ஒண்ணாம்ப்புல எங்கூட ஒண்ணாபடிச்ச
எங்கத்த மொவள கட்டி புடிச்சி
என்ன கட்டிகிறியாடின்னு கேட்டேன்!
உங்கூட்டுக்கும் எங்கூட்டுக்கும் சண்ட
உன்னநா கட்டிக்க மாட்டண்டா மண்டன்னு
சொல்லி இடிச்சி தள்ளிபுட்டு ஓடிபுட்டா!
அஞ்சுவருசம் கழிச்சி அடுத்தூர்ல
ஆறாம்ப்பு படிக்கையில அங்கொருத்திகிட்ட
உன்ன எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னேன்!
உலகமகா குத்தம் செஞ்சுபுட்டதா
'ஓ'ன்னு அழுது ஊரகூட்டி
என்ன ஒதவாங்க வச்சுபுட்டா!
பின்னால பாத்தாம்பு படிக்கிறப்ப
பக்குவமில்லாம பக்கத்து வகுப்பு
பொண்ணுகிட்ட கண்ணால பேசுனேன்!
ஒன்னும் தெரியாத பாப்பாவாட்டம்
என்னபாத்து கண்ணடிக்கிறான் சார்னு
வாத்தியார்ட்ட வசமா மாட்டிவுட்டுட்டா!
அப்புறம் அரும்புமீச அரும்புனப்ப
பக்கதுட்டு பருவ பொண்ணுக்கு
பலவிதமா யோசிச்சு ஒருவிதமா
கொடுத்துட்டேன் ஒருகாதல் கடுதாசி!
வாங்கிட்டு போனவ வழக்கம்போல அவ
அப்பங்கிட்ட ஒப்படைக்க அன்னிக்கு
நடந்த சண்டயில எங்கப்பன் என்ன
எட்டுநாளு வூட்டுகுள்ள வுடல!
அத்தோடசரி இனிஎவளையும் நேசிக்கபுடாதுன்னு
நினைச்சுட்டுதான் கல்லூரிக்கே போனேன்!
அங்கேயும் ஊர்வசி மாதுரிருந்த ஒருத்திய
பாத்துட்டு வேதாளாம் மறுபுடியும் மரமேறிச்சி!
இந்தமுற ஏமாறப்புடாதுன்னு எஞ்சோககத
பூராத்தியும் சொன்னேன் அவகிட்ட?!
எல்லாத்தியும் கேட்டுபுட்டு அய்யோபாவம்
நேத்துதான்டா எனக்கும் தேவந்திரனுக்கும்
நிச்சயமாச்சின்னு சொல்லிட்டு போய்ட்டா!
இதுக்குமேல என்னத்த சொல்ல...?
யாருமே எடுத்துபடிக்காத நூலகத்து
புத்தகமா இன்னைக்கும் இருக்குதுங்க
என் நெஞ்சுகுள்ள காதல்!
Bookmarks