விலகிவிடு என்றுநீ தொலைதூரம் சென்றாலும்
விலகாத உன்னுருவம் கண்ணுக்குள் நிலைத்திருக்கும்
பயணம் முடிந்து விடைசொல்லிப் பிரிவதற்கு
புகைவண்டி பழ்க்கமா நம்பழக்கம்
உறைந்த நிமிடங்கள் அல்ல நெஞ்சை
உறைய வைத்த நிமிடங்கள்; உன்கவிதை
என்னைக் கரைய வைத்தக் கலவரங்கள்
கவிதாயினியே உன் கவிதைகள் ஊர்வலத்தில்
கற்பனையின் கைகோர்த்து கருத்துக்கள் நடக்கட்டும்
புதுவுணர்ச்சிகள் பூக்கட்டும்
பொன்மகளே, தமிழ்ப் பூமகளே வாழ்க
Bookmarks