Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 25 to 36 of 83

Thread: உறைந்த நிமிடம்..!

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500

  2. #26
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500
    மிக மிக மிக மிக.................................. நன்றிகள் அறிஞர் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    பல கவிஞர்களை கவர்ந்ததால்.. ஒரு சிறிய அன்பளிப்பு.. இபணம் 2500
    ஆளாளுக்குப் பணம் கொடுக்கறீங்க. என்கிட்டதான் ஒண்ணுமே இல்லையே!!!

    வெகு நாட்களுக்குப் பிறகு ஷி−நிசியின் விமர்சனம்......

    அப்படியே அமுக்கிப் போடுங்க கவிஞர்களே!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    மன்றத்தில் நான் வந்த காலங்களில் விமர்சணக்களும், கவிதை அலசலும் கொடி கட்டி பறக்கும்... நண்பன், ப்ரியன், கவிதா இவர்களின் ஆரோக்கியமான, ஆளமான கவிதை அலசல்கள் என்னை என்றுமே பொறாமை பட செய்யும்....
    பணிபளு, மற்றும் தனிபட்ட காரணக்களுக்காக மன்றம் வரமுடியாமல் இவர்கள் இருக்கையில் இந்த திரியில் இத்தனை அருமையான கவிதைகளையும், அடக்ற்க்கு பாசிடிவான அலைவரிசை பின்னூட்டங்களும்... இதை விட அழகான விமர்சனக்கள் கொடுக்க சுஜாதா, மதன் போன்றவர்களால் முடியுமா என்பது சந்தேகமாக்கும் அளவிற்கு.....
    நன்றி நண்பர்களே.....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    அப்பப்ப கடிக்க வேண்டியது அப்புறம் சித்தெறும்புன்னு சொல்லிக்க வேண்டியது. அம்மிணி, நடுராத்திரியாயிடுச்சி, நெசமாவே செந்தாமரை கணக்கா கண்ணு செவ செவன்னு இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.. ஆனா என்ன அம்மிணி சொகமா ஆரம்பிச்சி சோகமா கொண்டு போயிட்டீங்க அம்மிணி..

    என்ன பிரச்சனைன்னு கோடி கூட காட்டலீங்க அம்மிணி.. என்னமோ ஒரு பாறங்கல்லு நங்குன்னு நெத்தியில விழுந்திட்ட மாதிரி ரெண்டு வார்த்தையைப் போட்டு ஒலகத்தையே பொரட்டி போட்டு வச்சிருக்கீங்க அம்மிணி.

    பொண்ணுங்கன்னாவே இப்புடித்தான் அம்மிணி.. பட்டுன்னு மனசில கொஞ்சம் உண்ர்ச்சி மாறினாலும் பொங்கி வழிஞ்சதுக்கப்புறம் தான் நிதானமாவாங்க அம்மிணி, அந்த உணர்ச்சி வெள்ளத்தில எதையும் சொல்லக்கூடாது அம்மிணி.. கொஞ்சம் வேகம் கொறைஞ்சிடுச்சின்னா, அதுக்குப் பின்னாடி சொன்னாதான் அம்மிணி யோசிக்கவே தோணும்.

    ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கணும் அம்மிணி.. சோகத்தில கூட சில சமயம் சுகமிருக்கும், அப்போ அழகா கவிதை வரும். ஆனா சிலசமயம் நாம கோபத்தை சோகம்னு எடுத்துக்கிறோம் அம்மிணி. அந்தக் கோபம் இருக்கே, ஆத்தாமையினானால, நம்மளை வெடிக்க வச்சுரும் அம்மிணி.. அந்த ஆத்தாமை தான் வெடிக்கும். .ஏன்னா அது அழுத்தி அடக்கி வச்சிருக்கிற ஒண்ணு அம்மிணி. அதனால அது வெடிச்சுதான் அடங்கும்..

    உன்னோட கவிதையில உணர்ச்சி இருந்த அளவிற்கு உண்மை இல்ல அம்மிணி. உண்மை இருந்திருந்தா கவிதை அழகா இருக்காது. இந்த சூழ்நிலையில அந்த வெடிப்பு இருக்கும்.. கவிதை அழகா இருக்கே அம்மிணி,, அது தப்பா சரியா?
    Last edited by தாமரை; 27-11-2007 at 03:41 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #30
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    அப்பப்ப கடிக்க வேண்டியது அப்புறம் சித்தெறும்புன்னு சொல்லிக்க வேண்டியது. அம்மிணி, நடுராத்திரியாயிடுச்சி, நெசமாவே செந்தாமரை கணக்கா கண்ணு செவ செவன்னு இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.. ஆனா என்ன அம்மிணி சொகமா ஆரம்பிச்சி சோகமா கொண்டு போயிட்டீங்க அம்மிணி..

    என்ன பிரச்சனைன்னு கோடி கூட காட்டலீங்க அம்மிணி.. என்னமோ ஒரு பாறங்கல்லு நங்குன்னு நெத்தியில விழுந்திட்ட மாதிரி ரெண்டு வார்த்தையைப் போட்டு ஒலகத்தையே பொரட்டி போட்டு வச்சிருக்கீங்க அம்மிணி.
    உன்னோட கவிதையில உணர்ச்சி இருந்த அளவிற்கு உண்மை இல்ல அம்மிணி. உண்மை இருந்திருந்தா கவிதை அழகா இருக்காது. இந்த சூழ்நிலையில அந்த வெடிப்பு இருக்கும்.. கவிதை அழகா இருக்கே அம்மிணி,, அது தப்பா சரியா?
    என் கவிதைய வச்சி.. இந்தன பெரிய கருத்து சொன்ன நம்ம குரு தாமரை அண்ணாவுக்கு ரொம்ப நன்றிங்க..!!
    உண்மையோ, பொய்யோ... கற்பனைகள் நிஜமாவதும், நிஜம் கற்பனையாவதும் யாரால் சொல்ல முடியுமுங்கண்ணா??
    இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நான் கவிதைகளை வெறுமனே விமர்சனம் செய்வதில்லை என அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு எசகுபிசகான வார்த்தையை விமர்சனத்தில போட்டதனால, கொஞ்சம் விளக்கிடலாம்னுதான் இந்த மறுபதிப்பு. கவிதையில் பல நல்ல விஷயங்கள் இல்லாட்டி இப்படி விரிவான அலசல் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது.

    நம்ம விமர்சனர்களுக்கு எப்படி நல்ல விஷயங்கள் கண்ணுக்கு பளீர்னு தெரியுதோ அதே மாதிரி எந்த ஒரு கவிதையைப் படிக்கும்போதும் அது ஒரு படமா அதில நான் ஹீரோவா, ஹீரொயினா ஜோக்கரா என் மனதில ஓடும். ஓட்டிப்பாக்கிறேன். மக்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தே பழக்கப்பட்ட மனசுக்கு இதை இப்படி மாத்தலாமே! இது இப்படி அழகா இருக்குமேன்னுதான் தோணுதே ஒழிய இது சூப்பர் அது சூப்பர்னு சொல்லி நல்ல பெயர் எடுக்க தோணுவதில்லை. நண்பர்கள் கூட்டமும் அதையே என் கேரக்டரா ஏத்துக்கறதினால பிரச்சனை இல்லை.

    இதை பூமகளுக்கு தனிமடல்ல அனுப்பலாம். ஆனா இங்க எல்லாத்துக்கும் தனித்தனியாவா டியூஷன் எடுக்க முடியும். படிக்கற எல்லாத்துக்கும் பொதுவில வச்சா, கவிதையை உள்வாங்கி கண்மூடி அனுபவித்துப் பார்க்கிற அலசல் வளரும்கற ஒரே நோக்கத்தில் இங்கே பதிகிறேன்.

    1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.

    2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.

    3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.

    இரு வார்த்தையில் மரணம் வருமோ?
    இதயத் துடிப்பு நின்று போனது..!
    உள்ளம் உடைந்து, விழி வெடித்து
    வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!


    இதை அனுபவித்தவர் இவ்வரிகளை எழுத முடியாது. இவ்வரிகள் ஒரு உணர்வு. இதில் வெளிவந்த என்பதை தெரித்த என்று மாற்றிப்பாருங்கள். உணர்வு புரியும். இது போன்ற சில வார்த்தைத் தேர்வுகள்

    வெளிவந்த கண்ணீர் மழைநீரோடு
    மெல்ல உரையாடியது..!
    வெகு நேரம் நின்று மழையோடு
    விவரம் சொன்னேன்..!


    உணர்வுகளுக்கு இந்த வரிகளும் பொருந்தவில்லை. இது இரண்டு நாட்கள் கழித்தோ வீட்டிற்கு வந்தபின்போ கூட நடக்கும். ஆனால் இந்த சுயவிரக்கம் என்பது சூறாவளிப் புயல் கடந்த பின்னே வரும் பெருமழை..

    வானம் வாஞ்சையோடு
    வன்மழை மள்கி
    மெல்லிய தூரலாக்கி
    மனம் லேசாக்கியது..!


    இதுவும் அதுபோலத்தான்.. வீட்டில் பெருங்குரலெடுத்து அழுது அரற்றி தெளிந்த பின் வரவேண்டிய தூறல் முன்னமே வந்து விட்டிருக்கிறது.

    இப்போ மற்றுபடி கவிதையை படிங்க.. பத்தி பத்தியா.. படத்தை பார்க்காதீங்க கண்மூடி பூமகள் சொன்ன சம்பவங்களை உங்களுக்கு நடந்ததா யொசிங்க..

    அப்புறம் மறுபடியும் விமர்சனம் பண்ணுங்க, ஏன்னா ஒவ்வொரு கவிஞனும் அனுபவிக்க வேண்டிய ஒரு உணர்வு இதில ஒளிஞ்சிருக்கு,
    Last edited by தாமரை; 27-11-2007 at 10:54 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #32
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நீண்ட ஆழமான விமர்சனத்துக்கு மிகுந்த நன்றிகள் தாமரை அண்ணா.
    உங்களின் விமர்சனத்துக்கு மன்றத்து வைரங்கள் வந்து பதில் விமர்சனம் தருவார்கள் என்று காத்திருக்கிறேன்.

    பணிவுடன்,
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #33
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    தாமரை....
    எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை...
    எல்லா விரல்களும் ஒரே பணியை செய்வதும் இல்லை...
    மனிதனிலும் அப்படியே தாமரை... ஒரு நிகழ்வுக்கான செயலை இதே போல்தான் எல்லோரும் ஒன்று போல் உணர இயலாது.... ஆனால் இந்த மனிதர்களாகிய நாம் எப்போதும் நாம் உணர்வது போல் அடுத்தவரும் உணர வேண்டும் என்று நினைக்கிறோம்....
    கவிதையை படிக்கும் போது அந்த கதாபாத்திரமாக நீங்கள் மாறுவது மகிழ்ச்சியே.. ஆனால் அனைத்து மனங்களையும் பிரதிபலிக்க கூடிய ஒரு கதாபாத்திரமாக மாறுவது கடினமே.... அது நடக்கவில்லையோ என்ற ஒரு ஐயம்....

    Quote Originally Posted by தாமரை View Post
    1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.
    பேர்பேக்ட்... ஆனால் எத்தனையோ பேசியிருந்தாலும் "அந்த" இரண்டு வார்த்தை மட்டும் தானே நியாபகம் இருக்கும்... மனதை குத்தும்...
    "விலகிப்போ...மறந்துபோ..."
    வார்த்தைகள் பின்னே புள்ளிகள்... நிரப்பி கொள்ளும் தேவையானால் (சப்பை கட்டுதான்)

    Quote Originally Posted by தாமரை View Post
    2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.
    நம்பிவிடுவதில்லை ... ஆனால்... காயபட்டு நியாயபடுத்த முயற்சிக்கிறான்...

    Quote Originally Posted by தாமரை View Post
    3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.
    ஒது கொஞ்சம் ஓவரா தெரியலை உமக்கு....
    குழந்தை பிறக்கும் வலியை எழுதுபவள் குழந்தை பிறக்கும் போதா எழுதுவாள்.... காலம் தாழ்த்தி எழுதிய உடன் அந்த நிமிட விலிதான் இல்லாமல் போய்விடுமா....

    படம், கவிதையை படிக்கும் போது பாதித்திருக்கலாம்...
    ஆனால் ....
    ........
    ............
    ... சிறு புன்னகையுடன்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    உங்களின் விமர்சனத்துக்கு மன்றத்து வைரங்கள் வந்து பதில் விமர்சனம் தருவார்கள் என்று காத்திருக்கிறேன்.
    பணிவுடன்,
    பூ...
    இப்படி ஜகா வாங்குவது சரியாகபடவில்லை... உங்கள் கருத்தை சொல்லலாம்.... ஆரோக்கியமான விவாதங்களுக்கு இதுதான் அவசியம்....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    பூ...
    இப்படி ஜகா வாங்குவது சரியாகபடவில்லை... உங்கள் கருத்தை சொல்லலாம்.... ஆரோக்கியமான விவாதங்களுக்கு இதுதான் அவசியம்....
    நன்றிகள் அண்ணா.
    கருத்துடன் வருகிறேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #36
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    தாமரை....
    எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை...
    எல்லா விரல்களும் ஒரே பணியை செய்வதும் இல்லை...
    மனிதனிலும் அப்படியே தாமரை... ஒரு நிகழ்வுக்கான செயலை இதே போல்தான் எல்லோரும் ஒன்று போல் உணர இயலாது.... ஆனால் இந்த மனிதர்களாகிய நாம் எப்போதும் நாம் உணர்வது போல் அடுத்தவரும் உணர வேண்டும் என்று நினைக்கிறோம்....
    கவிதையை படிக்கும் போது அந்த கதாபாத்திரமாக நீங்கள் மாறுவது மகிழ்ச்சியே.. ஆனால் அனைத்து மனங்களையும் பிரதிபலிக்க கூடிய ஒரு கதாபாத்திரமாக மாறுவது கடினமே.... அது நடக்கவில்லையோ என்ற ஒரு ஐயம்....



    பேர்பேக்ட்... ஆனால் எத்தனையோ பேசியிருந்தாலும் "அந்த" இரண்டு வார்த்தை மட்டும் தானே நியாபகம் இருக்கும்... மனதை குத்தும்...
    "விலகிப்போ...மறந்துபோ..."
    வார்த்தைகள் பின்னே புள்ளிகள்... நிரப்பி கொள்ளும் தேவையானால் (சப்பை கட்டுதான்)



    நம்பிவிடுவதில்லை ... ஆனால்... காயபட்டு நியாயபடுத்த முயற்சிக்கிறான்...



    ஒது கொஞ்சம் ஓவரா தெரியலை உமக்கு....
    குழந்தை பிறக்கும் வலியை எழுதுபவள் குழந்தை பிறக்கும் போதா எழுதுவாள்.... காலம் தாழ்த்தி எழுதிய உடன் அந்த நிமிட விலிதான் இல்லாமல் போய்விடுமா....

    படம், கவிதையை படிக்கும் போது பாதித்திருக்கலாம்...
    ஆனால் ....
    ........
    ............
    ... சிறு புன்னகையுடன்...
    உங்கள் எழுத்துக்களை விட புள்ளிகள் அதிகம் பேசுகின்றன பென்ஸ்

    அந்தப் புள்ளிகளையே கேட்கிறேன். நான் சொன்னது சரியா இல்லையா?

    ஆனால், பல வித சூழ்நிலைகளில் காதலர்கள் பிரிந்ததைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு வகை உணர்வு.

    இங்கு பூமகள் வடித்த சம்பவம் போலவும் கண்டிருக்கிறேன்.. கல்லூரிக் காலத்தில்..

    அந்த நிமிடத்தில் இருந்த உணர்வுகள் சில காலத்திலேயே மாறிப்போனதையும் கண் கூடாக கண்டிருக்கிறேன்.. நான் பதித்த அந்த நிமிடங்கள் அந்த உணர்வுகளைக் காட்டியவளுக்கே மறந்து போயிருந்தது உள்வாங்கிய கவிஞனுக்கு வார்த்தைகளில் வடித்த கவிஞனுக்கு மறக்கவில்லை. 1987 களில் எழுதிய கவிதை வரிகளை உமக்கு வரி பிசகாமல் சுருதி மாறாமல் ஒப்பித்து இருக்கிறேன். நினைவிருக்கிறதா?


    நான் சொன்னது புரியவில்லையா? இந்தக் கவிதையில் அழகு இருக்கிறது. இதைக் கற்பனையில் கண்டு எழுதிய திறமை இருக்கிறது. ஆனால் அதன் வலி இன்னும் மிக அதிகம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 3 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •