Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 56

Thread: கலில் ஜிப்ரான்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    பால் வெள்ளைக் காகிதம் - குட்டிக்கதை (கலீல் ஜிப்ரான்)

    காலைப் பனிப்போல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் \'நான் ரொம்ப சுத்தமானவனாக்கும்\' என்று அலட்டிக்கொண்டது.

    \'நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன். காலம் முழுவதும், நான் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாக்கினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கமாட்டேன், தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது\'.

    இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக் கொண்டது.

    பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

    ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும், கற்போடும் வாழ்ந்தது.

    வெறுமையாகவும்.

    - கலீல் ஜிப்ரான் - மிட்டாய் கதைகளிலிருந்து
    அன்புடன்,
    இதயம்

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    ஜிப்ரானின் பன்மணி கலஞ்சியத்தையே அள்ளி கொணர்ந்து கொட்டி விட்டீர்கள் இங்கே..
    கொட்டி கிடக்கிற
    எல்லா மலருமே
    எழிலானதுதான்..

    பல கோடி நன்றிகள்.. இதயமவர்கட்கு..

    -ஆதி
    Last edited by ஆதி; 21-11-2007 at 07:24 AM.
    அன்புடன் ஆதி



  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    இறைத்தூதர் - (கலீல் ஜிப்ரான்)

    தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த
    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா
    ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு
    காலம் காத்திருந்தார். தான் பிறந்த
    தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது
    கலத்திற்காக

    பன்னிரண்டாம் ஆண்டின்
    அறுவடை மாதமான இதூல் மாதத்தின்
    ஏழாவது நாள் நகர மதில்களால்
    சூழப்படாத குன்றின் மீது ஏறி கடற்புறம்
    உற்றுநோக்கி பனிப்படலத்துக்கப்பால்
    தனது கலம் வருவதை
    கண்ணுற்றார்.

    பின்னர் அவரது இதயத்தின் கதவுகள் பரக்க திறந்து
    அவரது மகிழ்ச்சி கடல் மீது நெடுந்தூரம் வெள்ளமெனப் பாய்ந்தது
    அவர் தனது கண்களை மூடி தனது
    ஆத்மாவின் மொனத்தில் வழிபாடு செய்தார்

    ஆனால் அவர் குன்றிலிருந்து இறங்கியதும் ஒரு
    சோகம் அவர் மீது கவிந்தது
    அவர் தன் நெஞ்சுக்குள் நினைத்தார் :
    நான் துயரமின்றி எப்படி அமைதிக்குள் செல்ல முடியும்
    ஆன்மாவின் ஒரு காயமும் இன்றி இந்த நகரத்தை
    விட்டு அகல முடியுமா ?
    இந்த சுவர்களுக்கிடையே நான் வேதனையில்
    கழித்த நாட்கள் நெடியவை
    தனிமையில் கழித்த இரவுகள் நெடியவை
    அன்றியும் எவனொருவன்
    தனது வேதனையிலிருந்தும் தனிமையிலிருந்தும்
    வருத்தமற்று பிரிந்து செல்ல முடியும் ?

    இந்த தெருக்களில் என் ஆவியின்
    எத்தனை துகள்களை இறைத்திருக்கிறேன்
    மேலும்
    இக்குன்றுகளில் அம்மணமாக நடக்கின்ற பிரியமான
    குழந்தைகள் எண்ணற்றவை
    என்னால் ஒரு சுமையும் ஒரு வலியும் இன்றி
    அவர்களைப் பிரிந்து செல்ல இயலாது.

    இன்று நான் கழற்றி எறியும் ஒரு ஆடை அல்ல அது
    ஆனால் என் கையாலேயே நான் உரித்து எடுக்கும்
    எனது தோல் அது.

    என் பின்னால் விட்டுச் செல்லும் ஒரு எண்ணமும்
    அல்ல அது
    ஆனால் பசியாலும் தாகத்தாலும் இனிப்பூட்டப்பட்ட
    ஒரு இதயம்

    இருந்தபோதிலும் என்னால்
    இனியும் தாமதிக்க முடியாது

    எல்லாவற்றையும் தனக்குள் அழைக்கும் கடல்
    என்னை அழைக்கிறது.
    நான் கப்பலேற வேண்டும்.

    இரவுகளில் காலம் எறிந்தபோதிலும்
    தங்குவதென்பது உறைந்துபோவதாகும்
    உறைந்து ஒரு அச்சுக்குள் படிகமாதல் ஆகும்.

    இங்கிருக்கும் அனைத்தையும் நான்
    மகிழ்ச்சியோடு எடுத்துச் செல்வேன்
    ஆனால் எப்படி முடியும் ?
    தனக்கு சிறகுகள் கொடுத்த நாக்கையும் உதடுகளையும்
    ஒரு குரலால் சுமந்து செல்ல முடியாது
    தன்னந்தனியாக அது
    தன் வான்வெளியைக் கண்டாக வேண்டும்.

    தன்னந்தனியாகவும்
    தனது கூடு இல்லாமலும்
    சூரியனுக்கு குறுக்காக
    பறந்து செல்லும் கழுகு
    இப்போது
    குன்றின் அடிவாரத்தை அவர் அடைந்தபோது
    கடற்புறம் திரும்பி மீண்டும் நோக்கினார்.
    தனது கலம் துறையை நோக்கி
    வருவதைக் கண்ணுற்றார்.

    கலத்தின் முகத்தில் கடலோடிகள்
    தனது சொந்த நிலத்தின் மனிதர்கள்.

    அவரது ஆன்மா அவர்களை நோக்கி அழுதது
    அவர் சொன்னார் :
    எனது பழம்பெரும் தாயின் மக்களே
    அலைகளின் மீது மிதந்து செல்பவர்களே
    எத்தனை முறை எனது கனாக்களில்
    நீங்கள் கலம் செலுத்தி இருக்கிறீர்கள்
    இப்பொழுதோ
    எனது கனவின் அடி ஆழமான
    விழிப்பு நிலையில் நீங்கள் வருகிறீர்கள்.

    எனது ஆர்வம் பாய்கள் உயர்த்தி
    காற்றுக்காக காத்திருக்கிறது
    நான் புறப்படத் தயாராக இருக்கின்றேன்.
    இந்த அசையாத காற்றை ஒரே ஒரு முறை
    பின்நோக்கி அன்புடன் பார்ப்பேன்.

    பின்னர்
    மாலுமிகளுடன் மாலுமிகளாக
    உங்களோடு நிற்பேன்.
    பரந்த கடலே
    உறங்கும் அன்னையே.
    ஆறுகளுக்கும் ஓடைகளுக்கும்
    அமைதியும் சுதந்திரமும் ஆனவளே
    இந்த ஓடை இன்னும் ஒரே ஒரு திருப்பம் எடுக்கும்
    இந்த வெட்டவெளியில் இன்னும் ஒரே ஒரு சலசலப்பு கேட்கும்
    பின்னர் நான் உன்னிடம் வருவேன்
    எல்லையற்ற பெருங்கடலின்
    எல்லையற்ற துளியாக.

    அவர் மேலும் நடந்தபோது
    ஆண்களும் பெண்களும் தங்களது
    வயல்வெளிகளிலிருந்தும்
    திராட்சை தோட்டங்களிலிருந்தும்
    நகர வாயிலை நோக்கி
    தூரத்தில் விரைவதைக் கண்டார்.

    தனது பெயர் சொல்லி
    அவர்கள் அழைப்பதையும்
    கப்பல்களின் வருகையை அவர்கள்
    ஒருவருக்கு ஒருவர்
    வயல்தாண்டி வயல்தாண்டி
    உரக்கச் சொல்வதையும் கேட்டார்
    அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்:
    பிரியும் நாள்
    கூடும் நாளாக இருக்குமா ?
    எனது விடியலின் போது
    அதன் முந்தைய மாலை
    உண்மையானதென்று சொல்லப்படுமா ?

    தனது கலப்பையை
    உழவுகாலின் இடையில்
    விட்டு வந்தவனுக்கும் அல்லது
    திராட்சை பிழியும் எந்திரத்தின் சக்கரங்களை
    இடையில் விட்டு வந்தவனுக்கும்
    நான் என்ன தரப்போகிறேன் ?

    என் இதயம்
    பழுத்துக்குலுங்கும் மரமாகி
    அவற்றைப் பறித்து அவர்களுக்கு தருவேனா ?

    எனது ஆசைகள்
    ஊற்றாய் பெறுக்கெடுத்து அவர்களது
    கோப்பைகளை நிரப்புவேனா ?
    வல்லவன் கரங்கள் மீட்டும்
    யாழா நான் ? அல்லது
    அவன் தன் மூச்சு என்னுள்ளே இழையும்
    குழலா நான் ?

    அமைதிகளைத் தேடுபவன் நான்
    அமைதிகளில் எந்தக் கருவூலத்தை கண்டு
    நம்பிக்கையோடு நான் வழங்கப்போகிறேன்.

    நான்
    விதைத்த வயல்களின்
    அறுவடை நாளா இது ?
    அப்படியானால்
    எந்த மறந்துபோன பருவங்களில் ?
    இது உண்மையிலேயே நான்
    எனது விளக்கை
    தூக்கி பிடிக்கும் காலமெனில்
    அதற்குள்ளே எரியும் சுடர்
    என்னுடையதன்று.
    எனது விளக்கை
    வெறுமையாகவும் இருண்மையாகவும்
    நான் தூக்கிப்பிடிக்க
    இரவின் காவலன் அதில்
    எண்ணெய் நிரப்பி
    பற்றவும் வைப்பான்.

    இவற்றை அவர் வாய்விட்டுச் சொன்னார்
    ஆனால் சொல்லாதவை ஏராளமாக
    இருந்தன இதயத்திற்குள். ஏனெனில்
    தனது ஆழ்ந்த இரகசியங்களை
    அவராலேயே பேசமுடியவில்லை.

    பின்னர் நகருக்குள் நுழைந்த போது எல்லா
    மக்களும் அவரை சந்திக்க வந்தனர்.

    ஒரே குரலில் பேசுவது போல் அவரிடம் கதறினர்
    நகரில் மூத்த குடிமக்கள் எழுந்து நின்று சொன்னார்கள்:
    அதற்குள் எங்களிடமிருந்து பிரிந்து செல்லாதீர்கள்
    எங்களது அந்தி இருட்டில்
    உச்சிப்பொழுதின் அலையாக
    இருந்தீர்கள் நீங்கள்
    உங்களது இளமை
    கனவுகான எங்களுக்கு
    கனவுகளை வழங்கியது.

    எங்களிடையே நீங்கள்
    அன்னியராக இல்லை
    விருந்தினராகவும் இல்லை ஆனால்
    எங்களது மகனாய்
    நேசத்திற்கும்
    அன்பிற்கும் உரியவனாய்
    உங்களது முகத்தை இன்னும் காண
    எங்களது கண்களைத்
    தவிக்க விடாதீர்கள்.
    குருமார்களும் குருபத்தினிகளும்
    அவரிடம் சொன்னார்கள்
    கடல் அலைகள் நம்மைப்
    பிரிக்காதிருக்கட்டும் - நீங்கள்
    எங்களோடு செலவிட்ட ஆண்டுகள்
    இனிய நினைவாகட்டும்.

    ஒரு ஆவியாக எங்களிடையே
    நடந்திருந்தீர்கள் - உங்கள்
    நிழல் எம்முகத்தின் மீது
    ஒளியாய்ப் படரட்டும்
    நாங்கள் உங்களை
    நிரம்ப நேசித்திருக்கிறோம். ஆனால்
    பேச்சற்று இருந்தது என் அன்பு
    திரைகளாய் திரையிடப்பட்டு
    இருந்தது எம் அன்பு.

    இருந்தபோதிலும் இப்போது அது
    வாய்விட்டுக் கதறுகிறது உம்மிடம்
    நிதர்சனமாய் வந்து நிற்குமது
    உம் முன்னால் .... எனினும்
    அன்பிற்குதே தெரியாது அதன் ஆழம்
    பிரிவிற்கான காலம் எதிர்வரும் வரை.

    -தமிழாக்கம் புதுவை ஞானம்
    அன்புடன்,
    இதயம்

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    இறைதூதன் - இது The Prophet, என்கிற ஜிப்ரானின் உலகப்புகழ் பெற்ற நூலின் தமிழாக்கம். ஜிப்ரானின் படைப்புகளில் இது காலக்காலத்தை கடந்து வாழ்கிற படைப்பு வாழப்போகிற படைப்பு..

    அல்முஸ்தபா என்கிற கதாநாயகர் - பாகாய் இனத்தவரான அப்துல் பாஹாவை சாரமாக வைத்து படைக்கப்பட்ட காதப்பாத்திரம்..

    அப்துல் பாஹாவை மூன்று பெருமக்கள் சந்தித்தனர்

    அதில் ஜிப்ரானும் ஒருவர், பாஹாவை சந்தித்த பின்னரே ஜிப்ரானின் படைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.. தனக்குள் நோக்கி பயணிக்க துவங்கினார், மனிதம் பற்றி அதிகம் பாட ஆரம்பித்தார்.

    மற்ற இரு பெருமக்களும், அறிவியலில் ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடுப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள்

    அதில் ஒருவரால் உலகம் வெளிச்சமானது, அவர் எடிசன்

    இன்னொருவரால் உலகம் ஒரு தொடர்பு எல்லைக்குள் சுருங்கியது - அவர் கிரகாம்பெல்

    முத்துச்சரங்களைத் தொடுத்தமைக்கு நன்றி இதயமவர்கட்கு..

    இன்னும் பல பங்களிப்புகளை எதிர்பார்த்து ஆவலுடன் ஆதி.
    Last edited by ஆதி; 21-11-2007 at 09:11 AM.
    அன்புடன் ஆதி



  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஆகா.இதயம் தூள்மா.. அருவி போல இருக்கின்றது உங்கள் பதிவும் பதிவின் சுவையும். நன்றி. தொடருங்கள்..

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    மலரின் பாடல் - ஜிப்ரான் கவிதைகள்


    இயற்கை அன்புடன்
    திரும்பத் திரும்பச் சொல்லும்
    பாசமுள்ள வார்த்தை நான்.

    நீலவானக் கூடாரத்திலிருந்து
    பச்சைக் கம்பள விரிப்பில்
    விழுந்த விண்மீன் நான்.

    குளிர்காலம் கர்ப்பம் தரித்த
    பஞ்ச பூதங்களின் புதல்வி நான்.

    இளவேனிலுக்காகப் பெற்றுத் தந்த
    குழந்தை நான்.
    கோடை காலத்தின் மடியில் தவழ்ந்தேன்;
    இலையுதிர் காலத்தின் படுக்கையில் உறங்கினேன்.

    வைகறைப் பொழுதில்,
    ஒளியின் வருகையை அறிவிக்க
    நான் தென்றலுடன் இணைந்தேன்.

    மாலைப் பெழுதில்,
    பறவைகளுடன் சேர்ந்து கொண்டேன்
    வெளிச்சத்திற்கு விடைகொடுத்தனுப்ப.

    சமவெளிக ளெல்லாம்
    என் அழகிய வண்ணங்களால்
    அணி செய்யப்பட்டன.
    காற்றுக்கு நான் மணமூட்டினேன்.

    நான் உறக்கத்தைத் தழுவும் போது
    இரவின் கண்கள்
    எனக்கு காவலிருக்கும்.

    நான் கண் விழித்தபோது
    கதிரவனைக் கண்டு வெறித்தேன்;
    அப்போதைய நாளின் ஒரேகண் அவந்தான்.

    நான் பனித்துளி மதுவைக் குடித்தேன்.
    பறவைகளின் குரல்களைக் கேட்டேன்.
    புல்லின் அசைவிற்கேற்ப நாட்டிய மாடினேன்.

    நான் காதலரின் பரிசு,
    நான் திருமண மாலை
    நான் மகிழ்ச்சியின் ஒரு நொடி.
    நான், வாழ்வோர்,
    இறந்தவர்க்குக் கொடுக்கும் பரிசு.
    நான் மகிழ்ச்சியின் பகுதி,
    துக்கத்தின் பாகம்.
    நான் தலை தூக்கிப் பார்ப்பது
    ஒளியை மட்டுமே.
    நான் எப்போதும் தலை குனிந்து
    என் நிழலைப் பார்ப்பதே இல்லை,
    இந்த ஞானத்தைத்தான்
    மனிதன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
    - தமிழில் கவிஞர் புவியரசு


    -ஆதி

    மாலைப் பொ
    அன்புடன் ஆதி



  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இறைவன்

    முன்னொரு காலத்தில்
    பேச்சின் முதல் தீண்டலை
    என் உதடுகள் தரிசித்த போது
    நான்
    புனித மலையின் மேலேறி நின்று
    இறைவனிடம் சொன்னேன்..
    "எசமானனே.. நான் உன் அடிமை..
    உன் மறைந்த நினைப்பே எனக்கு ஆணை..
    உன்னை நான் எப்போதும் பணிந்திருப்பேன்..!!"
    இறைவன் மறுமொழி ஏதும் கூறாமல்
    ஒரு பெரும் புயலைப் போல்
    என்னைக் கடந்து சென்றார்..

    ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர்
    நான்
    மீண்டும் புனித மலையில் ஏறி
    மீண்டும் இறைவனிடம் சொன்னேன்..
    "படைத்தவனே.. நான் உன் படைப்பு..
    களிமண் கொண்டு நீ என்னை உருவாக்கினாய்..
    நான் உனக்கே உரிமையானவன்..!!"
    இறைவன் மறுமொழி கூறாமல்
    ஆயிரம் சிறகுகள் போல்
    கடந்து மறைந்தார்..

    இன்னொரு ஆயிரம் ண்டுகள் கடந்ததும்
    புனித மலையில் ஏறி
    நான் மீண்டும்
    இறைவனிடம் சொன்னேன்..
    "தந்தையே.. நான் உங்கள் மகன்..
    கருணையினாலும் அன்பினாலும்
    நீங்கள் எனக்குப் பிறப்பளித்தீர்கள்..
    பக்தியினாலும் வழிபாட்டினாலும்
    நான் உங்களை அடைவேன்..!!"
    இறைவன் மறுமொழி கூறாமல்
    மலைச்சாரல் பனிமூட்டம் போல்
    விலகி மறைந்தார்..

    மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும்
    மீண்டும் புனித மலையில் ஏறி
    நான் இறைவனிடம் சொன்னேன்..
    "இறைவா..
    நீயே என் நோக்கம்..
    நீயே என் நிறைவு..
    நான் உன்னுடைய நேற்று..
    நீ என்னுடைய நாளை..
    நான் பூவுலகில் உன்னுடைய வேர்..
    நீ வானுலகில் என்னுடைய மலர்..
    சூரியனின் முகத்தின் முன்னால்
    நாம் இருவரும் இணைந்து வளர்வோம்..!!"

    இறைவன் என்னை நோக்கிக் குனிந்து
    என் காதுகளில் இனிய சொற்களைக் கூறி
    தன்னை நோக்கி வரும் நதியை
    கடல் ஆரத் தழுவிக் கொள்வது போல்
    என்னை அரவணைத்து எடுத்துக் கொண்டார்..

    மலையிலிருந்து
    நான் கீழே இறங்கி வந்த போது
    இறைவன் எங்கும் நீக்கமற
    நிறைந்திருந்தார்..!!

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    வெள்ளைக் காகிதம்

    வெள்ளைக் காகிதம்

    வெள்ளைக் காகிதம் ஒன்று
    பனிக்கட்டி போலப்
    பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது..

    அது சொன்னது,
    "நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
    இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
    இருள் என் அருகில் வர
    இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
    சுத்தமில்லாத எதுவும்
    என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

    கறுப்பு மைபுட்டி ஒன்று
    காகிதம் சொன்னதைக் கேட்டது..
    தனக்குள் சிரித்துக் கொண்டது..
    ஆனாலும் காகிதத்தை நெருங்க
    அதற்குத் தைரியம் வரவில்லை..!

    பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
    வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
    ஆனால் அவையும்
    அதை நெருங்கத் துணியவில்லை..!

    இன்று வரை
    வெள்ளைக் காகிதம்
    தான் விரும்பியபடி
    பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
    ஆனால்,
    வெறுமையாக இருக்கிறது..!!

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    கண்

    கண்

    கண் ஒரு நாள் சொன்னது..
    "பாலைவனத்திற்கு அப்பால்
    ஒரு பனி மூடிய மலை
    தெரிகிறது பாருங்கள்..
    எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

    காது கொஞ்ச நேரம்
    உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
    பிறகு சொன்னது..
    "மலையா?? எந்த மலை??
    எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

    கையும் பேசியது..
    "என்னால்
    எவ்வளவு முயன்றும்
    அந்த மலையைத் தொட முடியவில்லையே..
    மலை நிச்சயம் இருக்கிறதா..??"

    மூக்கு உறுதியாகச் சொன்னது..
    "மலை எதுவும் கிடையாது..
    எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

    கண் வேறு பக்கமாய்த்
    திரும்பிக் கொண்டது..

    மற்ற உறுப்புக்களெல்லாம்
    தங்களுக்குள் பேசிக் கொண்டன..
    இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
    "கண்ணில் ஏதோ
    கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    நரியின் பசி

    நரியின் பசி

    நரி ஒன்று
    காலை வேளையில்
    தன் நிழலைக் கண்டது..
    "இன்று நான்
    ஒரு ஒட்டகத்தைத் தின்பேன்.."
    என்று எண்ணிக் கொண்டது..

    பகல் முழுவதும்
    ஒட்டகத்தைத் தேடி அலைந்தது..

    நண்பகலில்
    தன் நிழலை மீண்டும் கண்டது..
    "ஒரு எலி போதும் எனக்கு.."
    என்ற முடிவுக்கு வந்தது..!!

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    துறவி

    துறவி


    மலைகளுக்கு அப்பால் இருந்த
    துறவியின் குடிலில்
    நான் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்..
    அப்போது ஒரு திருடன்
    நொண்டியபடி தலை கவிழ்ந்து சோகத்துடன்
    அவரை நாடி வந்தான்..

    "முனிவரே..!!
    எனக்கு நிம்மதி தாருங்கள்..
    உங்களால் மட்டுமே முடியும்..
    என் பாவங்கள் என்னை அழுத்துகின்றன.."

    "வருந்தாதே..!!
    என் பாவங்களும் என்னை அழுத்துகின்றன.."

    "ஆனால்
    நான் ஒரு திருடன்.. கொள்ளைக்காரன்..!!"

    "நானும் திருடன் தான்.. கொள்ளைக்காரன் தான்..!!"

    "நான் ஒரு கொலைகாரன்..
    என் கையில் பலரின் ரத்தம் தோய்ந்திருக்கிறது..!!"

    "நானும் கொலைகாரன் தான்..
    என் கையிலும் பலரின் ரத்தக் கறை..!!"

    "நான் எண்ணிலடங்கா
    குற்றங்களைப் புரிந்துள்ளேன்..!!"

    "நானும் செய்துள்ளேன்..!!"

    திருடன் எழுந்து நின்றான்..
    புரிந்து கொள்ள முடியாத
    ஒரு பார்வை அவனிடம்..
    திரும்பி நடந்தான்,
    நிமிர்ந்த ஒரு துள்ளலுடன்..

    நான் துறவியிடம் கேட்டேன்..
    "நீங்கள் செய்யாத குற்றங்களையெல்லாம்
    செய்ததாய் ஏன் சொன்னீர்கள்..??
    அவன் உங்கள் மேல்
    நம்பிக்கையிழந்து போகிறான் பாருங்கள்..!!"

    துறவி சிரித்துக் கொண்டே கூறினார்..
    "அவன் நம்பிக்கையிழந்து போவது உண்மை தான்..
    ஆனால், நிம்மதி அடைந்து போகிறான்..!!"

    நான் அப்போது தான் கவனித்தேன்..
    திருடனின் உற்சாகமான பாடல் ஒலி
    பள்ளத்தாக்கில் வழிந்து நிறைந்து கொண்டிருந்தது..!!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    மன்னனின் மறுப்பு

    மன்னனின் மறுப்பு


    ஒருநாள்
    நகரத்தின் பெரியோர்கள்
    அத்தனை பேரும்
    மன்னனைச் சந்திக்கச் சென்றனர்..

    மன்னனைப் பணிந்து
    மனுச் செய்தனர்..
    "நகர மாந்தர் அனைவரும்
    மதுவும்
    மற்ற வகை மயக்கப் பொருட்களும்
    அருந்திச் சோர்ந்து கிடப்பதை மாற்றிட
    அவற்றைத் தடை செய்திட வேண்டும்" என்று..

    மன்னனோ
    அவர்களின் வேண்டுகோளைக் கேட்டதும்
    "மூளையற்ற கோரிக்கை இது" எனக் கூறி
    நகைத்து விட்டு வெளியேறினான்..

    நகரத்தின் பெரியோர்கள்
    வேதனை மிகுந்து
    திரும்பும் வழியில்
    மூத்த மந்திரி ஒருவரைக் கண்டனர்..
    மந்திரி அவர்களின் குறையினை அறிந்தார்..
    பாவமாக அவர்களைப் பார்த்துச் சொன்னார்..
    "அடடா..!!
    பிழை செய்துவிட்டீர்களே..
    மதுவின் மயக்கத்தில்
    மன்னன் கிடக்கையில்
    மனுவினை அளித்திருந்தால்
    கேட்டது கிடைத்திருக்கும்..
    காரியம் நடந்திருக்கும்..!!"

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •