கடை எதற்காகப் பரப்பியிருக்கிறேன்??
நேற்று (18.11.2007) தில்லி கனாட் ப்ளேஸில் உள்ள ஒரு புத்தக்கடையில் அளைந்து கொண்டிருந்துவிட்டு, வேண்டிய புத்தகத்தை எடுத்துவந்து கல்லாவில் இருக்கும் முதலாளியிடம் கொடுத்து பில் போடச்சொன்னேன்.
அந்தச் சமயம் ஒருவர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இருக்கிறதா? என்று கேட்டார்.
தலையைத் தூக்கிப் பார்க்காமலேயே கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றார்.
வந்தவருக்குத் திகைப்பு. என்ன ஐயா இப்படிச் சொல்கிறீர்கள். தேடிப் பார்க்கலாமே என்றார்.
கடைக்காரர் மீண்டும் அதே பதில் சொன்னவுடன், வந்தவருக்குச் சற்றே கோபம்.
ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் இருக்கும் இந்தக் கடையில்... அப்படி இருக்க, சற்றாவது நீங்கள் தேடக்கூடாதா... என்றார்.
கடைக்காரர் மசியவில்லை.
வந்தவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். "ஐயா, இங்கே நான் வைத்திருப்பது விற்கத்தானே தவிர, எனது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அல்ல. ஒரு புத்தகம் இங்கே இல்லை என்றால், இல்லை".
ரசித்தேன்.
===கரிகாலன்
Bookmarks