Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0

    கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??

    கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??

    நேற்று (18.11.2007) தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள ஒரு புத்தக்கடையில் அளைந்து கொண்டிருந்துவிட்டு, வேண்டிய புத்தகத்தை எடுத்துவந்து கல்லாவில் இருக்கும் முதலாளியிடம் கொடுத்து பில் போடச்சொன்னேன்.

    அந்தச் சமயம் ஒருவர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டார்.

    தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றார்.

    வந்தவருக்குத் திகைப்பு. என்ன ஐயா இப்படிச் சொல்கிறீர்கள். தேடிப் பார்க்கலாமே என்றார்.

    கடைக்காரர் மீண்டும் அதே பதில் சொன்னவுடன், வந்தவருக்குச் சற்றே கோபம்.

    ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கும் இந்தக் கடையில்... அப்படி இருக்க, சற்றாவது நீங்கள் தேடக்கூடாதா... என்றார்.

    கடைக்காரர் மசியவில்லை.

    வந்தவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். "ஐயா, இங்கே நான் வைத்திருப்பது விற்கத்தானே தவிர, எனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அல்ல. ஒரு புத்தகம் இங்கே இல்லை என்றால், இல்லை".

    ரசித்தேன்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உண்மைதான் அண்ணா!!

    அவருக்குத் தான் எவ்வளவு தொழில்பக்தி...!!
    தொழிலில் தான் எந்தளவுக்கு பிடிப்பு..!!
    தொழில் மேலுள்ள கவனம், ஞாபகம்.....!!

    உண்மையிலே அவர் அத்தொழிலில் உயர இவையன்றோ காரணிகள்...

    அழகான சம்பவத்தை, இரசித்து நம்மையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் பல...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நானும் ரசித்தேன் அண்ணா..! சில இடங்களில் வேலை பார்ப்பவர்களின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது என்பதை நானும் கண்டிருக்கிறேன்.
    (என்ன புத்தகம் வாங்கினீர்கள் அண்ணா..?)

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அண்ணலுக்கு

    செய்யுந்தொழிலில் முழுமையான ஈடுபாட்டைக் காட்டும் நிகழ்வு....

    அவர் மதிக்கத்தக்கவர். அவர் சொன்ன வாசகம் இரசிக்கத்தக்கதே!

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணலே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    கடையிலேயே இருப்பவருக்குத்தானே எந்த புத்தகம் இருக்கு இல்லை தெரியும்.. கரெக்ட்டாதான் சொல்லி இருக்கார்.

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அதானே எத்தனைப் புத்தகம் இருந்தாலென்ன அத்தனையும் அவரின் நினைவில் இருக்குமல்லவா..?உண்மையிலேயே ரசிக்கத்தகுந்த பதில்தான்.பகிர்ந்தமைக்கு நன்றி கரிகாலன் சார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    எனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....!!!!????(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி!!!!)
    அன்புடன்
    மணியா...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    அதே நேரத்தில் இருந்திருந்து நம்ம ஆளுங்க புத்தகம் வாங்கிற சாக்கில் சுட்டு கொண்டு போனால் தான் அந்த நியாபக சக்தி பற்றி சந்தேகம் வந்திருக்கும். ஆனால் அந்த மாதிரி புத்தகமே அவர் பழையதை விலைக்கு வாங்கவில்லை என்றால் சந்தேகமேயில்லாமல் பதில் கூறலாம்.

    ஒருவேளை புத்தகம் கைவசம் இருந்திருந்தால், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் ஒரு புத்தகம் இந்த வரிசையில் இந்த புத்தகத்திற்கு அருகில் உள்ளது பாருங்கள் என்பார்கள்.

    அவர்களுக்கு அவர்கள் வேலையின் பால் உள்ள ஞாபகசக்தி.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    அடியேன் வாங்கிய புத்தகம் ஆலன் க்ரீன்ஸ்பான் எழுதி, சமீபத்தில் வெளியான −− தி ஏஜ் ஆஃப் டர்புலன்ஸ். கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைச் சித்திரம்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அவர் என்ன பிரச்சனையில் இருந்தாரோ. வீட்டில் என்ன ரகளையோ....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கடைகாரர் சொன்னதில் அர்த்தம் இருகிறது. இப்பல்லா கடைகளில் ஆள் கிடைப்பதில்லை. அதுவும் புத்தகடை புத்தக அறிவுடன் ஆள் கிடைப்பது சுத்தமாக இல்லை. பெரிய கடையா இருந்தால் கன்னி வச்சு அதன் மூலம் இருக்கா இல்லையானு சொல்லலாம்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by mania View Post
    எனக்கென்னவோ சொந்த அனுபவத்தை பெயரை மாற்றி சொல்லியிருக்காரோ என்று ஒரு சிறு சந்தேகம்....!!!!????(அடிக்க வராதீங்க கரிகாலன்ஜி!!!!)
    அன்புடன்
    மணியா...
    நீங்களாகவும் இருக்கலாமல்லவா.. நண்பனை எப்படிக் காட்டிக்கொடுப்பது என்று சங்கோசப்பட்டு பெயரை குறிப்பிடவில்லையோ..

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •