Results 1 to 10 of 10

Thread: தமிழ் குண்டு...

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1

    தமிழ் குண்டு...

    தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர்.

    இரண்டாவது உலகப்போர் காலத்தில் தான் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் எழுபது ஆண்டு காலமாகத்தான் அணுசக்திக் கொள்கையை உலகம் அறியும். ஆனால் இந்த அணுகுண்டுக் கொள்கையை திருவள்ளுவ மாலை பாடலில் காணும் போது, அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. திருக்குறளின் பெருமையை உலகம் அறியும்.

    குறுகிய அடிகளில் (குறள்) மிகப்பெரிய கருத்துகளைப் புகுத்தியது வள்ளுவனின் திறமையாகும். இதை விளக்க வந்த இடைக்காடர் என்ற புலவர் கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் என்று பாடினார்.

    இதையே அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள் என்றும் எழுதுவர்.

    அணுவானாலும் கடுகானாலும் பிளந்து கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (Atom) இருக்கும். அதைப்பிளக்கும் போது பிரமண்டமான சக்தி உண்டாகும்.இதை அணுவியல் படித்தோர் அறிவர்.

    அணு என்பதும் பரமாணு என்பதும் இந்திய அறிஞர்கள் கண்ட மிகச் சிறிய துகள். இறைவனை வருணிக்க வந்த உபநிஷத் அணுவோர் அணீயாம் மஹதோர் மஹீயாம் என்று (அணுவுக்கும் சிறியவன் , பிரமாண்டமான மலைக்கும் பெரியவன்) கூறுகிறது. எனவே அணு என்பதை அறிந்தே அவர்கள் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி என்று கூறினர். புலவர்கள் என்போர் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்.

    ஊனக்கண்களால் காணமுடியாதவற்றையும் ஞானக்கண்களால் அறிவர். கையால்தான் ஒரு அணுவைப் பிளந்தால் ஏழு கடல் அளவு சக்தி கிடைக்கும் என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் போலும்.

    இடைக்காடர் கூற வந்த விஷயம் வேறு, நீங்கள் அதில் விஞ்ஞான கருத்துகளை வலியப் புகுத்துகிறீர்கள் என்று சிலர் கூறலாம். ஆனால் திருமூலரின் மற்றொரு பாடலைக் காண்கையில் அவர்களுக்கு நாம் நினைப்பதைவிட அதிகமாகத் தெரியும் என்று தெளிவாகிறது.

    அணுவைப் பிளப்பதால் வரும் ஆற்றல்(nuclear fussion) அணுகுண்டு செய்யப் பயன்படுகிறது. அணுவை இணைப்பதால் (nuclear fussion) உருவாகும் ஆற்றல் ஹைட்ரஜன் குண்டு செய்யப் பயன்படுகிறது.

    இடைக்காடர் பாடல் அணுகுண்டுக் கொள்கையை நினைவுப்படுத்தும். ஒரு அணுவைத் துளைத்தால் ஏழு கடல் ஆற்றல் கிடைக்கும்.

    பரிபாடல் (3-53), புறநானுறு (2) ஆகிய பாடல்களுக்கு உரை எழுதியோர் உலகம் அணுக்களால் ஆனது என்றும் அணுச் செறிந்த உலகம் என்றும் எழுதியுள்ளனர்.

    இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிறிய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.
    ஒரு கடுகில் 2,62,144 அணு!

    ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

    8 அணு = ஒரு தேர்த்துகள்
    8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
    8பஞ்சிழை = ஒரு மயிர்
    8 மயிர் = ஒரு மணல்
    8 மணல் = ஒரு கடுகு
    8 கடுகு = ஒரு நெல்,
    8 நெல் = ஒரு விரல்
    12 விரல் = ஒரு சாண்
    2 சாண் = ஒரு முழம்
    4 முழம் = ஒரு கோல்
    500 கோல் = ஒரு கூப்பீடு
    4கூப்பீடு = ஒரு காதம்

    அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
    மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
    யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
    லச்சாணிரண்டு முழமாம்.
    - செந்தமிழ் தொகுதி 12 P127

    ஐம்பது ண்டுகளுக்கு முன்பு அணுகுண்டு வெடித்துச் சோதித்தபோது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவர்களில் ஒருவர் ஓபன்ஹீமர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பெரிய அணு விஞ்ஞானி (nuclear physicist) . சோதனைக்காக அணுகுண்டு வெடித்ததை நேரில் கண்டவுடன், அந்த அதிபயங்கரமான காட்சி கண்ணபிரானின் விஸ்வரூபக் காட்சிபோல இருந்தது என்று கூறி பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன யோகத்திலுள்ள ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார்.


    திருமூலர் கணக்கு
    உலகில் வாழும் உயிர்களின் வடிவத்தை சொல்ல வந்த திருமூலர் ஒரு அதிசயமான விசயத்தைச் சொல்லுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.

    100 x 1000 x 100 000=100 000 00 000

    அதாவது ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். இவர்கள் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றால் அது மிகையல்ல.

    மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
    கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
    மேவியது கூறது ஆயிரமானால்
    ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே
    -திருமந்திரம் 1974


    நன்றி :தமிழர் அறிவியல் மாநாடு மலர்.
    Last edited by alaguraj; 01-11-2007 at 09:41 AM.
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் மீனாகுமார்'s Avatar
    Join Date
    12 Nov 2006
    Location
    சென்னை
    Posts
    371
    Post Thanks / Like
    iCash Credits
    8,971
    Downloads
    33
    Uploads
    2
    மிகவும் அருமையான தகவல்... எப்படியோ... யுரேனியம் இல்லாமல் அணுவைப் பிளப்பதற்கு வேறு வழிமுறைகள் கண்டாலும் சரிதான்.
    Last edited by மீனாகுமார்; 30-10-2007 at 05:14 PM.
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

    தமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நல்ல பதிப்பு அருமை நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    வியப்பான தகவல். பகிர்ந்து கொண்ட அழகுராஜ் அவர்களுக்கு
    நன்றி!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    Quote Originally Posted by alaguraj View Post
    இன்றைய அறிவியலில் நாம் படிக்கும் அணுவும் உரையாசிரியர்கள் கூறிய அணுவும் வேறு வேறாக இருக்கலாம். ஆயினும் மிகச் சிறிய பொருள்/துகள் எனும் கருத்திலேயே அவர்கள் பயன்படுத்தினர்.
    எல்லாம் சரியான தகவல் தான் ஆனால் நாம் ஒரு சிறு விசயத்தை மறந்து விடக்கூடாது, நம் தமிழில் போன நூற்றாண்டு கண்டுபிடிப்பான atom என்பதை குறிக்க அணு என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு போதும் இந்த தமிழில் உள்ள அந்த சொல் அணுவிற்க்கு இனையாகாது.

    ஏனென்றால் இன்னும் பலர் தமிழ் நாகரீகத்தை/தமிழனை உயர்வாக பேசும் போது அவ்வையார் காலத்திலே அணு பற்றி நாம் ஆராய்ந்து வைத்திருக்கிறோம். ஆனால் மேல்நாட்டார் தற்போது தான் அணுவை ஆராய்ந்து அணுவை பயண்படுத்த துவங்கியுள்ளனர் என்று பெருமையாக பேசும் போது அவர்கள் அறிவாற்றலை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.

    நம்மவர்கள் நிராவி சக்தியை (இட்லி/புட்டு) உணவு உண்பதற்கு மட்டும் பயன்படுத்தியவர்கள். மேல்நாட்டார் நிராவி எஞ்ஜின் கண்டு பிடித்ததை போல செய்யவில்லை,

    அது போல அணு என்ற சொல்லை ஒப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அது பற்றி ஒரு அளவுகோல் (standard) எதுவும் இல்லை.

    நண்பர்களே மாறுபட்ட கருத்து இருந்தால் சொல்லுங்கள் எதிர்பார்க்கிறேன்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ரசிக்கும் படி இருந்தது. ஆசோ சொன்னது படி அனுவை பயன் படுத்தவில்லை. ஆனால் மனகன்னில் யூகித்திருகிறார்கள். இல்லை விஞ்ஞானம் ரகசியமாக இருந்திருக்கும் அவை அழிந்திருக்கும்.

    மகாபாரதம் யுத்தத்தில் அஸ்திரம் என்று வருவது கிட்டதட்ட ஏவுகனை அனுகுண்டு ரேஞ்சுக்கு பொருந்துகிறது. கிருஸ்னன் சிசுபாலனிடம் சொல்லுவாராம்
    "உன்னை அனுஅனுவாக பிளந்து அந்த ஒவ்வொரு அனுவை கோனாக பிரிப்பேன் (8 கோன் ஒரு அனு) "

    நமது திருகுறள், மகாபாரதம், ராமாயனம் இன்னும் பழைய இலக்கியங்கள் வெறும் அறிவுரை நூலாக மட்டுமே பார்க்காமல் அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் நிரைய விசயம் கிடைக்கும். (அதை ஒருவேலை அமெரிக்காரன் ஆராய்ந்து கொண்டிருக்கலாம் நார் கண்டது)
    Quote Originally Posted by alaguraj View Post
    அணுவை இணைப்பதால் (nuclear fission)
    fushion என்று மாற்றவும் அழகுராஜ்
    Last edited by lolluvathiyar; 01-11-2007 at 09:24 AM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் alaguraj's Avatar
    Join Date
    09 May 2007
    Location
    குவைத்
    Posts
    311
    Post Thanks / Like
    iCash Credits
    37,433
    Downloads
    49
    Uploads
    1
    Quote Originally Posted by lolluvathiyar View Post
    fushion என்று மாற்றவும் அழகுராஜ்
    நன்றி வாத்தியாரே....மாற்றியாகிவிட்டது.....
    ++அழகு++
    ______________________
    வாழ்க தமிழ் அன்னை.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by alaguraj View Post
    ஒரு பழந்தமிழ்ப் பாட்டு அணு பற்றிய தமிழர்களின் அறிவை விளக்குகிறது.

    8 அணு = ஒரு தேர்த்துகள்
    8 தேர்த்துகள் =ஒரு பஞ்சிழை
    8பஞ்சிழை = ஒரு மயிர்
    8 மயிர் = ஒரு மணல்
    8 மணல் = ஒரு கடுகு
    8 கடுகு = ஒரு நெல்,
    8 நெல் = ஒரு விரல்
    12 விரல் = ஒரு சாண்
    2 சாண் = ஒரு முழம்
    4 முழம் = ஒரு கோல்
    500 கோல் = ஒரு கூப்பீடு
    4கூப்பீடு = ஒரு காதம்

    அணுத்தேர்த்துகள் பஞ்சிற்றூய் மயிரன்றி
    மணற்கடுகு நெல் விரலென்றேற-வணுத்தொடங்க
    யெட்டோடு மன்னு விரற் பன்னிரண்டார் சாணாக்கி
    லச்சாணிரண்டு முழமாம்.
    - செந்தமிழ் தொகுதி 12 P127
    .
    பகிர்வுக்கு மிக்க நன்றி அழகுராஜ் அண்ணா...!! புதிய தகவல் எனக்கிது..!!

    Quote Originally Posted by praveen View Post
    அது போல அணு என்ற சொல்லை ஒப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அது பற்றி ஒரு அளவுகோல் (standard) எதுவும் இல்லை..
    உண்மைதான் அண்ணா..!! அளவுகோல் இல்லையா.. இல்லை வெளியே தெளிவாக சொல்லவில்லையா தெரியவில்லை.. ஒருவேளை கீழே வாத்தியார் சொன்னதை போலவும் இருக்கலாம்..!!

    Quote Originally Posted by lolluvathiyar View Post
    நமது திருகுறள், மகாபாரதம், ராமாயனம் இன்னும் பழைய இலக்கியங்கள் வெறும் அறிவுரை நூலாக மட்டுமே பார்க்காமல் அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் நிரைய விசயம் கிடைக்கும். (அதை ஒருவேலை அமெரிக்காரன் ஆராய்ந்து கொண்டிருக்கலாம் நார் கண்டது)
    இருக்கலாம்.. அதனால்தான் அணுகுண்டு வெடிப்பையும் மகாபாரதத்தையும் ஒப்பிட்டு கூறினார்களோ...?!

    ஆமாம்... இதுவெல்லாம் நம்ப அணு அக்காவுக்கு தெரியுமா..?
    Last edited by சுகந்தப்ரீதன்; 04-03-2008 at 07:11 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  9. #9
    இளையவர் பண்பட்டவர் தமிழ்'s Avatar
    Join Date
    15 Jan 2004
    Location
    MUMBAI
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    11,483
    Downloads
    24
    Uploads
    0
    அடேங்கப்பா நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள்?
    ஆனால் அதை போற்றி பாதுகாக்க நமக்கு நேரமில்லை.
    அணுவின்றி அசையாது உலகு..

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நன்றி நண்பரே!!
    தொடர்ந்து தாங்க..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •