அது தான் எங்க குரு தாமரை அண்ணா.
எல்லாருக்கும் பயன்படும்படி விவாதிப்பது உங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நன்றிகள் அண்ணா.
இருவரியில் முறிப்பதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்த கவிதை இறுதிக்கட்ட சம்பவ நிகழ்வின் விவரிப்பு தான்.1. எந்த உண்மைக் காதலனும் இருவார்த்தைகளில் காதலை முறிப்பதில்லை. அதுவும் நேரில் வந்து.
இதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவையை இங்கு விவரிக்காததால் கூட இப்படி உங்களுக்கு தோன்றியிருக்க கூடும்.
பிரச்சனைகள் வராமல் பிரிவு வருமா அண்ணா?
எடுத்தவுடன் யாரும் இப்படி சொல்லி பிரிவதில்லையே..!!
உண்மை. யாரும் நம்புவதில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லக் கேட்டு, இறுதியில் அது ஜெயிப்பதை பார்க்கும் போது நம்பாமல் இருக்க முடியாதே..!2. எந்த உண்மைக் காதலியும் மறந்துவிடு என்று இரு சொல்லில் வெட்டி ஓடும் காதலனின் அந்த இரு சொற்களை நம்பி விடுவதில்லை.
மனத்தின் காயத்தில் எப்போது அதை கிளறினாலும் மனம் அதே வலியைத்தான் கொடுக்கும்.3. ஏமாற்றங்களை கவிதையாய் கருவுற்று, பிரசவிக்க ஆகும் வலிமிகுந்த காலங்கள் அந்த அதிர்வை அந்த உணர்வை மந்தப் படுத்தி விடுகின்றன.
"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" என்ற வள்ளுவர் கூற்று ஒன்றே போதுமே... வார்த்தைகளின் வலி சொல்ல...!!
இங்கே சொல்ல வந்த கருதானே அண்ணா முக்கியம். மோனை காரணமாக வெளிவந்த என்று போட்டேன்.இதை அனுபவித்தவர் இவ்வரிகளை எழுத முடியாது. இவ்வரிகள் ஒரு உணர்வு. இதில் வெளிவந்த என்பதை தெரித்த என்று மாற்றிப்பாருங்கள். உணர்வு புரியும். இது போன்ற சில வார்த்தைத் தேர்வுகள்
Bookmarks