Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 36

Thread: அவளைக் கொன்றுவிடு!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    அவளைக் கொன்றுவிடு!

    இன்னும் சிறிது நேரத்தில் ஒரு கொலை செய்யப்போகிறேன்.யாரை...என்னைப் பெற்றவளை....'படுபாவி..பெத்தவளையே கொலைசெய்ய துணிஞ்சிட்டியே...நீயெல்லாம் ஒரு மனுஷனா' நீங்கள் திட்டுவது கேட்கிறது.ஆம்...இந்த நொடியில் நான் மனிதனில்லை....மனம் மரத்த ஒரு மிருகம்.ஏன் அவளைக் கொலைசெய்யவேண்டும்...?சொல்கிறேன்.அந்த காரியத்தை செய்தபின் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது...அதனால் இப்போதே சொல்லிவிடுகிறேன்..சொல்லிமுடித்ததும்..இன்னும் கொஞ்சம் வேகம் வரும் அது என் செயலுக்கு உதவியாக இருக்கும்.

    அம்மாவின் அப்பாவும் செல்வந்தர்,அப்பாவின் அப்பாவும் செல்வந்தர்.இருவரும் வெகு அழகாக தங்கள் பிள்ளைகளின் திருமண வியாபரத்தை நல்லமுறையில் நடத்தி ஏராளமான பணத்தை இவர்களுக்கு விட்டுச்சென்றார்கள்.தொழில் எதுவும் செய்யவில்லையென்றாலும் ஏழரை (ஏழு என்பதே ஏன் வழக்கத்தில் இருக்கவேண்டும்)தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.வழக்கமான பணக்கார பெற்றோரின் உதாசீனத்தில் நானும் என் அண்ணனும் வளர்ந்தோம்.பெரிய பாசமெல்லாம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை.நடு இரவில் வீடு திரும்பும் பெற்றோர் தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை தட்டி எழுப்பியா கொஞ்சுவார்கள்.அப்படியே கொஞ்சினாலும் அந்த 'மழலை'மொழி கேட்க எங்களால் மு(டி)தியாது.

    அண்ணன் அவன் போக்கில் வளர்ந்தான்,எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற கணக்கே இல்லாமல் செலவழித்தான்.கெட்ட சகவாசம்,கெட்ட பழக்கவழக்கங்கள்...அவனைக் கண்டிக்க யாருமில்லை.படிப்பு ஏறவில்லை.ஆனால் நான் வித்தியாசப்பட்டேன்.எங்கள் தலைமுறையில் யாருடைய மரபணுவோ எனக்கு வாய்த்திருக்கவேண்டும்.படிப்பு ஒழுங்காக வந்தது.கணிணித்துறையில் பொறியியல் படித்தேன்.
    வளாக நேர்முகத்தேர்விலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.சம்பளம் ஒரு பெரிய விஷயமில்லை.அதைவிட அதிகமாக எனக்கு பாக்கெட்மணி கிடைத்துக்கொண்டிருந்தது.ஆனால் நான் வேறு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன்.அதற்கு இந்த வீட்டிலிருந்து வெளியேறி வசிப்பதுதான் சிறந்தது என்று நினைத்ததால் வேறு நகரம் போனேன்.

    நான் பணிபுரிந்த அந்த நிறுவனத்தில்தான் காயத்ரியும் இருந்தாள்.அடடா..இதுவரை என் பெயரைச் சொல்லவில்லையே...என் பெயர் கார்த்திக்.இதை இங்கே சொல்ல ஒரு காரணம் இருக்கிறது.காயத்திரின் நெருக்கம் எனக்கு இந்த பேராலும்,தோற்றத்தாலும் கிடைத்தது.'நீங்க பாக்கறதுக்கு இளமையான அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் மாதிரி இருக்கீங்க...அதிசயமா அதே பேரும் உங்களுக்கு' இப்படித்தான் ஆரம்பித்தது.காஃபிஷாப்,பீச்,மாயாஜால் என்று காதலை வளர்த்தோம்.

    சில நேரங்களில் பிதாமகன் லைலா மாதிரி காயூ என்னைப் பார்த்து'லூஸாடா நீ'என்று கேட்பாள்.ஏனா..? பின்ன அவளை தள்ளி உட்கார வைத்துவிட்டு அரைமணிநேரமாக அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தால் அப்படித்தான் கேட்பாள்.உண்மையில் அவளை பார்த்துக்கொண்டிருக்கும்போது பார்வை மட்டும்தான் அவள் மேல் இருக்கும்,மனதுக்குள் பாரதிராஜா படத்தின் டூயட் ஆடும் வெள்ளைத் தேவதைகள் ஆயிரம்பேர் லல்லல்லா..பாடிக்கொண்டிருப்பார்கள்.'என்மேல் விழுந்த மழைத்துளியே இத்தனைநாளாய் எங்கிருந்தாயென்று' உள்ளுக்குள் உருகிக்கொண்டிருப்பேன்.அந்த அளவுக்கு பாசத்திற்காகவும்,காதலுக்காகவும் ஏங்கியிருந்தேன்.


    காயூவின் குடும்பமும் பணக்காரக் குடும்பம்தான்.அம்மா இல்லை அப்பா மட்டுமே.எப்போதாவது கண்ணில் படும்போது மட்டும் 'என்னடா காயூ...நல்லா படிக்கிறியா..லண்டன் போறேன்..வரும்போது ஏதாவது வேணுன்னா சொல்லுடா மை ஸ்வீட் ஏஞ்சல்' என்பதோடு சரி.அவளும் என்னைப்போலவே வளர்ந்ததால் இருவரும் ஒருத்தர்மேல் ஒருத்தர் காதலை சின்ஸியராக காட்டினோம்.பாசாங்கு இல்லாத பாசத்தை பரிமாறிக்கொண்டோம்.இரண்டு குடும்பங்களுமே அந்தஸ்தில் சமமானவர்களென்பதால் இந்தக்காதல் கல்யாணத்தில் முடிவதில் எந்த தடையுமிருக்காது என்ற என் எண்ணம் இன்று காயுவை அம்மாவிடம் அறிமுகப்படுத்தியபோது உடைந்து சுக்கு நூறானது.

    ஆரம்பத்தில் வரவேற்பென்னவோ பலமாகத்தான் இருந்தது.சடை ஜோக்குகளைச் சொல்லி ஆர்ப்பாட்டமாய் சிரித்தாள் அம்மா.காயூ என்னை பார்த்த பார்வையில்'ப்ளீஸ் காப்பாத்துடா கார்த்திக்'என்று கெஞ்சுவதைப்பொல் இருந்தது.கொஞ்சம் பொறுத்துக்கோ என்று நானும் கண்ணாலேயே பதில் சொன்னேன்.அம்மா காயுவின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தாள்,அவளுடைய அப்பா பெயர் கேட்டாள்.சொன்னதும் இன்னும் கொஞ்சம் விவரம் கேட்ட அம்மாவின் முகம் மாறியது.'அவரோட பொண்ணா நீ' கேட்ட தொணியே வித்தியாசமாக இருந்தது.அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவள் முகத்தை கடுமையாக்கிக்கொண்டு 'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காது' என்று திட்டவட்டமாகச் சொன்னாள்.
    'ஏன்.... ஏன் நடக்காது'கைகால்களெல்லாம் பதட்டத்தில் நடுங்கியபடி கேட்டேன்.
    'நடக்காதுன்னா நடக்காது...இதுக்குமேல என்னை எதுவும் கேக்காதே' சொல்லிவிட்டு அறைக்குள் நுழைய இருந்தவளை இரண்டு கைகளையும் விரித்து தடுத்து கோபத்தோடு மீண்டும் கேட்டேன்..'ஏன்...காரணம் சொல்லு'

    என்னுடைய முக மாற்றத்தையும்,ஆவேசத்தையும் பார்த்த அம்மா முகத்தில் அதிர்ச்சியுடன்'கார்த்திக் இந்த கல்யாணம் நடக்காதுங்கறதவிட நடக்கக்கூடாதுங்கறதுதான் பொருத்தமான வார்த்தையா இருக்கும்.'சொன்னவளைப் புரியாமல் பார்த்தேன்.மீண்டும் ஆவேசமாய்க் கத்தினேன்.அதே வேகத்தில் அம்மாவும் திரும்பக் கத்தினாள்...'ஏன்னா அவ உன் தங்கைடா' கைகாலெல்லாம் ஆட கத்தி சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்திக்கொண்டாள்.அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் திரும்பினேன்.காயு இல்லை.

    நீங்களே சொல்லுங்கள் எந்த பாசத்திற்க்காக இத்தனை வருடங்களாகக் காத்திருந்தேனோ..அது காதலின் மூலமாக கிடைக்குமென்று நினைத்திருந்தேனோ,அவளை எப்படியெல்லாம் மனதில் கற்பனை செய்துவைத்திருந்தேனோ....எல்லாமே இப்போது இல்லையென்றாகிவிட்டதும் எனக்கு எப்படி இருந்திருக்கும்.காயுவின் அப்பா என் அம்மாவின் ஆண் நன்பராம்..அப்படியென்றால் அவரும் எனக்கு ஒரு அப்பாவா..?கடவுளே ஏன் இப்படி....?அந்த நேரத்தில்தான் நான் மிருகமானேன்.இப்படி ஒரு அம்மா இனி இருக்கக்கூடாது.தாய் என்ற உறவு எப்படிப்பட்டது..? தெய்வத்துக்கும் மேலாக மதிக்கப்படும் தாய்மார்களுக்கிடையில் இப்படி ஒரு ஜென்மமா...என் கேள்விகளுக்கெல்லாம்...என் மனதிடம் கிடைத்த பதில்தான் 'அவளைக் கொன்றுவிடு' என்பது.

    சரி காரணத்தை தெரிந்து கொண்டீர்களல்லவா....வீணாக உபதேசம் செய்யாமல் வழிவிடுங்கள்..கதவைத்திறந்து வெளியே போனதும் கொலை செய்யவேண்டும்.

    கதவைத்திறந்து வெளியே வந்தவன் அதிர்ந்தேன்.அம்மா இறந்திருந்தாள்.பக்கத்தில் அப்பா கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன். அப்பாவைப் பார்த்தேன்...


    "நீ கூட என் பிள்ளையில்லையாண்டா...."
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமை சிவா. சிறுகதை வெகு நேர்த்தியாக வந்திருக்கிறது. ஒரு சிறிய கருவை வைத்து அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இறுதி வரிகள் இன்னும் நெஞ்சில் இருக்கின்றன... கதை சொல்வதை அழகாய் செய்திருக்கிறீர்கள். முன்னிலையில் தன்மையாக கதை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல. எல்லா எக்ஸ்பெரஷன்களையும் அடக்கவேண்டும்

    ஒரு கணவனின் மனதைக் கெடுத்தவள் கிட்டத்தட்ட விபச்சாரியாகத்தான் இருக்கவேண்டும். கதைப்படி! திருந்த ஒரு வாய்ப்பேனும் கொடுத்திருக்கலாம். மகனை வாழ வைத்து தந்தை செய்தது உண்மையிலேயே அவர் கார்த்திக்கு அப்பாவாக இல்லாவிடினும் அப்பாவே!

    கதை அருமை
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஆரென்.மன்றத்தின் உறவுகளின் ஊக்கம்தான் அத்தனைப் படைப்பாளிகளையும் அடுத்த படிக்கு கொண்டு செல்கிறது.அந்த வகையில் உங்கள் பாராட்டு உற்சாகத்தைத் தருகிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    டெக்னிகலான விமர்சனம்...கூடவே கதையின் போக்கை கவனித்ததால் வந்த கருத்து....மிக்க நன்றி ஆதவா.என்னவோ தண்டனை கொடுக்கவேண்டுமென தோன்றியது.கொடுத்துவிட்டேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    டெக்னிகலான விமர்சனம்...கூடவே கதையின் போக்கை கவனித்ததால் வந்த கருத்து....மிக்க நன்றி ஆதவா.என்னவோ தண்டனை கொடுக்கவேண்டுமென தோன்றியது.கொடுத்துவிட்டேன்.
    அண்ணா! எதற்கும் அந்த அம்மாவின் நெஞ்சில் கார்த்திக்கின் காதை வைத்து பார்க்கச் சொல்லுங்கள்... உயிர் இருந்தால் பிழைக்க வைக்கலாம்...
    Last edited by ஆதவா; 06-10-2007 at 11:51 AM.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அப்படி செய்து தொடர்ச்சியாக இன்னொரு ட்விஸ்ட் கொடுத்துவிடலாமா..?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அப்படி செய்து தொடர்ச்சியாக இன்னொரு ட்விஸ்ட் கொடுத்துவிடலாமா..?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    இப்படீன்னா........புரியலீங்கோ....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இப்படீன்னா........புரியலீங்கோ....
    எப்படி செய்தாலும் சரியே!
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    கதை அற்புதம் என்று மனதில் நினைத்தாலும் பாராட்ட வார்த்தை வரவில்லை சிவா. காரனம் பாராட்டினால் கொலையை பாராட்டுவது போல ஆகிவிடுமோ என் மனசாட்சி மனமில்லாமால் உறுத்துகிறது.

    கதையின் இறுதி வார்த்தை இன்னொரு கதையை விளக்கியது.
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    "நீ கூட என் பிள்ளையில்லையாண்டா...."
    கதை கொண்டு சென்ற விதம் மிக அருமை. சந்தர்ப்ப சூல்நிலையில் ஒரு மகனின் உனர்ச்சியை அருமையாக காட்டி விட்டீர்கள்.
    ஆனால்
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இப்படி ஒரு அம்மா இனி இருக்கக்கூடாது.தாய் என்ற உறவு எப்படிப்பட்டது..? தெய்வத்துக்கும் மேலாக மதிக்கப்படும் தாய்மார்களுக்கிடையில் இப்படி ஒரு ஜென்மமா
    தாய் என்பது பெற்றெடுத்த உறவுதான். நெறி தவறினாலும் தாய் தாய் தான். ஊருக்கே வேசியே ஆனாலும் மகனுக்கு தாய் தெய்வம் தான்.
    Last edited by lolluvathiyar; 06-10-2007 at 12:06 PM.
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நிச்சயமாக தாய் தாய்தான்.ஆனால் அதைஉணரும் மகனின் மனநிலையில் அவனில்லையே...அதுதான் மனம் மரத்த மிருகமாகிவிட்டானே நியாய தர்மங்களை யோசிக்கும் சக்தி அவன் மூளைக்கு அந்த நிமிடத்திலில்லையே...இப்படித்தானே பல கொலைகள் உணர்ச்சிவயத்தில் நடந்துவிடுகிறது.நீங்கள் சொன்னது உண்மைதான் வாத்தியார்.ஆனால் கொலையைப் பார்க்காதீர்கள் 'கதை'யை பார்த்து சொல்லுங்கள்..தேறுகிறதா என்று.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •