தெரிந்தும் உனக்காய் காத்திருக்க
    பழக்கப்பட்டவன் நான்
    காத்திருந்தால்
    நிமிஷங்கள் வருஷமென்பாய்
    வந்துவிட்டால்
    வருஷங்கள் நிமிஷமென்பாய்..

    - வைரமுத்து - காதலித்துப்பார் - இத்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல


    உன்
    தாமதங்களை தட்டிக்கேட்காத
    தகிப்புகள்
    தனக்குள் காரணங்கள் சொல்லிக்கொள்ளும்
    உனக்கு சாதகமாய்


    *
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    " நிலா" என்று யார்
    உனக்கு பெயர் வைத்தது
    உனக்காய் என்னை தேய
    வைத்துக் கொண்டிருக்கிறாய்

    உன்
    தேய் பிறை நான்
    என்
    வளர் பிறை நீ


    அகதியம் எழுதினார்
    அகதிய முனி
    அகத்து இயம் எழுதும்
    அகதியன் நீ

    காவிரியை அடக்கியது
    அவன் கமண்டலம்..
    காதலை அடக்கியது
    உம் கவி மண்டலம்

    வாழ்த்துக்கள்...

    -ஆதி
    Last edited by ஆதி; 24-11-2007 at 02:05 AM.
    அன்புடன் ஆதி



  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இம்சையானவளே என்னும் தலைப்பை பார்த்ததும் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி" திரைப்படம் நினைவில் வந்தது. சித்திரத்தை ரசித்து முடித்ததும் பாரம் குறைந்த உணர்வு ஏற்படுமல்லவா? அதேபோலத்தான் இவையும்.. ஆனந்த அவஸ்தைகள்.

    உனக்காக காத்திருக்கும்
    கோபத்தில் கத்திரி வெயில்
    ஆண்டியானது மலைவானில்...

    உனைத்தேடி
    வெட்கப்பட்ட முகிலாடைகள்...

    உன்நிழல்கண்டதும்
    ஆதவன்
    ஆடைகளால் மூடப்பட
    குளிர்ச்சி பரவியது..
    என்னுள்ளும் புறமும்....



    ஏங்க அகத்தியரே..! காதலிக்கவில்லை என்றீர்கள்.. அப்புறம் எப்படி இக்கவிதை?

    அது அது வந்து
    ச்சீ போங்க வெக்கமா இருக்கு

    மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ஆனால்,
    அவர்களுக்கு என் முகம்..???
    அதனால்தானோ,
    உன்னைப்போலவே,
    முகம் திருப்பிக் கொள்(ல்)கின்றார்கள்..?


    ஆனாலும்,
    நிலா உன் குளிர்மைக்காக,
    உன் வருடலுக்காக,
    கருகும்வரை எரியத்தயார்...


    ஆனாலும்,
    உனக்குப் புரியும் நிகழ்தகவு,
    மிகக் குறைவே...
    ஏனென்றால்,
    உன்னைக் காக்க வைக்க
    நான் தயாரில்லை...


    எனது மரண நாளிலாவது,
    உன் வருகை தாமதிக்காது இருக்கட்டும்...
    துர்மணம் உன்னை அண்டுவதைக்கூட,
    என்னால் எண்ண முடியவில்லை...


    உன் உலா வரும் போது,
    என் தேய்வுகள்,
    வினாடியில் நிரவுகின்றதே...

    பாராட்டுக்கள் யாழ்_அகத்தியன்...

    உங்க அசத்தலான வாழ்த்துக்கு
    மிக்க நன்றி

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதி View Post

    தெரியாத தெருக்களிலும் மனிதரிலும்
    உன்னைத் தேடுகிறேன்..

    நீ வரப் போவதில்லையென
    அறிந்தும்
    அலையும்
    என் நப்பாசைகளை
    என்ன சொல்லி வைய்ய

    *



    ஞாயிறுக்கு
    என்னிடம் சினம்
    உன்னிடம் வெட்கம்
    என்னைக் கண்டால் எரிக்கிறான்
    உன்னைக் கண்டால்
    மெல்கி வழிகிறான் மழையாய்


    *



    ஆவல்களை அடைக்காக்கிற
    ஆற்றாமைகளின் பார்வையில்
    உன்னைக் காணாத தாகங்கள்


    *


    காத்திருந்தால்
    நிமிஷங்கள் வருஷமென்பாய்
    வந்துவிட்டால்
    வருஷங்கள் நிமிஷமென்பாய்..

    - வைரமுத்து - காதலித்துப்பார் - இத்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல


    உன்
    தாமதங்களை தட்டிக்கேட்காத
    தகிப்புகள்
    தனக்குள் காரணங்கள் சொல்லிக்கொள்ளும்
    உனக்கு சாதகமாய்


    *



    உன்
    தேய் பிறை நான்
    என்
    வளர் பிறை நீ


    அகதியம் எழுதினார்
    அகதிய முனி
    அகத்து இயம் எழுதும்
    அகதியன் நீ

    காவிரியை அடக்கியது
    அவன் கமண்டலம்..
    காதலை அடக்கியது
    உம் கவி மண்டலம்

    வாழ்த்துக்கள்...

    -ஆதி
    ஆகா ஆகா உங்க வாழ்த்தல்லவா
    கவிதை மிக்க நன்றி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •