Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: மருதத்தில் - பயணக்கட்டுரை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    மருதத்தில் - பயணக்கட்டுரை

    திருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.

    வேலம்பாளையம் செல்லுவதற்கு ஒருநாளைக்கு மூன்று முதல் ஐந்து பேருந்துகள் வரை வரும். இல்லையெனில் நடந்துதான் செல்லவேண்டும். மருதத்திற்குரிய வயல் காடுகளும் பீக் காடுகளும் முதலில் வரவேற்கின்றன. சிறு பொழுதான வைகறையில் அதாவது காலை ஐந்து அல்லது ஆறு மணியளவில் இங்கே நடைபெறும் தொழிலைக் காணலாம். ஊரில் மொத்தம் எண்ணிப்பார்த்தால் ஐம்பது வீடுகள் இருக்கும். பெரும்பாலும் சொந்தமாக வயல் வைத்திருப்பவர்கள் அதிகம். காலை எட்டு மணியளவில் வயலுக்குச் சென்று பார்வையிட்டால் பசுமையின் குளிர்ச்சியும் சுத்தமான காற்றும் நம்மை வரவேற்கும். ஓரிரு பெட்டிக் கடைகளைக் காண நேரிடலாம். நகரத்து கடைகளைப் போலல்லாமல் வரவேற்பு இங்கே கிடைக்கிறது. அதோடு நமக்குத் தேவையான தின்பண்டத்தை எடுக்கும்போது அந்த நல்லுள்ளம் படைத்தவர்கள் கணக்கு வழக்கின்றி பணம் வாங்குவதோடு நாம் கேட்காமலேயே தருவதும் கிராமத்துக்கே உரிய பாசம். வயலுக்குச் செல்லும் வழியில் ஆடு மேய்ப்பவர்களைக் காணலாம். அவ்வாறு மேய்ப்பவர்கள் லட்சாதிபதிகள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அங்கங்கே சுற்றித் திரியும் கோழிகளும் குஞ்சுகளும், காவல் நாய்களும் நம்மை விருந்தாளியாகவே பார்க்கின்றன. வயலை அடைந்ததும் ஒருவித வாசம் நம்மைக் கவர்கின்றன. அதோடு பாசமும் கவர்கின்றன. அங்குள்ள கிழத்திகள் வரவேற்று உபசரிக்கிறார்கள். வயல் சார்ந்த மருத நிலமாகையால் வீட்டுக்கு அருகே கிணறு வெட்டியிருப்பதைக் காணலாம். அதோடு ஊரில் எண்ணிப் பார்த்தால் வீடுகளின் எண்ணிக்கையைவிட கிணறுகளின் எண்ணிக்கை கூடுதல் என்பது சிறப்பு. கிழத்திகளின் உபசரிப்பைத் தாண்டி, அவர்களின் கொட்டகையைப் பார்வையிட நேரிடுகையில் அங்கே வளரும் எருமைகளையும் பசுக்களையும் ஆடுகள் மற்றூம் கோழிகளையும் காண நேரிடலாம். மருத நில மக்களுக்கு பெரும்பாலான தொழில் வயலிலேயே முடிந்துவிடுகிறது. பகுதி நேரத் தொழிலாக பால் கறத்தல், கோழி வளர்த்தல், ஆடு வளர்த்தல், போன்றவைகள் நடைபெறுகின்றன. இவற்றை பெரும்பாலும் கீழ் மக்கள் செய்கிறார்கள். பால் கடையும் கடைச்சிகள், ஆடு மாடு மேய்க்கும் கடையர்கள், களை பிடுங்கும் உழத்திகள், நாற்றூ நட்டு பயிரிடும் உழவர்கள் என பலரைக் காணமுடிகிறது. இவர்கள் அனைவரும் அரிசன மக்கள். நாளொன்றுக்கு அறுபது ரூபாய்க் கூலியில் வேலை செய்கிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு இவர்களிடம் நிலம் பறித்த சோகம் இன்னும் கண்களுக்குள் தென்படுகிறது. மருதநிலத்திற்குரிய பூச்சிகளாகிய பட்டாம்பூச்சிகளும் மண்புழுக்களும் சில பாம்பு வகைகளும் காணலாம். தென்னை மரம், பனை மரம், ஆலமரம் மற்றும் வேப்பமரங்கள் பெரும்பாலான ஊரை ஆக்கிரமித்திருக்கின்றன.

    காய்கறிகள், கிழங்குகள், கடலை வகைகள், தென்னை, பனை, திணை(மாவு) எனப் பல உணவுப் பொருட்களை பயிரிட்டு வளர்க்கிறார்கள். இந்த ஊர்ச் சிறப்பு இங்கே கண் வலிக்கு நிவாரணியாக ஒரு செடியை வளர்க்கிறார்கள். அழகான பூக்களுக்கு இடையே வளரும் காய்களை நறுக்கி காயவைத்து அரைத்து கிலோ முந்நூறு வரையிலும் விற்கிறார்கள். பெரும்பாலான தோட்டங்களில் இந்த வகைச் செடியைக் காணமுடிகிறது. தெளுவு இங்கே காய்ச்சுகிறார்கள். சுத்தமான தெளுவு கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. பெரும்பாலும் தென்னைமரத்துத் தெளுவுதான் இங்கே இருக்கின்றன. ஒருசிலர் பனைமரத்துத் தெளுவையும் காய்ச்சுகிறார்கள்.

    அனைவரின் வீட்டிலும் கிணறு வெட்டிவைத்திருக்கிறார்கள். ஒருசிலர் வீட்டில் இரண்டு கிணறு வரை காணப்படுகிறது. அரசு கொடுக்கும் இலவச மின்சாரத்தின் வாயிலாக நிலத்தடி நீரை எடுத்து கிணற்றில் விட்டு, பின் மீண்டும் வயலுக்கு வாய்க்கால் வழியாக பாய்ச்சுகிறார்கள். எந்த நேரமும் நீர் இறைக்கும் மோட்டார் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு பண்ணைக்காரர்களும் சுமார் இருபது முப்பது ஏக்கர் அளவில் நிலம் வைத்திருப்பார்கள். அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். அனைத்து வயலுக்கும் நீரை வாய்க்கால் சுமந்து செல்கிறது. அழகாக அமைக்கப்பட்ட பாத்தியின் வழியே நீர் செல்கிறது. இவர்கள் துணி துவைப்பது முதல் குளிப்பது வரை இந்த வாய்க்காலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    வயலை விட்டு வெளியே வந்தால் பலரது வீட்டில் சிறு சிறூ கைவினைத் தொழில்களைக் காணலாம். பனை ஓலையில் கூடை பின்னுவது முதல் விசிறி செய்வது வரையிலும் தொழில்கள் நடைபெறுகின்றன. வீட்டைச் சுற்றிலும் உணவுப்பொருட்கள், தானியங்கள் இறைந்துகிடக்கின்றன. கோழிகள், வாத்துகள், ஆடுகள் ஆகியன அங்கங்கே சுற்றித் திரிகின்றன.

    பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் இல்லை. பீக்காடுகளுக்குத்தான் செல்லவேண்டும். அச்சுறுத்தும் ஊர்வன வகைகள் அதிகம் நடமாடுவதாக சொல்லுவார்கள். என்றாலும் நான் இருந்தவரையிலும் எந்த பிரச்சனையுமில்லை. ஊரில் கேபிள் வசதி இல்லாததால் டிடி எச் உபயோகப்படுத்துகிறார்கள். மேலும் அந்த ஊருக்கு ஒரே கிணறுதான். ஆழம் அதிகம். கிணறுக்கு வெகு அருகே ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. சிறு பிராயத்தில் அங்கே தாயம் ஆடியிருக்கிறேன். இன்றும் பல பெரிசுகள் அங்கே ஆடுபுலி ஆட்டம் ஆடுவதைக் காணலாம். அந்த கோவில் சுமார் நூறு வருடப்பழமை என்று கூறப்படுகிறது.

    ஒருவாறாக குறிஞ்சி மற்றும் மருத நில ஊர்களை ரசித்து ருசித்து நகரம் வந்து சேர்ந்தால் அது நரகமாகவே தென்படுகிறது. இயற்கையான சூழல், காடு மேடு, மலை, வாசம். பீக்காடுகள், சிலிர்த்திடும் காரணிகள், கிராமத்து பாசம், தெளுவு, என அனைத்தையும் விடவா வேறு ஒரு சந்தோசம் இருக்கப் போகிறது......



    கிராமத்தின் எழிலைப் பாருங்கள்...


    ஒரு வீட்டின் பின்புறத்தில்



    கண் வலி மருந்தாக இந்த பூவிலிருந்து வரும் காயை உலர வைத்து பொடியாக்கி மருந்தாக மாற்றுகிறார்கள். இதன் பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்



    அங்கே வளரும் ஒரு பயிர் (வெண்டைக்காய்)



    இங்கு வளரும் உயிரினங்கள்..... என்னே அருமை!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    இளையவர்
    Join Date
    14 Sep 2007
    Posts
    52
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    0
    Uploads
    0
    அவை செங்காந்தள் மலர்கள் .


    மிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.

    கிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    நண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..
    நீங்கள் சொல்வது எதுவோ?

    15.வேலம்பாளையம்
    63.வேலம்பாளையம்
    Last edited by சூரியன்; 06-10-2007 at 12:18 PM.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆதவாவின் அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.
    அங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்தான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.
    Last edited by சிவா.ஜி; 06-10-2007 at 12:26 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by thulithuliyaa View Post
    அவை செங்காந்தள் மலர்கள் .


    மிக அழகிய சரியான வர்ணனைகள்.அனைத்தும் அருமை.

    கிராமியத்தை புகைப்பட வாயிலாக தெள்ளத்தெளிவாக்கினீர்கள்.
    மிகவும் நன்றி துளித்துளியாய்!!!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    நண்பரே திருப்பூரில் நிறைய வேலம்பாளையம் இருக்கிறது..
    நீங்கள் சொல்வது எதுவோ?

    15.வேலம்பாளையம்
    63.வேலம்பாளையம்
    கட்டுரையை சற்று நன்றாக படியுங்கள்....

    நன்றி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    ஆதவாவி அடுத்த நிலப்பயணமும் அழகாக வெளிவந்திருக்கிறது.எவ்வளவு வெள்ளந்தியான மனிதர்கள்,எத்தனை அழகு கொட்டிக்கிடக்கும் வயலும்,காடுகளும்...அருமையான புகைப்படங்கள்.
    அங்கு வாழும் மனிதர்களைப் பார்க்கும்போது,ஒரு ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை.கிராம வாழ்க்கை உண்மையிலேயே சொர்க்கம்தான்.அருமையான பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள் ஆதவா.


    நன்றி சிவா.ஜி அண்ணா.. அப்படியே மற்ற மூன்று நிலங்களையும் பார்க்கும்படி ஏதும் வாய்ப்பு கிடைத்தால் பயணக்கட்டுரையாகத் தருகிறேன்... கிராமத்து சுகமே தனிதான்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    திருப்பூருக்கு அருகே உள்ள ஊத்துக்குளி தமிழ்நாட்டில் வெண்ணை மற்றும் நெய்க்கு பிரபலமான ஊர். அங்கிருந்து சுமார் ஐந்து கி.மீ தொலைவில் ஊத்துக்குளி ரயில் ஸ்டேசனுக்கு சற்றூ தொலைவில் வேலம்பாளையம் அமைந்திருக்கிறது. சுத்தமான கிராமம், வயல்சார்ந்த மருதநில ஊர் வேலம்பாளையம்.
    இந்த பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டேன்.மன்னிக்கவும்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #9
    இளையவர் பண்பட்டவர் rajaji's Avatar
    Join Date
    04 Jul 2007
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    ஆதவா ஒரு விதத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்........

    எனக்கு இது போன்ற ஊர்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைதான்....
    ஆனால் பல காரணங்களால் என்னால் முடிவதில்லை.....

    ஆனால் உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது அக் குறை நீங்கி விடுகிறது....

    கட்டுரையோடு நீங்கள் தரும் படங்கள் சிறப்பாக இருக்கிறது....

    படங்களில் ஊரின் வனப்பு தெளிவாகத் தெரிகிறது.....

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆதவா......
    − ராஜாஜி −

    சுவாசத்தோடு பிணைந்தது தமிழ்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    ஆதவா, பயணக்கட்டுரை அருமை. கிராமத்து கிளர்ச்சி என்று எழுதும்போதே நினைத்தேன், கிராமம் பக்கள் சென்ற சொந்த அனுபவமாகத்தான் இருக்கும் என்று.

    நன்றாக வந்திருக்கிறது கட்டுரை. தொடருங்கள்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அருமை ஆதவா! கண்வலிக்கிழங்கு என்று சொல்வார்கள். ஆனால் கண்வலிக்கு மருந்தாகப் பயன்படுத்த மாட்டார்கள் என என்ணுகிறேன். ஆனால் இதிலிருந்து மருந்துப் பொருட்கள் தயாரிப்பார்கள்(ஆண்மைக்குறைவிற்கு உறுதியாகத் தெரியவில்லை).மருத நாடு சென்று அனுபவித்து வந்திருக்கிறீர்கள். கிழத்தி என நீங்கள் பயன் படுத்திய பதத்தின் பொருள் என்ன? கிழவி என்பதா?? கிழத்தி என்பது வயது முதிர்ந்த பெண்களைக் குறிப்பிடாது. உ:தா: காமக்கிழத்தி என்பது பரத்தையர்கள் அல்லது பாலுணர்வுக்கு மட்டும் வடிகால் தரும் துணைவியைக்குறிக்கும். கடையர், கடைச்சி போன்ற பதங்கள் இடையர் இடைச்சி போன்ற பதங்களுக்கு ஒத்த பொருள் உள்ளனவா? பயணம் முழுவதும் உங்களுடன் வந்த எனக்கு நெருடலாகப் பட்டது "பீக்காடு" என்ற சொல்லாடல்தான். என்னதான் கிராமத்தின் வழக்காயிருந்தாலும் வேறு பதம் பயன்படுத்தியிருக்கலாமே எனத் தோன்றியது. நாம் எப்பொழுதும் அது போன்ற விடயங்களை இலை மறை காயாகவே குறிப்போம் இல்லையா?எனக்கும் அது குறித்த சரியான சொல் தெரியவில்லை. மன்னிக்க. நிறைவான உங்களின் கட்டுரையில் நானும் உடன் வந்த உணர்வு. முல்லை நிலத்திற்கும், நெய்தலுக்கும் எப்பொழுது சென்று வரப் போகிறீர்கள்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஆதவா ஒரு கிராமத்தை பற்றி அழகாக தந்திருகிறீர்கள். குறிப்பாக அதன் மக்களை பற்றி. டவுனில் கடையில் காபி சின்ன கப்பில் தருவார்கள். கிராமத்தில் பெரிய டம்பளார் முழுக்க தருவர்கள். கிராமத்தில் ஓரிரு நாள் இருந்து வந்தால் நகரம் நரகமாகவே தெரியும்.

    நீங்கள் குறிபிட்ட கிராமத்துக்கு நான் போனதில்லை. ஆனால் ஊத்துகுளிக்கு போயிருகிறேன். அங்கு கைத்தமலை மற்றும் சென்னிமலை போயிருகிறேன்.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •