அவசரமாய் நான் வீதி
கடக்கையிலும் நீயே
நினைவுக்கு வருகிறாய்
எப்போதோ உன்னோடு
வீதி கடக்கையில் நீ
குட்டுவைத்து குழந்தை
போல் எனை கூட்டிச்
சென்றாயே
*
என்னை எழுத
வைப்பதற்காகவே
கவிதையாய் படுத்துக்
கிடப்பாய் எனக்கு முன் நீ
*
நீ எழுதிய முதல் கவிதை நான்
ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்
*
உன்னை விட தொட்டால்
சிணுங்கி பரவாயில்லை
நீ பேசினாலே சிணுங்கிறாயே
*
பெண்களுடன்
சுற்றி இருக்கீங்களா
என்று கேக்கிறாய்
இல்லையென்றால் நீ
எனக்கு தேவதையாய்
தெரிந்திருக்கமாட்டாய்
-யாழ்_அகத்தியன்
Bookmarks