வாழ்க்கை வாழும் வரைதான்...
வாசம் நிரம்பிய பூக்களின்
வாழ்க்கை அந்தப்பூவில்
வாசம் இருக்கும் வரைதான்
பின்பு அது வாழுமிடம்
குப்பைத்தொட்டி
இன்பம் நிறைந்த மனிதனின்
வாழ்க்கை அவன் மனதில்
நல்லெண்ணம் இருக்கும் வரைதான்
பின்பு அவன் வாழுமிடம்
நரகம்.
கருமை நிறைந்த மேகத்தின்
அழகு அது
மழையாய் பொழியும் வரைதான்
பின்பு அது வாழுமிடம்
குட்டை.
Bookmarks