Results 1 to 9 of 9

Thread: வள்ளல் கர்ணனை பற்றிய...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13

    வள்ளல் கர்ணனை பற்றிய...

    வள்ளல் கர்ணனை பற்றிய ஒரு கதை இது.

    ஒருமுறை கிருஷ்ணனிடம் தர்மர், கிருஷ்ணா நான் கூட நிறைய தானதர்மங்கள் செய்கிறேன் ஆனால் எல்லோரும் கர்ணணைத்தான் புகழ்கிறார்கள் என்று கேட்டாராம். அதற்கு கிருஷ்ணர் சரி தர்மா நான் ஒரு போட்டி வைக்கிறேன் அதில் நீ வெற்றிபெற்றால் நீதான் சிறந்த தர்மவான் போட்டிக்கு தயாரா என்றாராம், தர்மரும் ஒத்துகொள்ள போட்டி தயாராயிற்று. போட்டி இதுதான். இரண்டு பெரிய பொக்கிஷ குவியல்கள் அதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும். அப்படி செய்த்துவிட்டால் நீதான் சிறந்த தர்மவான். காலையில் போட்டி துவங்கிற்று, தர்மரும் போவோர் வருவோருக்கெல்லாம் வாரிவாரி வழங்கினாராம் ஆனால் பொக்கிஷம் குறையவேயில்லை. ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிடுவான். அப்பொழுது தர்மர் கிருஷ்ணனிடம் கிருஷ்ணா என்னால் முடியவில்லை ஆனால் இதே பரிட்சையை கர்ணணிடமும் வையுங்கள் அவன் ஜெயித்தால் நான் ஒத்துகொள்கிறேன் என்று கூற, கிருஷ்ணர் உடனே கர்ணணை கூப்பிட்டு கர்ணா இதை சூரியன் அஸ்தமிப்பதற்குள் தானம் செய்துவிடவேண்டும் என்று கூற உடனே கர்ணணை இரண்டு பேரை கூப்பிட்டு ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டாராம். அப்பொழுது கிருஷ்ணர் தர்மரைபார்த்து இதை நீ கூட செய்திருக்கலாம் ஆனால் உன்னுடைய மனம் இவ்வளவு பொருளையும் இரண்டு பேருக்கு கொடுப்பதா என்று ஒர் எண்ணம் அதனால்தான் உன்னால் முடியவில்லை, ஆனால் கர்ணண்னுக்கு அந்த மாதிரி கிடையாது அதனால்தான் அவன் சிறந்த தர்மவான் என்றாறாம்.
    Last edited by அமரன்; 09-11-2007 at 09:36 AM.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல பகிர்வு..
    இருவரிடம் செல்வம் குவிந்து இருப்பதைக்காட்டிலும் பலரிடம் போதியளவுக்குப் பிரிந்து இருந்தால் நல்லது என்று நினைக்கும் தர்மன் எண்ணம் உயர்ந்ததாகவே எனக்குப் படுகிறது.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    கர்ணன் மற்றும் தர்மன் ஆகியோர் வள்ளல் குணம் உடையவர்கள்.ஆனால் கொடுக்கும் போது கணக்கு பார்க்க கூடாது என்று எடுத்து கொண்டால் கர்ணன் தான் சிறந்த தர்மவன்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இது நாமாய் உண்டாக்கிக் கொண்ட கதைதான்.. வியாசர் இப்படி பாடியிருப்பாரா என்பது தெரியாது... எனினும்

    இருவருக்குக் கொடுத்தலைக் காட்டிலும் பலருக்குக் கொடுத்தலே தலைசிறந்த தானம். அவ்வகையில் மேற்கண்ட காட்சியில் தர்மரே சிறந்தவர்..

    கர்ணனைப் பொறுத்தவரையிலும் தானம் என்று எதைக் கேட்டு நின்றாலும் கொடுத்துவிடுவாராம்... ஒருமுறை பாதி உயிரைத் தா என்று இந்திரனும் மறுமுறை மீதி உயிரைத் தா என்றூ கிருஷ்ணனும் கேட்டு கர்ணன் தந்துவிட்டபடியால், கர்ணன் இன்னும் புகழடைகிறார் என்பது என் கருத்து...

    மற்றபடி இந்தக் கதையின் கருத்து, சிறார்களுக்குப் பொருந்துகிறமாதிரி தெரியவில்லை.....

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராஜ்
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    குட்டிக்கதை...பெரிய விசயம்..தற்காலத்திற்குப் பொருந்துமா?கர்ணனுக்கென்னப்பா ராஜா! நாம கணக்குப் பாக்காம குடுக்க ஆரம்பிச்சா கஷ்டம் தான்!
    Last edited by யவனிகா; 09-11-2007 at 11:07 AM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13

    இந்த கதையின் நோக்கம்

    Quote Originally Posted by ஆதவா View Post
    இது நாமாய் உண்டாக்கிக் கொண்ட கதைதான்.. வியாசர் இப்படி பாடியிருப்பாரா என்பது தெரியாது... எனினும்
    இருவருக்குக் கொடுத்தலைக் காட்டிலும் பலருக்குக் கொடுத்தலே தலைசிறந்த தானம். அவ்வகையில் மேற்கண்ட காட்சியில் தர்மரே சிறந்தவர்..
    கர்ணனைப் பொறுத்தவரையிலும் தானம் என்று எதைக் கேட்டு நின்றாலும் கொடுத்துவிடுவாராம்... ஒருமுறை பாதி உயிரைத் தா என்று இந்திரனும் மறுமுறை மீதி உயிரைத் தா என்றூ கிருஷ்ணனும் கேட்டு கர்ணன் தந்துவிட்டபடியால், கர்ணன் இன்னும் புகழடைகிறார் என்பது என் கருத்து...
    மற்றபடி இந்தக் கதையின் கருத்து, சிறார்களுக்குப் பொருந்துகிறமாதிரி தெரியவில்லை.....
    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி ராஜ்
    இதுபோன்ற கதைகளின் நோக்கம், நம்மிடம் தேவைக்குமேல் இருப்பின் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்பதுதான். சிறார்களுக்கு அவர்களுடைய சிறுவயதிலேயே இதுபோன்ற கதைகளையும் நீதிக்கதைகளையும் சொல்வதின் நோக்கம் அவர்கள் மனதில் நல்ல என்னதை விதைக்கவேண்டும் என்பதுதான் என்பது என்னுடைய தாழ்வான கருத்து.
    Last edited by அமரன்; 09-11-2007 at 11:26 AM.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13

    நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரி,

    Quote Originally Posted by அமரன் View Post
    நல்ல பகிர்வு..
    இருவரிடம் செல்வம் குவிந்து இருப்பதைக்காட்டிலும் பலரிடம் போதியளவுக்குப் பிரிந்து இருந்தால் நல்லது என்று நினைக்கும் தர்மன் எண்ணம் உயர்ந்ததாகவே எனக்குப் படுகிறது.
    நீங்கள் சொல்வது ஒருவிதத்தில் சரி, ஆனால் காலையிலிருந்து கொடுத்து கொடுத்தும் தீராத செல்வத்தை சூரியன் அஸ்தமிக்கும்பொழுதாவது இரண்டுபேருக்கு கொடுக்கவேண்டும் என்று தர்மருக்கு தோன்றவில்லை என்பதுதான் இங்கே முக்கியம், மற்றபடி இதில் விஷயம் ஒன்றுமில்லை.
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அமரன், ஆதவன் சொல்லுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் என்றாலும்..,
    இது கர்ணனை மேன்மைப்படுத்தவும், தானதருமம் செய்யும்போது தயக்கம் கூடாது என்பதை உணர்த்தவும் சொல்லப்படுகின்ற கதை என்ற வகையில்,
    ஏற்றுக்கொள்ளலாம்...

    ஆனால், தேவையற்ற முறையில் செய்யப்படும் தானதருமம் பலனற்றது என்பதை அனைவரும் உணரவேண்டும்...

    பகிர்தலுக்கு நன்றி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    எப்படி தானம் செய்ய வேண்டும் என்பது இதில் இல்லை.ஏன் தர்மரை விட கர்ணன் அதிகமாக புகழப்பட்டார் என்பது தான் இதில் உள்ள விசயம்.அந்த வகையில் கர்ணன் மக்களால் புகழப்படுவது சரியே.
    (அமரன்,ஆதவா மற்றும் அக்னி ஆகியோரின் பின்னூட்டம் அவர்களின் நல்ல நோக்கத்தை காட்டுகிறது− வாழ்த்துக்கள்)

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •