Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: ஒரு நாள் ஒரு கனவு....!

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0

    ஒரு நாள் ஒரு கனவு....!

    நேற்று இரவு பதினோறு மணி இருக்கும், நமது மன்றத்தில் சில தலைப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, அன்பர் அமரன் எழுதிய "அழகிய தீ...! − சிறுகதை" கண்ணில்பட, அதை ஓபன் செய்து படித்துக் கொண்டிருந்தேன். கதை கவிதையாய் இருந்தது. அதற்கு நம் மன்றத்தினர் எழுதிய பின்னூட்டங்கள் பல்வேறு கோணங்களில் அலசப்பட்டிருந்தது. வாத்தியார் எழுதிய பின்னூட்டத்தில் மட்டும் கொஞ்சம் கோயமுத்தூர் லொள்ளு, இலைமறை காய் போல இருந்தாலும், குபுக் என்று என்னையும் மறந்து சிரித்தேன்.

    இரண்டு அறைகள் தள்ளியிருக்கும் படுக்கையறையிலிருந்து, மனைவி மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சிரிப்புச் சத்தம் வந்து கொண்டிருந்தது. "அம்மா, தம்பியைப் பாருங்கம்மா, தூங்கவிடாம தொந்தரவு பண்றான்..", என்று பெரியபையன் அம்மாவிடம் சொன்னான். அதற்கு, "டேய், விளையாடாமா சீக்கிரம் தூங்கு, இல்லேனா உங்கப்பன கூப்பிட்டு அடிக்க சொல்வேண்டா.....", என்று என் மனைவியும் சிறிய மகனை மிரட்டினாள்.

    சிறிய மகன் அம்மாவுக்கு அடங்காத அஞ்சா நெஞ்சன், எனக்கும் மட்டுமே பயப்படுவது போல் நடிப்பான், ஏனென்றால், நானும் அவனை மிரட்டுவது போலல்லவா நடிக்கிறேன். நிறைய தடவை சொல்லிப்பார்த்து எரிச்சலடைந்த மனைவியின் கோபம் என்னை நோக்கி திரும்பியது. "என்னங்க............, என்னங்க.......... கம்புயூட்டர ஆஃப் பண்ணிட்டு இங்க வர்றீங்களா..... இல்ல நாங்க அங்க வரட்டுமா......." என்றாள்.

    "ஐயோ, ராட்சஸி வேற குட்டிச்சாத்தான்களை கூட்டிட்டு இங்க வந்தானா, நம்ம டப்பா டான்ஸ் ஆடிடுமே" என்று கணிணியை ஷட்டவுன் செய்யாமலேயே ஆஃப் செய்துவிட்டு படுக்கையறையை நோக்கி ஓடினேன். "ஏண்டி, காட்டுக்கத்து கத்தற, எல்லாரும் பேசாம தூங்க வேண்டியது தானே....", என்றேன். "யோவ், இங்கபாரு பலதடவை சொல்லிருக்கேன் உங்கிட்ட, பசங்க முன்னாடி வாடி, போடி சொல்லாதனு, அப்புறம் நான் பொல்லாதவ ஆயிடுவேன் ஆமா..." என்று மிரட்டலுடன் கூறினாள்.

    "என் பொண்டாட்டி சொல்றத தான் செய்வா, செய்றதத்தான் சொல்வா....", என்பது என் பத்துவருட திருமண வாழ்க்கை அனுபவம். ஒரு தடவ நான் மப்புல இருக்கும்போது என் உச்சந்தல முடிய பிடிச்சு மாவாட்டுற மாதிரி ஆட்டி, கும்மு கும்முனு கும்மியிருக்கா, இதை வெளிய சொன்னா, எனக்குத்தானே அவமானம்னு மனசுக்குள்ளேயே நொந்து நூடுல்ஸ் ஆன தினங்கள் தான் அதிகம்.

    "ஸாரிடா, செல்லம்...", என்று அவள் அருகில் அனுசரனையுடன் உட்கார்ந்தேன். மனதிற்குள், ஒரு நாளைக்கு இல்லேனா இன்னொரு நாளைக்கு வைக்கிறேன்டி வேட்டு..., என்று நினைத்துக் கொண்டே படுக்கையில் கிடந்தேன். பத்து நிமிடத்தில் அனைவரும் உறங்கிவிட்டனர் போலும், Centralized A/C செய்யப்பட்ட வீட்டினுள்ளேயே, ஒரு தனியறையில் A/C கம்ப்ரஸர், ப்ளோயர் இருப்பதால் அதன் இயக்கம் மட்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

    எனது கண்ணை மூடியிருப்பது மட்டும் நினைவு இருந்தாலும் நான், சிறிது சிறிதாக என் சுயநினைவை இழந்து உறக்கத்திற்குள் சென்று கொண்டிருந்தேன். என் உடல் சுருங்கி, உள்ளம் அகன்ற குழந்தைப் பருவத்துக்குள் சென்றிருக்கிறேன் என்றே சொல்லவேண்டும். ஆம், நான் கனவு கொண்டிருக்கிறேன். அதுவும் என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையல்லவா கனவாய் காண்கிறேன்.

    ரயில்பெட்டி போன்று வரிசையாகக் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள், அவை ஒவ்வொன்றும் மூன்று அறைகளைக் கொண்டிருந்தது. முதல் அறை 10க்கு 10 அடிகள் கொண்டது. அந்த அறை முழுவதும் நிரப்பியது போன்ற ஒரு இரும்பு கட்டில், இது தான் எங்கள் குடும்பத்தின் புரொடக்சன் மெஷின், புரியலயா அட இது தாங்க எங்க பெற்றோரின் ஜல்ஜா பண்ற குல்ஜா கட்டில். பகல் நேரங்களில் இதில் யாரும் அமரமாட்டார்கள். இக்கட்டிலின் மேலே, கிழிந்த பெட்சீட்டால் கவர் செய்யப்பட்ட ஒரு பஞ்சு மெத்தை இருக்கும். ஏழைகளின் பஞ்சு மெத்தையில் உட்கார்ந்தால், ஒரு திடமான பெஞ்சில் உட்கார்ந்தது போன்ற உணர்வையே தரும். எங்கே வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் பஞ்சுமெத்தையின் தன்மை அறிந்து விடுவார்களோ என்று அஞ்சியே, அதை மடித்து ஓரத்தில் வைத்திருப்போம்.

    இந்த வரவேற்பரை கம் பெட்ரூமில் தான் கிழிந்த காக்கிக்கலர் ட்ரவுசர், பட்டன்கள் போய் பின்னூசியால் குத்தப்பட்ட சட்டை சகிதம் நின்று கொண்டிருக்கிறேன். எனது பின்னால் நிற்கும் அம்மா, எனது பரட்டைத் தலைக்கு தேங்காய் எண்ணை வைத்து தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஏண்டா, குளிச்சு எத்தன நாள் ஆச்சு, தலையில கப்பு அடிக்குது...", என்று என் மண்டையில் ஒரு கொட்டு கொட்டினார்கள்.

    "சும்மா, எதுக்கெடுத்தாலும் கொட்டாதம்மா, சோப் தீர்ந்து ஒரு வாரம் ஆச்சு, வாங்கினீங்களா...", என்று எதிர் கேள்வி கேட்டேன். "அத ஏண்டா, ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி சொல்ற..." என்று அதற்கும் ஒரு கொட்டு கிடைத்தது. "ஊம், ஊம், ஊம்..........", என்று அழ ஆரம்பித்தேன்.

    "சண்டாள நாயே, வீட்டுக்குள்ள அழுகுறியா... முதல்லயே வீட்டுக்குள்ள கஷ்டம், இதுல நீ வேற அழுது என் உயிர வாங்குறியா...." என்று முதுகில் ரெண்டும் வைத்தார்கள்.

    "நீ அடிச்சதால் தானே அழுகுறேன், ஒண்ண வளத்துறதுக்கே துப்புல்ல இதுல பத்தாவதா என்ன வேற பெத்துட்டு அடிக்கிறயா...", என்று கேள்வி கேட்டு கை ஓங்க, நான் என்ன 2007ன் குழந்தையா?

    அம்மா அடியின் வலியைக்காட்டிலும், தனது ஏழ்மையை மறைப்பதற்காக மேலும் என்னை அடித்தது தான், என் அழுகையை கூட்டியது. சிறுவனக்கெப்படி தெரியும் ஏழ்மை மறைக்கப் படவேண்டுமென்று.

    "சரி, சரி அழுகையை நிறுத்துடா....... சும்மா, நீலிக்கண்ணீர் வடிச்சுட்டு...." என்று அம்மாவின் அதட்டல் அதிகமாகவே, என் அழுகையைச் சத்தத்தை நிறுத்தி மனதில் மட்டுமே அழுது கொண்டிருந்தேன்.

    "ஊம், ஊம், ஊம்............ அம்மா பால், ஊம்........ தீக்கிதம் பால் குதும்மா...", என்ற பிஞ்சு மொழியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, என் காதில் விழுகிறது. எனக்கும், மனைவிக்கும் நடுவில் உறங்கிக் கொண்டிருக்கும், மூன்று வயதான இரண்டாவது குழந்தையின் தொடைகளில் ஓங்கி ஒரு அடி வைக்கிறாள், என் மனைவி.

    "சனியன் புடிச்சவனே, அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கு... தூங்க வந்தா அப்பன் விடுறதில்ல, தூக்கம் வந்தா பையன் விடுறதில்ல..." என்று சலித்துக் கொண்டே பால் கலக்க கிட்சனை நோக்கி நடந்தாள் என் மனைவி.

    கனவு கலைந்தது.

    கதையின் மூலம் நான் சொல்ல வருவது: சிறுவனாக வரும் ஏழைத்தாயின் மகனும், குழந்தையாக வரும் பணக்காரத்தாயின் மகனும், அம்மாவால் அடிக்கப்படுகிறார்கள். விலங்குகளுக்கு கூட ஒரு புளுகிராஸ் இருக்கிற காலமிது, குழந்தைகளை அடிக்காதீர்கள்.
    Last edited by நுரையீரல்; 06-10-2007 at 05:50 AM.
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  2. #2
    இளையவர் பண்பட்டவர் rajaji's Avatar
    Join Date
    04 Jul 2007
    Posts
    73
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    சில இடங்களில் நகைச்சுவையும் சில இடங்களில் நெருடல்களும் பிணைந்த பதிப்பு.....

    (நண்பரே உங்களுக்கு அசாதாரண தைரியம் உண்டு....)
    − ராஜாஜி −

    சுவாசத்தோடு பிணைந்தது தமிழ்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஆகா ராஜா உங்கள் முதல் கதையை படித்து பிரமித்து போனேன். உங்கள் அனுபவங்களை மிக அருமையாக சொல்லி இருகிறீர்கள். பத்தாவது மகனா நம்பவே முடியவில்லை. எப்படி தான் சமாளித்தார்களோ. ஆனால் உங்கள் பெற்றோர் இத்தனை கஸ்டத்திலும் உங்களை வளர்த்தி இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருகிறார்கள்.

    உங்களை பாராட்டுவதற்க்கு பதிலாக உங்கள் அம்மாவை தான் பாராட்ட வேண்டும்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    வாத்தியார் சொன்னமாதிரி உங்கள் பெற்றோர்களைப் பாராட்டவேண்டும். பத்தாவதாக இருந்தும் கூட இந்த மாதிரி உங்களை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்திருப்பதை. சரளமான நடை உங்களுக்கு வருகிறது. தொடர்ந்து உங்களிடமிருந்து நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    கதையைப் படித்து கருத்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள் பல. இக்கதையின் மூலம் சொல்ல வந்த முக்கிய விஷயமே, குழந்தைகளை அடிக்காதீர்கள் என்பதே. தந்தை சிறுவனாக இருக்கும்போது ஏழ்மையில் இருக்கிறான், அதை விளக்கவே அவனுடைய குடும்ப சூழல் மற்றும் பிறப்பு வரிசை ஆகியவற்றை சொன்னேன். மகன் செல்வந்தர் வீட்டு குழந்தையாக இருக்கிறான், அதை விளக்கவே கம்ப்யூட்டர், வீட்டிலுள்ள அறைகள், சென்ட்ரலைச்ட் ஏ.ஸி எல்லாம் சொன்னேன்.
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டப்படவேண்டிய உங்கள் பெற்றோர்....பெற்றொரும் பெருமைப்படவேண்டிய மகனாக நீங்கள்.ஒன்டுக்குடித்தனம் என்ற ஒரு சங்கடமான அவஸ்தையை அனுபவித்தவன் என்ற முறையில் என்னால் அந்த ஏழைத்தாயின் பரிதவிப்பை மிக நன்றாக உணரமுடிகிறது.காட்சிகளின் விவரிப்பு மிக அருமை.அன்று அடிவாங்கிய குழந்தைக்கும்,இன்று அடிவாங்கிய குழந்தைக்கும் வித்தியாசம் பொருளாதாரத்தில் இருக்கிறது...ஆனால் அடி என்னவோ விழுந்துகொண்டுதான் இருக்கிறது.பெரும்பான்மையான பெற்றோர்கள் செய்யும் தவறு இது.சின்னக்குழந்தைகளை அடிக்கடி இப்படி அடித்தால்..முரட்டுத்தனமாகிவிடுவார்கள். கூடுமானவரை மிரட்டியே காரியம் சாதிக்கவேண்டும்.பாராட்டுக்கள் ராஜா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் தளபதி's Avatar
    Join Date
    17 Jul 2007
    Location
    Saudi Arabia
    Posts
    360
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    1
    Uploads
    0
    தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நண்பரே!!

    எனக்கு என்னவோ அந்த இரண்டு தாயின் செயல்களிலும் வருத்தம் வரவில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று சொல்லவந்தாலும், எந்த அளவு அடி, எந்த நேரத்தில் எந்த அளவிற்கு அந்த குழந்தைக்கு பயன்படும் என்று அந்த தாயிற்கு தெரியும். தான் எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தந்தையோ மற்றவர்களோ ஒரு அடி கூட அடிக்கவிடமாட்டாள். தந்தையைக் கூப்பிடுவதே, தான் கொடுக்க நினைக்கும் சின்ன அடியையும் தவிர்ப்பதற்காகவே. அவர் வந்து மிரட்டினால் காரியம் கைக்கூடாதா என்ற எண்ணம் தான் அது.

    என் அம்மாவிடம் அடிவாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அடித்துவிட்டு அவள் கை வலிப்பதாகச் சொல்லும்போது "நான் வளர்கிறேனே அம்மா" என்று சொல்வேன். மீண்டும் அடிக்க துரத்துவார்.

    நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு, எல்லா ஆண்மகன்களுக்கும் நடப்பதுபோல் எனக்கும் என் அம்மாவிற்கும் கொஞ்சல்களில் இடைவெளி விழ, என் தம்பிக்கு மட்டும் நிறைய முத்தங்கள் கிடைப்பதைப் பார்த்து பொருமிய நான், ஒருமுறை என்னை அடிக்கவந்தபோது, அடிக்கமட்டும் எப்போதும் போல் என்னைத் துரத்துகிறீர்களே, ஏன் அம்மா எனக்கு முத்தம் கொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்??" ஒருகணம் நின்று விட்டு, கோபம் மறந்து என்னை அணைத்து எனக்கு முத்தமிட்ட தாயின் வாயிலாக அனைத்து தாயையும் பார்க்கிறேன். அவர்களுக்குத் தெரியும் எப்போது குழந்தயை அடிக்கணும் அணைக்கணும் என்று.

    கோழி மிதித்து குஞ்சு முடமாகாது. தாயை தவிர யாருக்கும் (தந்தையும் உட்பட) இது பொருந்தாது.

    நீங்கள் எழுதிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. சரளமாக உங்கள் எழுத்து அழகிய மலர்சரம் போல் சென்றது. மீண்டும் உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன்.
    Last edited by தளபதி; 06-10-2007 at 06:01 AM.
    அளவில்லா அன்புடன்,

    தளபதி.

    எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது.
    எது நடக்குமோ அதுவும் நல்லதாகவே நடக்கும்
    .

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by தளபதி View Post
    தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நண்பரே!!

    எனக்கு என்னவோ அந்த இரண்டு தாயின் செயல்களிலும் வருத்தம் வரவில்லை. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்று சொல்லவந்தாலும், எந்த அளவு அடி, எந்த நேரத்தில் எந்த அளவிற்கு அந்த குழந்தைக்கு பயன்படும் என்று அந்த தாயிற்கு தெரியும். தான் எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் தந்தையோ மற்றவர்களோ ஒரு அடி கூட அடிக்கவிடமாட்டாள். தந்தையைக் கூப்பிடுவதே, தான் கொடுக்க நினைக்கும் சின்ன அடியையும் தவிர்ப்பதற்காகவே. அவர்களுக்குத் தெரியும் எப்போது குழந்தயை அடிக்கணும் அணைக்கணும் என்று.

    கோழி மிதித்து குஞ்சு முடமாகாது. தாயை தவிர யாருக்கும் (தந்தையும் உட்பட) இது பொருந்தாது.
    .
    ஆஹா...இதில் இப்படி ஒரு கோணம் இருக்கிறதா..? அசத்திட்டீங்க தளபதி.மிக அழகான விளக்கம்...ஏற்றுக்கொள்ளக்கூடியது.பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    இரு வேறு சூழல்களில் வளரும் இளஞ்சிறார்களின் மனோநிலைப் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க S.ராஜா அண்ணா.
    இது தான் ஜெனரேசன் கேப் என்று சொல்வார்களோ??
    குழந்தைகளைப் பொறுத்தவரை... அவர்கள் வளரும் சூழலும் அவர்களின் குணாதியசங்களின் வடிவமைப்புக்கு ஒரு காரணமாக அமையும் என்று கண்டுபிடித்துள்ளனர். அத்தகைய வகையில் இரு வேறு பரிணாமத்தை எங்களுக்கு வெகு எதார்த்தமான எழுத்துக்களின் மூலம் சொல்லி அசத்திவிட்டீர்கள்...!!
    மிகுந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள் ராஜா அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by S. ராஜா View Post
    கதையின் மூலம் நான் சொல்ல வருவது: சிறுவனாக வரும் ஏழைத்தாயின் மகனும், குழந்தையாக வரும் பணக்காரத்தாயின் மகனும், அம்மாவால் அடிக்கப்படுகிறார்கள். விலங்குகளுக்கு கூட ஒரு புளுகிராஸ் இருக்கிற காலமிது, குழந்தைகளை அடிக்காதீர்கள்.


    நிங்க* அடி வாங்கிய* போது புளுகிராஸ் வ*ந்து இருக்க*லாம்

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    குழந்தைய அடிக்காம வளர்ப்பதா ? என்னய்யா சொல்லுறீங்க? எங்க வீட்டு வாலுகளை ஒரு பத்து நிமிடம் வைத்து இருங்கள் ? அவ்வளவுதான் முடியை பிச்சுக்கு ஓட வேண்டியது தான். அதுவும் சின்னது இருக்கே அதுவே முடியெல்லாம் பிச்சு வீசிறும்..

    வலிக்காமல் பயப்படும்படியா அடிப்பது போல மிரட்டனும். விடுற சவுண்டில் கப்சிப்னு உட்காரணும்.

    எங்க வாலுகள் இரண்டும் ஏம்பா கத்துறே என்பார்கள் பட்டாத்தான்யா புரியும்
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by தங்கவேல் View Post
    குழந்தைய அடிக்காம வளர்ப்பதா ? என்னய்யா சொல்லுறீங்க? எங்க வீட்டு வாலுகளை ஒரு பத்து நிமிடம் வைத்து இருங்கள் ? அவ்வளவுதான் முடியை பிச்சுக்கு ஓட வேண்டியது தான். அதுவும் சின்னது இருக்கே அதுவே முடியெல்லாம் பிச்சு வீசிறும்..

    வலிக்காமல் பயப்படும்படியா அடிப்பது போல மிரட்டனும். விடுற சவுண்டில் கப்சிப்னு உட்காரணும்.

    எங்க வாலுகள் இரண்டும் ஏம்பா கத்துறே என்பார்கள் பட்டாத்தான்யா புரியும்
    ண்ணோவ்... எங்க வீட்டிலயும் ரெண்டு இருக்கு. பெரிசு பொறுமையின் சிகரம். சிறிசு வீச்சருவா வேலுச்சாமி கையில கிடைக்குறதையெல்லாம் வீசுவான்.

    குழந்தைய மிரட்டக்கூடாதுனு பள்ளிக்கொடத்துலயே சட்டம் இருக்கு. அத வீட்டுக்கும் போடணும். தன்னம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தான் குழந்தைகளை அடிப்பார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம்.

    எங்க வீட்டு செல்லக்குட்டிகள் ரெண்டையும் நாங்க தான் வளத்துறோம். ஆனா ஏன் குணத்தில் வேறுபாடு? மனிதனின் குணம் மரபணு ரீதியாக தீர்மானிக்கப்படுது. குழந்தைகளை மிரட்டி வளர்த்துவதிலயும் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு செய்தால், பிற்காலத்தில் மிரட்டுரவனுக்கெல்லாம் பயந்து அடிபணியறதா வளரும் ( நம்ம தான் உதாரணம்)
    Last edited by நுரையீரல்; 21-10-2007 at 01:00 PM.
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •