பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்தது
ராட்சத விண்கல் பூமியை நோக்கி வருகிறது. 2029-ல் இது பூமியை தாக்கும். ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட இது 1000 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.
விண்ணில் சூரியனை மையமாக வைத்து சுற்றி வரும் கிரகங்களை போல சிறு சிறு உலோக கற்களும் சுற்றி வருகிறது. `அஸ்டிராயிட்ஸ்' எனப்படும் இந்த ஏராளமான விண்கற்களில் `அபோபிஸ்' என்ற விண்கல்லும் ஒன்று.
2004-ம் ஆண்டில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ராட்சத விண்கல் 2029-ம் ஆண்டு பூமியின் சுற்றுப் பாதையை கடக்கும். அப்போது அந்த விண்கல் சுற்றுப் பாதையை விட்டு விலகி பூமியை நோக்கி இறங்கும்.
அசுர வேகத்தில் இந்த ராட்சத விண்கல் பூமியில் விழுந்து தாக்கும். பூமியில் மோதும்போது முன்பு உலகப் போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 1000 மடங்கு அதிக சக்தி வெளிப்படும். பூகம்பம் ஏற்பட்டது போன்ற அதிர்வு ஏற்படும். இந்த தகவலை ரஷிய வான் இயல் நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
இருந்தாலும் நவீன தொழில் நுட்பங்களையும் செயற்கை கோள்களையும் பயன்படுத்தி இந்த ராட்சத விண்கல் மோது வதை தடுக்க முடியும். அந்த விண்கல்லின் பாதையை திருப்பி விட முடியும் என்றும் அந்த நிபுணர் தெரிவித்து இருக்கிறார்.
Bookmarks