அவ்வளவு
ஆசையா உனக்கு
என் மீது
கோவத்தில் நீ
சட்டி பானையோடு
சண்டைபிடித்தும்
இவ்வளவு ருசியா
சமைத்திருக்கிறாய்
*
அமாவாசை விரதத்தில் நீ
"கா கா கா" என கரைந்து
கொண்டு வெளியே வருகிறாய்
உன்னைக் கண்டதும்
காகங்கள் குழம்பிவிட்டது
பெளர்ணமி விரதமோ என்று
*
இந்த மழை உடனே
நின்றுவிடும் பார்
எப்படித் தெரியும்
நீதான் குடை
விரித்துவிட்டாயே
*
என் கவிதை படிப்பவர்கள்
எல்லாரும் என் காதலி
கொடுத்து வைத்தவள்
என்கிறார்கள்
அதற்காகவாவது உன்னைக்
காதலிக்க வேண்டும்
எங்கே நீ...
*
என் கண்களுக்கு இமைக்க
மட்டும்தான் தெரியும் உன்
கண்களில் ஒன்றைக்கொடு
உன்னை மாதிரியே
உன்னை நான் இமைக்காது
பார்க்க வேண்டும்
-யாழ்_அகத்தியன்
Bookmarks