13-8-2008
1-நேபாளத்தில் புதிய பிரதமரை தேர்ந்து எடுக்க தேர்தல்
காத்மாண்டு, இடைக்கால பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுக்கு பதிலாக புதிய பிரதமர் இன்னும் நியமிக்கப்படவில்லை. தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மாவோயிஸ்டு கட்சி தன் தலைமையில் கூட்டணி ஆட்சியை ஒருமனதாக அமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதை தொடர்ந்து புதிய ஜனாதிபதி ராம் பரண் யாதவ் புதிய பிரதமரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்தும்படி பாராளுமன்றத்துக்கு உத்தரவிட்டு இருக்கிறார்
2- அரசாங்கம், விடுதலைப்புலிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது: ஐ.தே.க.
கொழும்பு,அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
3-இந்தியப் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவு
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் வரும் இந்தியப் பயணிகளை தீவிர கண்காணிப்பு செய்யுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
4-முஷரப்பை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றம் கூடியது
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் முஷரப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்காக, பாராளுமன்றம் கூடியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிக்கப் போவதாக முஷரப் அறிவித்துள்ளார்.
5-பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் 50 தலிபான்கள் பலி
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் நிறைந்த பகுதியில் அந்நாட்டு படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட தலிபான்கள் இறந்ததாக செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
Bookmarks