Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 42

Thread: செண்பக மரம்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    செண்பக மலர்களை
    கண்களால் தழுவும் போது
    துய்க்கும் இன்பம் போல
    மெய் மறக்க வைக்கிறது கதை..!

    கந்தக பூமியின் வாசத்தில்
    சுகந்தத்தைக் கலக்கும் நறுமணம்
    மூக்குக் குடைய - சுவாசம்
    ஏறி இறங்குவது போல
    பரவசம் பிரசவிக்கும் எழுத்து நடை...!

    கதாநாயகி பூப்பெய்தியபோது
    கதை நாயகி பூப்பெய்து
    வாழ்த்தி மகிழ்ந்தது முத்தாய்பு..!

    துளிருக்காக தளிர் விட்ட முடிவு
    களிதரும் கதைக்கு திகட்டா வடிவு....!

    ஆரம்ப கால செல்லக்கோபத்தில்
    செம்பாவைத் சீண்டிய மோகன்
    ரம்பை போல ஆன செம்பாவை
    அப்பா அழித்துவிட சோகமாவது
    வளர்ச்சியின் முதிர்ச்சி....

    ஒட்டு மொத்தத்தில்
    கதை சொன்னவிதத்தில்
    தெரிகிறது நல்ல தேர்ச்சி....!
    Last edited by அமரன்; 17-03-2008 at 01:16 PM.

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by யவனிகா View Post
    நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்...
    ஒரு படைப்பு படித்தவனின் மனதில் தன்னை மீறிய சந்தோஷம், துன்பம், பாதிப்பு ஆகிய ஏதோ ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ ஏற்படுத்தினால் அது அப்போது வெற்றி அடைகிறது. அந்த வகையில் யவனிகாவின் "செண்பக மரம்" என்ற அற்புத படைப்பு பெரும் வெற்றி பெறுகிறது. சில வேளைகளில் நல்ல கதை கருக்கள் இருந்தும், எழுத்து நடை ஒத்துழைக்காத பொழுது படைப்பு தோல்வியடைந்துவிடும். அதே போல் நல்ல எழுத்து நடை கதைக்கருவின் பலவீனத்தால் பலனற்றுப்போய்விடும். ஒரு சிறந்த கதைக்கு தேவையான நல்ல கரு, அருமையான எழுத்து நடை ஆகிய இரண்டும் இந்த கதையில் ஒருங்கே நின்று செண்பக மரம் சாய்ந்து விடாமல் தாங்கி நிற்கின்றன.

    படைப்புகளில் புகுத்தப்படும் எழுத்து நடை புதுமைகள் அந்த படைப்பை இன்னும் உயர்த்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அந்த வகையில் நிகழ்காலத்தில் ஆரம்பித்து, பின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து, பின் மீண்டும் நிகழ்காலத்தில் சுபமான திருப்பத்துடன் முடித்த அந்த பாணி மிகவும் வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது..! கதையில் படைப்பாளி கதாபாத்திரங்களை உலவ விட்ட விதம், உரையாடல்களை நூல் பிடித்தது போல் முரணின்றி நகர்த்திய நேர்த்தி இந்த கதைக்கு பெரும் பக்க பலம்.

    இதையின் கதாநாயகியான செண்பக மரத்தைப்பற்றி பேசியே ஆக வேண்டும். மனிதர்களே உணர்ச்சியற்ற மரமாகி, உலகத்தை சீரழித்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு மரத்தை மனித உயிருக்கு நிகரான இடத்தில் வைத்து ஆராதித்த கோகிலாவிடம் யவனிகாவின் இயல்பான குணத்தை பார்க்கிறேன். இந்த கதையை படிக்கும் போது "மழை பெய்யும் ஒரு மாலை நேரத்தில் பெய்யும் மழையை ஜன்னல் வெளியில் வேடிக்கை பார்க்கும்" சுகானுபவம் ஏற்பட்டது, அது வெட்டப்பட்டதை படிக்கும் வரை..! செண்பக மரத்தைப்பற்றி கோகிலா சிலாகித்ததை ஒன்றி ரசித்த நான், அந்த மரம் வெட்டுண்டதை அறிந்த போது என் இதயத்தை வேதனை கோடாரி பதப்பார்த்ததை மறுக்க முடியவில்லை. அந்த மரத்தின் இழப்பு கோகிலாவை போலவே எனக்கும் மனதில் ஒரு நீங்கா ரண வடுவை ஏற்படுத்தி விட்டது.

    ஒரு முடிவுக்குப்பின் இன்னொரு தொடக்கம் இருக்கிறது என்பது இயற்கையின் நியதி. அந்த நியதி கோகிலாவின் செண்பக மரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப பிரச்சினையின் விளைவால் வெட்டிவீழ்த்தப்பட்ட செண்பக மரம், கோகிலா இன்னொரு ஒரு உயிரை பெற்றெடுத்த வேளை துளிர் விட்ட போது செண்பக மரத்தின் முந்தைய முடிவு நிரந்த முடிவல்ல, அது இன்னொரு அற்புதமான தொடக்கத்திற்கான ஆரம்பம் தான் என்பதை உணர முடிந்தது. ஒரு கலவரத்தால் அழிக்கப்பட்ட குடும்பத்தின் கடைசி உயிரான கர்ப்பிணிப்பெண் ஒருத்தி, தான் இறக்கும் முன் ஈன்று விட்டு செல்லும் ஒரு முதல் உயிராக அந்த மரத்தின் துளிரை உணர்கிறேன்.

    இந்த கதையை பொருத்தவரை ஒரே ஒரு குறையை மட்டும் யவனிகாவிடம் சொல்ல வேண்டும். ஒரு மனித உயிருக்கும் மேலாக அன்பு செலுத்தி, உறவு கொண்டாடிய செண்பக மரத்தை பற்றிய இந்த கதையின் தலைப்பை "செண்பகம்" என்று குறிப்பிடாமல் "செண்பக மரம்" என்று குறிப்பிட்டு அதன் மேலான அன்பை வாசகர்கள் குறைத்து மதிப்பிட வழி ஏற்படுத்திவிட்டீர்களோ என்பது எண்ணம். மற்றபடி மனம் நெகிழ வைக்கும் முடிவுடன் கூடிய அற்புத படைப்பு இந்த செண்பக(ம்) மரம்..!

    பாராட்டுக்கள் யவனிகா..!!
    Last edited by அமரன்; 17-03-2008 at 01:16 PM.
    அன்புடன்,
    இதயம்

  3. #27
    Awaiting பண்பட்டவர் Hayah Roohi's Avatar
    Join Date
    17 Oct 2007
    Location
    Sri Lanka
    Posts
    43
    Post Thanks / Like
    iCash Credits
    9,827
    Downloads
    56
    Uploads
    0
    அருமையான கதை ..........
    நெஞ்சை உருக்கியது யவனி அக்கா....
    Read between the lines....
    Think out of box....
    keep moving to stay where you are....

    ITS NEVER TOO LATE FOR ANYTHING IN LIFE!!!

  4. #28
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    "செண்பகம்" என்று குறிப்பிடாமல் "செண்பக மரம்" என்று குறிப்பிட்டு அதன் மேலான அன்பை வாசகர்கள் குறைத்து மதிப்பிட வழி ஏற்படுத்திவிட்டீர்களோ என்பது எண்ணம். மற்றபடி மனம் நெகிழ வைக்கும் முடிவுடன் கூடிய அற்புத படைப்பு இந்த செண்பக(ம்) மரம்..!பாராட்டுக்கள் யவனிகா..!!
    எப்போதும் போலவே இம்முறையும் அசத்தலான,அறிவுப்பூர்வமான உங்கள் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்தேன்,உங்களது பின்னூட்டங்களுக்காவே படைப்புகள் பல படைக்கலாம் போல...குறையையும் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போது தான் அது எனக்கு உரைக்கிறது.கதையை ரசித்துப் படித்துள்ளீர்கள் எனத்தெரிகிறது...ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாயாய் உணர்கிறேன்.இதயப்பூர்வமான தங்களது பின்னூட்டத்திற்கு நன்றிகள் இதய*ம்.

    QUOTE=Hayah Roohi;291513]அருமையான கதை ..........
    நெஞ்சை உருக்கியது யவனி அக்கா....[/QUOTE]

    நன்றி ஹயா.
    Last edited by யவனிகா; 30-10-2007 at 12:19 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #29
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அற்புதமான படைப்பு..மெல்லிய நீரோட்டம் போல சொற்றாடல்..
    கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. மரம் வெட்டுப்பட்டது தெரிந்தவுடன் நம் மனமும் சுருங்கி பின் இறுதியில் முகத்தில் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு.. இது போதுமே கதையின் வெற்றிக்கு..

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் யவனிகா..

  6. #30
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    அற்புதமான படைப்பு..மெல்லிய நீரோட்டம் போல சொற்றாடல்..
    கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. மரம் வெட்டுப்பட்டது தெரிந்தவுடன் நம் மனமும் சுருங்கி பின் இறுதியில் முகத்தில் சின்னதாய் ஒரு புன்சிரிப்பு.. இது போதுமே கதையின் வெற்றிக்கு..

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் யவனிகா..
    நன்றி மதி அவர்களே!
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இப்பத்தான் வாழை னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்.... அடப்பாவமே! ஏங்க.... என்னை முன்னேற விட மாட்டீங்களா?

    கிட்டத்தட்ட உங்கள் கதையே! எனது வாழைக் கதையும். அதில் சிறு பிள்ளை, ஒரு செவிட்டு பக்கத்துவீட்டுக் காரன், ஒரு கண்டிப்பான அம்மா... அப்பறம் வாழை... வாழையை வெட்டி விட்டமமயால் அழும் அந்த குழந்தையை மையமாக வைத்து கதை ரெடி பண்ணி வைத்தால்...... இங்கே முந்திக் கொண்டீர்கள் செண்பகமாய்..

    கதையோடு அந்த சூழ்நிலையை கற்பனை செய்ய வைத்தாக்ல் அது தரம் என்று நினைப்பவன் நான்.. அதில் வெற்றி இந்த கதைக்கு.

    கோகிலாவின் அம்மாவும் அப்பாவும் பேசும் வசனங்கள் இயல்பு நடை. மனதோடு நினைத்து சொல்லும் கதையோட்டம், கவிதை...

    மேலும் தொடர்க..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #32
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இப்பத்தான் வாழை னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்.... அடப்பாவமே! ஏங்க.... என்னை முன்னேற விட மாட்டீங்களா?


    மேலும் தொடர்க..
    நன்றிங்க ஆதவன்..வாழையை பதித்து,வெட்டப்பட்ட அதை வாழ வையுங்கள்...செண்பகத்துக்கு ஜோடியாய் இருந்துட்டுப் போகட்டும்.ஒரே கதைக் கருவை மாறுபட்ட உங்கள் எழுத்திலும் பார்க்க ஆவலாய் உள்ளேன்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #33
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஒவ்வொரு சொல்லும் ஒரு செண்பகப்பூ..
    வரிகள், வசனங்கள் அடுக்குப்பூ..
    மொத்தக்கதையே மணக்கும் மயக்கும் மலர்மாலை..

    கடைசியில் துளிர்த்தது செம்பா மட்டுமா..
    எம் விழிகளும்..

    பாராட்டச் சொற்களில்லை யவனிகா..
    துளிகள் கோர்த்து மாலையாக..
    எழுதிய கரங்களில்..

    வாழ்க!
    Last edited by அமரன்; 17-03-2008 at 01:17 PM.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  10. #34
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    முழுகதையும் படிக்க இமைகள் இடர்செய்வதால்... நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!
    மன்னித்தருள்க அக்கா..!!
    ஹீ,,,ஹீ,,,, பூமகள் அக்காவுக்கு
    இன்னும் அந்த நாளைக்கு வரலியோ,,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  11. #35
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by மலர் View Post
    ஹீ,,,ஹீ,,,, பூமகள் அக்காவுக்கு
    இன்னும் அந்த நாளைக்கு வரலியோ,,
    மலரு... இதைப் பார்க்கலையோ..............??
    அந்த நாள் வந்து ரொம்ப நாள் ஆச்சுமா... தங்கை மலரு....!!
    Quote Originally Posted by பூமகள் View Post
    செண்பக மரத்தின் காற்றில் நாங்களும் உங்களோடு இளைப்பாறிய உணர்வு...!!
    மீண்டும் மரம் துளிர்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..!!
    கதை நகர்ந்த விதம்..... வார்த்தையாடல் வெகு எதார்த்தம்... கதாபாத்திரங்களை தாங்கள் இயல்பாக உள் கொண்டு வருவது மிக அழகு.
    வாழ்த்துகள் யவனி அக்கா..!!
    செண்பா மீண்டும் விரைவில் பூப்பாள் என்று நம்புவோம்..!!
    Last edited by பூமகள்; 10-11-2007 at 11:43 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #36
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    மலரு... இதைப் பார்க்கலையோ..............??
    அந்த நாள் வந்து ரொம்ப நாள் ஆச்சுமா... தங்கை மலரு....!!
    ஹீ...அக்கா நீங்க அந்த முதல் பின்னூடத்தில்
    எடிட் பண்ணாததுக்கு தான் குடுத்தேன்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •