பா.ஜ.க., ஏற்கனவே 13 நாள்களில் ஆட்சியை கவித்து சாதனை செய்து இருந்துதது. இப்போது அதை பா.ஜ.க., வே முறியடித்தது 5 நாள்களில் ஆட்சியை கவித்து சாதனை செய்தது, கர்நாடகாவில் பா.ஜ.க., தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தங்களது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கர்நாக அரசியலில் புது குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. கர்நாடக முதல்வர் பதவியில் எடியூரப்பா நீ*டிக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில் மாநில ஆளுனரை சந்தித்த முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பா.ஜ.க.,வினர் கூடி பேசி முடிவு எடுக்க உள்ளனர். இதற்கிடையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா டில்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Bookmarks