முதன் முதலா மன்றத்தில நான் கவிதையை விட்டுட்டு வேற இடத்திற்கு வந்திருக்கேன். அதுலயும் புதுசா தலைப்போடு வந்திருக்கேன்.
இதென்ன டா டி? டாடியா? பொதுவாவே எல்லா பசங்களும் பசங்களை டா போட்டு கூப்பிடுவாங்க, பொண்ணுங்க மத்த பொண்ணுங்களை டி போட்டு கூப்பிடுவாங்க, அதே மாதிரி ப்சங்க பொண்ணுங்களை செல்லமா டா போட்டு கூப்பிடுவாங்க, ரொம்ப ரேரா பொண்ணுங்களை டி போட்டு கூப்பிடுவாங்க, சரி இப்ப அதுல என்ன இருக்கு அப்படீங்கறீங்களா? சும்மா தான். என்னை பெரும்பாலும் டி போட்டு கூப்பிட்டவங்கதான் அதிகம். ஏன்னா படிச்ச காலேஜ் உமன்ஸ் காலேஜ், நான் படிச்ச காலேஜுக்கு ரொம்ப பக்கத்திலேயே கோவில் இருக்கு. அதோட மெயின்ரோடு வேற. பசங்க கூட்டம் சொல்லவேண்டாமே. அலை மோதும். நாங்க எப்பவாச்சும் தான் கோவிலுக்குப் போவோம். எங்க பின்னாடியே ஒரு கூட்டம் வந்திட்டு இருக்கும். சரி நாங்கன்னு சொன்னது யார் யாருனு அறிமுகப்படுத்தறேன். என்னோட பெஸ்ட் பிரண்ட்ஸ் கலா, நித்தியா, திவ்யா, அப்பறம் பத்மா. ஆக மொத்தம் அஞ்சு பேரு. கலா இனிக்க இனிக்க பேசுவா. அதனாலயே ரொம்ப ஈக்கள் மொய்க்கும். நித்தியா பேசும் போது உடம்பெல்லாம் காயம் ஆகும். ஏன்னா அவ விழுந்து விழுந்து பேசுவா. திவ்யா கடலை மன்னி. பத்மா ஏதோ ஒரு பிஸினஸ் மீட்டிங்கில பேசுறமாதிரி பேசுவா. அவளுக்கு படிப்பைத் தவிர வேறெதுவும் தெரியாது. எங்கபின்னாடி வரும் கூட்டமும் ஒரு காலேஜ் க்ரூப் தான். நான் கொஞ்சம் சைலண்ட் பெர்சன். கொஞ்சம் பொறுங்க, அது வீட்ல மட்டும்தான். வெளியே அப்படியே ஏறுக்கு மாறு. என்னை மாதிரியே என்னோட பிரண்ட்ஸ் எல்லாருமே. அட பாருங்க, ரூட் வேற எங்கயோ போகுது. எங்க பின்னாடி வந்தவனோட ஒருத்தன் கிட்ட திவ்யா பிரன்ஸிப் புடிச்சு வெச்சுகிட்டா. திவ்யா சரியான கடலை. நல்லா வறுப்பா. சில சமயத்தில எண்ணையில்லாம வறுத்து கருகிப் போயிரும். அந்த பையனோட பேரு என்னனு தெரியலை மறந்துடுச்சு. சும்மா வாசுன்னு வெச்சுக்கோங்க, அவன் எங்க எல்லாரையும் ஒருநாள் ஐஸ்கிரீம் பார்லருக்கு கூட்டிட்டு போனான். எல்லாம் திவ்யாவோட ஏற்பாடு. எங்க நாலு பேருக்கும் அதைப்பத்தி தெரியாம போச்சு. அப்பத்தான் அவன்கிட்ட நாங்க பேசினோம். எங்க எல்லாரையும் அவன் பா வெச்சு கூப்பிடுவான். சொல்லுப்பா, என்னப்பா சாப்பிடுப்பா என்று பா வெச்சு கூப்பிட்டான். எங்க கூட்டத்தில கலா கொஞ்சம் கலக்கல். அவதான் ஏண்டா பா பா னு எங்களை எல்லாரையும் பாப்பா ஆக்கற? அப்படின்னு கேட்டா. அப்பறம் நான் சொன்னேன். பா வை உடைச்சுட்டு டா வெச்சு கூப்பிடு அப்படினு. அவன் கேட்டான் பா வை உடைக்க முடியுமா அப்படீன்னான். அதுக்கு நான் சரியா பதில் சொன்னேன். என்ன தெரியுமா?
பாவுக்கு கால் இருக்கு அதனால அதை உடைச்சுடு அப்படீன்னேன். என்னோட கடிய பார்த்துட்டு எல்லாருமே என்னை கடிக்க வந்துட்டாங்க. நல்லவேளை. வாசு மட்டும் சிரிச்சு என்னை காப்பாத்தினான். அப்பறமா ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணினான். ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே. அவன் பொண்ணுங்க இருக்கிறாங்கன்னு இங்கிலீஸிலேயே பேசிட்டு இருந்தான். அதிலயும் அவன் அரைகுறை வேற. திவ்யா எப்படித்தான் இங்கிலிஸீல் கடலை வறுக்கிறானு தெரியலை. அதுக்கு உடனே ஆப்பு வெச்சது பத்மா. அவ சூப்பரா பேசுவா. எங்க எல்லாரையும் விட. கடகட ன்னு பேசி அவனை அப்படியே ஸ்டாப் பண்ணீட்டா.. பாவம் வாசு. அவன் மூஞ்சில ஈ கூட உக்காரலை. ஐஸ்கிரீம் சாப்பிட்டதுக்கப்பறமும் கூட. சரி இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி? எப்படியோ அதோட நான் திவ்யாவை ரொம்ப கடிச்சேன். இந்த மாதிரியெல்லாம் முன்ன பின்ன தெரியாதவன்கூட எங்களை கூட்டிட்டு போகாதே அப்படீன்னு. நான் கடிச்சதுல அடுத்தநாள் ஆஸ்பிடல்ல போய் படுத்துகிட்டா.. உண்மையாவே தாங்க, ஐஸ்கிரீம் சாப்பிட்டு ரொம்பவே சேரலை போலிருக்கு. அதுமட்டுமில்லாம அந்த வாசு திவ்யாகிட்ட ப்ரபோஸ் பண்ணி வம்புக்கிழுத்தானாம். இவ வீட்டுக்கு வந்து தலைவலியிலிருந்து வாந்தி வரை ஏதோ பிரகனண்ட் மாதிரி ஆக்ட் கொடுக்க, அவளோட அப்பா அம்மா என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சு அட்மிட் பண்ணாங்க, சினிமாவில வரமாதிரி ரிப்போர்ட் மாத்தி கொடுத்திடுவாங்களோன்னு நாங்க நாலுபேரும் பயந்துகிட்டே கமெண்ட் அடிச்சோம். பாவம் திவி. ஒருவாரம் இருக்கவேண்டியதா போச்சு. திவ்யா ஆஸ்பிடல்ல இருக்கறப்ப ஏகப்பட்ட போன் கால்ஸ். எல்லாம் அவன்கிட்ட இருந்துதான். திவ்யா படுத்த படுக்கையாக காலைக் கூட எடுத்து வைக்கமுடியாம, வந்த காலை கட் பண்ணீட்டா. அதுக்குத்தான் சொல்றேன். முன்ன பின்ன தெரியாதவங்ககூட யாரும் காபி சாப்பிடவோ இல்லை ஐஸ்கிரீம் சாப்பிடவோ போகாதீங்க. இது என்னோட அட்வைஸ். ரொம்ப தெரிஞ்சவங்கன்னா முதல்ல வீட்ல அறிமுகப்படுத்துங்க. இது பொண்ணுங்களுக்கு மட்டும். ஆண்களை அறிமுகப்படுத்தினீங்கன்னா சீவக்கட்டை விழும். நம்ம முதுகுல. மத்தப்டி நல்லா ஜாலியா கொண்டாடுங்க. அதெல்லாம் சரிதான் இதுக்கும் டா, டி க்கும் என்ன சம்பந்தமுனு பார்க்கிறீங்களா? டா வோ டீ யோ எதான்னாலும் டாடிகிட்ட சொல்லிடனும்.
அன்புடன்
பிச்சி
Bookmarks