7-5-2008
1. பாகிஸ்தான் இடைத்தேர்தலில் சர்தாரி போட்டியிடவில்லை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும், படுகொலை செய்யப் பட்ட பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி அந்த நாட்டில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது.
2. 560 கோடி மோசடி முயற்சி: லண்டனில் இந்தியர் கைது
லண்டன்: வங்கியில் 560 கோடி ரூபாய் மெகா மோசடி முயற்சியில், இந்தியாவை சேர்ந்த ஒரு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் எசெக்ஸ் பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி.,வங்கியில் ஊழியராக இருப்பவர் ஜக்மீத் சன்னா; வயது 25.
3. ஆட்டோ ஓர்க் ஷாப்பாக மாறிவிட்டது: பாகிஸ்தானில் புராதன இந்து கோயில்
கராச்சி: பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த, கட்டடக் கலை சிறப்பு வாய்ந்த "ரட்டன் டால்கா' என்ற இந்து கோவில், இப்போது ஆட்டோ ரிப்பேர் செய்யும் பட்டறையாக மாறியுள்ளது.
4. பெண்களுக்கு கட்டுப்பாடு: மலேசிய அரசு பணிந்தது
கோலாலம்பூர்: வெளிநாடுகளுக்கு செல்லும் மலேசிய பெண்களுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. பெண்கள் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த திட்டத்தை மலேசிய அரசு கைவிட்டுள்ளது.
5. கிறிஸ்தவரான எழுத்தாளருக்கு ஆபத்து
வாடிகன் சிட்டி: எகிப்து நாட்டை சேர்ந்த சர்ச்சைக்கிடமான, எழுத்தாளர் மாக்தி ஆலம். முஸ்லிம் மதவாதத்தை எதிர்த்து, 55 வயதான இவர் எழுதி வந்தார்; இதனால், பலரின் எதிர்ப்புக்கு ஆளானார். சமீபத்தில் இவர் கிறிஸ்தவராக மதம் மாறினார்;
6-நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைவர் மகள் எம்.பி.யாக நியமனம்
காத்மாண்டு, நேபாள நாட்டில் மாவோயிஸ்டு கட்சி தலைவர் பிரசாந்தாவின் 2-வது மகள் ரேணு தகால் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
7- எதிர்க்கட்சி தலைவர்களை கொல்ல சதி: ஜிம்பாப்வே ஆளும் கட்சி மீது புகார்
டர்பன், தமது உயர்தலைவர்களை கொல்ல அதிபர் ராபர்ட் முகாபே தலைமையிலான ஆளும் கட்சி (ஜானு பிஎப்) சதி செய்வதாக ஜிம்பாப்வே நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Bookmarks