சிறப்பான கவிதை வரிகள்.
இரவு முடிவதற்குள் வந்துவிடு என்று வண்ணத்துபூச்சி, நிலா கருமேகம் என எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.
பாராட்டுக்கள்.
SHANMUHI
மனம் நிறைந்த நன்றி பூமகள்.இபண அன்பளிப்பை விட மிகப்பெரிதான பரிசு நீ எழுதிய பதில் கவிதை.அழகோ அழகு.வார்த்தைகளின் வசீகரம் மயக்குகிறது.
\\\"நீ எந்தன் அருகில் வந்தால்
நொடிப் பொழுதும் நெடிதாக்கும்
வரம் கேட்பேன்..!
வந்துவிட்டால் நீண்ட இரவு
பன்னீர் தூவிவிடும்.!
வராவிடில் என் நீண்ட ஈரவிழி
கண்ணீர் தூவி விழும்..!\\\"
மிக அருமையான வரிகள்.சந்தம் கொஞ்சுகிறது.பாராட்டுக்கள் தங்கையே.
Last edited by சிவா.ஜி; 21-11-2007 at 07:08 AM.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
காதல் தவழ்கிறது உங்கள் கவிதையில். மலைத்து நின்று வேடிக்கை பார்க்கிறேன். அற்புதமான கவிதை அண்ணா.
முயற்சி திருவினையாக்கும்
மிக்க நன்றி கஜினி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
எளிமையாகவும்,அழகான வரிகளை கொண்டு படைக்கப்பட்டதாக இருந்தது சிவா அண்ணா.வாழ்த்துக்கள்.இப்போ அருகில் இருக்கும் அண்ணியை நினைத்து சொல்ல வில்லையென்றால் அப்ப யாருக்கு ? தப்பு.போட்டு கொடுத்து தான் மத்த வேலையை பார்க்கனும்
பழைய நெனப்புடா...பேராண்டி பழைய நெனப்புடாங்கற பாட்டை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் நேசம்.வாழ்த்துக்கு நன்றி.(போட்டுக் குடுத்தாலும் நாங்க மாட்டமாட்டோமில்ல...)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வேர்விட்ட கால்கள்
வாடாதிருக்கவா
நீர் விட்டன கண்கள்..??
நீ வேண்டுமென்று
விரதமிருந்த என் தேகம்
இன்று மீள வாவென
விரதமிருக்கின்றனவே..!!
நிலவு ஒளிய கருமேகம்
நான் ஒளிய உன் தேகம்
எனக் காத்திருக்கின்றேன்
உன் வருகைக்காக...
வந்த பின் வண்ணாத்துபூச்சி
கேட்குமோ ஏன் இந்த பூ
அசைகிறதென்று...!!
இல்லை வண்ணாத்துபூச்சிகள்
உதாசீனம் செய்த பூக்கள்
காத்திருக்கின்றன
உன் மேற் கோபம் கொண்டு....
அதன்பின்
உன் பின்னாலேயே
வரப் போகின்றன
அந்த குயில்கள்
உன்னிடம்
இசை பழக..!!
உன் ஒற்றைக்
கொலுசொலிக்காக
ஊமை உலகில்
எத்தனை நாள்
தவம் இயற்றினேனோ..??
குளிர் குறையுமா
இல்லை
உஸ்ணம் கூடுமா
உன் வருகையால்...??
புரியாமல்
நானும் தென்றலும்..!!
வந்துவிடு அன்பே
வந்து
தந்துவிடு ஒரு வார்த்தை
இனி ஒரு பிரிவு
வந்து விடாதென...!!
உங்களிடம் மட்டுமில்லை சிவா, என்னிடமும் தான்
அழகு கவியில்
பிரிவுத்துயரில் என்னுள்ளத்தையும்
இளகச் செய்துவிட்டன
உங்கள் வரிகள்...!!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா..!!
Last edited by ஓவியன்; 21-11-2007 at 06:12 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பின்னூட்டக் குறுங்கவிகளில் பின்னிவிட்டீர்கள் ஓவியன்.சிறிது சிறிதாய் அடுக்கிய அழகு வரிகளில் ஆனந்தமாய் திளைத்தேன்.பாராட்டுபவரையே பாராட்ட வைத்துவிட்டீர்கள்.நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நன்றி சிவா!!
சமீபகாலமாக உங்கள் படைப்புக்கள் பலவற்றில் என் பின்னூட்டமில்லை என்றொரு குற்றவுணர்வெனக்கு....!!
மன்றில் அதிகரித்து வரும் படைப்புக்களின் எண்ணிக்கையும், முதற்கண் புதியவர்களை கவனித்து ஊக்கமூட்ட வேண்டுமென்ற எண்ணத்தாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்....
இருந்தாலும், மீள தவற விட்டவற்றை தேடி தேடிப் பின்னூட்டம் இட முயன்று கொண்டிருக்கின்றேன்..!!
Last edited by ஓவியன்; 21-11-2007 at 06:30 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks