உலகத்தகவல்களுக்கு நன்றி காந்தி அண்ணா
உலகத்தகவல்களுக்கு நன்றி காந்தி அண்ணா
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
15-1-2008
1-பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் 50 பேர் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்- பாகிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
2-பெனாசிரின் மகன் பிலாவல் தன் தாயின் ரத்தத்தில் லாபம் தேடப்பார்க்கிறார்: பாத்திமா
லண்டன், -"பெனாசிரின் மகன் பிலாவல் தன் தாயின் ரத்தத்தில் லாபம் தேடப்பார்க்கிறார்' என்று பெனாசிரின் தம்பி மகள் பாத்திமா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
3-எல்லைப் பிரச்சினை குறித்து ன பிரதமருடன் மன்மோகன் சிங் பேச்சு
பீஜிங்,-மூன்று நாள் பயணமாக நேற்று சினா சென்ற பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் கட்டமாக ஒலிம்பிக் கிராமத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர், எல்லை பிரச்சினை குறித்து சின பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார்.
4-பெனசிர் சடலத்தை தோண்டியெடுத்து பரிசோதிக்கலாம் : முஷாரப் யோசனை
நியூயார்க் : பெனசிர் கொலை குறித்து ஐ.நா., விசாரணைக்கு அனுமதிக்க முடியாது.
5- அச்சுறுத்தி பணம் பறித்ததாக ஹசீனா மீது வழக்கு
தாகா : வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது, தொழில் அதிபரை அச்சுறுத்தி பணம் பறித்த வழக் கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
16-1-2008
1. அமெரிக்க கர்ப்பிணி மாணவிகளுக்கு பேறுகால விடுமுறை தர கோரிக்கை
டென்வர் : அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணம் டென்வரில், பள்ளி சிறுமிகள் தங்களுக்கு பேறு கால விடுமுறை அளிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.
2. அமைதி பேச்சை துவக்க இலங்கை வந்துள்ளது ஜப்பான் குழு
கொழும்பு : அமைதிப் பேச்சை மீண்டும் துவக்கும் வகையில், ஜப்பான் குழு இலங்கை வந்துள்ள நிலையில், அங்கு சண்டை கடுமையடைந்துள்ளது.
3. அரசியலிலிருந்து விலக பாக்., ராணுவ வீரர்களுக்கு உத்தரவு
இஸ்லாமாபாத் : ராணுவத்தைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும், விதிமுறைகளின் படி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு பாக்., ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி உத்தரவிட்டுள்ளார்.
4. லண்டனில் வசிக்க விசா: ஒசாமா மகன் மனு
லண்டன் : தனது இரண்டாவது மனைவியுடன் லண்டனில் வசிக்க அனுமதி கோரி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார் ஒசாமாவின் மகன் ஓமர்.
5. துபாயில் இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
துபாய் : துபாயில் பெண்களை விற்க முயன்ற இந்தியர்கள் இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
17-1-2008
01. இந்திய மீனவர்கள் கைது
கராச்சி: பாகிஸ்தான் கடலோரப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02. முஷாரப்பை கொல்ல சதி : மூன்று பேருக்கு ஆயுள்
இஸ்லாமாபாத் : பாக்., அதிபர் முஷாரப்பை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
03. இலங்கையில் உக்கிரமான சண்டை : புலிகளின் உளவுத்தளம் அழிப்பு
கொழும்பு : இலங்கையில், ராணுவம் மற்றும் புலிகள் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
04. "புகைப்பிடிப்பவருக்குத் தான் வேலை' : ஜெர்மனி ஐ.டி., கம்பெனியில் புதுமை
பெர்லின் : "அலுவலகத்தில் புகை பிடிப்பவர்களை மட்டுமே வேலையில் வைத்துக் கொள்வோம்' என்று ஜெர்மன் நிறுவனம் ஒன்று அறிவித்து, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத மூன்று பேரை வேலை நீக்கம் செய்துவிட்டது.
05. ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் : ஆறு பேர் பலி
காபூல் : ஆப்கானிஸ்தானில் நார்வே நாட்டு வெளியுறவு அமைச்சர் தங்கியிருந்த ஓட்டலில் தலிபான் தற்கொலை படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
18-1-2008
01. பெனசிர் மகனுக்கு பாதுகாப்பு : ஓராண்டு செலவு ரூ.எட்டு கோடி
லண்டன் : பெனசிர் மகன் பிலாவலுக்கு பாதுகாப்பு அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
02. பிரிட்டன் செல்வோருக்கு கைரேகை பதிவு கட்டாயம்
லண்டன் : இந்தியர்கள் உள்ளிட்ட எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பிரிட்டன் செல்ல வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
03. 30 ராணுவ வீரர்களை கொன்று பாக்., கோட்டையை பிடித்தது தலிபான்
இஸ்லாமாபாத் : ஆப்கன் எல்லையில் உள்ள வாசிரிஸ்தான் தெற்கு பழங்குடியினர் பகுதியில், பாக்., பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் இருந்த சரரோகா கோட்டை மீது தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள்...
04. பெனசிர் கொலை குறித்து விசாரிக்க ஐ.நா.,விடம் மனு
இஸ்லாமாபாத் : பெனசிர் படுகொலை குறித்து, விசாரணை நடத்தக் கோரி, அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ஐ.நா.,வில் மனு செய்யப்பட்டுள்ளது.
05. எல்லை பாதுகாப்பு பிரச்னை குறித்து இந்திய சீன அதிகாரிகள் பேச்சு
பீஜிங்: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் சீன வெளியுறவு துணை அமைச்சர் டால் பிங்கோவ் ஆகியோர் இரு நாட்டு எல்லை பிரச்னை குறித்து நேற்று பேச்சு நடத்தினர்.
06. "ஜொள்ளு' கணவர் எங்கு இருக்கிறார் : மொபைல் போன் காட்டிக் கொடுக்கும்
ஹாங்காங்: மொபைல் போன் மூலம் தங்கள் கணவர் அல்லது மனைவியை கண்காணிப்பது அதிகரித்து வருகிறது.
07. 10 சதவீத ஆசிப் சர்தாரி கட்சி தலைவரா? குல்தீப் நய்யார்
பாகிஸ்தான் அரசியல் நாளுக்கு நாள் வியப்பை ஏற்படுத்துகிறது. அங்கே வாரிசு அரசியல் வருவதைப் பற்றி பேசவில்லை.
08. மாஜி பிரதமர் பிளேருக்கு திரும்பி வந்த எஸ்.எம்.எஸ்.,
பாரிஸ் : மொபைல் போனுக்கு தெரியுமா என்ன, இவர் மாஜி பிரதமர் என்று...? ஆம், பிரிட்டனில் மாஜி பிரதமர் டோனி பிளேர், தன் நண்பருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்., தகவலை, அவருக்கே திருப்பி அனுப்பி விட்டது!
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
23-1-2008
1. தூத்துக்குடி நடுக்கடலில் மீனவர்கள் மோதல்
2. திருப்புடைமருதூரில் தைப்பூச தீர்த்தவாரி
3. ஆஸி.,யில் அசத்திய பதான்
4. நெல்லை அருகே மீனவர்கள் இடையே கோஷ்டி மோதல்: ஒருவர் கொலை: பலர் காயம்
5. சிறுத்தைகள் ஜாமீன் மனு செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி
6. கர்நாடக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்
7. திருச்செந்தூ ரில் தைப்பூசம்
8. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் நாடல் ஷரபோவா, ஜான்கோவிக
9. ஹரியானாவைச் சேர்ந்த ஆறு குழந்தைகளுக்கு தேசிய விருது
10. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவராக வாஜ்பாய் நீடிப்பார்
11. கடவுள் விரும்பும் வரையில் பதவியில் இருப்பேன் : கோவா முதல்வர் காமத்
12. டில்லி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் டைட்டானிக் கண்காட்சி
13. ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர்கைது
14. ராமநாதபுரம் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் பலி ; 51 பேர் காயம்
15. பிரதமர் மன்மோகன்சிங் பிப். 9 ம் தேதி விதர்பா செல்கிறார்
16. சத்யமங்கலம் பகுதியில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய குட்டி யானை இறந்தது
தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
25-1-2008
பிரபாகரன் முகாம் மீது குண்டு வீச்சு
விடுதலைப்புலி தலைவர் பிரபாக
ரன் ஆலோசனைநடத்தும் முகாம் மீது இலங்கை போர் விமானங்
கள் குண்டு வீசித் தாக்குதல்.
செவ்வாய் கிரகத்தில் மனித உருவமா?
செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்கள் இருப்பதற்கு வலுசேர்க்கும் விதத்
தில் ஆதாரம் ஒன்று கிடைத்து உள்ளது.
பின்லேடனை தேடிக்கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி எதுவும் செய்யவில்லை பாகிஸ்தான் அதிபர் முஷரப் ஒப்புக்கொண்டார்
பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைப்போம் இலங்கை அதிபர் பேட்டி
அமெரிக்காவில் ஜனாதிபதி போட்டியில் இருந்து ஆலிவுட் நடிகர் விலகினார்
தைப்பூசம் திருவிழாவை புறக்கணித்த மலேசிய இந்து உரிமைக் குழுவினர்
இந்தோனேஷியாவில் பூகம்பத்துக்கு ஒரு குழந்தை பலி-4 பேர் காயம்
ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் மர்ம மரணம்
பாகிஸ்தானுடன் நீண்ட கால உறவு தான் எங்கள் விருப்பம் அமெரிக்க மந்திரி பேட்டி
Last edited by mgandhi; 24-01-2008 at 05:07 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
26-1-2008
1- வடக்கு-கிழக்கு மீண்டும் இணைப்பு இல்லை: சிறிலங்கா அரசு உறுதி - கொழும்பு,
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம (Srilankan Foreign Minister Rohitha Bogollagama ) தெரிவித்துள்ளார்.
2-இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதி செய்ய இலங்கை தடை - கொழும்பு
இந்தியாவிலிருந்து கோழி முட்டை பவுடரையும், பொரித்து ஒரு நாள் ஆன கோழிக் குஞ்சுகளையும் இலங்கை இறக்குமதி செய்து வருகிறது. அண்மையில், மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து இதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது.
3-எகிப்து-காஸா எல்லைச் சுவர் குண்டு வைத்து தகர்ப்பு - காஸா,
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கும் எல்லைச் சுவரின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் குண்டுவைத்துத் தகர்த்தனர். இதையடுத்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் எகிப்து எல்லைக்குள் நுழைந்து தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள்களை வாங்கிச் சென்றனர். இவர்களை எகிப்து பாதுகாப்புப் படையினர் தடுக்கவில்லை.
4-அமைதியை ஏற்படுத்த கென்ய தலைவர்களுக்கு கோஃபி அன்னான் அழைப்பு - நைரோபி,
கென்யாவில் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்புத் தருமாறு அந்நாட்டு அரசியல் தலைவர்களை ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் (Kofi Annan ) கேட்டுக் கொண்டுள்ளார்.
5-வங்கதேசத்துடன் இந்திய எல்லை பாதுகாப்புப் படை ஒப்பந்தம் - டாக்கா,
வங்கதேசத்துடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
6-விடுதலைப் புலிகளின் தலைமையகம் மீது தாக்குதல்: இளந்திரையன் மறுப்பு - தமிழீழம்,
சிறிலங்கா வான் படையினர் இன்று நடத்திய தாக்குதல் குறித்து வெளியிடப்படும் தகவல்களை மலிவுப் பிரச்சாரம் என்று வர்ணித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் (LTTE Military spokesman Irasaiya Ilanthirayan ), இந்த தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
Last edited by mgandhi; 25-01-2008 at 05:03 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
28-1-2008
1.மார்பக புற்றுநோய் அதிகரிப்பது ஏன்?
லண்டன் :பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு, வசதி வாய்ப்பு மற்றும் மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவது ஆகியவை காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
2.மகாத்மா காந்தி பேரன் ராஜினாமா
நியூயார்க் :நியூயார்க்கில் செயல்பட்டு வந்த எம்.கே.காந்தி அகிம்சை நிறுவனத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி ராஜினாமா செய்து விட்டார்.
3.இந்திய துதரை தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி
இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகத்தின் மீது தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4.இலங்கை சண்டை 20 பேர் பலி
கொழும்பு :இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது.
5.வங்கிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய "ரோக் டிரேடர்'
பாரீஸ் :"போக்கிரி வர்த்தகர்' என்ற நிலையில் செயல்பட்ட ஒரு ஊழியர், தான் பணிபுரிந்த வங்கிக்கு தெரியாமல் பல ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட காரணமாக இருந் துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
3-2-2008
01. ரஷ்ய அரசியலை கலக்கும் புடினின் "கவர்ச்சி பெண்கள்'
மாஸ்கோ : "கவர்ச்சி அரசியல்' என்பது தேவை என்பதை ரஷ்ய அதிபர் புடினும் உணர்த்திவிட்டார். அந்நாட்டில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.
உள்ளே
02. போருக்கு சிறுவர்கள் தேர்வு : கருணா மீது ஐ.நா., புகார்
கொழும்பு : இலங்கையில், மோதலில் சிறுவர் களை ஈடுபடுத்தும் பணியில் கருணா அமைப்பு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என ஐ.நா., குற்றம் சாட்டியுள்ளது.
உள்ளே
03. கல்பனா சாவ்லா உட்பட விஞ்ஞானிகளுக்கு அஞ்சலி
ஹூஸ்டன் : கொலம்பியா விண்கலம் நொறுங்கியதில் பலியான கல்பனா சாவ்லா உட்பட ஏழு விஞ்ஞானிகளுக்கு, நாசா விண்வெளி மையத்தில் நேற்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
உள்ளே
04. மருத்துவமனையில் அடைக்கலமான வி.ஐ.பி.,க்களுக்கு சிறை
தாகா : கம்பி எண்ணுவதை தவிர்க்க, மார்பை பிடித்துக் கொண்டு மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊழல் அரசியல் வி.ஐ.பி.,க்களை, மீண்டும் சிறையில் அடைக்க வங்கதேச அரசு ஒரு வார கெடு விதித்துள் ளது.
உள்ளே
05. ஐம்பதில் செக்ஸ் நிச்சயம் தேவையாம்! : ஆனா, காண்டம் பயன்படுத்தணுமாம்
லண்டன் : ஐம்பது வயதை தாண்டியவர்கள், செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில் தவறே இல்லை; ஆனால், காண்டம் பயன்படுத்தாமல் இருந்தா ஆபத்து!
உள்ளே
06. குஜராத் மாலுமிகள் மீட்பு
துபாய் : அரிசி கொண்டு செல்லப்பட்ட சிறு கப்பல் மூழ்கி, பக்ரைன் கடலில் தத்தளித்த குஜராத் மாலுமிகள் 17 பேர் மீட்கப்பட்டனர்.
உள்ளே
07. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி
கொழும்பு : இலங்கையில், "தாமரை பூஜை'யில் பங்கேற்க சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சில் குண்டு வெடித்து 20 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
4-2-2008
1-யாகூ இணையதளத்தை மைக்ரோசாப்ட் வாங்குகிறது - சான் பிரான்சிஸ்கோ,
உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான யாகூவை 44. 6 பில்லியன் டாலர்களுக்கு (ரூ. 1,73,940 கோடிகள்) மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குகிறது.
2- அணு ஏவுகணையை பரிசோதித்த பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்,
அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்த காவ்ரி (ஹதீப்5) நடுத்தர ரக ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
3- ஈராக்கில் தற்கொலை தாக்குதலில் 64 பேர் பலி - பாக்தாத்,
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் பெண் தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை தாக்குதலில் 64 பேர் பலியானார்கள். 107 பேர் காயம் அடைந்தனர்.
4- யாழில் குண்டுவெடிப்பு: 4 பொதுமக்கள் பலி- 15 பேர் படுகாயம் - யாழ்ப்பாணம்,
யாழ். திருநெல்வேலியில் நேற்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
5- தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்ய முடியாது: ஜப்பான் - கொழும்பு,
இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி (Japans special envoy to Sri Lanka Yasushi Akashi ) தெரிவித்துள்ளார்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
12-2-2008
01.பாக்.,கில் தொடர்கிறது பயங்கரம் : மனித வெடிகுண்டுக்கு 400 பேர் பலி
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில், அவாமி தேசிய கட்சியை சேர்ந்த 25 பேர் கொல்லப்பட்டனர்.
02. இந்திய நட்பு : ரஷ்யப் பிரதமர் பெருமிதம்
மாஸ்கோ : "எங்களின் நம்பிக்கைக்குரிய நாடு, இந்தியா'என ரஷ்யா பிரதமர் விக்டர் ஜுப்கோவ் கூறியுள்ளார்.
03. பாக்., அரசுக்கு ஆபத்து : அமெரிக்கா எச்சரிக்கை
முனிச் : பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள அல் குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளால் அந்நாட்டு அரசுக்கு ஆபத்து காத்திருக்கிறது, என அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
04. பிணத்துடன் எட்டு ஆண்டு வசித்துவந்த முதியவர்
லண்டன் : எட்டு ஆண்டுகளாக பிணத்துடன் வசித்திருக்கிறார் பிரிட்டன் முதியவர்.
05.உடல் உறுப்பு அனைத்தும் தெரியும் கண்ணாடி மீன்
பாஸ்டன் : ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி மீனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத் துள்ளனர்.
06. குழந்தைகள் துங்கினால் குண்டாகாது * இதுவும் ஒரு ஆராய்ச்சி
நியூயார்க் : அதிகம் சாப்பிட்டால் தான் எடை கூடுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
07. இந்திய சினிமா புகழை உலகளவில் பரப்புவேன்: ஜெர்மனியில் ஷாருக் பேச்சு
பெர்லின் : ""ஹாலிவுட்டிலோ அல்லது ஐரோப்பிய சினிமா உலகிலோ எனக்கு இடமில்லை என்றாலும் இந்திய சினிமாவின் புகழை உலக அளவில் கொண்டு செல்வேன்,'' என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறினார்.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 2 users browsing this thread. (0 members and 2 guests)
Bookmarks