Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 21

Thread: தீபத் திருநாள்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    தீபத் திருநாள்..!!



    தீப ஒளி எங்கும் மேவ
    தீபாவளி வந்தததுவே..!

    பட்டாசு வெடிகளில்
    பிரபஞ்சம் மறக்கலாமோ??

    ஓசோன் மழலை வயிற்றில்
    ஓட்டையாக்கும்
    ஓங்கியொலிக்கும்
    ஓய்யார புகைவெடி தேவையா??

    கொஞ்ச புகையும்
    மிஞ்சா சத்தமும்
    நெஞ்சை அதிரா வெடியில்
    பிஞ்சின் மகிழ்வை
    விஞ்சியது உளவோ??

    வெடித்து பின்
    தவிப்பது தகுமோ?
    பார்...!
    தாங்குமோ பார்??

    ஆகாயத்து நட்சத்திரங்களை
    கூரை ஓட்டையின் வழி
    கண்டு எண்ணும்
    ஏழையின் வீட்டில்
    விருந்து படைத்து
    விமர்சியாய் கொண்டாடலாமே??

    பளிச்சிடும் தீப ஒளியில்
    பள்ளி செல்ல ஏழை மழலைக்கு
    கல்வி ஒளி ஏற்றலாமே??

    சிந்தித்தால் தடுக்கப்படுவது
    பிரபஞ்ச நஞ்சும்
    புதிதாய் தொடுக்கப்படுவது
    பாச மனித நேயமும்..!



    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நல்ல கருத்துத்தான். கரியாக்கும் காசை ஒளியாக்கலாம்த்தான். அதற்காக கேளிக்கை பண்டிகை வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது.. அதுவும் வேண்டும், ஆனால் அளவுடன் கேளிக்கை செலவீனம் இருக்கவேண்டும். ஆமா பட்டாசுத்தொழிலால்த்தான் பலர் வீட்டில் அடுப்பு எரியுதாமே உண்மையா?

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    தீபாவளி.

    வீடெங்கும்
    தீபங்களில் ஒளி
    மின்னலை மிஞ்சின

    சிறுமிகள் வைத்த
    பட்டாசுகளின் சப்தம்
    இடியை மிஞ்சின

    காகிதமாய்
    கரைந்த பணங்கள்
    மேகத்தை மிஞ்சின

    அதைக்கண்டு
    தெருவில் அழுத
    ஒரு சிறுமியின் அழுகை
    மழையை மிஞ்சின..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தீபத்திருநாள் என்பது சரியா?
    கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவிதையை வழி தவறி இட்டுவிட்டேனோ?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    தீபத்திருநாள் என்பது சரியா?
    கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!
    தீபாவளி அன்று தீபங்கள் வைக்கவேண்டும்... தீபம்+ஆவளி. (ஆவளி என்றால் சரியான./முறையான என்று நினைக்கிறேன்.)

    தீபத் திருநாளே தீபாவளி...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    தீபத்திருநாள் என்பது சரியா?
    கார்த்திகை தீபத்தையே அப்படி விளிப்பதாக ஞாபகம்!!!
    தீபாவளி அன்று இருள் அகன்று வெளிச்சத்தின் பண்டிகையாக, ஒளித்திருவிழாவாக கொண்டாடுவதால் வித்தியாசமாக பெயர் வைத்தேன்.
    இதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.
    கார்த்திகைத் திருநாளும் தீபத்திருநாள் என்று தான் அழைப்போம்.
    தவறெனில் தலைப்பை தீபாவளி என்றே மாற்றிடுங்கள் அமரன் அண்ணா.
    சுட்டிக் காட்டியமைக்கு மிகுந்த நன்றிகள்.

    Quote Originally Posted by ஆதவா View Post
    கவிதையை வழி தவறி இட்டுவிட்டேனோ?
    சரியான இடத்தில் தான் பதித்துள்ளீர்கள் தம்பி ஆதவா.
    நன்றிகள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தீபம்+ஆவளி--யாரோ ஒரு அசுரனுக்கு அறிவு ஒளி சரியாகக் கிடைத்த நாள் என்றும் கொள்ளலாமோ...
    எங்கள் ஊரில்/நாட்டில் தீபங்கள் வைப்பதில்லை.. கார்த்திகை தீபத்துக்குதான் தீபங்களால் அலங்கரிப்பார்கள்.."தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்" என்னும் பாடல் என்னமோ சொல்கிறதே...!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    எங்க ஊரில் தீபங்களும் ஏற்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அரிது தான்.
    மத்தாப்புகளாலும் வானவேடிக்கைகளினாலும் ஒளியை கொடுத்து இருள் அகன்றதால் அப்படி பெயர்.
    அதாவது அறியாமை இருள் களைந்து அறிவு ஒளி வந்த நாள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கவிதை அருமை பூ..........மா
    பட்டாசு விற்பனையை நம்பி பல வீடு ஒளிர்கிறதே
    Last edited by மனோஜ்; 05-11-2007 at 05:49 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by ஆதவா View Post
    தீபாவளி அன்று தீபங்கள் வைக்கவேண்டும்... தீபம்+ஆவளி. (ஆவளி என்றால் சரியான./முறையான என்று நினைக்கிறேன்.)

    ..
    ஆவளி..... வரிசை.... !

    தீபாவளி...... தீபங்களின் வரிசை.... !!
    Last edited by சாம்பவி; 05-11-2007 at 06:43 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல கவிதை பூமகள். கொண்டாட்டத்தை சமூக அக்கறையுடன் சேர்த்துக் கொண்டாடினால் நன்றாகத் தான் இருக்கும். தீபத்திருநாள் தலைப்பு சரிதானே? பூவின் அழகான கவிதையின் ஒளியில் மன்றம் தீபாவளி கொண்டாட ஆரம்பித்து விட்டதெனச் சொல்லுங்கள். ஆதவரின் பின்னூட்டக்கவிதையும் அருமை. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •