செண்பக மலர்களை
கண்களால் தழுவும் போது
துய்க்கும் இன்பம் போல
மெய் மறக்க வைக்கிறது கதை..!
கந்தக பூமியின் வாசத்தில்
சுகந்தத்தைக் கலக்கும் நறுமணம்
மூக்குக் குடைய - சுவாசம்
ஏறி இறங்குவது போல
பரவசம் பிரசவிக்கும் எழுத்து நடை...!
கதாநாயகி பூப்பெய்தியபோது
கதை நாயகி பூப்பெய்து
வாழ்த்தி மகிழ்ந்தது முத்தாய்பு..!
துளிருக்காக தளிர் விட்ட முடிவு
களிதரும் கதைக்கு திகட்டா வடிவு....!
ஆரம்ப கால செல்லக்கோபத்தில்
செம்பாவைத் சீண்டிய மோகன்
ரம்பை போல ஆன செம்பாவை
அப்பா அழித்துவிட சோகமாவது
வளர்ச்சியின் முதிர்ச்சி....
ஒட்டு மொத்தத்தில்
கதை சொன்னவிதத்தில்
தெரிகிறது நல்ல தேர்ச்சி....!
Bookmarks