Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 37 to 48 of 84

Thread: சொற்சிலம்ப சொற்பதங்கள்! ..

                  
   
   
  1. #37
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    உயிரும் மெய்யும்.. இருபால்களாக நினைக்கின்றேன்..
    உயிர்மெய் சேர்ந்து ஆக்கும் வாழ்க்கைக்கு இயக்கம் கொடுக்கும் சக்தி பிறக்கிறது..
    இருபுள்ளிகள் முப்புள்ளியாக்கும் (ஆய்தம்) மழலைச்செல்வம், வெளிக்கண்களின் காரத்தை (ஐகாரம்) குறைக்கவல்லது.. அதாவது அவர்கள் கண்டபடிபேச ஆகாரக்குறைப்பு செய்கின்றது. ஔவை(தாய்) மீதான ஈர்ர்பு (காரம்=இராசயனம்=ஈர்ப்பு) முழுமைஇன்மை நிலையை (ஆய்தகுறுக்கம்) ஏற்படுத்தும்.. அதவாது வாழ்விலும், இல்லறத்திலும் நிறைவின்மையை ஏற்படுத்தும்..எனவே வேண்டுமென்றே மழலை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லாதீர்.. மக அரக்கு குறுக்கம் (மகவு+அழுத்தம் குறைப்பது) இல்லறத்தின் உயிரான மகிழ்வை அதிகரிப்பது. சத்து மாத்திரை போன்றது.. சத்தை குறைக்காதீர்..(குற்றியலுகரம்)..
    குறுமை+இயல்+இ+கரம் (குறைந்த மையுடைய இயல்பை இல்லாது செய்ட்யும் கை இது..)இதுவே ஆணித்தரமான உண்மை..

    இப்படியும் இருக்கலாமோ என்று தோன்றுகின்றது. இருந்தாலும் மூளைக்கசக்கல் தொடர்கின்றது..

    அளபெடைகள் இன்னும் அளவெடுக்கப்படவில்லை. நான் மனதில் வைத்திருப்பது முற்றிலும் வேறு. உங்கள் பார்வையும் நன்றாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது.. தகவல்களை வரிசை அமைத்து வரி பிரித்தெழுதல் அழகு.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முயல்கின்றேன் அண்ணா. உங்கள் கருத்தை மனதில்கொண்டு உங்கள் மனதை கொள்ளையிட..

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
    திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
    திருவும் திருத்திருமோ
    திருத்திருவும் திரிந்திடுமோ
    திருவும் ஓட
    திருவோடு தானும் ஓட
    அன்னம் பூரணமாக்கி
    அம்மையானாள் அப்பனுக்கு!
    திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க---திருமால்
    திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்---சிவன்
    திருத்திருவும் திரிந்திடுமோ--திருமால்???????

    இதுக்கப்புறம் திருதிருன்னு விழிக்கத்தான் முடியுது.
    திருவின் உருகண்டு திரு'வின் எட்ட முடியவில்லை..
    திரு ஆளரே திறக்க முடியுமா
    Last edited by அமரன்; 29-11-2007 at 05:10 PM.

  4. #40
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
    திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
    திருவும் திருத்திருமோ
    திருத்திருவும் திரிந்திடுமோ
    திருவும் ஓட
    திருவோடு தானும் ஓட
    அன்னம் பூரணமாக்கி
    அம்மையானாள் அப்பனுக்கு!
    இலக்குமியின் கணவர் விஷ்ணு. அவர் எப்பொழுதுமே படுத்துக் கிடப்பவர். சிவன் பிரம்மஹத்தி தோஷத்தின் (பிரம்மாவின் ஐந்தாம் தலையைக் கொய்த தோஷம்) காரணமாய் அந்த மண்டையோட்டையே திருவோடாய் ஏந்தி பிஷாடனராய் அலைகிறார்.

    இலக்குமியிடம் பிச்சை கேட்க இலக்குமி கர்வத்துடன் அத்திருவோட்டை நிறைக்க எண்ணி, திருவோடு ஏந்திய அண்ணலின் கோலத்தை திருத்திட எண்ணி, தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தையும் இட்டு அந்த திருவோட்டை நிரப்ப எண்ணுகிறாள். ஆனால் எவ்வளவு பணம் கொட்டியும் திருவோடு நிறையவில்லை. திருவின் திருவாகிய விஷ்ணுவும் கூட திருவோடு ஏந்தி திரிந்து சம்பாதித்து வந்து போட்டால்தான் உண்டு என்ற நிலைமைக்கு ஆளகிவிடுகிறார் இலக்குமி. தோற்றுச் சோர்ந்து போகிறார். அதுனால் திருவும் ஓடுகிறார் விட்டு.

    அன்னை உமையவள் அண்ணபூரனியாகி திருவோட்டில் உணவிட்டு நிறைக்கிறாள். அந்த திருவோடு உணவால் நிறைய திருவோடு ஈசன் கையை விட்டு ஓடி விடுகிறது

    உலகிற்கே படியளக்கும் ஈசனை அப்பன் என்கிறோம். அவனுக்கே படியளந்த அன்னபூரணி அவனுக்கும் அம்மையல்லவா?

    உலகில் போதும் என்ற சொல்லை உணவிற்கே சொல்கிறோம். உணவு மட்டுமே மன்நிறைவைத் தரக்கூடியது.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமை... அருமை... கஷ்டங்களுக்கு அடுத்து போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான்.

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    அருமை... அருமை... கஷ்டங்களுக்கு அடுத்து போதும் என்று சொல்வது உணவை மட்டும்தான்.
    கஷ்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு. உணவு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். போதும் என்று மட்டுமே சொல்வார்கள்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    கஷ்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு. உணவு வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். போதும் என்று மட்டுமே சொல்வார்கள்.
    ஆமண்ணா...! நிதர்சனம்...!

    படிக்க படிக்க சுவையூறும் சொற்சிலம்பத்தில் இன்னொரு சந்தேகம்.. தெளிய வைக்க முடியுமா அண்ணா?

    Quote Originally Posted by தாமரை View Post
    நல்ல வேளை புதுசா வந்த குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பத்தி தெரியலை.. பிழைத்தேன்.

    பா திரும்பாதா எனப்
    பார் திரும்பிப் பார்த்திருக்க
    பாதி இரும்பா பாதிக் கரும்பா என
    இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
    பாவும் பாவியும் பாவையும் பாவின்
    ஊடே ஊடையாய் ஊடலும்
    நெய்யும் அணி

  8. #44
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    ஆமண்ணா...! நிதர்சனம்...!

    படிக்க படிக்க சுவையூறும் சொற்சிலம்பத்தில் இன்னொரு சந்தேகம்.. தெளிய வைக்க முடியுமா அண்ணா?

    பா திரும்பாதா எனப்
    பார் திரும்பிப் பார்த்திருக்க
    பாதி இரும்பா பாதிக் கரும்பா என
    இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
    பாவும் பாவியும் பாவையும் பாவின்
    ஊடே ஊடையாய் ஊடலும்
    நெய்யும் அணி

    நான் முயன்று பார்க்கட்டுமா அமரன் அண்ணா!

    பாட்டு திரும்பாதா என பார்(உலகம்) இந்த சொற்சிலம்பப் பதிவுகளை ரெஃப்ரெஸ் செய்து ரெஃப்ரெஸ் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அங்கே வருகிற பாட்டுகள் எப்படி இருக்கிறது தெரியுமா பாதி இரும்பு,.. மற்றவர்களால் வளைக்க முடியாத வார்த்தைகள் கொண்டது. பாதிக் கரும்பு, கடித்து ருசிக்க இனிய சாறு தரும் சுவை நிறைந்த வார்த்தைகள்.. இவற்றினால் இறுக்கமும் இனிமையும் மாறி மாறி வரும் சொற்சிலம்பத்திலே!!!!

    இதுக்கு மேலே இருப்பதை விளக்கமா சொல்லாட்டி சத்தியமா விளங்காது சாம்பவி மற்றும் தாமரை அண்ணா இருவரைத் தவிர வேற யாருக்கும்.

    பாவும் - ஊடையும் - ஆடை நெய்யப் பயன்படும் இருவகை நூல்கள், பாவு என்பது நீள வாக்கில் ஓடும் இழைகள், ஊடை என்பது அகலவாக்கில் ஓடும் இழைகள்
    பாவியும் - பாவையும் - பாவி- தாமரை அண்ணா, பாவை - சாம்பவி அக்கா

    அதாவது பாவின் ஊடே ஊடை நூல் புகுந்து வர நெய்வது ஆடை.அதேபோல பாவையும், பாவியும் ஊடலால் ஒருவருக்கு ஊடே ஒருவர் பா நூலால் நெய்யும் கவிதை அழகு.

    இதை தாமரை அண்ணா சொன்ன அழகும், விளக்கமே இல்லாமல் சாம்பவி அக்கா புரிந்து கொண்டதும் தான் மிக மிக அழகு.

    ஓ எனக்கு எப்படிப் புரிந்ததுன்னு கேட்கறீங்களா!

    அதைச் சொல்லமாட்டேனே!

  9. #45
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    அப்புறம் ஏன்

    பாவும் பாவியும் பாவையும் பாவின்
    ஊடே ஊடையாய் ஊடலும்

    என் மாத்தி மாத்தி போட்டிருக்காரு தெரியுமா, துணி நெய்யும் போது அடுத்தடுத்த பா இழைகள் மேலும் கீழும் மாறி மாறி போக ஊடை நூல் குறுக்கே போகும்.. அதே போல் பா, பாவி, பாவை என அனைத்து பாவுகளும் மாறி மாறி வர ஊட, ஊடல் ஆகியவே குறுக்கே (ஊடே) வருகின்றன.

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பிரமிக்க வைக்குது...சிலம்பம் என்றாலே ஓரிடத்தில் நிற்காது சுற்றி சுற்றி ஆடுவதுதான் என்று தாமரை அண்ணா சொல்வார். அது இங்கே பொருந்தி உள்ளது..

    பாவிளையும் சொற்சிலம்பவிழையில் ஈரிழையாம் பாவிழையையும், ஊடையிழையையும் ஆடையிழைக்கப் பயன்படுத்துவார்கள் என்பதை அவ்வேந்திழை அறிந்திருந்தாள். இவ்விளை அறிந்திருக்கவில்லை. வில்லையளவு மூளையின் ஆக்கிரமிப்பும் தமிழின் ஆளுமையும்.. மிக்க நன்றிக்கா..

    இருந்தாலும் சில இடங்களில் ஒழுங்கீனம் உள்ளதே..

    கண்மணியே. கண் மணிக்கு தேடிபிடிக்க கற்றுக்குடுக்கவேண்டுமா..
    Last edited by அமரன்; 30-11-2007 at 07:03 PM.

  11. #47
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    பாவிழையிலும் பாவிளையும் ஏன் தெரியுமா
    கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அமரன் View Post
    இருந்தாலும் சில இடங்களில் ஒழுங்கீனம் உள்ளதே..
    .
    அட இதுக்குப் பதில் மேலே இருக்கா... மிக்க நன்றி கண்மணிக்கா

Page 4 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •