Results 1 to 4 of 4

Thread: வாரியாரின் நகைச்சுவை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0

    வாரியாரின் நகைச்சுவை

    வாரியார் சுவாமிகள் ஒரு கோவில் திருவிழாவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.

    சுவாமிகளிம் சொற்பொழிவை கேட்பவர்கள் மிக கவனமாக இருப்பார்கள்.அதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் மிக மிக
    கவனமாக இருப்பார்கள்.வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுக்கு இடையில் கேள்வி கேட்பார்கள்.

    அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி "தம்ப்!தருமிக்கு பாட்டு
    எழுதி கொடுத்தது யாரு?" என்று கேட்டார்கள்.
    (அப்போது திருவிளையாடல் வெளிவந்த சமயம்)
    அந்த பையன் சட்டென்று "சிவாஜி " என்று கூறினான்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.

    வாரியார் கூட்டத்தை பார்த்து "என் சிரிக்கிறிங்க.பையன் சரியாக சொல்லி இருக்கிறான்".வடக்கில் மரியாதையாக அழைக்க "ஜி" போட்டு அழைப்பது வழக்கம்.அதனால் தான் நேருவை "நேருஜி" என்றும்,காந்தியை "காந்திஜி" என்று அழைப்பது போல இந்த பையன் சிவாஜி ன்னு சொல்லி இருக்கிறான்.

    கூட்டம் வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை திறமை கண்டு வியந்தது

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    வாரியார் நகைசுயாக பேசுவதில் வல்லவர். பிரசன்ஸ் ஆப் மைன்ட் நிரைந்தவர். இந்த சம்பவத்தை நான் இதே மன்றத்தில் படித்ததாக நினைவு
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    இது நகைச்சுவை என்பதிலும் வாரியார் சிக்கலான நிலமையை எவ்வளவு இலாகவமாக சமாளிக்கத் தெரிந்தவரென விளக்குகிறது...

    பகிர்தலுக்கு மிக்க நன்றி நேசம்...!!
    -----------------------------------------------------------------------------------------------
    பதிவை சுவையான சம்பவங்கள் பகுதிக்கு இடம் மாற்றியுள்ளேன் நண்பரே..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    நானும் இதை கேள்விபட்டிருக்கிறேன். இதை தவிர அவர் நிறைய குட்டி கதைகள் சொல்வார் என்பதும் நான் அறிவேன்.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •