Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 83

Thread: உறைந்த நிமிடம்..!

                  
   
   
  1. #13
    இளம் புயல் பண்பட்டவர் IDEALEYE's Avatar
    Join Date
    14 Nov 2007
    Location
    Island
    Posts
    235
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    2
    Uploads
    0

    பூமகளின் உயிர்-மெய் வரிகள்

    [/COLOR][/FONT]இரு வார்த்தையில் மரணம் வருமோ?
    இதயத் துடிப்பு நின்று போனது..!

    உள்ளம் உடைந்து, விழி வெடித்து
    [FONT=TSC_Paranar][COLOR=DarkOrchid]
    வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!

    இந்த வார்த்தைகளில் உயிர் தகிக்கின்றது.....
    காதல்- உயிர்
    காதல்- மெய்
    உயிரற்ற வார்த்தைகள் கண்டு வந்த
    இக்கவிவரிகள்
    உயிர் உள்ள வரிகள்
    மெய்யான வரிகள்

    வாழ்த்துகள் பூமகளுக்கு
    ஐஐ
    மனிதம் வாழட்டும்

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அக்னி View Post
    காதல் சொல்லும் போது,
    மழை..,
    சிலிர்க்கும் பன்னீர்த்துளிகள்...
    காதல் கொல்லும் போது,
    மழை..,
    துடைக்கும் கண்ணீர்த்துளிகள்...
    அக்னிச்சொற்கள் படப்பட
    அக்னித்துளிகளானது
    மழையும் மலைத்து..!

    வானவில் வர்ணம் தொலைத்து,
    என்மேல்
    ரணம் தொடுக்கும் வில்லானது...
    வண்ணம் கொண்ட வானவில்..
    வண்ணமிழந்த என்னைப் பார்த்து
    வெடித்துச் சிரித்தது.. இடியாய்
    இறங்கியது இதயத்தில்..!

    காதலித்து காத்திருந்தால்,
    காதல் அழித்து இடித்தாய்.
    இடிந்தேன் நான்.
    இதயம் இடிதாங்கி... தாங்கியது...
    சோகம் சுமக்க தந்தாய்.
    சுமந்தேன் நான்.
    மனம் சுமைதாங்கி... தங்கியது...
    உன்னையே சுமந்த
    என் இதயம்..
    உன் பிரிவுச்சுமையை
    சுமக்க மறுப்பதேன்..??

    ஈரலிப்பாய் இருந்தாலும்,
    எரிகிறது.., உள்ளும் புறமும்...
    புரிகிறது.., கண்ணீரின் எரிசக்தி...
    கண்ணீர் பெட்ரோல் எரிந்தது
    மழைநீர் மெட்ரோ (மெட்ரோ வாட்டர்*)
    ஆகி குளிர்த்தது..

    வலிக்கிறது உயிர்வரை...
    உயிருள்ளவரை வலிக்கும்,
    இந்த..,
    காதல் கருக்கலைப்பு...
    உன் வரை,
    கலைந்து போகும் மேகம்
    போல் கலைக்கப்பட்டது
    காதல்..!
    என் வரை,
    முளைத்து விட்ட வேரை
    பிடிங்கி எறியப்பட்டது
    காதல்..!


    அக்னித் துளிகள் ஒவ்வொரு வரிகளும் சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்.
    பின்னூட்டக் கவி கொடுத்து அசத்தியதுக்கு மிக்க நன்றிகள் அண்ணா.


    குறிப்பு:
    * மெட்ரோ வாட்டர் - சென்னை வாழ் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர்.
    Last edited by பூமகள்; 21-11-2007 at 11:34 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by IDEALEYE View Post
    உயிரற்ற வார்த்தைகள் கண்டு வந்த
    இக்கவிவரிகள்
    உயிர் உள்ள வரிகள்
    மெய்யான வரிகள்
    வாழ்த்துகள் பூமகளுக்கு
    உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள் ஐடியல் ஐ..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    சிறந்த கவி...
    மிக அருமையான பின்னூட்டம்...
    இதற்கு மேல் என்னிடம் இருந்து "இந்த கவிதையை ஒட்டி வைக்கிறேன்".....
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by பென்ஸ் View Post
    சிறந்த கவி...
    மிக அருமையான பின்னூட்டம்...
    இதற்கு மேல் என்னிடம் இருந்து "இந்த கவிதையை ஒட்டி வைக்கிறேன்".....
    மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா.
    ஆனால் இந்த வரிகள் என் மரமண்டைக்கு புரியவில்லையே..!
    கோபிக்காமல் விளக்கமளிப்பீர்களா??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #18
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    மிக்க நன்றிகள் பென்ஸ் அண்ணா.
    ஆனால் இந்த வரிகள் என் மரமண்டைக்கு புரியவில்லையே..!
    கோபிக்காமல் விளக்கமளிப்பீர்களா??
    அதுவா...இனி இந்தக் கவிதை முகப்பிலேயே இருக்கும்.புதிய கவிதைகள் பதியும்போது பழையகவிதைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டு மறந்திருக்கும்.தேடிப்பி(ப)டிக்க வேண்டும் ஆனால் இப்படி ஒட்டினால் அங்கேயே இருக்கும்.இந்த கௌரவத்தை அடைந்ததற்கு வாழ்த்துகள் தங்கையே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஆஹா.. இப்பத்தான் Sticky என்று இருப்பதைப் பார்த்துட்டு வந்தேன் சிவா அண்ணா. உங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றிகள்.

    ஒட்டி வைக்கும் அளவு என் கவி மன்றத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது கண்டு மகிழ்கிறேன்.

    இந்த பாக்கியம் பெற காரணமான பென்ஸ் அண்ணாவுக்கு நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அபாரம்.. அபாரம். சொல்ல வார்த்தை ஏதுமில்லை

    வெயில் பொழுதின் கடலருகே தூக்கமும்,
    கவர்ச்சி காட்டும் சிவந்த வானமும்
    கவிதையில் கற்பனையை முட்டி நிற்கிறது என்றால்

    கொடியில் மாட்டிய பட்டம், முட்டி நிற்கும் யதார்த்தம்..
    ஹாட்ஸ் ஆஃப்...

    மீண்டுமொரு சிறப்பு, "நினைவு வெட்டி."

    அப்படி ஒன்று இருந்திருந்தால், நான் திடகாத்திரமாய் இருந்திருக்கக் கூடும்...

    கவிதை அழகாக கனமழையாய் கொட்டி தீர்த்துவிட்டது....

    நனைந்த சலதோஷத்தில் நான்

    வாழ்த்துகள்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #21
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    ..கவிதை போன்று இல்லாமல் ஒரு சிறுகதை
    படித்த உணர்வை ஏற்படுத்தியது... இந்த பதிவு.... சற்று நேரம்
    உணர்வுகள் அந்த நிகழ்வுடன் கலந்திருந்தது....!
    எழுத்துக்களில் உள்ள ஜீவன் அவ்வளவிற்க்கு காரணியாகிறது....!

    வியக்க வைத்தீர்கள் பூமகள்....!

    அருகில் நீ தானே புன்னகையே..!
    வசீகரன்

  10. #22
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    அபாரம்.. அபாரம். சொல்ல வார்த்தை ஏதுமில்லை

    வெயில் பொழுதின் கடலருகே தூக்கமும்,
    கவர்ச்சி காட்டும் சிவந்த வானமும்
    கவிதையில் கற்பனையை முட்டி நிற்கிறது என்றால்


    கொடியில் மாட்டிய பட்டம், முட்டி நிற்கும் யதார்த்தம்..
    ஹாட்ஸ் ஆஃப்...

    மீண்டுமொரு சிறப்பு, "நினைவு வெட்டி."

    அப்படி ஒன்று இருந்திருந்தால், நான் திடகாத்திரமாய் இருந்திருக்கக் கூடும்...

    கவிதை அழகாக கனமழையாய் கொட்டி தீர்த்துவிட்டது....
    நனைந்த சலதோஷத்தில் நான்
    வாழ்த்துகள்
    நான் சொற்ப நேரத்தில் எழுதி.. பதிவிட்ட இக்கவி, நானே எதிர்பாராத வகையில் இத்தனை பாராட்டு பெற்றிருப்பது கண்டு உண்மையில் ஆச்சர்யம் அடைகிறேன்.

    அதில் இருக்கும் எதார்த்தமும் கற்பனையும் எனக்கு இப்போது தான் பலர் சொல்லப்புலப்படுகிறது.

    நான் கண்டுகொள்ள மறந்த கற்பனையும் எதார்த்தமும் கையாண்ட விதத்தை அழகாய் அடையாளப்படுத்திக் காட்டிய ஆதவாவுக்கு மிக்க நன்றிகள்.

    வைரமுத்து பாணியில் எழுத வேண்டுமென்று எழுதி இறுதில் நீளமாகிவிட்ட கவிதை.

    உண்மையில் இந்தக் கவி மன்றத்து வைரங்களின் குட்டு பெற்றதால் தான் அழகாய் ஜொலிக்கிறது.

    பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஆதவா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by வசீகரன் View Post
    ..கவிதை போன்று இல்லாமல் ஒரு சிறுகதை
    படித்த உணர்வை ஏற்படுத்தியது...
    இந்த பதிவு.... சற்று நேரம்
    உணர்வுகள் அந்த நிகழ்வுடன் கலந்திருந்தது....!
    எழுத்துக்களில் உள்ள ஜீவன் அவ்வளவிற்க்கு காரணியாகிறது....!
    உண்மை தாங்க வசீ..!
    நான் எழுதி முடித்து பார்த்ததும் எனக்கும் இப்படித்தான் தோன்றியது.
    அதனால் தானோ என்னவோ,


    வடிவம் சிறுக்க,
    வார்த்தைகள்
    வெட்ட நினைத்தாலும்
    வெட்ட மறுத்து
    விட்டுச் சென்றது
    கணினி கர்சர்..!


    மிக்க நன்றிகள் வசீகரன்.
    வியக்க வைத்தீர்கள் பூமகள்....!
    அருகில் நீ தானே புன்னகையே..!
    வசீகரன்
    "ஆமாம் வசீ"
    சொல்லிச் செல்கிறது
    சிரிப்பூ...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    தினமும் அவனும் அவளும் சந்திக்கின்ற இடம்....
    அவனுக்காய் அவள் காத்திருக்கிறாள்... அழத்தயாராய் வானம்.. இவளின் நிலையை முன்பே உணர்ந்திருக்ககூடுமோ!!

    எப்போது வேண்டுமானாலும்
    விடைபெற காத்திருக்கும்
    கொடியில் மாட்டிய பட்டம் போல்
    நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
    ஆசையாய் ஓடிவருவான் அவளைக்கான எப்பொழுதும். இன்றோ அவன் கண்களில் காதலில்லை. கனிவு இல்லை.

    மேலே மேகம் மட்டும் கருத்திருக்கவில்லை..
    இங்கே இவனின் முகமும் கூடத்தான் கருத்திருக்கிறது.

    நேர் பார்வை காண இயலாமல் இருவார்த்தையில் அவளை மரணத்தின் விளிம்பிற்கு அழைத்து சென்றான்..

    அன்று மூன்று வார்த்தையில் காதலை உரைத்தவன்,
    இன்று இரண்டு வார்த்தையில் காதலை மறைத்தான்!

    சொல்லிவிட்டு சென்றவனை மழைகோடுகளின் வழியே பார்த்துக்கொண்டிருந்தவள், நினைவுகள் பின்னோக்கியபடி நடக்கிறாள், அவள் கால்கள் முன்னோக்கியபடி செல்கின்றன...

    என்ன சொல்றது!! வெகுவாய் மனதைக் கவர்ந்துவிட்டது இந்த கவிதை!

    வாழ்த்துக்கள் பூமகள்!

    இ.பணம் 1000
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 2 of 7 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •