01.ஷெரீப் வேட்பு மனு நிராகரிப்பு
இஸ்லாமாபாத்: பாக்., பொதுத் தேர்தலில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்பது குறித்து பெனசிரும், நவாஸ் ஷெரீப்பும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில், தேர்தலில் போட்டியிட ஷெரீப் செய்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
02. இரண்டு வார சிகிச்சையில் இளமைக்கு திரும்பலாம் * விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி
சிகாகோ: வயதான எலியின் தோலை மீண்டும் இளமையாக மாற்றி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு வார சிகிச்சையில், குறிப்பிட்ட ஒரு மரபணுவை செயல்படவிடாமல் தடுத்தால், மீண்டும் இளமை திரும்பிவிடுகிறது.
03. ஆஸ்திரேலிய புதிய பிரதமர் பொறுப்பேற்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரெட் நேற்று பதவியேற்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
04. இடி அமின் துரத்திய இந்தியர்கள் இன்று "கை'கொடுக்கின்றனர்!'* கட்டமைப்பு உட்பட பல் துறைகளில் பிரபலம்
கம்பாலா,: சொந்த நாட்டில் பல லட்சம் மக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது, உகாண்டாவில் கால் பதிக்கின்றனர்.
05. பிரிட்டனிலும் இந்திய பெற்றோர் பெண் குழந்தையை விரும்புவது இல்லை
லண்டன்: இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர் இருப்பதாக கருதினால், அது தவறு. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்களும், பெண் சிசுக்களை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருகின்றனர்.
06. கணவரால் பெண்கள் கொலை ரஷ்யாவில் அதிகரிப்பதாக தகவல்
நியூயார்க்: கணவரால் கொல்லப்படும் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
07. "அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு கூறி பிரச்னை எழுப்புவதை அனுமதிக்க முடியாது'
கோலாலம்பூர்: "பல்வேறு இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுகளை கூறி பிரச்னை எழுப்பும் முயற்சி அனுமதிக்கப்படாது'
08. இலங்கையில் தொடர் சண்டை 39 புலிகள், 6 ராணுவத்தினர் பலி
கொழும்பு: இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் , ராணுவத்துக் கும் நடந்த கடும் சண்டையில் 39 புலிகளும், ஆறு ராணுவ வீரர்களும் பலியாயினர்.
09. கொழும்புவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது * இலங்கை அரசுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்
கொழும்பு: கொழும்புவில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
Bookmarks