Results 1 to 11 of 11

Thread: சொல் வாழ் நாள் முடிவுக்குள்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0

    சொல் வாழ் நாள் முடிவுக்குள்

    Click ஒலி வடிவில்

    நினைக்கின்ற நிமிடங்களை
    உனதாக்கினாய் எனக்கென்று
    ஒரு செக்கனில் கூட
    என்னை காதலிக்க வில்லையா

    பார்க்கின்ற பார்வையால்
    நீயானாய் உன் கண்களின்
    வெளிச்சத்தில் நான் மட்டும்
    இருளா

    பேச்சுக்கிளில் உன் பெயர்களை
    உச்சரிக்க வைத்தாய்
    என் அருகில் உன் பெயர்
    எழுத ஒரு தடவையேனும்
    விரல்கள் முனையவில்லையா

    நீ வரும் நேரங்களுக்கு முன்
    என்னை வரவளைத்தாய்
    ஏன் எனக்காய் நீ
    ஒரு தடவையேனும் காத்திருக்க
    வில்லையா

    வேண்டாம் நான்
    ஒன்றும் உன்னிடம் கேட்டு
    உன்னை துன்புறுத்தவில்லை

    மனதை தொட்டு சொல்
    உனக்கு என்மேல்
    காதல் வரவில்லையா

    இந்த கிறுக்கனின்
    கிறுக்கல்கள் கூட
    உன் இதயத்தில்
    என் பெயரை
    கிறுக்கவில்லையா

    சொல்
    என் வாழ் நாள்
    முடிவுக்குள்
    Last edited by நிரன்; 24-11-2007 at 04:16 AM. Reason: சொற் பிழை

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உங்கள் வரிகளும்
    வரிகளை உச்சரிக்கும்
    வார்த்தைகளும்....
    அப்படியே கவிதை
    இயம்பும்
    உணர்ச்சிக் குவியலில்
    என்னையும்
    தவிக்க வைத்தது சகோதரனே...!!

    நல்ல உணர்ச்சி செறிவுடன் கையாண்ட வார்த்தைப் பிரயோகங்களுக்கு என் பாராட்டுக்கள்....

    நல்லதை நினைத்தால்
    நல்லதே நடக்கும்
    உங்கள் காதலும்
    நன்றே ஈடேற
    என் வாழ்த்துக்கள்...!!
    Last edited by ஓவியன்; 15-11-2007 at 07:22 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பின்னில் தவிப்பான குரல் குயிலாய்..! (ஆண்குயிலும் அழகாய் கூவுமோ? ஆண்-பெண் இரு குயிலும் கூவுமோ? குயிலில் இல்லை பேதமோ?)

    முன்னில் அழகான கவி வரிகள் காதலின் குவியலாய்..!!

    மெல்லிய பின் குரலுக்கு பின்னும் ஒரு மெல்லிய இசை..!
    என்றுமே பிடிக்கும் பிடிப்பிக்கப்படும் ஹரிஹரனின் குரலினிதா வரிகள் இனிதா?

    மொத்தத்தில் கவியோடு கலந்து வந்த பாடல்... பாடலுக்கு முன் வந்த கவி..!

    எவை இனிது என்று பட்டிமன்றம் நடந்தது என்னுள்...!

    இரண்டும் வென்றது... இறுதியில்...!
    பாராட்டுகள் அன்பரே...!!

    சின்ன சந்தேகம்.. மற்றும் அன்பு வேண்டுகோள்: இந்த ஒலி வடிவத்தை எப்படிச் செய்தீர்கள் என்று சொன்னால்... என் போல் பலர் பயனடைவர்... பாடல் பின்னிசை எப்படிச் செய்தீர்கள் என்றும் கூற முடியுமா?
    Last edited by பூமகள்; 15-11-2007 at 07:42 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by பூமகள் View Post
    பின்னில் தவிப்பான குரல் குயிலாய்..! (ஆண்குயிலும் அழகாய் கூவுமோ? குயிலில் இல்லை பேதமோ?)

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பிரிவுத்துயரின் ஆற்றாமையை வாரி வார்த்திருக்கீர் கவிதையாய்..
    குறுந்தொகை

    பாலை

    முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
    ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
    "ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
    அலமரல் அசைவளி அலைப்ப, என்
    உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

    - ஔவையார்

    இப்பாதான் ஞாபகம் வந்தது எனக்கு.. வாழ்த்துகள்
    Last edited by ஆதி; 15-11-2007 at 09:32 AM.
    அன்புடன் ஆதி



  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதி View Post
    குறுந்தொகை

    பாலை

    முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
    ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
    "ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
    அலமரல் அசைவளி அலைப்ப, என்
    உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

    - ஔவையார்
    அன்பான ஆதி!

    பல சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை நீங்கள் மேற்கோள் காட்டிய தொகையில்...

    என் மரமண்டைக்கும் விளங்குமாறு கொஞ்சம் விளக்க முடியுமா..??

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    பாலை

    முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
    ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,
    "ஆஅ! ஒல்" எனக் கூவுவேன்கொல்?-
    அலமரல் அசைவளி அலைப்ப, என்
    உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.

    - ஔவையார்

    தலைவி வரைவிடை ஆற்றாளா தோழிக்கு கூறியது..

    வரை-திருமணம்..

    தன் காதல் துயரை அறியாமல் தூங்கும் ஊரைப்பார்த்து தலைவி ஆற்றாமையில் கவன்றது..
    நான் இங்கு காதற்துயரில் வாட அறியாமல் இவ்வூர் உறங்குகிறது, இதை அறியாது உறங்குவவரை தாக்குவேன், ஆ,ஊ என அலறுவேன் என பொருள்பட பாடியது..

    இதற்கும் இக்கவிதைக்கும் உள்ள் ஒரு பொருத்தம், சங்க காலத்தில் தலைவியின் துயர் அறியாமற் ஊர் உறங்கியது, இந்த காலத்தில் தலைவன் துயர் அறியாமல் தலைவி உறங்குகிறாள்..
    Last edited by ஆதி; 23-11-2007 at 01:27 PM.
    அன்புடன் ஆதி



  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by ஆதி View Post
    இதற்கும் இக்கவிதைக்கும் உள்ள் ஒரு பொருத்தம், சங்க காலத்தில் தலைவியின் துயர் அறியாமற் ஊர் உறங்கியது, இந்த காலத்தில் தலைவன் துயர் அறியாமல் தலைவி உறங்குகிறாள்..
    அடடே அழகான ஒற்றுமை ஆதி!
    உங்களது இந்த வகையான விமர்சனப் பின்னூட்டங்கள் மன்றமெல்லாம் பரவ என் வாழ்த்துக்கள்! (அதில் ஒரு சுயநலமும் உண்டு; அப்போது தானே இது போன்ற விடயங்களை நாம் கற்க ஏதுவாக அமையும்..!)

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    கண்டிப்பாக கூறுகிறேன் இக் கவிதை
    எனது blogspot ல் போட்டுள்ளேன் .. நான் இதை ஒலி வடிவில் அமைக்க எணும் Audacity பயன் படுத்துகிறேன் http://audacity.sourceforge.net/beta...code-1.3.4.exe இந்த software பயன்படுத்துவது மிகவும் சுலபம்
    பின் நீங்கள் செய்த ஒலியை upload செய்த http://www.acidplanet.com பாவிக்கலாம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    உன் வார்த்தைகள் உதிர்ந்தால்,
    என் வாழ்நாள் நீளும்...
    உன் காதல் என்மேல் சொரிந்தால்,
    என் வாழ்க்கை வசந்தமாகும்...

    உவகை தரும் கவியிணைப்பு... மிகுந்த பாராட்டுக்கள்...

    Quote Originally Posted by niranjshan View Post
    பேச்சுக்கிளில் உன் பெயர்களை
    உச்சரிக்க வைத்தாய்
    என் அருகில் உன் பெயர்
    எழுத ஒரு தடையேனும்
    விரல்கள் முனையவில்லையா

    நீ வரும் நேரங்களுக்கு முன்
    என்னை வரவளைத்தாய்
    ஏன் எனக்காய் நீ
    ஒரு தடையேனும் காத்திருக்க
    வில்லையா
    தடவைகள் தடைகள் ஆவதால், திசை மாறுது கவிதை... கவனிக்க...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஓவியன் View Post
    அடடே அழகான ஒற்றுமை ஆதி!
    உங்களது இந்த வகையான விமர்சனப் பின்னூட்டங்கள் மன்றமெல்லாம் பரவ என் வாழ்த்துக்கள்! (அதில் ஒரு சுயநலமும் உண்டு; அப்போது தானே இது போன்ற விடயங்களை நாம் கற்க ஏதுவாக அமையும்..!)
    இது சுயநலம் இல்லை ஓவியன் அண்ணா. பொது நலம்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •