தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
முயல்கின்றேன் அண்ணா. உங்கள் கருத்தை மனதில்கொண்டு உங்கள் மனதை கொள்ளையிட..
Last edited by அமரன்; 29-11-2007 at 05:10 PM.
இலக்குமியின் கணவர் விஷ்ணு. அவர் எப்பொழுதுமே படுத்துக் கிடப்பவர். சிவன் பிரம்மஹத்தி தோஷத்தின் (பிரம்மாவின் ஐந்தாம் தலையைக் கொய்த தோஷம்) காரணமாய் அந்த மண்டையோட்டையே திருவோடாய் ஏந்தி பிஷாடனராய் அலைகிறார்.
இலக்குமியிடம் பிச்சை கேட்க இலக்குமி கர்வத்துடன் அத்திருவோட்டை நிறைக்க எண்ணி, திருவோடு ஏந்திய அண்ணலின் கோலத்தை திருத்திட எண்ணி, தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தையும் இட்டு அந்த திருவோட்டை நிரப்ப எண்ணுகிறாள். ஆனால் எவ்வளவு பணம் கொட்டியும் திருவோடு நிறையவில்லை. திருவின் திருவாகிய விஷ்ணுவும் கூட திருவோடு ஏந்தி திரிந்து சம்பாதித்து வந்து போட்டால்தான் உண்டு என்ற நிலைமைக்கு ஆளகிவிடுகிறார் இலக்குமி. தோற்றுச் சோர்ந்து போகிறார். அதுனால் திருவும் ஓடுகிறார் விட்டு.
அன்னை உமையவள் அண்ணபூரனியாகி திருவோட்டில் உணவிட்டு நிறைக்கிறாள். அந்த திருவோடு உணவால் நிறைய திருவோடு ஈசன் கையை விட்டு ஓடி விடுகிறது
உலகிற்கே படியளக்கும் ஈசனை அப்பன் என்கிறோம். அவனுக்கே படியளந்த அன்னபூரணி அவனுக்கும் அம்மையல்லவா?
உலகில் போதும் என்ற சொல்லை உணவிற்கே சொல்கிறோம். உணவு மட்டுமே மன்நிறைவைத் தரக்கூடியது.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அருமை... அருமை... கஷ்டங்களுக்கு அடுத்து போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நான் முயன்று பார்க்கட்டுமா அமரன் அண்ணா!
பாட்டு திரும்பாதா என பார்(உலகம்) இந்த சொற்சிலம்பப் பதிவுகளை ரெஃப்ரெஸ் செய்து ரெஃப்ரெஸ் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருகிற பாட்டுகள் எப்படி இருக்கிறது தெரியுமா பாதி இரும்பு,.. மற்றவர்களால் வளைக்க முடியாத வார்த்தைகள் கொண்டது. பாதிக் கரும்பு, கடித்து ருசிக்க இனிய சாறு தரும் சுவை நிறைந்த வார்த்தைகள்.. இவற்றினால் இறுக்கமும் இனிமையும் மாறி மாறி வரும் சொற்சிலம்பத்திலே!!!!
இதுக்கு மேலே இருப்பதை விளக்கமா சொல்லாட்டி சத்தியமா விளங்காது சாம்பவி மற்றும் தாமரை அண்ணா இருவரைத் தவிர வேற யாருக்கும்.
பாவும் - ஊடையும் - ஆடை நெய்யப் பயன்படும் இருவகை நூல்கள், பாவு என்பது நீள வாக்கில் ஓடும் இழைகள், ஊடை என்பது அகலவாக்கில் ஓடும் இழைகள்
பாவியும் - பாவையும் - பாவி- தாமரை அண்ணா, பாவை - சாம்பவி அக்கா
அதாவது பாவின் ஊடே ஊடை நூல் புகுந்து வர நெய்வது ஆடை.அதேபோல பாவையும், பாவியும் ஊடலால் ஒருவருக்கு ஊடே ஒருவர் பா நூலால் நெய்யும் கவிதை அழகு.
இதை தாமரை அண்ணா சொன்ன அழகும், விளக்கமே இல்லாமல் சாம்பவி அக்கா புரிந்து கொண்டதும் தான் மிக மிக அழகு.
ஓ எனக்கு எப்படிப் புரிந்ததுன்னு கேட்கறீங்களா!
அதைச் சொல்லமாட்டேனே!
அப்புறம் ஏன்
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
என் மாத்தி மாத்தி போட்டிருக்காரு தெரியுமா, துணி நெய்யும் போது அடுத்தடுத்த பா இழைகள் மேலும் கீழும் மாறி மாறி போக ஊடை நூல் குறுக்கே போகும்.. அதே போல் பா, பாவி, பாவை என அனைத்து பாவுகளும் மாறி மாறி வர ஊட, ஊடல் ஆகியவே குறுக்கே (ஊடே) வருகின்றன.
பிரமிக்க வைக்குது...சிலம்பம் என்றாலே ஓரிடத்தில் நிற்காது சுற்றி சுற்றி ஆடுவதுதான் என்று தாமரை அண்ணா சொல்வார். அது இங்கே பொருந்தி உள்ளது..
பாவிளையும் சொற்சிலம்பவிழையில் ஈரிழையாம் பாவிழையையும், ஊடையிழையையும் ஆடையிழைக்கப் பயன்படுத்துவார்கள் என்பதை அவ்வேந்திழை அறிந்திருந்தாள். இவ்விளை அறிந்திருக்கவில்லை. வில்லையளவு மூளையின் ஆக்கிரமிப்பும் தமிழின் ஆளுமையும்.. மிக்க நன்றிக்கா..
இருந்தாலும் சில இடங்களில் ஒழுங்கீனம் உள்ளதே..
கண்மணியே. கண் மணிக்கு தேடிபிடிக்க கற்றுக்குடுக்கவேண்டுமா..
Last edited by அமரன்; 30-11-2007 at 07:03 PM.
பாவிழையிலும் பாவிளையும் ஏன் தெரியுமா
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks