Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0

    கதை கதையாம் காரணமாம் - நிறைவுபெற்றது.

    ஆஸ்கார் விருது வாங்கியே தீருவேன் என்ற மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார் பட்டாபி.

    "கதைக்கெல்லாம் ஆஸ்கார் கொடுக்க மாட்..." பாதியுடன் வாயை மூடிகொண்டு பேஷ்...பேஷ் பிரமாதம் என்றார். வாயை விட்டு அதுக்கு வேற வாங்கிக் கட்டணுமா என்ன?

    கதை எழுதறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நல்ல மேட்டர் வேணுமே? மூளையை கசக்கி, துவைத்து, அலசி, சொட்டு நீலம் போட்டு... யோசித்தாள் கமலா.

    இத்தனை நேரம் சொப்பு விளாண்டுட்டிருந்த கமலாவின் கடைக்குட்டி மீனு ஓடி வந்தாள். அம்மா பத்திரிக்கைக்கு எழுதப் போறீயா? எனக்கு கூட நிறையப் பாட்டு தெரியும்... நான் சொல்றேன்... நீ எழுது... நாந்தான் உனக்கு சொல்லிக் குடுத்தேன்னு மட்டும் யார்கிட்டயும் சொல்லப்படாது... சரியா?

    "தோ...தோ நாய்க்குட்டி... துள்ளி வா..வா.. நாய்க்குட்டி" என்று ராகம் போட்டு ஆரம்பித்தாள். சனியனே... வந்து வாச்சிருக்கு பாரு எனக்குன்னு... அந்தண்டை போ.. தொப்.. தொப் என்று முதுகில் அடிவாங்கியதில் அழுது கொண்டே அப்பாவிடம் ஓடினாள்.

    அவள ஏம்மா அடிக்கற? கதை வேணும்னா எங்கிட்ட கேக்க வேண்டியது தானே.. மேதாவித் தனமா பேசறானே இது கமலாவின் புத்திர சிகாமணி வெங்கி. அம்மா இதப் பாரு... இப்ப ஹாரி பாட்டர் கதைதான் ஹாட் டாபிக். அதையே சாரி பாட்டர்ன்னு மாத்திர வேண்டியது தான்... நம்ம அம்புஜம் பாட்டி தான் சூனியக்கார கிழவி.... மோதிரத்தை அடிச்சுண்டு துடப்பக் கட்டைல ஏறிப் பறந்துண்டே போறா... நம்ம விச்சு தாத்தா ஒட்டடக் குச்சில துரத்திண்டு போறார்... எப்படியிருக்கு ஓப்பனிங்?

    ஏண்டா அம்மா இப்பத்தான் மொத கத எழுதறா? எடுத்தவுடனே அபசகுனமா தொடப்பக்கட்டை. வெலக்குமாறுன்னு அச்சு பிச்சுன்னு ஒளரிண்டு... நல்ல தண்ணி சொம்பு.. இல்லை பசுமாடு வராப்ல ஸ்டார்டிங் வெக்கக்கூடாதாடா அம்பி? இது பட்டாபி.

    ரெண்டு பேரும் செத்த வாயை மூடறேளா? வீட்ல நா ஒருத்தி இருக்ககேன்றதையே எல்லாரும் மறந்துட்டேளா? இது மூத்த குமாரத்தி வனஜா. அம்மா நோக்கு நான் சொல்ல மாட்டேனா நல்ல கதை? கேளு... நம்ம அம்புஜம் பாட்டி அடிக்கடி சொல்லுவாளே.. தேங்காய் சட்னி அரைக்கறச்ச பொட்டுக்கடலைய சிந்தாம அரைன்னு.. நீதான் வாய்க்கு கொஞ்சம்... கல்லுக்கு மிச்சம்ன்னு அரைப்பியே... அப்படி அரைக்கறச்ச ஒரு பொட்டுக்கடலை கீழே விழுந்துடுத்து... அது அப்படியே உருண்டுட்டு வீடு வீடாப் போயி நீயும் பாட்டியும் போடற சண்டையப் பத்தி கோள் சொல்லுது. அதான் கதை எப்படி இருக்கு?

    "நிறுத்து..நிறுத்து... இதே கதையத்தான அந்த சுசித்ரா பொண்ணு குறு மிளகின் கதைன்னு எழுதிச்சு" இது பட்டாபி.

    அதாருண்ணா சுசித்ரா எனக்கு தெரியாம? திடுக்கிடுகிறாள் கமலா..

    "அதான் கமலு... ரேடியோ மிர்சில வருமே... வெடவெடன்னு... முருங்கக்கா மாதிரி... மூக்கு மட்டும் எடுப்பா இருக்குமே.. அந்தப் பொண்ணுதான் குறுமிளகின் கதைய எழுதிச்சி.. அவார்டு கூட வாங்கிச்சே..", இது பட்டாபி.

    .நேக்குக் கூடத் தெரியாம எப்படிதான் இப்படி பொது அறிவு பொங்கித்தோ உங்களுக்கு? அந்தக் கதை வேண்டாண்டி... அப்புறம் காப்பி அடிச்ச கதைன்னு கேஸ் போடுவாள்.. கோர்ட்டு படியேறாத குடும்பம்டி இது.

    ஏன்னா! உங்க தங்கை எதித்த ஆத்துக்காரனோட ஓடிப்போனாளே அதைக் கதையா எழுதட்டா?

    "அடிச்சண்டாளி.. .குடும்ப மானத்தை பத்திரிக்கை வரைக்கும் கொண்டு போகத் துணிஞ்சிட்டாளே உன் பொண்டாட்டி... ஏண்டியம்மா உன் பொறந்தாத்தில ஓடிப்போகாத கதையா? அதையே எழுதிடியம்மா... ஏம்மா எம்மகளை வெச்சுத்தான் நீ கதை எழுதி... பெரிய்ய்ய்ய்ய கதாசிரியர் ஆகணுமா?".. .இது பட்டாபியின் அம்மா அம்புஜம்.

    நீ வேற சும்மாயிரும்மா... அதையெல்லாம் கமலி எழுதமாட்டா? இல்ல கமலு?

    "ஆமா அப்படியே எழுதிட்டாலும்..", நொடிக்கிறாள் அம்புஜம் பாட்டி. இத்தனை களேபரத்திற்கிடையில் என்ட்ரி குடுக்கிறார்... பட்டாபியின் தந்தை விச்சு... என்னம்மா மருமகளே கதைதான வேணும்.... முக்கு வீட்டு தமிழ் வாத்தியார் என் ஃபிரண்டு தானே அவன் கிட்ட கேட்டா சொல்லப்போறான்... சொல்லி வாயை மூடவில்லை.

    அந்தாளு சாதாரண வாத்தியாரில்லை... லொள்ளு வாத்தியாரு... மடிசார் கட்டிண்டு நான் நடந்து போறச்சே.. மொறைச்சு பாத்திண்டே "போட்டிருக்கும் மடிசார் வேசம் பேஷாப் பொருந்துதே...
    எனது பார்வை கழுகுப் பார்வை தெரிஞ்சுக்கோன்னு பாடறான்னா"
    கழுகுப் பார்வையாமா... சரியான கொரங்குப் பார்வை... பி.வாசு பையன்னு நெனப்பு... ஏன்னா நான் அவ்வளவு அழகாவா இருக்கேன் மாம்பழ மடிசார் கட்டுல..?

    அப்படியில்ல கமலு... உன்னைப் பார்த்தா வாத்தியோட செத்துப்போன எள்ளுப் பாட்டிய பாத்த மாதிரி இருக்காமா... அதனால தான் வாத்தி அப்படிப் பாத்திருக்கார்..

    இதை இப்படியே விட்டா சரியாகாதென புரிந்து கொண்ட பட்டாபி...

    என்ன கமலு... யோசிச்சு யோசிச்சு கண்ணுக்குக் கீழே கருவளையமே போட்டிடுத்து போ... எளம் வெள்ள்ரிக்கா நறுக்கி வெச்சிருக்கேன்... அதை கண்ணில வெச்சிட்டு தூங்கினா கனவில நல்ல கதையா தோணும்... என்று எஸ்ஸாகிறார்.

    மறுநாள் காலை... பயத்துடன் எழுந்து வருகிறார் பட்டாபி.

    எண்ணன்ணா... எழுந்துட்டேளா? சூடா உங்க கையால காப்பி போட்டுண்டு வாங்க...

    காப்பியுடன் வரும் பட்டாபி... என்னடா செல்லம்... ஏதாவது கதை கிடைச்சுதா?

    கதையா...?அதெல்லாம் வேலையில்லா பொம்மனாட்டி பண்ற வேலைன்னா... எனக்கு மணி, மணியா புள்ளைங்க இருக்கு... கண்ணுக்கு நெறைவா நீங்க இருக்கேள்... உங்களையெல்லாம் கவனிக்கறத விட்டுட்டு கதை,கத்திரிக்காய்ன்னு டயத்த வேஸ்ட் பண்ணச் சொல்றேளா?பேப்பர் செலவு, போஸ்டல் செலவுன்னு ஆம்படையான் சம்பாதிக்கறத விசிறி அடிக்கற பொம்மனாட்டி நான் இல்ல...

    எதிர் பாராத திடீர் திருப்பத்தால அதிர்ந்து நிற்கிறார் பட்டாபி

    ஆனான்னா... பெரிசா இல்லன்னாலும் இந்த வைரமுத்து, பா.விஜய் அளவுக்கு கவித என்னால எழுத முயும்னு நெனைக்கிறேன்.... கவிதைல ஒரு அட்வான்டேஜ் இருக்குண்ணா... பக்கம் பக்கமா எழுத வேண்டியது இல்லை.. நாலு வரி யாருக்கும் புரியாத மாதிரி எழுதினாப் போறும்... பக்கத்துக்கு நாலு லைன்... நாப்பது பக்கம்... புஸ்தகமே போட்டுரலாம்.... அதாண்னா ஃபேஷனே.... மூச்சு விடாமல் தொடர்கிறாள்.

    அதிர்ச்சி தாங்காமல் மயக்கம் போட்டு விழுகிறார் பட்டாபி

    (முற்றும்)
    Last edited by அமரன்; 17-03-2008 at 01:35 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பேஸ் பேஸ் மாமி....
    கதை கவிதை..... ஆகப்போறது...
    ஆனா.. கமலா மாமி முற்றும் போட்டு முடிச்சிட்டேளே??
    எங்களாத்து மக்களெல்லாம் அழுத்திட்டு வரா மாமி....!!
    செத்த இருங்கோ... நீங்க அடுத்த கதையில வருவீங்கன்னு சொல்லி ஒரு அறிக்கை விட்டுடுங்கோ மாமி..
    பாவம்.. பச்ச பிள்ளக.... ஏங்க வச்சிராதீங்கோ....


    அற்புதமான சிறுகதை...!!
    முடிவு அழகாய் இருக்கிறது யவனி அக்கா.
    தொடராக்கியிருக்கலாம் என்பது என் ஆதங்கம்.

    தொடர்ந்து அசத்துங்க யவனி அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அடக்கடவுளே... கவிஞர்களுக்கு ஆப்பா????

    பாராட்டுக்கள் யவனிகா.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    ம்......மாமி கூட கவிதை எழுத ஆரம்பிட்டாளா....
    பேஷ் பேஷ்...
    வாழ்த்துக்கள் யவனி அக்கா....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    எல்லாரும் மாமிக்கே சப்போர்ட் பண்றேளே....... பட்டாபி மாமா நிலமைய கொஞ்சம் யோசிச்சு பாத்தேளா......
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    மாமி கவிதை எழுதப் போறாங்களா....? மன்றத்துக் கவிஞர்களே ஓடுங்கள்...!
    Last edited by ஜெயாஸ்தா; 11-10-2007 at 06:43 AM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by யவனிகா View Post
    நான் எழுத ஆரம்பிக்கறக்கு முன்னமே இத்தனை ரசிக சிகோண்மணிகளா நேக்கு...நேக்கு கையும் ஓடல..காலும் ஓடல...சீக்கிரமே புஸ்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பேன்...நம்ம அறிஞர் அய்யா தலமைல...மறுக்காம வரணும்,அறு சுவை அரசர் நடராசன் தவலை வடையும்...ரவா கேசரியும் போடப் போறார்...கண்டிப்பா வந்திடுவேள் தான...
    அதுக்காகவாவது வரவேண்டும்.

    ஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா. அறுசுவை நடராஜன் சுவையை ருசித்துக்கொண்டிருக்கும்போது பாதியில் முடிந்து வயிற்று எரிச்சலைக்கிளப்புமே அந்த மாதிரியான சலிப்பு இது..
    கதையை விட கவிதை எழுதுவது சுலபமானதுதான். அது எழுதுபவருக்கு. படிப்பவருக்கு. அதுவும் கமலா மாமி கவிதைகளை படித்துக்காட்டி வெள்ளோட்டம் பார்ப்பது எங்கே? குடும்பத்தில்தானே...பலருக்கு தூக்கம் கெட்டு பித்துப்பிடித்து அலையப்போகிறார்கள்..அதிலும் குட்டி போட்ட பூனைபோல வீட்டுக்குள்ளேயே சுத்தி சுத்தி வரும் திருவாளர் பட்டாபியின் நிலைமை சொல்லத்தேவையில்லை...பல்சுவைக்கதையை நல்ல பதத்துடன் தந்த உங்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    அட சட்டென்று முடிஞ்சிருச்சே என்று சலிக்க வைத்துவிட்டீர்கள் யவனிகா
    முடியக் கூடிய பந்தமா நேக்கு...மன்றத்து கூட...மன்றம் எனக்கு பொறந்த ஆம் போல அமரு அம்பி...எப்ப வேணா பொறப்ப்டு வருவேன்...பழக்க தோசத்துல இந்த பூமலரு கோழிய அடிச்சு கொழம்பு வெச்சுடப் போறா..நல்ல வத்தக் குழம்பும், சுட்ட அப்ளாமும் சமைச்சா இப்பவே வருவா கமலா மாமி...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஆனால் மலரிடம் மட்டும் அல்வா கிண்டுவதற்காக பணம் கொடுத்துவிடாதீர்கள். பின்னர் எமது வயிற்றை நாம் கிண்ட வேண்டி வரும்....
    ஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  12. #12
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மலர் View Post
    ஆமாம் பின்ன வாயை திறக்கவே மாட்டீர்கள்....
    இப்பமட்டும் முடியுதாக்கும்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •