Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 83

Thread: உறைந்த நிமிடம்..!

                  
   
   
  1. #37
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    இதை பூமகளுக்கு தனிமடல்ல அனுப்பலாம். ஆனா இங்க எல்லாத்துக்கும் தனித்தனியாவா டியூஷன் எடுக்க முடியும். படிக்கற எல்லாத்துக்கும் பொதுவில வச்சா, கவிதையை உள்வாங்கி கண்மூடி அனுபவித்துப் பார்க்கிற அலசல் வளரும்கற ஒரே நோக்கத்தில் இங்கே பதிகிறேன்.
    அது தான் எங்க குரு தாமரை அண்ணா.
    எல்லாருக்கும் பயன்படும்படி விவாதிப்பது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நன்றிகள் அண்ணா.

    1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.
    இருவரியில் முறிப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த கவிதை இறுதிக்கட்ட சம்பவ நிகழ்வின் விவரிப்பு தான்.
    இதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவையை இங்கு விவரிக்காததால் கூட இப்படி உங்களுக்கு தோன்றியிருக்க கூடும்.
    பிரச்சனைகள் வராமல் பிரிவு வருமா அண்ணா?
    எடுத்தவுடன் யாரும் இப்படி சொல்லி பிரிவதில்லையே..!!

    2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.
    உண்மை. யாரும் நம்புவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு, இறுதியில் அது ஜெயிப்பதை பார்க்கும் போது நம்பாமல் இருக்க முடியாதே..!
    3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.
    மனத்தின் காயத்தில் எப்போது அதை கிளறினாலும் மனம் அதே வலியைத்தான் கொடுக்கும்.
    "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு"
    என்ற வள்ளுவர் கூற்று ஒன்றே போதுமே... வார்த்தைகளின் வலி சொல்ல...!!

    இதை அனுபவித்தவர் இவ்வரிகளை எழுத முடியாது. இவ்வரிகள் ஒரு உணர்வு. இதில் வெளிவந்த என்பதை தெரித்த என்று மாற்றிப்பாருங்கள். உணர்வு புரியும். இது போன்ற சில வார்த்தைத் தேர்வுகள்
    இங்கே சொல்ல வந்த கருதானே அண்ணா முக்கியம். மோனை காரணமாக வெளிவந்த என்று போட்டேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    உங்கள் எழுத்துக்களை விட புள்ளிகள் அதிகம் பேசுகின்றன பென்ஸ்
    .
    பெரும்புள்ளிகள் பேசும்போது அப்படிதான்,,, தாமரை...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #39
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by தாமரை View Post
    அந்த நிமிடத்தில் இருந்த உணர்வுகள் சில காலத்திலேயே மாறிப்போனதையும் கண் கூடாக கண்டிருக்கிறேன்..
    மாறிப்போனது போல் நடித்திருக்கலாம் அல்லது ஒரு தோற்றத்தை(Illusion) ஏற்படுத்தியிருக்கலாம். எந்த மனிதருக்குள்ளும் ஆறாத வடுக்கள் நிச்சயம் இருக்கும். அவை காலத்தாலும் அழிக்க முடியாதவை.
    வாழ்வு அந்த நிகழ்வோடு நின்றுவிடுவதில்லை. அடுத்தடுத்த கட்டத்துக்கு நம்மை எடுத்துச் செல்கையில் வலுக்கட்டாயமாகவே அவற்றை மறந்தாக வேண்டிய நிலைக்கு மனிதம் தள்ளப்படும். அப்போது தான் வாழ்வு இனிக்கும் என்ற நிலை உருவாகும்.
    இப்படி மறக்க முடியாதவர்கள் தான் தற்கொலைக்கும், குடிபோதைக்கும் அடிமையாகி வாழ்வை வீணாக்குகிறார்கள்.

    நான் பதித்த அந்த நிமிடங்கள் அந்த உணர்வுகளைக் காட்டியவளுக்கே மறந்து போயிருந்தது உள்வாங்கிய கவிஞனுக்கு வார்த்தைகளில் வடித்த கவிஞனுக்கு மறக்கவில்லை. 1987 களில் எழுதிய கவிதை வரிகளை உமக்கு வரி பிசகாமல் சுருதி மாறாமல் ஒப்பித்து இருக்கிறேன். நினைவிருக்கிறதா?
    என் கூற்றுப் படி, உணர்வு மறந்திருக்காது. மறைக்கப்பட்டிருக்கும்... மறத்துப்போகப்பட்டிருக்கும். அது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம்.
    நான் சொன்னது புரியவில்லையா? இந்தக் கவிதையில் அழகு இருக்கிறது. இதைக் கற்பனையில் கண்டு எழுதிய திறமை இருக்கிறது. ஆனால் அதன் வலி இன்னும் மிக அதிகம்.
    உண்மை அழகாய் இருக்காது என்பது உங்களின் வாதம். அதற்கு முரணாய் பதிவுகள் வந்தால்??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    சோகத்தில கூட சில சமயம் சுகமிருக்கும், அப்போ அழகா கவிதை வரும். ஆனா சிலசமயம் நாம கோபத்தை சோகம்னு எடுத்துக்கிறோம் அம்மிணி. அந்தக் கோபம் இருக்கே, ஆத்தாமையினானால, நம்மளை வெடிக்க வச்சுரும் அம்மிணி.. அந்த ஆத்தாமை தான் வெடிக்கும். .ஏன்னா அது அழுத்தி அடக்கி வச்சிருக்கிற ஒண்ணு அம்மிணி. அதனால அது வெடிச்சுதான் அடங்கும்

    -------------------------------------------------------------
    பென்ஸூ! நீங்களும் பார்த்திருப்பீங்களே இதை.
    உங்களால் எழுத முடியுமா முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தி..?
    காமெடியாய் உங்களைப் பார்த்து நீங்களே சிரித்துக் கொள்கிறீர்கள் அல்லவா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #41
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    12 Oct 2007
    Location
    Vellakovil
    Posts
    1,207
    Post Thanks / Like
    iCash Credits
    19,265
    Downloads
    138
    Uploads
    0
    உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்
    Last edited by அக்னி; 14-12-2007 at 01:44 PM. Reason: அதிக மேற்கோள்

  7. #43
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    25 Oct 2004
    Posts
    71
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    2
    Uploads
    0
    இப்போது கனமழை
    என் வீட்டில்..!
    மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.

  8. #44
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by இலக்கியன் View Post
    அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்
    மிகுந்த நன்றிகள் இலக்கியன்.
    உங்கள் பாராட்டு கண்டு மகிழ்ச்சி.

    Quote Originally Posted by ஆர்.ஈஸ்வரன் View Post
    உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்
    நன்றிகள் ஈஸ்வரன்.
    Quote Originally Posted by RRaja View Post
    மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.
    நன்றிகள் ராஜா.
    உங்களைப் பற்றி அறிமுகப்பகுதியில் அறிமுகம் தரலாமே..!!
    உங்களின் பாராட்டு கண்டு மகிழ்ச்சி.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கவிதை அருமையாக இருந்தது. வார்த்தைகள் மிக அழகாக கையாளபட்டிருகின்றன. காதல் கவிதை அவ்வளவாக ரசிக்க தெரியான் எனக்கு உங்கள் கவிதை பிடித்தது. அதுமட்டுமல்ல இந்த தலைப்பு மிக அருமை. கவிதை மட்டுமிரு ந்தால் படிக்காமல் சென்றிருப்பேன், ஆனால் பொருத்தமாக நீங்கள் தந்த படம் நிறுத்தியது என்னை.
    படத்துக்கு சபாஸ்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #46
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மிக்க நன்றிகள் வாத்தியார் அண்ணா.

    எளிய நடையில் எழுதிய கவி என்றுமே மக்களைச் சென்றடையும் என்று பா.விஜய் சொல்லியிருக்கிறார்.

    இன்று அது மிகச் சரி என்று புரிந்துவிட்டது.

    உங்களை நிப்பாட்டி, பின்னூட்டமும் போட வைத்துவிட்டதே..!

    உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஒரு படைப்பின் வெற்றியே அதை படிப்பவர்களும் புரிந்துகொண்டு பாராட்டப்பட்டாலே. பாரதியார் வெற்றி பெற்றது அவர் எழுதிய கவிதைகள் மக்களிடம் சென்றடைந்ததால்.

    நீங்கள் இங்கே வெற்றி பெற்றுள்ளீர்கள் பூமகள். எங்களை மாதிரியான சாமானியர்களும் புரிந்துகொண்டதால். பாராட்டுக்கள்.

  12. #48
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    உங்களின் அன்பான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஆரென் அண்ணா.

    பாராட்டுக்கும் பின்னூட்ட ஊக்கத்துக்கும் மிகுந்த நன்றிகள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •